தெளிவு படுத்தியதற்கு நன்றி ரவி கிரண் சூர்யா அவர்களே.
Printable View
தெளிவு படுத்தியதற்கு நன்றி ரவி கிரண் சூர்யா அவர்களே.
RKS,
சிவாஜி பேரவை ஒன்றுதான் உருப்படியாக இயங்கும் ஒரு அமைப்பு. அவர்கள் எடுக்கும் முடிவுகள் சமயோசிதமாக,நடிகர்திலகம் பெயரை தூக்கி பிடிக்கும் என்ற அசையாத நம்பிக்கை எங்களுக்குண்டு. சந்திர சேகர் எந்த அரசியல் லாபமும் கருதி இந்த பணியை செய்யவில்லை.
உண்மையான,தன்மானமுள்ள ,கோடி கணக்கான சிவாஜி ரசிகர்கள், சிவாஜி சமூக நல பேரவையின் பின்னால். புரிந்து கொள்.
உனக்கு கலைஞர் வெறுப்பை காட்ட ஒரு சாக்கு தேவை படுவதால் உள்ளே நுழைந்து குட்டையை குழப்பாதே.
__________________________________________________ ___________________________
Gopal,
No personal exchanges please.
Regards
Murali
அந்தமான்காதலி பட அனுபவங்களைபற்றி நடிகர்திலகம்
எழுதிய தொடர் கட்டுரை.
ஆனந்தவிகடனில்
நடிகர்திலகம் எழுதிய
"திரைகடலோடி திரைப்படம் எடுத்தோம்"
தொடர் ஆரம்பம்...
http://oi68.tinypic.com/2w3cbiq.jpg
அண்ணன் ஒரு கோயில்(1977)
சென்னை நகர் வசூல்
19,93,368.25
நடிகர்திலகம் விஷயத்தை பொறுத்தவரை திரு சந்திரசேகரன் அவர்களின் முடிவுதான் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மிகச்சரியான முடிவு என்பது என் தனிப்பட்ட கருத்து .
நடிகர்திலகத்தின் பதினெட்டாம் பகுதியை துவக்கியதிர்க்கு என் வாழ்த்துக்கள்..ஆதவன் ரவி இந்த பகுதியை துவக்கி வழி நடத்தி செல்வத்திற்கு வாழ்த்துக்கள்..ஆதவன் என்றால் சூரியன்..ரவி என்றாலும் சூரியன்..இந்த இரட்டை சூரியனுக்கு புரட்சித்தலைவரின் பக்தர்கள் சார்பில் என் வாழ்த்துக்கள்..எப்போதும்போல் இந்த திரிக்கு எனது பங்களிப்பு உண்டு..அன்புடன் முத்தையன் அம்மு..
http://i67.tinypic.com/18kivo.jpg
நன்றி.. திரு.முத்தையன் அம்மு
சார்.
இந்த திரியைப் பள்ளியாக்கி
படங்களைக் கொண்டே பாடம் எடுப்பவர் நீங்கள்.
உங்கள் மனசுக்குள் எழுப்பிய கோயிலில் மக்கள் திலகத்தை
தெய்வமாகப் பூஜிக்கிற நீங்கள்,
கலை தெய்வம் எங்கள் நடிகர்
திலகத்திற்கும் தனி சந்நிதி
வைத்திருப்பது மகிழ்வுக்குரியது மட்டுமல்ல..
எமது நன்றிகளுக்குமுரியது.
கடந்த திரிகளின் பக்கங்களைச்
சிறப்பித்த தங்கள் கைவண்ணம்
என் காலத்தில் எனக்கும் துணைநின்று சிறப்பிக்கும்
என்று நம்புகிறேன்.
உங்கள் நல்வாழ்த்துகளை
எப்போதும் விரும்புகிறேன்.
உங்களன்பின்
-ஆதவன் ரவி-
நாங்கள் போய்க்கொண்டிருந்த படகுக்கு எதிரே சுமார் 15அடி நீளமுள்ள "ராஜநாகம்"இருந்ததைப் பார்த்த நண்பர்கள்,பெரிய கலைமான் ஒன்று நீந்தி வருகிறது என்றார்கள்.இங்கேயே வேட்டை கிடைத்துவிட்டது என்று சப்தம் போட்டார்கள்.
அருகில் சென்று பார்த்ததும்தான் அது பெரிய ராஜநாகம் என்று தெரிந்தது.நான் படகை இன்னும் அருகில் செலுத்தச் சொன்னேன்.மற்றவர்கள்'அது படகின் மீது பாய்ந்து விடும்.பலரை விரைவாக கடிக்கும் சக்தி அதற்கு உண்டு.பக்கத்தில் போக வேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
என்னுடைய அசட்டுத்தைரியம்
அதற்கு செவி சாய்க்கவில்லை.விசைப்படகை அருகில் செலுத்தி அதை வட்டமிடச் சொன்னேன்.படகின் வேகத்தினால் எழுந்த அலையிலே அது சிக்கி எங்கள் படகின் மீது பாய முடியாமல் படமெடுத்துச் சீறிய அந்த அழகிய காட்சி என் வாழ்க்கையில் நான் பார்த்த கண் கொள்ளாக் காட்சிகளில் ஒன்று.
யார்?
எங்கே?
எப்போது?
அனைவருக்கும் வணக்கம்!
தேர்தல் அரசியல் பற்றிய விவாதங்களை, அவரவர் கருத்துகளை பதிவு செய்ய விரும்புவர் Current Affairs பகுதியில் அதற்குரிய திரியில் வைத்துக் கொள்ளலாம். நடிகர் திலகம் இருந்தபோது இருந்த அரசியலை பற்றி பேசுவது என்பது வேறு, இன்றைய அரசியல் சூழலில் அவரவர் விருப்பத்தை பற்றி விவாதிப்பது வேறு,
ஆகவே இன்றைய தேர்தல் அரசியல் சூழல் பற்றிய விவாதங்களை தவிர்த்து நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணிக்கு மட்டும் இந்த திரியை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்