-
இன்றைய [ 10.03.2013 ] தினம் மறக்க முடியாத நாள். சென்னை நகரில் இப்படி ஓர் அளப்பரையை சமீப காலத்தில் எந்த நடிகரின் படமும் பெற்றிருக்காது என ஆணித்தரமாக அறுதியிட்டுச் சொல்ல வைத்த நாள். சென்னை ஆல்பர்ட்டில் எழுந்த ஆரவாரம் நம் தங்கத் தலைவனாம் நடிகர் திலகத்தை விண்ணுலகில் உசுப்பி எழுப்பி யிருக்கும். வந்திருந்த புதியவர்கள் தங்கள் அனுபவத்தை தாங்கள் பார்த்ததை சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரே வார்த்தை
பிரமிப்பு
ஆட்சியில் இருந்தவரில்லை, அதிகாரம் படைத்தவரில்லை, உண்மையைத் தவிர வேறேதும் அறிந்தாரில்லை, இப்படிப் பட்ட ஓர் உன்னத மனிதரை, இறந்து 11 ஆண்டுகளாகியும் மக்கள் இந்த அளவிற்கு வெறித்தனமாக நேசிக்கிறார்கள் என்றால் அது உலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான்.
இன்றைய தினம் ஜனத் திரளில் ஆல்பர்ட் திரையரங்கும் திக்கு முக்காடிப் போனது உண்மை. ஏதோ திருவிழாவிற்கு வருவது போல் மக்கள் வருகையைக் கண்டு பிரமித்துப் போனவர்களில் பலர் என்றாலும் குறிப்பிடத் தக்கவர்
http://www.kalyanamalaimagazine.com/...ndararajan.jpg
வெண்கலக் குரலோன் டி.எம்.சௌந்தர் ராஜன் அவர்கள்.
விரிவான இடுகை தொடரும் முன்,
நாமெல்லாம் இத்திரியில் இணையக் காரணமான முரளி சாரின் திரு முகத்தைப் பார்ப்போமா
http://i1146.photobucket.com/albums/...ps4106636c.jpg
Murali Srinivas எனக் குறிப்பிடப் பட்டிருப்பவர் தான் முரளி சார். அவரை இதுவரை பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம். நடிகர் திலகத்தின் புகழை இம் மய்யத்தின் மூலம் ஊரறியச் செய்யும் அத் திருக்கரங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அத் திருமுகத்தைப் பார்க்க வேண்டாமா.
http://i1146.photobucket.com/albums/...ps29f42993.jpg
இன்று நம்முடைய மய்ய நண்பர்கள் திருவாளர்கள் நெய்வேலி வாசுதேவன், சித்தூர் வாசுதேவன், பம்மலார், பார்த்த சாரதி, கிருஷ்ணா ஜி, பால தண்டபாணி, திரு ராதா கிருஷ்ணன் என பெரும்பாலானோர் வந்திருந்தனர். நமது மற்றோர் ஹப்பர் திரு ராமஜெயம் அவர்களும் வந்திருந்தார்.
அளப்பரை கூட்டம் அலங்காரம் போன்ற அனைத்தையும் பற்றித் தொடரும் பதிவுகளில் பார்ப்போம். ஆனால் அதற்கெல்லாம் அடையாளச் சின்னமாக விளங்கும் இந் நிழற்படத்தைப் பார்ப்போமா .. பக்கம் பக்கமாய் நாம் எழுத எண்ணுவதை இப்படம் ஒன்றே விளக்கிடுமே.
http://i1146.photobucket.com/albums/...ps57e1f679.jpg
-
இன்று மாலை கிட்டத்தட்ட 1150 இருக்கைகள் அமைந்துள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அரங்கு நிறைந்து டிக்கெட்டுகள் ப்ளாக்கில் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டன என்றால் கூட்டத்தை புரிந்துக் கொள்ளலாம். மதியக்காட்சிக்கும் கிட்டத்தட்ட 1000 பேர் வருகை புரிந்திருக்கின்றனர். PVR அரங்கம் ஹவுஸ்புல். மாலைக் காட்சி ஓடிய னைத்து அரங்குகளிலுமே சரியான கூட்டம்.
மதுரையில் மூன்று திரையரங்குகளிலும் சரியான கூட்டம் என்று தகவல். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மதுரையின் வேறு எந்த திரையரங்குகளிலும் இன்று மாலை காட்சிக்கு ஆட்களே இல்லாத சூழலாம். ஓடுகின்ற படங்கள் சரியில்லை என்பதாலும் இன்றைய தினம் சிவராத்திரி என்பதாலும் இந்த நிலைமை. அரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது மாளிகைக்கு மட்டுமே!
கோவை அர்ச்சனாவில் இன்று மாலையும் ஏராளமான மக்கள் வந்திருக்கிறார்கள் காவேரி திரையரங்கிற்கும் கணிசமான கூட்டம் வந்திருக்கிறது.
திருச்சி சோனா அரங்கில் மாலைக் காட்சிக்கு நல்ல response என்று தகவல்!
மொத்தத்தில் இன்றைய தினம் தமிழகமெங்கும் வசந்த மாளிகை தினமாக கழிந்தது என்றே சொல்லலாம்!
அன்புடன்
-
நடிகர்திலகம் படத்தில் அவர் திறமை பளிச்சென இருக்கும், ஆனால் வசூல் அவ்வளவு இல்லை என ஏகடியம் பேசுவோருக்குப் பதிலடிச் சான்றுகள் பரிமாறும் அன்பு ராகவேந்திரா, முரளி அவர்களுக்கும், ஆல்பர்ட் வாசலில் கூடிய அன்பு இதயங்கள் பம்மலார், நெய்வேலியார், சித்தூரார், ''பார்த்த'' சாரதி, கிருஷ்ணாஜி, ராமஜெயம், ராதாகிருஷ்ணன், பால தண்டபாணி அனைவருக்கும் என் அன்பு..
சூரியன் வெறும் பிரகாசமாய் மட்டுமே இருக்கும், சுடாது எனச் சொல்லும் வீணர் வாய்கள் இவ்வெற்றி வெப்பத்தில் வெந்து மௌனமாகட்டும்!
-
Vasantha Maligai re-released in Sydney too
-
Vasantha Maligai re-released in Sydney too
-
சதீஷ் சார்,
சிட்னியில் one man show வாக அட்டகாசமாக மாளிகையைத் திறந்து வைத்துக் கொண்டாடி விட்டீர்கள். ஆனால் நீங்கள் அங்கு இல்லையே... நீங்கள் இங்கு தானே இருந்தீர்கள் ... நீங்கள் திரும்பிய திசையெல்லாம் அவர் திருவுருவம் தானே காட்சியளித்தது ... உங்கள் உடல் மட்டும் அங்கே .. உள்ளமோ இங்கே ..
சென்னை ஆல்பர்ட் தியேட்டரின்
உள்ளே சென்று பாருங்கள் .. அங்கு தான் நீங்களும் இருக்கிறீர்கள் .. தங்கள் இதயமும் இருக்கிறது ...
-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
சென்னை ஆல்பர்ட் தியேட்டரின்
உள்ளே சென்று பாருங்கள் .. அங்கு தான் நீங்களும் இருக்கிறீர்கள் .. தங்கள் இதயமும் இருக்கிறது ...
It would have been a great treat to watch VM in Chennai Albert theatre or at Madurai Sugapriya theatre.
Cheers,
Sathish
-
ஆனந்த் கண்ட ஆல்பர்ட் அமர்க்களங்கள்
பிரம்மாண்ட பேனருக்கு பெங்களூரு ரசிகர்கள் கொண்டு வந்த மாலைகளை சாற்றப் பணியாற்றும் ரசிகர்கள்
http://i1146.photobucket.com/albums/...ps73b3afca.jpg
வந்திருந்த மக்கள் திரளில் ஒரு பகுதி
http://i1146.photobucket.com/albums/...ps712373a7.jpg
இன்னொரு பகுதி
http://i1146.photobucket.com/albums/...ps73fd062e.jpg
மாலைகளை சாற்றும் பணி - அருகாமைத் தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...ps0004a535.jpg
மாலைகளை சாற்றும் பணி - தொடர்ச்சி
http://i1146.photobucket.com/albums/...ps78c26bb3.jpg
மக்கள் திரளில் மற்றோர் பகுதி
http://i1146.photobucket.com/albums/...ps8c91cf4f.jpg
நாங்களென்ன சளைத்தவர்களா ... நடிகர் திலகம் படமென்றால் நாங்கள் வீட்டிலா கிடப்போம், எங்கள் அண்ணனின் படமாயிற்றே என சொல்லாமல் சொல்லும் மகளிர்
http://i1146.photobucket.com/albums/...ps8b81fe3d.jpg
சோனியா வாய்ஸ் வசந்த மாளிகை சிறப்பு மலர் வெளியீடு - உயர்த்திப் பிடிப்பவர்கள் சோனியா வாய்ஸ் ஆசிரியர் திரு நவாஸ் - கண்ணாடி அணிந்திருப்பவர் இடது புறம், மற்றும் திரு ரவீந்திரன், பெங்களூரு சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகி, நடுவில் மலரைப் பிடித்திருப்பவர் திரு எம்.எல். கான், நவாஸூக்கு மேல் நிற்பவர் திரு சி.எஸ்.குமார், ஆரஞ்சு வண்ண சட்டை அணிந்து மைக்கில் பேசுபவர் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற முன்னாள் நிர்வாகி திரு கொண்டல் தாசன்
http://i1146.photobucket.com/albums/...ps046101e2.jpg
http://i1146.photobucket.com/albums/...pscdb62ed8.jpg
-
ஆனந்த் கண்ட ஆல்பர்ட் அமர்க்களங்கள் .. தொடர்ச்சி
பெங்களூரு ரசிகர் ரவீந்திரன் மலரை உயர்த்திப் பிடித்து நிழற்படத்திற்காக போஸ் கொடுக்கும் காட்சி
http://i1146.photobucket.com/albums/...ps935bd752.jpg
மக்கள் திரளின் இன்னோர் பகுதி
http://i1146.photobucket.com/albums/...ps89aa1032.jpg
திருநெல்வேலி ரசிகர் முத்துக்குமார் பூசணிக்காயை வைத்து திருஷ்டி சுற்றக் காத்திருக்கிறார்
http://i1146.photobucket.com/albums/...ps9d174dae.jpg
வாசலில் ஒரு தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...ps2a93e221.jpg
மற்றோர் வாசலில் ஒரு தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...ps444d547f.jpg
சாத்துக்குடி மாலை சாற்றப் படும் தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...psfc960803.jpg
-
கட்-அவுட் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது நடிகர் திலக ரசிகர்கள்தானா?
-
டியர் வெங்கி ராம்,
கட் அவுட் கலாச்சாரம் என்பது இன்றைய கால கட்டத்தில் பொருள் தரும் விதமாக அந்தக் கால கட்டத்தில் அறிமுகப் படுத்தப் படவில்லை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கட் அவுட் என்பது ஒரு விளம்பர யுத்தி. ஒரு பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பயன் படுத்தப் படும் பல்வேறு வகை உபாயங்களில் ஒன்று. அதில் ஒரு புதுமையாக வணங்காமுடி திரைப்படத்திற்கு சென்னை சித்ரா திரையரங்கின் முகப்பில் பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப் பட்டு படத்திற்கு ஒரு talk கொடுத்தது. அதைத் தொடர்ந்து மற்ற படங்களுக்கும் அது தொடர்ந்தது. இதில் எந்த விதமான தவறும் இல்லை.
ஆனால் இதனை அரசியல் வாதிகள் தங்கள் சுய விளம்பரத்திற்காக பயன் படுத்தத் தொடங்கிய போது தான் இந்த கட்அவுட் கலாச்சாரம் என்கிற சொல்லே பரிச்சயமானது. இதைப் பற்றி விவாதிக்க ஏராளமான பக்கங்கள் வேண்டும்.
கட் அவுட் வைப்பதை முதலில் தொடங்கி வைத்தது விளம்பர நிறுவனங்கள். பின்னாளில் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர் மேல் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாக அதனைப் பின்பற்றத் தொடங்கினர்.
-
சிவாஜி ரசிகர்களுக்கு அதிர்ச்சி...
என்ன நண்பர்களே ... தலைப்பு பயமுறுத்துகிறதா ... தின மலரில் வெளியாகி இருக்கும் இச் செய்தியைப் படியுங்கள் .. புரியும்
Quote:
சிவாஜி கட்அவுட்டுக்கு பண மாலை! ரசிகர்கள் கொண்டாட்டம்!!
http://img1.dinamalar.com/cini//CNew...4138000000.jpg
நடிப்பு மேதை சிவாஜியின் அற்புதமான நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று வசந்த மாளிகை. காலத்தால் அழியாத இந்த காதல் காவியத்தில் இப்போதைய நவீன தொழில் நுட்பத்தை இணைத்து மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 72 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்றைய தகவல்படி பழைய படம்தானே என்று சாவகாசமாக தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு பலத்த அதிர்சசியாம்.. அதாவது, பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு வைத்திருந்தார்களாம். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இதே நிலைதானாம்.
குறிப்பாக, அந்த காலத்து ரசிகர்கள் மட்டுமின்றி, இப்போதைய யூத் ரசிகர்களும் வசந்த மாளிகையில் சிவாஜியின் நடிப்பைப்பற்றி கேள்விப்பட்டு இப்போது வந்து பார்க்கிறார்களாம். மேலும், ஒவ்வொரு தியேட்டர் வாசல்களிலும் சிவாஜிக்கு பெரிய அளவில் கட்அவுட்களும் வைத்திருக்கிறார்கள். அப்படி ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி கட்அவுட்க்கு மிகப்பெரிய பணமாலை அணிவித்திருக்கிறார்களாம். அதில் கோர்க்கப்பட்டுள்ள மொத்த பணத்தின் மதிப்பு ரூ. 5 லட்சமாம். இன்னும் பல ஊர்களில் பாலாபிஷேகம், பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டதாம்.
மேலே காணப் படும் தினமலர் செய்தி வெளிவந்துள்ள இணையப் பக்கத்திற்கான இணைப்பு
http://cinema.dinamalar.com/tamil-ne...ating-huge.htm
-
Quote:
Originally Posted by
venkkiram
கட்-அவுட் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது நடிகர் திலக ரசிகர்கள்தானா?
வெங்கி சார்,
பல முதல்களுக்கு சொந்தமானவர் நம் நடிகர்திலகம் மட்டுமே.
அன்றைய காலகட்டங்களில்,மக்களிடம் ,படங்களை கொண்டு சேர்க்க உதவியவை, பத்திரிகை,போஸ்டர் ,bit notice போன்றவையே. (TV ,internet வழக்கிலில்லை. வானொலி ,வர்த்தக சேவையை துவங்கவில்லை). 50 களில் நடிகர்திலகம், போட்டியே இல்லாத தனிக்காட்டு ராஜா. ஆனால், நடிகர்திலகம், பணம் கொடுத்து இவற்றை ஊக்குவிக்கவில்லை. அவர் மேலிருந்த ஈர்ப்பால் இயல்பாக நடந்தவை, இந்த விளம்பரங்கள், ரசிகர் மன்றங்கள் எல்லாமே. அகில இந்தியாவிலும், நட்சத்திரம் சார்ந்து திரை பட துறையில் நிகழ்ந்த shift ,நடிகர்திலகத்தினால் ,தமிழ் நாட்டில் துவங்கி, அகில இந்தியாவிற்கும் பரவியது.
அன்று அவை ஒன்றுதான் விளம்பர வாசல்கள்.அவற்றில் ஒன்றுதான், பெரு நகரங்களில் கவன ஈர்ப்புக்கான வானத்தை தொடும் cut -out .முதல் முதலில், 1957 இல் வணங்காமுடி படத்திலிருந்து துவக்கம்.
ஆனால், எப்படி மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தும், இன்றும் stress என்றால் flight -fight response ஆக adrenalin சுரப்பது போல ,இவ்வளவு விளம்பர வளர்ச்சி அடைத்த பிறகும், cut -out ,political meetings போன்ற out -dated விஷயங்களும் தொடர்கின்றன.
ஆனால், நடிகர்திலகம் தன் தொழிலை மட்டும் பார்த்த perfectionist &genius .அவர் இதற்கெல்லாம் அப்பாற் பட்டவர், இதையெல்லாம் கண்டு கொள்ளாதவர்.
-
ஆனந்த் கண்ட ஆல்பர்ட் அமர்க்களங்கள்
நிழற்படங்கள் தொடர்ச்சி ...
மக்கள் திரள் - மாலைக் காட்சி துவங்க இருக்கும் நேரம் ...
http://i1146.photobucket.com/albums/...psc9382237.jpg
மாலை சாற்றப் பட்ட மற்றோர் பேனர்
http://i1146.photobucket.com/albums/...psedf585f8.jpg
பிரம்மாண்டமான பேனர் மாலை சாற்றப் பட்டபின் முழுமைத் தோற்றம்
http://i1146.photobucket.com/albums/...ps0a6b3a3f.jpg
-
ஆனந்த் கண்ட ஆல்பர்ட் அமர்க்களங்கள்
அரங்கினுள் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடல் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாகக் கொண்டாட்டமும்
தாய்மார்களும் சிறுமிகளும் படத்தோடு சேர்த்து ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தையும் ரசிக்கும் காட்சி
http://i1146.photobucket.com/albums/...psee31c9e5.jpg
இந்த ரசிகர் கை தட்டுகிறாரா அல்லது கும்பிடுகிறாரா ...
இல்லை இல்லை ... இரண்டுமே செய்கிறார் ... எனத் தோன்றுகிறதல்லவா ...
http://i1146.photobucket.com/albums/...ps71383019.jpg
ஆட்டமும் பாட்டமும் ...
http://i1146.photobucket.com/albums/...ps012ac475.jpg
திரைக்கு முன் ரசிகர்கள் ஆடுவதைத் தன் நண்பருக்கு சுட்டிக் காட்டுகிறாரா இவர் ...
http://i1146.photobucket.com/albums/...ps467e3bf6.jpg
இந்தக் கொண்டாட்டங்களெல்லாம் மீண்டும் எப்போது ...
http://i1146.photobucket.com/albums/...ps74324ad8.jpg
ஆல்பர்ட் அமர்க்களங்கள் ...நிழற்படங்களின் நிறைவு
நன்றி
-
[QUOTE=RAGHAVENDRA;1025211]இன்றைய [ 10.03.2013 ] தினம் மறக்க முடியாத நாள். சென்னை நகரில் இப்படி ஓர் அளப்பரையை சமீப காலத்தில் எந்த நடிகரின் படமும் பெற்றிருக்காது என ஆணித்தரமாக அறுதியிட்டுச் சொல்ல வைத்த நாள். சென்னை ஆல்பர்ட்டில் எழுந்த ஆரவாரம் நம் தங்கத் தலைவனாம் நடிகர் திலகத்தை விண்ணுலகில் உசுப்பி எழுப்பி யிருக்கும். வந்திருந்த புதியவர்கள் தங்கள் அனுபவத்தை தாங்கள் பார்த்ததை சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரே வார்த்தை
பிரமிப்பு
ஆட்சியில் இருந்தவரில்லை, அதிகாரம் படைத்தவரில்லை, உண்மையைத் தவிர வேறேதும் அறிந்தாரில்லை, இப்படிப் பட்ட ஓர் உன்னத மனிதரை, இறந்து 11 ஆண்டுகளாகியும் மக்கள் இந்த அளவிற்கு வெறித்தனமாக நேசிக்கிறார்கள் என்றால் அது உலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான்.
இன்றைய தினம் ஜனத் திரளில் ஆல்பர்ட் திரையரங்கும் திக்கு முக்காடிப் போனது உண்மை. ஏதோ திருவிழாவிற்கு வருவது போல் மக்கள் வருகையைக் கண்டு பிரமித்துப் போனவர்களில் பலர் என்றாலும் குறிப்பிடத் தக்கவர்
http://www.kalyanamalaimagazine.com/...ndararajan.jpg
வெண்கலக் குரலோன் டி.எம்.சௌந்தர் ராஜன் அவர்கள்.
விரிவான இடுகை தொடரும் முன்,
நாமெல்லாம் இத்திரியில் இணையக் காரணமான முரளி சாரின் திரு முகத்தைப் பார்ப்போமா
http://i1146.photobucket.com/albums/...ps4106636c.jpg
Murali Srinivas எனக் குறிப்பிடப் பட்டிருப்பவர் தான் முரளி சார். அவரை இதுவரை பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம். நடிகர் திலகத்தின் புகழை இம் மய்யத்தின் மூலம் ஊரறியச் செய்யும் அத் திருக்கரங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அத் திருமுகத்தைப் பார்க்க வேண்டாமா.
http://i1146.photobucket.com/albums/...ps29f42993.jpg
இன்று நம்முடைய மய்ய நண்பர்கள் திருவாளர்கள் நெய்வேலி வாசுதேவன், சித்தூர் வாசுதேவன், பம்மலார், பார்த்த சாரதி, கிருஷ்ணா ஜி, பால தண்டபாணி, திரு ராதா கிருஷ்ணன் என பெரும்பாலானோர் வந்திருந்தனர். நமது மற்றோர் ஹப்பர் திரு ராமஜெயம் அவர்களும் வந்திருந்தார்.
அளப்பரை கூட்டம் அலங்காரம் போன்ற அனைத்தையும் பற்றித் தொடரும் பதிவுகளில் பார்ப்போம். ஆனால் அதற்கெல்லாம் அடையாளச் சின்னமாக விளங்கும் இந் நிழற்படத்தைப் பார்ப்போமா .. பக்கம் பக்கமாய் நாம் எழுத எண்ணுவதை இப்படம் ஒன்றே விளக்கிடுமே.
http://i1146.photobucket.com/albums/...ps57e1f679.jpg[/QU
ALBERT THEATRE ALAPARAI STILL LINGERING IN MY MIND GREAT WRITEUP BY RAGHAVENDRA MURALI OTHERS IDHU POLA ELLA NT PADANGALUM VANDHU RASIGARGALAI IN PARTICULAR PRESENT GENERATION REACH PANNAVENDUM. YESTERDAY one more incident
TMS Wanted to enjoy the movie by sitting in front rows and he did so amidst rasigargal aarpattam. a memorable SIVAJI RATHIRI.
-
Dear Goldstar Satheesh sir and friends,
Vasandha Malligai not only released in Sydney, but in (Saudi Arabia) Jeddah city also.
Yesterday evening I have screened Vasandha Malligai cristal clear DVD in my home in wide LCD tv and invited my friends with their family. Nearly 30 audience gathered in my home and fully enjoyed the movie. In between we shared the enjoyment going on Chennai Albert and whole Tamil Nadu.
after the show we distributed snacks and pepsi to all and were talking about each scene of VM, for more than an hour.
So happy that we also celebrated Vasandha Maaligai release in Saudi Arabia.
-
Quote:
Originally Posted by
adiram
Dear Goldstar Satheesh sir and friends,
Vasandha Malligai not only released in Sydney, but in (Saudi Arabia) Jeddah city also.
So happy that we also celebrated Vasandha Maaligai release in Saudi Arabia.
Good on you Mr. Adiram, its glad to know that Vasantha Maligai has been re-released around the world same day like in TN. I hope VM re-released in Vietnam by Mr. Gopal....
Cheers,
Sathish
-
Quote:
Originally Posted by
goldstar
Good on you Mr. Adiram, its glad to know that Vasantha Maligai has been re-released around the world same day like in TN. I hope VM re-released in Vietnam by Mr. Gopal....
Cheers,
Sathish
Satish,
You guessed it right. Saturday one show along with Amour, sunday one more show along with Argo.Sunday Night again, special show with selected scenes, oru kinnaththai,kudimagane, adi-vashi (Plum) scene and mayakkamenna till mid-night. I really envied our fortunate brothers in Albert and kept disturbing them with my calls.
-
//இன்னும் நிறைய பேசலாம்!//
Murali sir,
peasa vendum. Neengal pesikkonde irukka vendum.
Naangal kettukkonde irukka vendum.
By the help of your sweet varnananai and Raghavendar sir's superb photos, we were mentally inside chennai albert theatre.
Thanks a lot.
-
Dear Goldstar Sathish Sir,
Very glad to see the pictures that VM released in Sydney
and also released in Saudi by Mr.Adiram Sir
and in Vietnam by Mr.Gopal Sir
Well done.
-
டியர் திரு. சிவாஜி செந்தில்
உங்களுடைய வசந்த மாளிகை திரைப்பட அனுபவம் - இனிமை.
-
டியர் ராகவேந்திரன் சார்,
வசந்த மாளிகை ஆல்பட் திரையரங்கப் பதிவுகள் அருமை.
-
டியர் வாசுதேவன் சார்,
வசந்த மாளிகை மதுரை சரஸ்வதி திரையரங்கப் பதிவுகளுக்கு நன்றி
-
Dear Mr. Raghavendar sir,
More and more thanks for publishing two wonderful snaps which have the pillars of this thread.
Very very happy to see my beloved Pammalar, Murali Srinivas, Vasudevan(s), Parthasarathy and others.
I really wonder on seeing them 'oh.. idhuthaan avaraa?'.
All other photos of 'Albert Amarkkalams' are excellent, and thanks a lot.
I always happy, when those events are going on theatre entrance and the public going on buses watching them and talking between themselves as "enna irundhaalum Sivaji mavusu ennaikkum kuraiyaadhuppa'
-
டியர் முரளி சார்,
ஞாயிறு மாலைக் காட்சி - வசந்த மாளிகை ஆல்பட் திரையரங்க வர்ணணை அருமை.
தங்களையும் நமது ஹப்பர்கள் பலரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
-
It is nice to see to our fellow hubbers in Chennai Albert and
enjoyed the atmosphere in the theatre. I have already watched
matinee show and watched the alappari in the evening show upto
interval. Due to travel I could not watch the movie after interval
and I feel it will more than the first half.
Thanks for the simultaneous release in Australia,Jeddah & Vietnam
to Mr Satish,Mr Adiram & Mr Gopal.
Unforgettable experience. Expecting more photos from our Neyveli
Vasudevan Sir.
-
சண்டே (10th) அன்று வரமுடியாததால், சனி (9th) அன்று காலை ரெயிலில் புறப்பட்டு 11 மணி அளவில் சென்னை சேர்த்தேன் . வசந்த மளிகை காலை காட்சி இல்லாதலால், சென்னை வெயில் இருந்து தப்பிக்க, ஒரு ac திரைஅரங்கில் செல்ல முடிவு செய்து , சங்கம் திரை அரங்கம் சென்றேன். (அபிராமி அருகில் இருப்பதால்). திரை அரங்கு உள்ளே சென்ற பொது தான் தெரிந்தது, படத்தின் பெயர் போல், உள்ளே 9 பேர் தான் இருந்தார்கள் (என்னையும் சேர்த்து). 1 1/2 மணி நேரம் தூங்கிவிட்டு , 2 மணி அளவில் அபிராமி சென்றேன். மதியம் காட்சி பார்த்து விட்டு 6.30 மணி காட்சிக்கு ஆல்பர்ட் திரைஅரங்கு படம் பார்த்து விட்டு , இரவு ரெயிலில் சென்னையில் இருந்து பெங்களூர் வந்து சேர்த்தேன்.
இரண்டு திரை அரங்கத்திலும், கூட்டம் ஆத்திரம் இல்லையென்றாலும், புது படங்களை விட அதிகமாகவே இருந்தது. ((சமிபத்தில் சென்னை தேவியில் ஒரு புது படம் பார்க்க சென்ற பொது, அரங்கில் 20 பேர் கூட இல்லை. (படம் வெளியாகி 2 வாரங்கள்). அந்த படம், ரூ 100 கோடி கிளப்பில் சேர்த்ததாகவும், 100 நாள் ஓடியதாகவும் விளம்பரம் வெளியாகி உள்ளது - கொடுமையாடா சாமி)).
அபிராமில் 6 மணிக்கு ஷோ முடிந்தவுடன், 6.30 மணி காட்சிக்கு ஆல்பர்ட் வருவதற்கு, சில ஆட்டோகளை அணுகியபோது, ரூ .100 முதல் 150 வரை கேட்க, பெங்களூரில் இருந்து சென்னை வந்தோம், தலைவரின் படம் பார்பத்தற்கு, ஆட்டோவிற்க்கும் கொடுக்கலாம் என் முடிவு செய்து , ஒரு ஆட்டோவை அணுகி , ஆல்பர்ட் செல்ல வேண்டும் என்று சொல்ல, வசந்த மாளிகைக்கா என்று கேட்ட, நான் ஆமாம் என்று சொல்ல, அந்த ஆட்டோ டிரைவர் ரூ .40 கொடுத்தால் போதும் என்று கூறினார். சரி என்று ஆட்டோவில் ஏறி ஆல்பர்ட் வந்து சேர்த்தேன். அந்த ஆட்டோ டிரைவரிடம் பேசும் பொது, அவர் சொன்னது , வசந்த மளிகை cd வைத்திருபதாகவும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் , அந்த படத்தை பார்பதாகவும், எப்போழுது பார்த்தாலும் புதுமை யாக இருபதாக கூறினார்.
சமிபத்தில் ஒரு புது படம், தமிழ் நாட்டில் வெளியாகாமல், வேறு மாநிலங்களில் வெளியானது. தமிழ் நாட்டில் இருந்து வேறு மாநிலங்கல்க்கு சென்று படம் பார்த்ததாக படித்ததுண்டு . அதே படம் மீண்டும் வெளியானால், வெளி மாநிலத்தில் இருந்து சென்னை வந்து பார்ப்பார்கள் என்றால் நிச்சயம் யாரும் வரமாட்டார்கள். வேறு ஊரில் இருந்தும், வேறு மாநிலத்தில் இருந்தும் படம் பார்க்கும் ரசிகர்கள் நடிகர் திலகத்தின் நசிகர்களே.
-
Dear Raghavendra, Murali, Vasu,
Lot of thanks for VM coverage. I really missed you all on 10th since I had some personal works I left Chennai 9th night itself
-
Quote:
Originally Posted by
KCSHEKAR
டியர் திரு. சிவாஜி செந்தில்
உங்களுடைய வசந்த மாளிகை திரைப்பட அனுபவம் - இனிமை.
thank you KCS sir. I will meet you in person when I come next month chennai. My humble suggestion is that our NT movies may kindly be alternated for rerelease as one color and one black and white. Now VM then Paasamalar. Pudhiya Paravai and Uththama Puththiran. Sivandha Mann and Paava Mannippu. VPKB and Paalum Pazhamum. Thillana and Baagappirivinai. Ooty Varai Uravu and Parasakthi. Gauravam and Gnana Oli. Raaja and Deiva Magan. ..... like that. Now the momentum has picked up for NT to resume his name and fame with an indelible mark in the minds and hearts of millions of young generation and old alike without a bar on space and time. Like the mathematics genius Ramanujam our NT may perhaps need a foreign Professor to bring his name into the limelight for a life time oscar!?
-
சிட்னியில் அட்டகாசமாக 'வசந்த மாளிகை' வைபவத்தைக் கொண்டாடிய அருமை 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களுக்கும், வியட்நாமில் கண்டுகளித்த கோபால் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
வசந்தமாளிகை . . . . . . .
திரு.முரளி அவர்கள் குறிப்பிட்டதைப்போல ஆல்பட் திரையரங்கில் நுழையும்போதே, வர்ணிக்கமுடியாத அளவிற்கு ஆரவாரத்தைக் கண்டு நமக்கும் உற்சாகம் பிறக்கிறது.
திரைப்படத்திற்கேற்றவாறே, நமது குடிமக்கள் டபுள் உற்சாகத்தில் இருந்தனர். ஆல்பட் திரையரங்கத்தின் அடுத்தார்போலவே தமிழக அரசின் உற்சாகபானக் கடைவேறு. கேட்கவும் வேண்டுமா? ஆடிக் களைப்புற்றவர்கள் அவ்வப்போது உற்சாகத்தை ஏற்றிக்கொண்டார்கள். ஆனாலும், உச்சக்கட்ட உற்சாகத்திலும் எல்லை மீறவில்லை நமது ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (நிக்கமுடியாத அளவுக்குக் குடிக்கலை, நிதானத்தோடுதான் குடிக்கிறேன் .............. தலைவரின் வசனத்தைப் பின்பற்றும் தொண்டர்கள்!!!)
திரையரங்கினுள்ளும் அவ்வாறே! (ஏற்கனவே முரளி சார், ராகவேந்திரன் சார், வாசுதேவன் சார் குறிப்பிட்டுள்ளபடி) அளப்பறைகள் நம் ரசிகர்களின் துடிப்பினை உணர்த்தின.
என்னுடன் இரண்டு பத்திரிகை நண்பர்கள் வந்திருந்தனர். இருவரும் திரைப்படத்தை இறுதிவரை கண்டு களித்தனர். அவர்கள் இந்த அளப்பறையைக் கண்டு உண்மையிலேயே ஆச்சர்யமடைந்தனர். நடிகர்திலகம் மறைந்து 10 வருடங்களுக்கு மேலானபிறகு, 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு வரவேற்பு, ஆரவாரமா என்று வியந்து சென்றனர்.
திரைப்படம் முடிந்து, வீட்டிற்குச் சென்றபின்னரும், வசந்தமாளிகையும், ரசிகர்களின் அளப்பறையும் செவிகளில் வெகுநேரத்திற்கு ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.
-
Bala sir,
Really we miss you. Better luck next time.
-
Neyveli Vasudevan sir,
Sekhar's nerration is little coincide with the movie (i mean urchaga paanam mention). Even without 'that' our fans would do the alapparais to the peak, no doubt.
Very happy to see you in photo published by Raghavendar sir. In the same photo Chittoor Vasudevan also there. Thatswhy I mentioned as Vasudevan(s) in plural. But after that I relaised that his initial is 'S'. Thatswhy this seperate mention now for you in special. This is the first time I see all your faces. (I already saw only Raghavendar sir and Chandrasekhar sir in many photos in other occations)
Your enthus to come to Chennai to watch this movie with our our frinds is admirable (even you already saw in Cuddalore). Same time we also watched VM in Saudi as I mentioned earlier.
As you have watched it three centres, how is your openion and how is the pulse of public about the movie?. Shall it surpass Karnan in no.of days running?.
Our people should give some gap, without re-releasing Pasamalar soon.
sad to feel, Thiruvilaiyaadal has missed all these celeberations.
-
மிக்க நன்றி அன்பு ஆதிராம் சார். தங்களுக்கு பதிவு டைப் செய்து கொண்டு இருக்கும் போதே கரண்ட் கோவிந்தா. இப்போதுதான் வந்தது.
தாங்கள் சவுதியில் நம் அன்புத் தலைவரின் வசந்த மாளிகையை தங்கள் நண்பர்களுடன் உற்சாகமாகக் கண்டு களித்தது பற்றிய தங்கள் பதிவு படித்ததும் ஒரு வினாடி என் கண்கள் பனித்து விட்டன. நாங்களெல்லாம் சேர்ந்து ஜாலியாக படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நீங்களும், கோபால் சாரும், சதீஷ் சாரும் கூட இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! நிச்சயமாக அப்படி ஒரு வாய்ப்பு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. சதீஷ் சார் கூட இரு தினங்களுக்கு முன் போன் செய்திருந்தார். அவர் எண்ண ஓட்டமெல்லாம் இங்கேயே இருந்தது. கோபால் சாரும் அப்படியே! நாங்கள் இங்கு மாளிகையை கண்டு களித்தது பெரிதல்ல.அயல் நாட்டில் இருந்து கொண்டு நீங்கள் வசந்த மாளிகையை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் விருந்தோம்பலுடன் கண்டு களித்ததுதான் பெரிது. நடிகர் திலகத்தின்பால் தங்களுக்குள்ள அபரிமிதமான அன்பை வெளிப்படுத்திய அற்புதமான தங்கள் வசந்த மாளிகை சவுதி (Jeddah city) ரிலீசுக்கு என் உளம் கனிந்த நன்றிகளும் மகிழ்ச்சிகளும். நீங்கள் சென்னை வரும்போது மறக்காமல் தெரியப் படுத்துங்கள். தலைவர் படங்களுடன் ஜமாய்த்து விடலாம். தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் சொல்லுங்கள்.
-
ஆதிராம் சார்.
நேற்று நீங்கள் வீட்டில் வசந்த மாளிகை போட்டுப் பார்த்ததை பதிவிட்டு இன்று எனக்கு வேலை வைத்து விட்டீர்கள். யெஸ். இன்று மாலை எங்கள் வீட்டில் அனைவரும் ஹோம் தியேட்டரில் நம் மன்னவரின் மாளிகையை குடும்பத்துடன் காண இருக்கிறோம். அதற்காக தங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!
-
-
http://www.tamilcinema.com/CINENEWS/...ha_maligai.jpg
Quote:
இப்போது நடித்து வரும் 'அப்ரசண்டு' ஹீரோக்கள் பலர், 'வசந்த மாளிகை' ஓடும் திரையரங்குகளை நுறு முறை சுற்றி வந்து காலில் விழுந்தாலும் நடிப்பு வருமா என்பது சந்தேகமே!
மேலும் படியுங்கள் இந்த இணையப் பக்கத்தில் ...
-
-
கோவை ரசிகர்கள் கொண்டாட்டம்
http://youtu.be/-YPW_On84Pk