என்ன விளையாட்டா? ராஜா,ஞான ஒளி எல்லாம் என் படங்களும் கூட.
ராஜ ராஜ சோழன் சௌரிக்கு இனாமாகவே விட்டு கொடுத்து விடுகிறேன்.
Printable View
அன்புள்ள கோபால் சார்,
முரளி அவர்களின் பதிவை நிச்சயம் நான் பார்த்திருக்கவில்லை. இல்லையெனில் அப்போதே என் பதிலை நிச்சயம் எழுதியிருப்பேன். தற்போது அதனை தேடிக்கொண்டு இருந்தபோது தங்கள் பதிவு (பாகம் எண், பக்க எண், பதிவு எண் இவற்றோடு) சமய சஞ்சீவியாய் வந்து வழிகாட்டியது.மிகவும் நன்றி.
ஆனாலும் அந்த அடைப்புக்குறிக்குள் அந்த வாசகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னைப்பொருத்தவரையில் பம்மலார் வேறு, முரளி வேறு, வாசு வேறு, கோபால் வேறு என்று நினைத்ததில்லை. வரலாற்றுப் பதிவுகள் இடும்போது முரளி, அவரே ஆவணப்பதிவுகள் இடும்போது பம்மலார், அவரே ஸ்டில்ஸ் மற்றும் பாடல் காட்சிகள் பதிவேற்றும்போது வாசுதேவன், அவரே பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ளும்போது கார்த்திக் என்று நினைப்பவன் நான்.
அன்புள்ள முரளி சார்,
கோபால் உதவியால் தங்கள் பதிவைப்பிடித்து விட்டேன். மிகப்பெரிய பதிவு குறைந்தது மூன்று நான்கு முறை படித்து என் பதிலை பதிவிடுகிறேன். என்னை நினைவு வைத்து நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
அப்போது கோபால் வேறு என்று நினைக்கிறீங்க?
(நானாட்சி செய்து வரும் நான் மாடகூடலிலே.....)
ராஜாவைப் பொறுத்த மட்டில் முதல் நாள் சிறப்புக் காலைக் காட்சி எனக்கு ஞாபகம் இருந்த வரையில் ரசிகர் மன்றக் காட்சியாக நடைபெற்றது. அதை ஒட்டி வந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இரு தியேட்டர்களில் ராஜா சிறப்புக் காலைக் காட்சி நடைபெற்றதாக நினைவு. ஓம் விக்நேஸ்வரா சபா சார்பாக ஆனந்த் தியேட்டரிலும் விமானப் படை வீரர்களுக்கான சிறப்புக் காட்சி தேவி பேரடைஸிலும் நடைபெற்றது என நினைக்கிறேன்.Quote:
அடுத்த புதன்கிழமை ஜனவரி 26. நம் யாராலும் மறக்க முடியாத ராஜா ரிலீஸ் ஆன நாள். விமானப் படை அதிகாரிகளின் குடும்ப நல நிதிக்காக [ராகவேந்தர் சார், கரெக்ட்தானே?] சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் காலையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு நாள் மீண்டும் மாளிகை ஷூட்டிங். 28-ந் தேதி வெள்ளி இரவு நடிகர் திலகம் கொடைக்கானல் புறப்பட்டார்.
ஹைய்யா, ராஜா முதல் காட்சி முதல் நாள் குடந்தையில் பார்த்தேன். பட்டிக்காடா பட்டணமா முதல் நாள் evening show 85 பைசா மதுரை சென்ட்ரலில் பார்த்தேன். வசந்த மாளிகை கொஞ்சம் delay .நான்காம் நாள் குடந்தை ஜுபிட்டர்.
நமது அண்ணனும் எங்கள் அண்ணியும் இணைந்து கலக்கிய / கலக்கிக்கொண்டிருக்கும் / இன்னும் கலக்கப்போகும் இணையில்லா காவியம் "ஆண்டவன் கட்டளை" இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் (12.06.1964 - 12.06.2013).
காலத்தால் அழியாத தத்துவ விருட்சம் "ஆறு மனமே ஆறு"
பார்க்கப் பார்க்க திகட்டாத "அமைதியான நதியினிலே ஓடம்"
எக்காலத்து கவர்ச்சி நடிகையும் தோற்றுப் போகும் "அலையே வா அருகே வா".
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது"
உடன் நடிப்பவர்களுக்கும் டூயட் பாட வைத்து அழகு பார்க்கும் பெருந்தன்மைப் பெட்டகத்தின் படத்தில் "கண்ணிரண்டும் மின்ன மின்ன"
என்ன இல்லை இக்காவியத்தில். எல்லாம் உண்டு இந்த ஓவியத்தில்.
ரசிகப்பெருமக்கள் பதிவுகளைத் தந்து மகிழலாமே. (இப்படம் பிலிமோகிராபியில் இடம்பெறும்போது பதிவுகள் அங்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும்).
பெரும்பாலும் முதல்நாள் மாலைக்கட்சி ரிசர்வ் செய்து பார்ப்பது வழக்கம். ரிசர்வ் செய்யாமல் முதல்நாள் முதல்காட்சி பார்த்த படங்கள்.
சென்னை பிளாசாவில் 'ஞானஒளி'... போலீஸ் தடியடி தூள் பரத்திக்கொண்டிருக்க, கியூவில் நின்ற எங்கள் தலைக்கு மேல் இன்னொரு கியூ போய்க் கொண்டிருந்தது. எப்படியோ டிக்கட் கிடைத்து படம் பார்த்துவிட்டோம்.
சென்னை ஓடியனில் 'தர்மம் எங்கே'.... 2,60 டிக்கட் பிளாக்கில் 20 ரூபாய் கொடுத்து வாங்கிப் பார்த்தது. என் சக்திக்கு அப்போது அது அதிகத்தொகை. தலைவர் படமாச்சே, எவ்வளவானால் என்ன.
'ஞானஒளி' தேவாலயம்.
நன்றி முரளி சார்!
'ஞானஒளி' பற்றிய மேலதிக விவரங்களை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை.
முரளி சார்!
நான் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட்டே தீர வேண்டும். 1995 மார்ச் 12 ம் தேதி எனது திருமணம் நெய்வேலியில் நடைபெற்றது. எனது தங்கையின் கணவர் அப்போது கொடைக்கானலில் BSNL ல் Junior Engineer ஆக பணி புரிந்து வந்தார். அதனால் புதுமணத் தம்பதிகளான எங்களை அவர் திருமணம் முடிந்த கையோடு கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள். எனவே தங்குவதற்கோ, உணவுக்கோ, வாகனங்களுக்கோ பஞ்சமில்லை.
மூன்று நாட்கள் கொடைக்கானலில் தங்கினோம். கொடைக்கானல் சென்ற அன்று இரவாகி விட்டதால் அன்று நன்றாக ரெஸ்ட் எடுத்தோம்.
அடுத்தநாள் என் தங்கையின் கணவர் அன்று எங்கு செல்லலாம் என்று என்னிடம் கேட்டார். "பில்லர் ராக் போகலாமா?" என்று கேட்டார். அதற்கு நான் "பில்லர் ராக், சில்வர் ஃபால்ஸ் எல்லாம் அப்புறம்தான். நான் இன்று கொடைக்கானல் சர்ச்சைப் பார்க்கணும்" என்றேன். அவர் ஆச்சர்யத்துடன் "ஏன் சர்ச்சுக்குப் போகணும் என்கிறாய்?" என்று வியந்த தொனியில் கேட்டார். நான் "சொல்கிறேன்... ஜீப்பை சர்ச்க்கு விடுங்கள்" என்றேன். என் மனைவிக்கும், ஒன்றும் புரியவில்லை. சர்ச்சுக்கு ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திலேயே ஜீப்பை நிறுத்திவிட்டு மேடான அந்த சாலையில் அருமையான வாடைக்காற்று சிலுசிலுவென வீச, அமைதியாக இயற்கை சூழல்களை என் மனைவியும் மைத்துனரும் ரசித்தபடி வந்தனர். ஆனால் என் மனம் எதிலும் லயிக்கவில்லை. மனம் முழுக்க 'ஞான ஒளி'யின் அருமை அருண் தேவனே என் மனம் முழுக்க வியாபித்திருந்தார். இதோ இதோ இன்னும் கொஞ்சம் தூரம்தான். சர்ச் மிக அருகில் வந்துவிட்டது. என் மனதிலும் படபடப்பு தொற்றிக்கொண்டது. என் தெய்வத்தின் பாதம் பட்ட இடங்களை நான் தொழும் தருணம் வந்துவிட்டது அல்லவா!. என் மனதை என்றும் ஆக்கிரமிக்கும் 'ஞானஒளி' காவியத்தின் அற்புத பாடல் படமாக்கப்பட்ட, என் தெய்வம் pray செய்த தெய்வத்தின் சன்னதி. அந்த புனிதத் தலத்தில் இப்போது நான். இனம் புரியா இன்பமா அல்லது சோகமா, இல்லை இல்லை ஏதோ ஒன்று என் மனதை பிசைந்து கொண்டிருந்தது. "ஏன் ஏதும் பேசாமல் வருகிறீர்கள்?" என்றார்கள் என் மனைவி. "வா! சொல்கிறேன்" என்றேன் மெதுவாக. சர்ச்சின் வாயிலை அடைந்தோம். பின் காலணிகளைக் கழற்றிவிட்டு சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் மைத்துனர் "என்ன ஆயிற்று உனக்கு? என்று செல்லமாக கோபித்தார். அழகான தேவாலயம். தூய வெள்ளை மாளிகை போல புனிதமான தேவாலயம். கண்கொள்ளா அழகு. எவருடைய மனதும் அங்கிருக்கும் போது அந்த ஆலயம் போலவே தூய்மையாகிவிடும் அவர் எம்மதத்தினராய் இருந்தாலும்.
http://i1087.photobucket.com/albums/..._002322221.jpg
'தேவனே என்னைப் பாருங்கள்' பாடலின் முதல் சரணம் முடிந்து பல்லவி மீண்டும் ஆரம்பிக்கும் போது நெடிதுயர்ந்த யூக்லிப்டக்ஸ் மற்றும் விண்ணை மறைக்கும் காட்டு மரங்களின் இடையே தவழும் கருமை மற்றும் வெண்மேகங்கள் அப்படியே காமெராவுக்குள் சுழன்றடிக்க, கைகளை வீசாமல் உடம்போடு ஒட்டியபடியே வைத்து, தேவாலயத்தின் நுழைவுப்பக்கம் செல்லும் மேடான சாலையின் குறுக்கே நிமிர்ந்தவாரே நடந்து, பின் கைகளைக் கோர்த்தபடியே தலைவர் இந்த இடத்தில் தானே கர்த்தரைத் தொழுவார் என்று அந்த சரிவுப்பகுதிக்கு மீண்டும் இறங்கி ஓடி வந்தேன். படத்தில் பார்ப்பதற்கும், நேரில் உணர்வதற்கும் நிரம்ப வித்தியாசம் இருந்தது. சீக்கிரம் பிடிபடவில்லை. சிறிது நேரம் தலைவரை மனதில் தியானித்து விட்டு பின் தேவாலயப் படிக்கட்டுகளில் சென்று அமர்ந்து கொண்டேன்.
பின் தேவாலயப் படிக்கட்டுகளை விட்டு நான் அரைமணி நேரத்திற்கு எழுந்திருக்கவே இல்லை. மனம் வரவில்லை. இந்தப் படிக்கட்டுகளில்தானே "கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ!" என்றபடி என் இதயதெய்வம் ஓடிவருவார் என்று அந்தப் படிக்கட்டுகளை ஒவ்வொன்றாகத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன்.
http://i1087.photobucket.com/albums/..._002351311.jpg
"என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி" என்று தேவாலய முன்வாயில்களைப் பிடித்தவாறே நடிகர் திலகம் பண்ணும் அற்புத மூவ்மென்ட்டுகளை நினைத்துக் கொண்டே அந்த வாயில்களை நானும் அவ்வாறே பிடித்துப் பார்த்தேன். அதில் ஒரு தாங்கொணாத் திருப்தியும்,சந்தோஷமும் கிடைத்ததை உணர்ந்தேன். சர்ச்சில் அன்று வேறு யாரும் இல்லை. என் மனைவியும், மைத்துனரும் மாதாவின் ஒளிவீசும் உருவச் சிலையின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, இங்கே நான் நடிகர் திலகம் நடந்த இடங்களை சுற்றி சுற்றி பார்த்தபடி அவர் பெயரை ஜெபித்துக் கொண்டிருந்தேன். மனம் வேறு எதிலும் செல்ல மறுத்து அடம் பிடித்தது. முழுக்க முழுக்க அருண் அவர்களின் ஆக்கிரமிப்பே நிறைந்திருந்தது. செவிகளில் "தேவனே என்னைப் பாருங்கள்" ஒலித்துக் கொண்டே இருந்தது. கண்கள் நடிகர் திலகம் உலாவிய இடங்களிலேயே அலைந்து கொண்டிருந்தது.
திருமணமான புதிதாகையால் அப்போது மனைவிக்கு இதுபற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் மைத்துனருக்கு நன்றாகத் தெரியும் தலைவர் பித்து பிடித்தவன் என்று. சினிமாக்களைப் பற்றியும் நன்கறிந்தவர். அவர் அழகாகக் கண்டு பிடித்து விட்டார்.
"ஓ! 'ஞானஒளி' மனசில் ஓடிக் கொண்டிருக்கிறதா?!... அதற்காகத்தான் முதலில் சர்ச்சுக்கு கூப்பிட்டுக் கொண்டு போகச் சொன்னாயா?...இப்போதுதான் புரிகிறது" என்று சிரித்தபடியே கேட்டார். (அந்த மைத்துனர்தான் மதுரை "கர்ணன்" நிகழ்வுகளை போட்டோ எடுத்து அனுப்பியது) பின் சர்ச்சின் படிக்கட்டுகளில் அமர்ந்து மனதில் ஓடிக் கொண்டிருந்ததை இருவரிடமும் கொட்டித் தீர்த்தேன். பின் எனக்குத் தெரிந்தவரையில் ஒவ்வொரு இடமாக சுட்டிக் காண்பித்து இங்குதான் தலைவர் இப்படி நிற்பார்... இங்கேதான் அழகாக நடந்து வருவார்... இங்கேதான் நின்று பிரார்த்தனை செய்வார் என்று அதீத ஆவலுடன் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தேன்.
'இப்படியா ஒரு ஆள் இருப்பார்' என்ற வியப்பான ஆச்சரியக்குறி முகத்தில் படர மனைவி என்னைப் பார்த்தார். எனக்கு 'போகப் போகத் தெரியும்' சர்வர் சுந்தரம் பாடல்தான் நினைவுக்கு வந்தது. பின் ஒருமணி நேரத்திற்கு மேலாகவும் சர்ச்சில் இருந்துவிட்டு, 'ஞானஒளி' எண்ண அலைகளில் மூழ்கிவிட்டு, அதிலிருந்து விடுபடமுடியாமல் 'தேவனே என்னைப் பாருங்களை' முணுமுணுத்தபடியே அடுத்த இடத்திற்குச் செல்ல மனமில்லாமல் மனைவியுடனும், மைத்துனருடனும் சற்று எரிச்சலுடனேயே நடையைக் கட்டினேன்.
இப்போது சேனல்களில் 'தேவனே என்னைப் பாருங்கள்'" பாட்டைப் போட்டாலே என்னை விட என் மனைவி அதிக டென்ஷனாகி விடுவார்கள். "என்னங்க என்னங்க...உங்க பாட்டு... ஓடி வாங்க... ஓடி வாங்க" என்று அவர்கள் குரல் கொடுத்தவுடன் எந்த வேலை எப்படி இருந்தாலும் சரி அப்படியே போட்டுவிட்டு, பாடல் காட்சியை முழுமையாகப் பார்த்து அனுபவித்துவிட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்வோம். அது இன்றுவரை தொடர்கிறது. இனியும் தொடரும்.
(எங்க வீட்டு அம்மாவுக்கு 'தேவனே' வை விடவும் "அந்த நாள் ஞாபகம்" ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பது வேறு விஷயம்)
இப்போது சொல்லுங்கள் முரளி சார்! "ஞான ஒளி' என்றாலே என் நாடி நரம்பெல்லாம் ஏன் முறுக்கேறாது என்று?
அற்புதமான நினைவலைகளை எழுத்து வடிவில் கொண்டு வரச் செய்ததற்கு மிக்க நன்றிகள் முரளி சார்!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
"ஞான ஒளி "வாசுதேவன் என்று இனி இவர் அழைக்க படுவார். "தில்லானா " மோகனாம்பாள் போல. என்னுடைய 7,8 வகுப்புகளின் class teacher R .B என்றழைக்கப்பட்ட பால சுப்ரமணியன்.(நெய்வேலி N .L .C block -12)ஒரு தீவிர NT ரசிகர். என்னுடன் இந்த படத்தை ஐந்து முறை பார்த்து விட்டு ஐந்தாவது முறையும் எத்தனை style நடை என்று கணக்கெடுத்து ,அங்கேயும் ஒரு கிளாஸ் நடத்தி விடுவார் தேவனே பாட்டில்.
"ஞான ஒளி " வாசுதேவன் வாழ்க.
ஆண்டவன் கட்டளை-
ஒரு மறக்க முடியாத படம் ,ஆலயமணி போலவே . Form &Content அவ்வளவு வித்யாசம்.
சிவாஜி-தேவிகா இணைவில் சாந்தி, நீலவானம் மற்றும் இந்த படம் முன்னிலையில். தேவிகா கிக்கின்னா கிக்கு ,அத்தனை கிக்கு ஏத்துவார். அழகே வா பாட்டில் கற்றை முடி ஈரத்துடன் நெற்றியில் புரள இவரின் காம விழைவு அழைப்பில் ,professor நொறுங்கி போவதில் ஆச்சர்யம் என்ன? அந்த மன போராட்ட காட்சி சிவாஜி-சங்கர்-விசு,ராமு கூட்டாக நடத்தும் மந்திர ஜாலம். தமிழுக்கு ரொம்ப புதுசு. இடை வேளை (ஆறுமனமே வரை)வரை படம் இமயத்துக்கு உயரும். பிறகு........ தரைக்கும் கீழே அதல பாதாளம்.
இந்த படத்தின் பிளஸ் கள் - சிவாஜி,தேவிகா, சங்கர், விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கொட்டாரக்கரா மற்றும் ஜாவர் (Form &Content ),ஆறுமனமே வரை உச்சம் தொடும் விறுவிறு.
minus கள் -தேவைஇல்லா தூயதமிழ் வசனங்கள், சந்திர பாபு, ஆறு மனமே பாட்டுக்கு பின் பாதாளத்துக்கு சரியும் consistency அற்ற ஏனோ தானோ திரைகதை.
கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் ஆலய மணி பெற்ற வெற்றியை பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்டது.
எனக்கு ஒரு மகா வருத்தம்- எனது ஆதர்ஷ எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதிய masterpiece படகு வீடு ,சிவாஜி நடிப்பில் உருவாவதாக இருந்து ,ஆரம்ப வேலைக்கு பின் ஆண்டவன் கட்டளை சாயலில் இருப்பதாக சொல்லி கை விட பட்டதே.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்களின் கொடைக்கானல் தேனிலவு அனுபவம் சிலிர்க்க வைக்கிறது. திருமணம் முடிந்து தேனிலவு சென்ற இடத்திலும் தலைவரின் நினைவு மற்றும் அவர் நடித்த இடங்களில் நீங்களும் நடந்தபோது கொண்ட பரவசம் அனைத்தும் அருமையான அனுபவங்கள். உங்களின் விவரிப்பு எங்களையும் அங்கு நடை போட வைத்தது.. ஞானஒளி தங்களின் உயிரோடு ஒன்றிவிட்டதில் வியப்பில்லை. (என் மனைவியின் அபிமானப்பாடல் 'தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே'. கிட்டத்தட்ட மூணும் ஒரே 'கேட்டகரியாக இல்லை?.)
"ஞான ஒளி" வாசு சார்!
இப்படி ஒரு பக்தியா!!
மெய் சிலிர்க்கிறது..உங்கள் நிகழ்விற்கு ஒரு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர்,தலைவரின் இன்னொரு ரசிகரும்,தன் தேன் நிலவிற்கு அதே கோடைக்கானலிற்கு போயிருந்தார்.ஆனால் அவர் முதலில் சென்றதோ,"வெள்ளிக்கிண்ணம்தான்"பாடல் படமெடுக்கப்பட்ட இடம்.
ம்ம்ம்ம்... பக்தியிலும் சுத்தமான, ஆசாரமான, பக்தி உங்களுடையது!
பாகம் - 2 : அனைவராலும் காப்பியடிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் உடை அலங்கார நளினம்..!
"நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !! திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !
http://www.youtube.com/watch?v=i1GVP...m-upload_owner
Vasu sir,
Your experience in visiting the church in which NT shot for Gana Oli was so real, raw that it was like a linear narration. nice article
வாசு சாருக்கு ஞான ஒளி எப்படியோ, அதைப் போல, சுமதி என் சுந்தரி திரைப்படத்திற்குப் பிறகு என்னுள் மிகவும் ஆழமாக ஊடுருவி அமர்ந்த படம் ஆண்டவன் கட்டளை. கதையமைப்பு எவ்வாறிருந்தாலும் நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு இலக்கியம். நூறாண்டு காலத் தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்றில் பாடல்களைப் பற்றி எழுதும் போது முதல் 10 லிருந்து 20 இடங்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய பாடல் அமைதியான நதியினிலே மற்றும் ஆறு மனமே ஆறு இரண்டுமே ஆகும். நான் முரளி சாரிடம் பேசும் போதெல்லாம் குறிப்பிடத் தவறாத காட்சி, அந்த மன ஊசலாட்டக் காட்சி. சிற்றின்பம் மற்றும் பேரின்பம் என்ற இரண்டு மன நிலைகளிலே மனித மனம் தள்ளாடுவதை, இதற்கு முன்னும் பின்னும் யாராலும் சித்தரித்திருக்க முடியாது என்று ஆணித்தரமாய்க் கூற முடியும். ஒரு லட்சம் தடவை பார்த்தால் கூட மேலும் மேலும் புதிய பரிணாமத்தில் அவருடைய நடிப்பை ஆய்வு செய்யத் தூண்டும் காட்சி. அந்த இடத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. விட்டத்தைப் பார்த்தவாறே அமர்ந்து முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட தன் உள்ளத்துக்குள் எழும் போராட்டத்தை விஷுவலாகக் கொண்டு வந்த இந்தக் காட்சியில்
உலகத்தில் வேறு எந்த நடிகராலும் எந்த மொழியிலும் எந்தக் காலத்திலும் எந்தப் பிறவியிலும் செய்ய முடியாது
என்று அறுதியாக, உறுதியாகக் கூற முடியும்.
'ஆண்டவன் கட்டளை'. கார்த்திக் சாருக்காகவே ஸ்பெஷல் நிழற்படங்கள்.
http://img7.imageshack.us/img7/120/v...1319h55m41.pnghttp://img560.imageshack.us/img560/7...1319h56m03.pnghttp://img694.imageshack.us/img694/8...1319h56m05.png
http://img845.imageshack.us/img845/4...1319h56m14.pnghttp://img84.imageshack.us/img84/126...1319h56m18.pnghttp://img4.imageshack.us/img4/5116/...1319h55m37.png
http://img534.imageshack.us/img534/6...1319h55m24.pnghttp://img577.imageshack.us/img577/1...1319h55m28.pnghttp://img818.imageshack.us/img818/5...1319h55m56.png
ராகவேந்தர் சார்,
இன்னும் மேலே போங்க. இந்த காட்சி பற்றி இன்னும் விரிவாக நீங்கள் சொல்லி ரசிக்க ஆசையாக இருக்கிறது. எனக்கு மிக மிக பிடித்த காட்சிகளில் ஒன்று.
'ஆண்டவன் கட்டளை'
http://img212.imageshack.us/img212/4...8120455en0.jpghttp://img488.imageshack.us/img488/6...7165512ix3.jpg
http://img466.imageshack.us/img466/8...7164803sh1.jpghttp://img359.imageshack.us/img359/5...7165305vb6.jpg
http://img359.imageshack.us/img359/4...7162345xq7.jpghttp://img359.imageshack.us/img359/3...8120643iq2.jpg
http://img359.imageshack.us/img359/4...8120636np1.jpghttp://img359.imageshack.us/img359/9...8120405no0.jpg
கண் மட்டும் இருந்தால் போதும். இந்த stills பார்த்தே ஒருவன் கதையை சொல்லி விடலாம்.
அப்பப்பா ..... தெய்வ பிறவிதான்.(ஆண்டவன் கட்டளையால் மோசமான தமிழகத்தில் பிறந்து விட்டாரே இந்த உலக மேதை!!!!)
ஸ்டில் சொல்லும் கதை.
இப்படி இருந்த மாமேதை புரொபஸர் கிருஷ்ணன்
http://ttsnapshot.com/out.php/i17477...h21m39s111.png
இந்த சுந்தரவதன தேவதையின் அழகில் மயங்கி
http://i4.ytimg.com/vi/3lIpebdRTw0/hqdefault.jpg
மனம் தடுமாற ஆரம்பித்து
http://i1.ytimg.com/vi/PYCv3vDPzrk/hqdefault.jpg
காதலாகி கசிந்து, தன் நிலை மறந்து பின் காமமுற்று
http://ttsnapshot.com/out.php/i14895...9h34m57s72.png
பின் அவள்மீது தான் உயிரை வைத்து
http://i1.ytimg.com/vi/lviVOSU-h8U/hqdefault.jpg
பின் காதலியை இழக்க நேர்ந்து பொலிவிழக்க ஆரம்பித்து
http://img.youtube.com/vi/G97Q6mVk4yc/0.jpg
மனம் வெறுத்து பின் அமைதி தேடி
http://img359.imageshack.us/img359/5...7165305vb6.jpg
காதலியும் இந்த நிலைமைக்கு ஆளாகி
http://img488.imageshack.us/img488/6...7165512ix3.jpg
மீண்டும் காதலியைக் கண்டு பேதலித்து
http://i3.ytimg.com/vi/Jngi00QQ6N0/hqdefault.jpg
பின் இருவரும் ஒன்று சேர்ந்த கதை.
http://t2.gstatic.com/images?q=tbn:A...Nzs_OKpQmWzSfg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
perfect .மனபோராட்ட still ஒன்று சேர்த்திருக்கலாம். ஏன் switch off செய்துள்ளாய்?
அன்புள்ள வாசுதேவன் சார், ராகவேந்தர் சார், கோபால் சார்,
'ஆண்டவன் கட்டளை' பொன்விழா ஆண்டு துவக்கத்தையோட்டி தங்கள் ஒவ்வொருவரின் பதிவுகளும் அருமை. ராகவேந்தர் அவர்கள் விவரித்த மனப்போராட்ட காட்சி விளக்கம் அந்தக்காட்சியை அப்படியே கண்முன் கொண்டுவந்தது.
வாசுதேவன் சார்,
ஆண்டவன் கட்டளை ஸ்டில் பதிவுகளுக்கு ஸ்பெஷல் நன்றிகள். அதிலும் குறிப்பாக 'அண்ணி ஸ்பெஷல்' என்று தனிப்பதிவு இட்டது என்னைப்போன்ற எண்ணற்ற ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 'அன்புக் கட்டளை' யினை ஏற்று 'ஆண்டவன் கட்டளை' புகைப்பட வரிசையை பதிவிட்டதோடு அதை எனக்கு டெடிகேட் செய்த தங்கள் உழைப்புக்கு பல்லாயிரம் நன்றிகள். 467-வது பதிவின் இரண்டாவது படம் அன்றைய காலகட்டத்தில் பல ஆண்களின் தூக்கத்தைக் கெடுத்த படம். நான் விரும்பும் (நடிகர்திலகம் அல்லாத) மிகச்சிறந்த பத்து தமிழ்ப்பட ஸ்டில்களில் ஒன்று.
தங்கள் வரிசை தப்பானது .தங்கள் வேண்டுகோளை ஏற்ற முதல் பதிவு அடியேனுடையது .
Go,
n.c.nammaruvai paarthirunthaal enna aaagiyirukkum? :razz:
தேவாலயப் பதிவை முதலில் ரசித்த கோபால்...கோபால்...கோபால்...கோபால்! (போதுமா!?) அப்புறம் கார்த்திக் சார், அருமை நண்பர் கண்பத் சார், ரசிகவேந்தர் சார் (போனிலும்), தம்பி ராகுல்ராம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
கார்த்திக் சார்,
'ஆண்டவன் கட்டளை' பதிவுகளுக்கான தங்கள் உயர்ந்த பாராட்டிற்கு நன்றி! தங்கள் சந்தோஷமே எங்கள் சந்தோஷம். அண்ணியார் தங்களை ஏன் இந்த அளவிற்கு கவர்ந்தார் என்று இன்னும் நன்றாகப் புரிகிறது. அதுவும் சோகத்தில் ஓடம் ஒட்டுவது போன்ற அந்த கைகளின் பாவனை. அற்புதம்.
ஆண்டவன் கட்டளை
இந்த படம் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல் . என்னமோ எதோ எப்போது DVD கடைக்கு sendralum இந்த படம் வாங்க மட்டும் மாட்டேன் . ஒரு நாள் காலை ஜெயா டிவியில் இந்த படம் ஒளிபரபினர்கள் ஒரு 10 நிமிடம் பார்த்தேன் எங்க அப்பாவும் தான் , இந்த படத்தின் கதை என்ன என்று கேட்டேன் அவர் அதை சரியாக சொல்லவில்லை காரணம் மறதி , அவர் professor என்பதை மட்டும் சொன்னார் .
என் வண்டி அன்று ஆபீசில் இருந்து வரும் பொழுது வேற எங்க போகும் நேர DVD கடைக்கு தான் எப்படியோ அந்த படத்தை வாங்கி விட்டேன் . வாங்கி கொண்டு வந்து வீட்டில் எங்கோ வைத்துவிட்டேன். கிட்ட தட்ட 3 வாரம் கழித்து நேற்று கிடைத்தது . நமது திரியை browse செய்யும் பொது தான் தெரிய வந்தது இந்த படத்துக்கு இது பொன்விழா ஆண்டு என்று
இந்த படத்தை பார்க்காமல் ஒத்திவைத்து கொண்டே இருந்தேன் பொன்விழா ஆண்டு என்று தெரிந்ததும் இந்த படத்தை பார்த்தேன் .
பார்க்கும் போதே என்னை நானே நொந்து கொண்டேன் . இந்த மாதிரி ஒரு படத்தை இத்தனை நாள் பார்க்காமல் விட்டுவிட்டோம் என்பதை நினைத்து . ஒரு விஷயம் சொன்னால் என்னை எல்லோரும் அடிக்க வருவீர்கள் , அது என்னக்கு தேவிகாவின் முகம் மட்டும் நினைவில் இருக்காது , பலே பாண்டிய படத்தில் கூட அப்படி தான் .
பொதுவாக PSV pictures , சிவாஜி மற்றும் சங்கர் கூட்டணி படங்களில் ஒரு விதமான மனோதத்துவம் குணம் அடிபடையில் கதை அமைந்திருக்கும் இந்த படமும் அப்படி தான் . இதே கூட்டணி 1962ல் ஆலயமணி என்ற ஒரு மிக பெரிய வெற்றி படத்தில் ஒன்று சேர்ந்தது . கூட விஸ்வநாதன் ராமமூர்த்தி , கண்ணதாசன், ஜாவர் சீதாராமன் போன்ற stalwarts சேர்ந்தால் என்ன ரிசல்ட் கிடைக்கும் ரசிகர்களுக்கு ஒரு விருந்து தான் அது தான் இந்த படம் .
சச்சின் முதல் பால் லே சிக்ஸ் அடித்தல் எப்படி இருக்குமோ அப்படி பட்ட உணர்வு தான் இந்த படம் டைட்டில் போடும் போதே என்னை தொற்றிகொண்டது .
இந்த படத்தின் antagonist ஒரு professor மிகவும் படித்திவார், அவரை கண்டால் ஊரில் அனைவரும் மரியாதையை கலந்த பயம் கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணாமல் இந்த கேரக்டர் யை டைட்டில் போடும் போதே நமக்கு பதிய வைத்துவிடுகிறார்கள் . அதுவும் அந்த கேட் சத்தம் போடும் போது நம்மவர் அதுக்கு ஒரு விளக்கம் சொல்லுவதும் , தொடர்ந்து 7 நிமிடம் நடக்கும் போது ஒரு மிக பெரிய கம்பீரம் நம்மளையும் தொற்றிகொல்கிறது நம்ம சிவாஜி ரசிகர்கள் என்று .
எனக்கு தெரிந்து எந்த ஒரு நடிகரும் இவ்வளவு கம்பீரமாக இப்படி ஜல் ஜல் என்று நடந்ததாக நினைவு இல்லை . அதுவும் அவர் அந்த கோட் யை புல்லா கவர் செய்து கையில் கொடையுடன் நடந்து செல்லும் விதம் அழகே அழகு . அதே மாதிரி நான் பார்த்த படங்களில் அதிக நேரம் காலேஜ் க்கு உள்ளே அதாவது classroom காட்சிகள் அதிகம் உள்ள படம் இதுவாக தான் இருக்கும் .
Prof .கிருஷ்ணன்க்கு மாணவர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அதே கல்லூரியில் டிரில் மாஸ்டர் ஆக இருக்கும் அசோகன்க்கு வெறுப்பை வரவைக்கிறது.
கல்லூரியில் சிட்டி பாபு செய்யும் குறும்பை பற்றி விசாரிக்க ladies ஹோச்டேல் க்கு செல்லும் prof கிருஷ்ணன் அங்கே இருக்கும் (ராதா) தேவிகா வை கண்டதும் சட்ட்று தடுமர்கிறார் . அந்த மல்லிகை பூ அவர் பாக்கெட்டில் இருந்து எடுத்து மூஞ்சியை அஷ்ட கோணலாக வைத்து அதை எரியும் காட்சி , அதை தொடர்ந்து அவர் வெளியே செல்லும் பொழுது அந்த பூ காய்ந்து போய் இருப்பதாய் பார்த்து அவர் சொல்லலும் வார்த்தைகள் ஒரு கவிதை
அதே prof .கிருஷ்ணன் தன் மாணவன் (AVM Rajan ) யை கண்டித்து விட்டு ராதாவை சந்திக்கும் பொழுது கொடையை ராதா விடம் கொடுத்து விட்டு ஒரு விதமான நடையில் (கையை பின்னாடி கட்டி கொண்டு ) நடக்கும் பொழுது , நடையில் இத்தனை வகை இருக்கிறதா என்பதை போலே நம்ம எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறார் . தொடர்ந்து அவர் காதல் வசப்படும் காட்சியல் அவரின் மனசை ஒரு கண்ணாடி மூலம் வேறு வேறு முகங்களை பிரதிபலிக்கிறார் கூட நம்ம தேவிகாவும் நம்மளை எங்கோ கொண்டு செல்கிறார் அற்புதமான direction .
அதை தோன்றது வரும் அலையே வா அருகே வா பாடலும் அதில் இந்த ஜோடியின் நடிப்பும் , நம்ம சிவாஜி உணர்ச்சிக்கு அடிமை படுவதும் அதில் இருந்து மீள முடியாமல் தவிப்பதும் சிறந்த நடிப்பு.
இவ்வளவு நாள் வெறும் சாமி படங்கள் , தத்துவ வாக்கியங்கள் உள்ள இல்லத்தில் இப்பொழுது கொஞ்சம் மாடர்ன் வாசம் வீசுகிறது . அடுத்தது உடை , நம்மவர் இப்போ அந்த tranformation யை உடை மூலம் நம்மளுக்கு உணர்த்துகிறார் இப்போ அவர் court , suit மற்றும் bow அணிந்து சும்மா கலக்கிறார் எந்த காதல் தேவை இல்லை என்று சொன்னாரோ அவரே இப்போ அதன் மகத்துவத்தை பற்றி பக்கம் பக்கமாக பேசுகிறார் .
ஆனால் இந்த காதல் பிடிக்காத அசோகன் (ராதாவின் முறை மாமன் ) இந்த விஷியத்தை பற்றி மாணவர்கள் யிடம் சொல்ல அது பெரும் பிரச்சனை ஆகி விடுகிறது , கிருஷ்ணன் இந்த காதலை ஒற்று கொண்ட உடன் அவர் மரியாதையை குறைகிறது .
ராதா வின் தாயாரோ ஒரு பண பேய் , ராதாவை திருமணம் செய்து கொள்ள கிருஷ்ணன் கடன் வாங்குகிறார் ஆனாலும் மீண்டும் அசோகனின் சதியில் சிவாஜியால் தேவிகாவை மணக்க முடியாமல் போகிறது . இந்த ஜோடி படகில் போகும் பொழுது ஒரு விபத்தில் சிக்கி ராதா இறந்து விடுகிறார் , கொலை குற்றவாளியாக கிருஷ்ணன் தக்க ஆதரம் இல்லாததால் விடுதலை செய்ய படுகிறார் . இதற்கு இடையில் அவர் தாயர் இறந்து விடுகிறார் , கிருஷ்ணனின் முறை பெண் இப்போ கஷ்ட படும் நிலையில், கிருஷ்ணனோ ஒரு சாமியார் போலே ஊர் ஊராக சுத்துகிறார் ஆறு மனமே ஆறு என்று (என்ன அற்புதமான ஒரு பாடல் , வரிகள் , நடிப்பு )
புஷ்பலதாவை (முறை பெண்ணை) கண்டு பிடிக்கும் கிருஷ்ணன் அவர் உடன் வேற ஊர்க்கு செல்கிறார் சந்திரபாபு உடன் , இந்த இடத்தில அவர் உடை மற்றும் முக அமைப்பில் ஒரு மாறுதல் , ஏழமையை குறிக்கும் விதமாக நடிகர் திலகத்துக்கு மற்றுமே உரித்தான ஒரு dedication .
விதி சிவாஜியை , பாலாஜியின் கம்பெனியில் வேலைக்கு அமர்த்துகிறது . அங்கே ராதாவை பார்த்து ஆச்சரியம் அடைகிறார்
ஆனால் ராதா விபத்தில் தன் நினைவை இழந்து விடுகிறார் . சில நாட்களில் பாலாஜியின் பையன் யிடம் அமைதியான நதியினிலே ஓடம் என்ற பாடலை படும் பொழுது ராதாவுக்கு நினைவு வருகிறது . இங்கே ஏவிஎம் ராஜன் மிக உயர்ந்த நிலைக்கு வருகிறார் அவர் பாலாஜியிடம் தன் குரு கிருஷ்ணன் தான் மூர்த்தி என்பதை சொல்லி விடுகிறார் முடிவில் ஏவிஎம் ராஜன் புஷ்பலதாவை திருமணம் செய்து கொள்ள , ராதா கிருஷ்ணனை கரம் பிடிக்க நம அனைவரும் ஒரு நல்ல படத்தை பார்த்த மகிழ்ச்சி உடன் வீட்டுக்கு செல்வோம்
சந்திரபாபு வின் நடிப்பும் அபாரம் குறிப்பாக சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் அவர் செய்யும் சஹாசங்கள் சூப்பர் .
அவர் சொல்லும் ஒரு வசனம் உங்களுக்கு தெரியாதது அவருக்கு தெரியும் , அவருக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது . வசனம் ஷார்ப் இது மற்றும் இல்லை படம் முழுவதும் வசனம் சூப்பர் உபயம் ஜாவர் சீதாராமன்
என்ன இல்லை இக்காவியத்தில் ஆனாலும் இந்த படம் ஏன் 100 நாட்களை தொடவில்லை என்பது மிக பெரிய கேள்வி குறி தொடர்ந்து மூன்று 100 நாட்கள் படங்கள் கொடுத்த பாதிப்பு மட்டுமே எனக்கு தெரிந்த ஒரே காரணம் அவர் படங்களே இந்த படத்தின் மிக பெரிய வெற்றியை தடுத்து இருக்கும் என்றே தோன்றுகிறது
எளிமைத் திலகத்தின் ஏற்றமிகு தோற்றம்
http://sphotos-d.ak.fbcdn.net/hphoto...28425352_n.jpg
நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் . முகநூல் மூலமாக
இதுவும் மிக அபூர்வமான போட்டோ ....
http://sphotos-e.ak.fbcdn.net/hphoto...65872808_n.jpg
நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் - முகநூல் மூலமாக
கல்தூண் படத்தின் நூறாவது நாள் விழா என நினைக்கிறேன்.
நல்லி சின்னசாமி செட்டி அதிபருடன் நடிகர் திலகம், மற்றும் அன்னை கமலா அம்மையார்
http://sphotos-b.ak.fbcdn.net/hphoto...17903260_n.jpg
நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் - முகநூல் மூலமாக