இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி
http://i57.tinypic.com/24ezuj5.jpg
Printable View
இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி
http://i57.tinypic.com/24ezuj5.jpg
http://i57.tinypic.com/2m5jsw7.jpg
சாதாரண மனிதர்களை இறைவன் 40 நாட்களில் படைக்கிறான். தீர்க்க தரிசிகளையும், மனித குல மாணிக்கங்களையும் படைக்க 400 ஆண்டுகள் எடுத்துகொள்கிறான். வேதம் சொல்லும் இந்த வார்த்தைப்படி பார்த்தால் இன்னொரு பொன்மனச்செம்மலைப் பார்க்க மனித குலம் 400 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அருமையான வேத வாக்கியம். பதிவிற்கு நன்றி திரு. லோகநாதன் சார்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தமிழை அழகாக உச்சரித்துப் பேசும் நடிகைகளில் எம்.என். இராஜமும் ஒருவர். இவரது தமிழ் உரையாடல் உச்சரிப்பு கணீரென்று மிகத் தெளிவாக இருக்கும். நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சந்தித்த போது, எம்.ஜி.ஆர். இவரிடம், " படங்களில் இன்னும் நடிக்கிறயா?" என்று கேட்டதற்கு இவர், "இல்லை" என்று சொல்லியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர்., " நீ சும்மா இருக்கலாம்; ஆனால், உன்னோட தமிழ் சும்மா இருக்கக் கூடாது" என்று கூறிவிட்டு, தமிழ் நாடு அரசின் மண்டலச் செய்திப் பிரிவில் இவரது குரலுக்கு இடமளித்திருக்கிறார். அந்த அளவிற்கு இவரது தமிழ்ப் பேச்சுப் பிரசித்தம்! மகாதேவி படத்தில் இவருக்காகவே ஒரு காட்சியில் அருமையான உரைநடை எழுதினார், கண்ணதாசன். அந்தக் காட்சிதான் இங்கே!
https://www.youtube.com/watch?v=vFGks8N7Mxs
Mahaadevi -- M N Raajam dialogue scene
. [Disclaimer: This video clip is posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I do not wish to violate any copyright owne...
YOUTUBE.COM
நம் இதய தெய்வம், உலகத்தமிழர்களின் உன்னதமான ஒரே உண்மைத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் புரட்சிதலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் நிறுவிய கட்சியின் ஆரம்ப காலத்து உறுப்பினரும், அவரது காலத்தில் சென்னை மாநகராட்சியின் அப்போதைய 110 வது வட்ட அமைப்பாளராக இருந்தவருமான திரு. ஏழுமலை அவர்கள் . அனைத்துலக எம் . ஜி. ஆர். பொது நல சங்கம் ஆற்றி வரும் பணிகளையும், செயல்பாடுகளையும் கேள்விப்பட்டு, இன்று, எனது இல்லம் தேடி வந்து பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அவரை நன்றியுடன் வணங்கினேன். கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து , பல அமைச்சர்களை வைத்து பிரம்மாண்டமான கூட்டம் நடத்தியவர். புரட்சித்தலைவரின் புகழ் பாடுவதை மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டு இன்றும் செயல் பட்டு வருகிறார்.
திரு. ச. ஏழுமலை அவர்கலின் சொந்த ஊர் திருக்கழுகுன்றம். நமது பொன்மனச்செம்மலின் காவியம் "சபாஷ் மாப்பிள்ளே" சென்னை ராம் திரையரங்கில் வெளியானபோது, திருக்கழுகுன்றத்திலிருந்து நடந்தே வந்து, பார்த்து விட்டு சென்றார்.
நம் மக்கள் திலகத்துடனான தனது இனிய அனு ப வங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். சில சம்பவங்களை நெகிழ்ச்சியுடன் கூறி, கண் கலங்கினார். அவரது புகைப்பட சேகரிப்புகளிலிருந்து சில காட்சிகள், திரி அன்பர்கள் பார்வைக்கு :
,http://i58.tinypic.com/dms8yv.jpg
http://i59.tinypic.com/ofycgl.jpg
இந்த குடியிருப்பு பகுதி, சென்னை கோடம்பாக்கம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ளது
Courtesy : Facebook
http://i59.tinypic.com/5ldhm0.jpg
Courtesy : Facebook
http://i59.tinypic.com/x2ux4l.jpg
சமீபத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் பகுதிக்கு எனது குடும்பத்தாரோடு சென்றிருந்தேன். மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியமான இதயக்கனியில் இடம்பெற்ற கடைசி சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட அற்புதமான இடம். நீண்ட நாட்களாக அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அன்றுதான் நிறைவேறியது. மக்கள் திலகம் நடித்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற பிறகே இவ்விடம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமானது. மக்கள் திலகத்தின் ஆட்சி காலத்தில் தமிழ் நாடு சுற்றுலாத்துறை மூலம் சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு 'அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகம்' என்று பெயரிடப்பட்டு மக்கள் அனைவரும் விரும்பி வருகை தரும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இதயக்கனி படப்பிடிப்பின்போது மக்கள் திலகம் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்ட இடம் சிறிது தூரத்தில் உள்ளது அவ்விடம் தற்போது எம் ஜி ஆர் திட்டு என்று அழைக்கப்படுகிறது.
படகில் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களில் பயணித்தபோது மக்கள் திலகம் எதையும் புதுமையாக செய்யவேண்டும் என்ற வேட்கையுள்ள மாமனிதர் என்பது புரிந்தது. மாங்குரோவ் காட்டின் உட்பகுதியில் படகு செல்லும் அளவிற்கு பாதை அமைத்து மிக கவனமாக படமாக்கி உள்ளனர்.
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் காண வேண்டிய இடங்களில் பிச்சாவரமும் ஒன்று.
சில புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
அன்புடன்,
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s3.postimg.org/xmp4uc9kz/WP_2..._33_50_Pro.jpg
எம்.ஜி.ஆரைப் பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. எம்.ஜி.ஆருக்குக் குதிரையேற்றம் தெரியாது. அப்படியே ஏறினாலும் நின்று கொண்டிருக்கும் குதிரை மீது ஏறி அமர்ந்து கொண்டு இங்கும் அங்கும் பார்ப்பது போல் பாவனை செய்வார். எல்லாப் படங்களிலும் பேக் புரொஜக்சன் முறையில் தான் எம்.ஜி.ஆரின் குதிரையேற்றக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் ஒரு கட்டுக்கதை பரப்பப் பட்டிருந்தது. இதனைப் பற்றிய பல பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தபோதும் ஆதாரங்களுடன் மறுப்பினை அனுப்பி வைத்திருந்தேன். எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பிரபல பத்திரிக்கை உட்பட எந்த பத்திரிக்கையிலும் அது பிரசுரமாகவில்லை. மேலும் அக் கட்டுரையின் மறுபிரசுரங்களிலும் கூட அந்தக் கருத்து மீண்டும் இடம் பெற்றிருந்தது. இது பற்றி நான் ஏற்கனவே நமது திரியில் ஒரு கட்டுரையை பதிவேற்றி எம்.ஜி.ஆரின் நிழல் போல் இருந்த திரு. ராமகிருஷ்ணன் போன்றோர் இது பற்றி விவரமாக எழுத வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தேன். அருமைச் சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அந்த ஆவலை ஓரளவு நிறைவேற்றியுள்ளார். இன்னும் விரிவாக இது போன்ற மறுப்பு கட்டுரைகள் வெளியாக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நண்பர்கள் அனைவரும் தங்களது அனுபவங்களை இது தொடர்பாக தெரிவிக்கவும். சதிலீலாவதி படத்தின் ஆரம்பத்தில் மக்கள் திலகத்திற்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது தான். ஆனால் அதே கால கட்டத்தில் தனது அன்னையின் அச்சத்தின் காரணமாக போடப் பட்டிருந்த தடை உத்தரவையும் மீறி கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களது உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட விவரத்தை மக்கள் திலகம் தனது வாழ்க்கை வரலாறான நான் ஏன் பிறந்தேன் காவியத்தில் விரிவாக பதிவு செய்திருக்கிறார்., மேலும் தனது குதிரையேற்றப் பயிற்சி தொடர்பாகவும் மிக மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். காப்புரிமை தொடர்பாக அந்தக் கட்டுரையை நான் இங்கே பதிவேற்ற இயலவில்லை. பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள் கோடி.
மக்கள் திலகத்தின் தீவிர அபிமானியான திரு ஏழுமலை அவர்கள் மக்கள் திலகத்துடன் இருக்கும் நிழற்படங்களை
பதிவிட்ட இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி . சாதாரண தொண்டன் அழைப்பின் பேரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் திரு ஏழுமலை வீட்டிற்கு சென்ற காட்சி நெஞ்சை விட்டு அகலாது .அருமையான ஆவணம் . நன்றி திரு ஏழுமலை சார் .
VERY NICE PICS. THANKS RAVICHANDRAN SIR
SEE THE VIDEO- PICHAVARAM ISLAND -FROM 2.17.30 ONWARDS.
http://youtu.be/sKrE9fCCzdI
1963 jan-feb ல் திருவிழா கண்ட மவுண்ட் ரோடில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய ஒரு சுவாரசிய தகவல்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகில் முடி சூடா மன்னனாக , வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த நேரமது .
பொங்கலுக்கு முன் வந்த பணத்தோட்டம் - பிளாசாவிலும் . பிப்ரவரியில் வந்த கொடுத்து வைத்தவள் -காசினோ விலும்
தர்மம் தலை காக்கும் -சித்ராவிலும் ஒரே நேரத்தில் மூன்று எம்ஜிஆர் படங்கள் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் விருந்தாக
அமைந்தது .
பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் சரவணா பிலிம்ஸ் . தேவர் பிலிம்ஸ் , ஈ .வி .ஆர் பிச்சர்ஸ் தயாரிப்பில் பிரபல
இயக்குனர்கள் கே. சங்கர் , எம் .ஏ .திருமுகம் , ப . நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகத்தின் மூன்று படங்களும்
வித்தியாசமான முறையில் அருமையாக இருந்தது .
பணத்தோட்டம் - சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வேடத்தில் எம்ஜிஆரின் நடிப்பு அபாரம் . மேற்கத்திய நடனத்தில் பின்னி எடுத்திருந்தார் .எல்லா பாடல்களும்
சூப்பர் ஹிட் .
கொடுத்து வைத்தவள் - மக்கள் திலகம் எம்ஜிஆர் கட்டிட பொறியாளராக நடித்த படம் .ரயிலில் நடந்த சண்டை காட்சியில் ஏற்படும் விபத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு நடிக்கும் காட்சிகள் தத்ரூபமாக இருந்தது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
தர்மம் தலை காக்கும் - மக்கள் திலகம் மருத்துவராக நடித்த படம் .சஸ் பென்ஸ் நிறைந்த படம் . எல்லா பாடல்களும்
இனிமை .
மூன்று எம்ஜிஆர் படங்கள் ஒரே நேரத்தில் ரசிகர்களையும் , தமிழ் திரை உலகினரையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்த
பொன்னான காலம் -1963.