chinnakkaNNan: Here is another 'kattazhagu' song for you:
kaN padume pirar kaN padume nee veLiye varalaamaa un
kattazhagaana meniyai ooraar kaNNukku tharalaamaa
:)
Printable View
chinnakkaNNan: Here is another 'kattazhagu' song for you:
kaN padume pirar kaN padume nee veLiye varalaamaa un
kattazhagaana meniyai ooraar kaNNukku tharalaamaa
:)
பாடினார் கவிஞர் பாடினார் – 9
*
ரொம்ப நாள் ஆனதினால recap மாதிரி போன அத்தியாயத்தின் இறுதிப் பகுதி
*
அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..
இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..
*
இனி
*
தானானா தானேனா தான தானா…
கால் டாக்ஸி தான்.. கம்பெனி செலவு.. நல்ல ஏஸி.. குளிரக் குளிர பின்சீட்டிலும் அடித்தது..ஆனால் அதை மீறியும் கவிஞர் பிறைசூடனுக்கு வியர்த்தது..
எழுத வேண்டியது டூயட் பாடல்.. தானானா தானேனா தான தானா…
அரை மணி நேரம் தாண்டியவுடன் சட்டென்று யோசனை..
ஒரு டீக்கடையோரம் நிறுத்தப்பா
நிறுத்தினார் டிரைவர்..இறங்கி ஒரு டீ போடுங்க என்று கேட்கும் போதே கவிஞரின் நெற்றி முடிச்சுகள் இயல்பு நிலைக்கு வந்தன.. ஏனெனில் அந்தக் கடையில் ஒலித்த பாடல் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
ஆஹா.. ஒரு பாடல் அவருடைய திரை வாழ்க்கைக்கான முதல் பாடலைப் பிரசவிக்கக் காரணமாயிருந்தது..
ட்ரைவர் பேப்பர் பேனா இருக்காப்பா
பேனா இருக்குங்க பேப்பர்..
டீக்கடைக்காரரே இருக்குங்களா..
இந்தாங்க கணக்கு எழுதற் நோட்புக் .. நீங்களே கிழிச்சுக்குங்க
கிழிக்காமல் மணி மணியாய் வரி வரியாய் வரிகள் பெஞ்சில் உட்கார்ந்தவாறே எழுதி விட்டார் முழுப்பாடலையும்..
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட
*
இதைக் கிழிச்சுக்குவாங்க..
நீங்க யாரு..
கவிஞன்..சினிமாப் பாட்டுக்கு எழுதப் போறேன்..
டீக்கடைக் காரர் முகத்தில் புன்னகை.. நினச்சேன்..சூழ்நிலை வெயில் எதுவும் பொருட்படுத்தாம வேக வேகமா எழுதினீங்களே.. நல்லதுங்க..அந்த நோட்புக்ல நா எதுவும் பெரிசா எழுதலை.. நான் எழுதினதைக் கிழிச்சுக்கறேன்.. நீங்களே நோட் வச்சுக்கங்க..என்னைக் கொஞ்சம் நினைவும் வச்சுக்கங்க..அதென்னங்க இங்க்லீஷ்ல சொல்வாங்களே.. ஆல் தி பெஸ்ட் சார்..
ஒரு கணம் வியப்பு, மறுகணம் மகிழ்ச்சி..பரபரவென அவர் கேட்ட காகிதங்களைக் கிழித்துக் கொடுத்து நோட்புக்குடன் டாக்சி ஏறி ஸ்டூடியோ சென்று இசையமைப்பாளர் இளையராஜாவிடம் சென்று கொடுத்தால் படித்த ராசாவின் நெற்றிச் சுருக்கங்கள் முதலில் தோன்றி மெல்ல மறைய புன்னகை மலர..எங்கே என தனது டீம் ஐக்கூப்பிட்டு பாடச் சொல்லி… ரீ ரெகார்டிங்க் அன்றே அப்பொழுதே..
இப்படித் தான் ஆரம்பித்தது பிறைசூடனின் திரைப் பயணம்.. இருப்பினும் தொடர்ச்சியாக இல்லை..சற்றே பிடிவாதக் குணம் கொண்டவராம்..திரைப்பாடல்களில் ஆழ்ந்த ஞானம்..
இவரைப் பார்த்தது முதன் முதலில் கலைஞர் டிவியில் வந்த ஒரு இசை நிகழ்ச்சி..பாடலாம் டூயட் பாடலை.. ஒவ்வொருபாட்டுக்கும் அதன் சூழலை வெகு அழகாக விளக்கியிருந்தார்.பிறைசூடன்.
சில பல நல்ல பாடல்களுக்குச் சொந்தக் காரர்…
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா – ராஜாதி ராஜா..ச்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி – உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் ( எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று)
சோலைப் பசுங்கிளியே – என் ராசாவின் மனசுல
கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
*
செம்பருத்தி ஆர்.கே செல்வமணியின் முதல், ரோஜாவின் முதல் படம் என நினைக்கிறேன்.. பானுமதியின் பேரன் பிரசாந்த்.. சோகமாய்ப்பாடும் பாடல் இவர் எழுதியது தான்..
*
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கரமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான்
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மைபா
சொல்லடி ஞானப்பெண்ணே
https://youtu.be/7CIew1Q45LM
*
பாட்டியைப் பற்றி பேரன் நினைந்து பாடும் பாடல் வெகு அழகாக இருக்கிறது தானே..
இவர் பாட்டெழுதிய இன்னொரு அழகான பாடல் அதுவும் ப்ரஷாந்த் தான்.. கூட 36 வயது அப்போது ஆகாத ஜோதிகா..
ம்...ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா எனை திருடி போன திரு ரசிகா
அதில் எனக்குப் பிடித்த வரிகள்:
உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்...
நமது தேடல்கள் தான் என்று முடிந்திருக்கிறது..எப்போதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறதுவாழ்வின் இறுதிவரை..
https://youtu.be/qlBPPRGX_4U
சுஜாதா எஸ்.பி.பி படம் ஸ்டார்..
இன்னும் இவர் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்..ம்ம்
*
எல்லா விதமாகவும் வெகு அழகாக இனிக்கும் தமிழில் அருவியாய் கொட்டக்கூடியவர் அந்த ப் பெரிய கவிஞர்.. எல்லாவிதமாக எழுதக் கூடியவர் என்றாலும் நாசூக்காய் சிருங்காரத்தை எழுதுவதில் வல்லவர்..ஆனால் அவருடைய தமிழ் இருக்கிறதே.. தமிழன்னை நாடி நரம்புகளில் பொங்கிப் பிரவாகிக்கிறாள் இன்றும் என்றே சொல்லவேண்டும்..
அவரிடம் டைரக்டர் சொன்ன சிச்சுவேஷன்..
*
அந்தப் பெண்ணுக்கு சிறுவயது. ஆனால் விதி வசத்தில் தொழில்- செய்வதில் ஈடுபடுத்தப் பட்டு விடுகிறாள்.. இருப்பினும் ஆழ் மனத்தில் ஒரு எண்ணம்..ம்ம் படிக்கவேண்டும் எப்படியாவது.. என .. இரவில் வேலை பகலில் படிப்பு..எப்படியோ தொடர்ந்துவிட மறு நாள் முக்கியப் பரீட்சை..இரவில் ஒரு வாலிபன் வர..என்னசெய்ய தொழிலாயிற்றே.. அவனிடம் கேட்கிறாள் “சீக்கிரம் விட்டுடுங்க..எனக்கு நாளைக்குப் பரீட்சை..”
வந்தவன் அதிர்கிறான்..அவனும் இது போன்ற அனுபவத்திற்குப் புதிதானவன்..அந்தச் சிறுமியின் கண்களைப் பார்க்கிறான்..பின் உள்ளறையில் கொஞ்சம்மறைவாய் படுக்கைக்கு அப்பால் பிரித்து வைக்கப் பட்டிருக்கும் புத்தகங்கள்..
நீ இப்பவே படி.. நான் இந்தப்பக்கம் தூங்கறேன்
அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர்.. பின் படிக்க ஆரம்பிக்கிறாள்..
காலப் போக்கில் அந்தப் பெண்ணை விடுதியிலிருந்து விடுவித்து திருமணமும் செய்து கொள்கிறான்.. அவள் கண்களிலிருந்து விழும் நீர்த்துளிகள் அவன் கால்களைக் கழுவுகின்றன
*
இதான் சிச்சுவேஷன் கவிஞரே.. இங்க ஒரு சாங்க் போடணும்..
போட்டுடலாம்..மெட்டு
இதோ.. இசையமைப்பாளர் சொல்ல கவிஞர் எழுதிய பாடல் என்ன , கவிஞர் யார் என்றால்..
ப்ளீஸ் வெய்ட் ஃபார் த நெக்ஸ்ட் எபிசோட்..
நா அப்புறம் வாரேன் :)
திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 23
குலமகள் ராதை
பொதுவாகவே தமிழ்த் திரையுலகில் ஆண்களைத் திரும்பத் திரும்பத் திரைப்படத்திற்கு வரவழைக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. அதை விட அதிகம் அதன் தோல்விக்கு உண்டு... வயது வித்தியாசமின்றி ஆண் இனம் சினிமாவில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி உள்செலுத்திக் கொண்டு ஆறுதல் தேடுவது காதல் தோல்விக் காட்சிகளிலும் அதனையொட்டிய பாடல்களிலும் தான். இது சினிமாவின் வெற்றிக்கு ஒரு ரகசியமாகக் கூட கொள்ளலாம்.
அப்படி ஆணினத்தை வரவழைக்கும் சக்தி காதல் தோல்விப் பாடல்களுக்கு உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன். அவர்களின் மனதில் தனக்கெனத் தனியிடத்தை கவியரசர் பெற்றார் என்றால் அதில் பெரும் பங்கு காதல் தோல்விப் பாடல்களையே சாரும்.
இதற்குப் பெரிதும் உதாரணமாக விளங்குவது இரண்டு பாடல்களைச் சொல்லலாம். நூற்றாண்டுத் தமிழ்த்திரையுலகில் மெல்லிசை மன்னர்கள் கொடிகட்டிய காலத்திலும் சரி, அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்கள் படைத்த காதல் தோல்விப் பாடல்களைப் போல் அமரத்துவம் பெற்ற பாடல்களை யாராலும் படைக்க முடியவில்லை என்பதே உண்மை.
அதுவும் இந்த இரண்டு பாடல்கள் -
குலமகள் ராதை படத்தில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
மற்றும்
வானம்பாடி படத்தில் கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் ..
இந்த இரண்டு பாடல்களும் அந்தக் கால இளைஞர்களை மட்டுமின்றி எக்கால இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய சிரஞ்சீவித்துவமான வரிகளைக் கொண்டு அமைந்தவை. இந்த அளவிற்கு காதல் தோல்வியின் வலியை ஆழமாக வேறு எந்தப் பாடலும் சித்தரிக்கவில்லை என்பது நிதர்சனம். எத்தனையோ பாடல்களை பதிலாக கூற முற்படலாம். ஆனால் தாக்கம் என்பது இந்த இரு பாடல்களுக்குப் பிறகே எனக் கூற முடியும்.
குறிப்பாக வெளியான நாள் தொட்டு இன்று வரை திரையரங்கில் ரசிகர்கள் தங்களை முழுதும் ஈடுபடுத்திக் கொள்வது குலமகள் ராதை படப்பாடலில் தான். ஒவ்வொரு வரியும் காதலில் தோல்வியடைந்தவர்கள் தங்கள் உள்மனதை வெளிப்படுத்தும் வகையில் உணர்ந்து பாடலோடு ஐக்கியமாகி விடுவதே இப்பாடலின் இமாலய வெற்றிக்குக் காரணம்.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல் இரு திலகங்களின் சங்கமத்தின் சிகரம் எனலாம். எவ்வாறு நடிகர் திலகம் மெல்லிசை மன்னர்கள் இணைந்த எங்கே நிம்மதி இறவாப் புகழ் பெற்றதோ அதற்குச் சற்றும் குறையாத பெருமை வாய்ந்த பாடல் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல்
நடிகர் திலகத்தின் நடை..
இதைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இப்பாடலில் காதல் தோல்வியைத் தன் நடையிலேயே சித்தரிக்கும் உன்னதத்தை என்னென்பது. அந்த மேட்டில் ஏறும் போதே அவருடைய நடையில் அந்த்த் துயர் தெரிய ஆரம்பிக்கிறது. அசரீரியில் அவருடைய குரல் அவளைப் பற்றிக் கூற நடையில் மெல்ல மெல்ல அதன் வீச்சு அதிகமாகிறது. அந்த அசரீரி முடியும் தருவாயில் வலது காலை வைத்த பின்னர் இடது காலை சற்றே தாமதித்து எடுத்து வைக்கும் போது அவர் வெளிப்படுத்தும் உணர்வு...
கோபம் கொப்பளிக்க பாடகர் திலகத்தின் குரல் துவங்குகிறது. ராதா ராதா... என ஒலிக்க அந்த இடி மின்னலுடன் துவங்குகிறது பாடல் காட்சி..
அந்த இடி மின்னலில் எவ்வளவு தான் உரத்த குரல் கொடுத்தாலும் காதில் கேட்காது என்பது நாயகனுக்குத் தெரியும் இருந்தாலும் அவனுடைய ஆற்றாமை அவள் காதில் விழவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கிறான். அந்த ராதா என்கின்ற குரலுக்கு தன் உதட்டசைவில் அழுத்தம் அளித்து தன் நடிப்பு ராஜ்ஜியத்தைத் துவக்குகிறார் நடிகர் திலகம்.,
அக்கார்டின் இசை, இடி ஓசை, கண்ணைப் பறிக்கும் மின்னல் இவற்றினூடே சற்றும் கவலைப் படாமல் அந்த இடி மின்னலை நோக்குகிறார் நடிகர் திலகம். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பல்லவியை துவக்குகிறார். இரண்டாம் முறை பாடும் போது பாடலின் வரிகளுக்கேற்ப தன் முகத்தை சுழற்றும் போது அதில் அந்த விரக்தி வெளிப்படுவதைப் பாருங்கள்.
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி வரிகளின் போது இரு கைகளையும் விரித்துப் பின் வலது கைகை மேலே தூக்கி கடவுளைச் சுட்டிக் காட்டி அவரைக் குற்றம் சாட்டும் போது அந்த கோபம் கடவுளின் மீதே வெளிப்படுத்துவதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் கொண்டு வருவதைப் பாருங்கள்.
இப்போது முதல் சரணத்தின் பின்னணி இசை துவங்குகிறது. மெல்ல அந்த மண்டபத்தை நோக்கிச் செல்கிறார். ஆஹா.. தொடர்வது கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அந்த அற்புத போஸ்...
மின்னல் பளிச்சிட உடனே ஸ்டைலாகத் திரும்பி மின்னலை நோக்கியவாறு, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என அந்த மின்னலுக்கே சவால் விடும் அலட்சியமான பார்வை,
http://i1146.photobucket.com/albums/...psncglrh7v.jpg
உடனே திரும்பி நடை.. இரண்டு மூன்று ஸ்டெப்புகள்.. மண்டபத்தில் கால் வைக்கிறார். உடனே மின்னல்.. இன்னும் அதிக அளவில் அந்த அலட்சிய நோக்கு..
இப்போது வலது கையைத் தூணின் மீது வைத்து ஒரு கோபமான நிற்றல். நின்று பார்ப்பதிலும் ஒரு ஜீவனைக் கொணடு வருவது நடிகர் திலகம் மட்டுமாகத் தான் இருக்க முடியும்.
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை..
திரையரங்கை அதிர வைக்கும் வரிகள்... அதைப் பாடும் போது பாடகர் திலகத்தின் குரலில் வெளியாகும் கோபம்...அதைச் சொல்லும் போது இவர் முகத்தில் வெளிவரும் உணர்வு...
இதற்கு அடுத்த வரிகள் கொட்டகையின் கூரையை உடைத்து சீறிட்டுக கிளம்பும் வகையில் கரகோஷத்தை உருவாக்கும்..
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை..
இந்த வரியை இரண்டாம் முறை கூறும் போது தன் வலது கை சுட்டு விரலால் அனாயாசமாக கடவுளைச் சாடும் உடல் மொழி...
இப்போது பல்லவியில் காலம் செய்த கோலமடி வரிகளின் போது இரு கைகளையும் அகல விரித்து இரண்டையும் மேலே தூக்கும் போது கடவுளின் மீதுள்ள கோபத்தை இரு மடங்காக சித்தரிக்கிறார் நாயகன்.
அந்த கோபத்தைப் பாருங்கள்
http://i1146.photobucket.com/albums/...psquhw500v.jpg
இப்போது கோபத்தைக் கொட்டிய பிறகு மனம் உடைகிறது. விரக்தி திரும்புகிறது. நடை தளர்கிறது.
இப்போது மின்னலைக் காண கண்ணும் மனதும் கூசுகின்றன. கை தன்னையறியாமல் கண்ணை மூடுகிறது.. மெல்ல கண்களின் அந்த ஒளி வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக விரல்களால் கண்களைத் துடைத்துக் கொண்டே வர, நடை சற்றே வேகம் பிடிக்கிறது... இந்த நடையைப் பாருங்கள்..
இதில் தளர்வு, விரக்தி வெளிப்படுகிறது...
இப்போது அந்த சூழலை சற்றே மாற்றும் வகையில் திரை இசைத் திலகம் தன் மேதைமையை வெளிப்படுத்துகிறார். மழை நீர் சொட்டும் ஓசைக்காக அவர் பயன் படுத்தும் இசைக் கருவியின் ஒலியோடு இணைந்து ஒளிப்பதிவாளர் அந்த்த் தண்ணீர்ப் பரப்பை அப்படியே நகர்த்திச் செல்வது ... ஆஹா.. என்ன கவிதைத்துவம்... கருப்பு வெள்ளையில் காவயமே படைத்து விடுகிறார்கள் இந்த இடத்தில்...
இப்போது ஒலிக்கிறது அந்த வைர வரிகள்..
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்...
அந்த மழை நீரின் வீச்சையும் தாண்டி அந்தக் குளிரான சூழலிலும் கண்களில் அனல் தெறிக்கிறது நாயகனின் முகத்தில்.. அதைப் பாருங்கள்.. நடிகர் திலகத்தின் கண்கள் அந்த சூழலிலும் கோபத்தையும் உஷ்ணத்தையும் வெளிப்படுத்துவதையும் அதை அவ்வளவு அருமையாக ஒளிப்பதிவாளர் படம் பிடித்துள்ளதையும்.. அவருக்கு ஒரு சபாஷ்...
அந்த வரிகள்.. கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி..
ஆஹா கவியரசின் வரிகள் அண்டம் முழுதும் எதிரொலிக்கும் ஆரவார கரகோஷத்தைத் திரையரங்கில் பெறுகின்றனவே...
http://tamilnation.co/images/hundred...annadasan2.jpg
மழையென்றும் வெயிலென்றும் பாராமல் நாயகன் தவிக்க, காதலியோ தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாள்.. இந்த இடத்தில் திரை இரண்டாகப் பிரிக்கப் பட்டு நாயகன், நாயகி இருவரையும் சித்தரிக்கிறது..
இருவர மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி..
கடவுளை நேரடியாக அட்டாக் செய்து விடுகிறார் கவியரசர்.
அதை தீர்க்கமாகத் தன் குரலில் கொண்டு வருகிறார் பாடகர் திலகம்.
http://images.mathrubhumi.com/englis...082_190285.jpg
தன் சுட்டு விரலின் வேகமான அசைவுகளால் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்து இறைவன் மீது காதலர்களுக்குக் கோபத்தை வரவழைக்கிறார் நடிகர் திலகம் தன் நடிப்பின் மூலம்..
காதல் தோல்விக்கு கடவுளைச் சாடும் இரு பாடல்களில் ஒன்றான இந்தப் பாடல் சாகா வரம் பெற்றதில் வியப்பென்ன..
குலமகள் ராதை எப்போது மறுவெளியீடு கண்டாலும் சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி காதல் வயப்பட்டு தோல்வியுற்ற ஆண்களையும் திரளாக வரவழைக்கும் உன்னதத் திரைக்காவியமாக விளங்கி மாபெரும் வெற்றி காண்பதின் ரகசியம் புலப்படுகின்றதல்லவோ..
இறுதியில் நமக்குத் தோன்றும் வரிகள்..
நீ ஏன் எப்போது பார்த்தாலும் சிவாஜி சிவாஜி என்று அலைகிறாயோ தெரியவில்லை. என சிலர் கூறுவதோடு,, செல்லமாக, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை கடவுள் செய்த குற்றம் என கடவுளையும் திட்டும் அளவிற்கு ரசிகர்களை உருவாக்கிய பாடல்...
பாடலைப் பாருங்கள்.. அணுஅணுவாக ரசியுங்கள்..
கவியரசரின் வரிகளை, திரை இசைத் திலகத்தின் உயிரோட்டமான இசையை. பாடகர் திலகத்தின் ஜீவனுள்ள குரலை..
http://1.bp.blogspot.com/-N3Bj0rfFCW...+Mahadevan.JPG
பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி ஏன் இன்னும் ரசிகர்களை நடிகர் திலகம் பெறுகிறார் என்பதற்கு அத்தாட்சியான பாடலை...
https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg
எம்ஜிஆர் பாடல்கள் என்றென்றும் ...
உற்சாகம்
நேர்மறை சிந்தனை
எளிமையான வரிகள்
சமூக சீர் திருத்த கருத்துக்கள்
இனிமையான இசை
மனதில் ஊடுருவும் எம்ஜிஆர் பிம்பம
நினைவில் நிலைத்து நிற்கும் காட்சிகள் .
இப்படி பல காரணங்கள் சொல்லி கொண்டே போகலாம் . என்னதான் உயர்கல்வி பெற்று , உயர்ந்த இடத்தில இருந்தாலும்
வயது ஏறிக்கொண்டே போனாலும் ,,இயற்கை குணங்கள் ( ஆத்திரம் , வன்மன் , கோபம் , எரிச்சல் ,தூண்டுதல் } கொண்டோர்களை மக்கள் திலகம் தன்னுடைய பாட்டின் மூலம் அறிவுரை கூறியுள்ளார் . திருந்துபவர்கள் உணர்வார்கள் .திருந்தாத உள்ளங்கள் ?
கடவுள் செய்த பாவம் .....
கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................
கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................
வாங்க எஸ்.வி ஜி.
நலம்தானே
காலை வணக்கம் எல்லோருக்கும்
இசையரசியின் அருமையான பாடல்களின் வரிசை. அருமை மற்றும் அரிதானவை
https://www.youtube.com/watch?v=sPZXpa0oSJ8
https://www.youtube.com/watch?v=qv2_3eift-s
https://www.youtube.com/watch?v=3gK20erhVpU
https://www.youtube.com/watch?v=y_Y81dFPLbQ
வாசு ஜி
இதோ இசையரசியும் ராட்சசியும் கலக்கும் படல்
https://www.youtube.com/watch?v=eOTccUVRUfU
ஜி!
'பொண்ணு குடிச்சா' பாட்டை போன வாரம் கூட நடைப் பயிற்சியின் போது கேட்டுக் கொண்டே நடந்தேன். இப்போது நீங்கள் பதித்தே விட்டீர்கள். thanks.
விஜயா, சோவின் 'ஒரு அசடாட்டம்', சொர்ணாவின் 'நன்றி சொல்ல வார்த்தை இல்லை கண்ணனே', சௌகார் சுஜாதாவின் 'மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு, 'என் செல்லக்கிளி' என்று விஸ்வரூபம் எடுத்து விட்டீர்களே ஜி! அனைத்தும் அரிதானவைதான்.
கொண்டாங்க உங்க முதுகை. சொறிந்து விடுகிறேன்.:) புரியுதா?:)
ஹாய் ஆல்.. குட்மார்னிங்க்..
ஹாய் வாசு, ராஜேஷ்.
வாசு, புலி பாஞ்சுடுச்சா..:)
*
தமிழ் சீரியல்கள், ஹிந்தி சீரியல்கள் எதுவும் நான் பார்ப்பதில்லை.. சின்னதாய் உடலில் எனக்கு க் கொப்பளம் புறப்படும் பார்த்தால்..
முன்பு பார்த்த போது-
தமிழ் சீரியல் பெண்கள் புடவை அணிந்திருந்தால் முழுதும் மூடிய ரவிக்கை தான் அணிந்திருப்பார்கள்..இந்தக் கால சீரியல்களில் புடவை வயதானவர்கள் தான் அணிகிறார்கள்..இளவயது நங்கையருக்கெல்லாம் சுடிதார் தான்.
ஹிந்தி சீரியல்கள் தான் என் வீட்டில் ஓடும்.. நான் பாட்டுக்கு அடுத்த அறையில் அல்லது டிவி அறையிலும் கூட கம்ப்யூட்டர்/லேப்டாப்புடன் தான் இருப்பேன்..அப்படியும் சில பல கண்களில் படும் ..மனதில்பதியாது..
வெள்ளை வெளேர் ப் பன்னீர் மீது கொஞ்சம் கடலைமாவைக் கலந்தாற்போல பொன்னிறமஞ்சளில் ஹிந்தி சீரியலின் நங்கையரின் முதுகு தென்படும்.. காட்சியின் தேவைக்கேற்பவோ அலலது டைரக்டர் சொல்லியதாலோ என்னவோ ரவிக்கையின் பின்புறம் ஒரே ஒரு முடிச்சு மட்டும் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.. அல்லது ஜன்னல் அல்லது கண்ணாடி அணிந்திருக்கும் ரவிக்கைகளும் உண்டு ..அதைத்தாண்டியும் முதுகு தென்படும்..இதைப் பார்த்தாலும் பார்க்காதது போல் நான் கடமையே கண்ணாயிரமாக -பரப்பிரம்மமாக -எழுதிக் கொண்டிருப்பேன். அன்றி அந்த முதுகுகள் பற்றி எனக்கு எதுவும் தோன்றியது கிடையாது (உண்மைங்க.. நம்புங்க)
அதுவும் சொறிவது என்பது நினைத்துக் கூட ப் பார்க்காத விஷயம் ( நினைத்தால் அடி விழும் என்பது வேறு விஷயம்)
இது தான் எனது நிலைப்பாடு..
தாலாட்டுப் பாடிடும் தாயின் மொழிபோலே
பாராட்டு மாறிவிடும் பார்..
என்று முன்பு எழுதியிருந்தேன்
இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.. ஒரு ஹாய் நன்னாருக்கு எழுதினது என்று சொல்வது எநத விதத்தில் தவறாகும் எனத் தான் எனக்குத் தெரியவில்லை..
*
கோ, கட்டழகுப் பதிவு உங்களைக் கவர்ந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.. நன்றி..
//இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.. ஒரு ஹாய் நன்னாருக்கு எழுதினது என்று சொல்வது எநத விதத்தில் தவறாகும் எனத் தான் எனக்குத் தெரியவில்லை..//
மர மண்டைகளுக்கு புரிஞ்சா சரி!:)
காதலி காதலர்களுக்குள் ஏற்படும் பொய்க்கோபத்திற்குப் பெயர் தான் ஊடல் (ஹை என்ன கண்டு பிடிப்பு)
முன்பு எழுதிய கவிதை..
நாமென்றால் நானென்றாய் நங்கை உந்தன்
.. நாயகந்தான் என்றுசொல மறுத்தே நீயும்
போமென்றாய் எங்கென்றால் விழித்துப் பார்த்து
..பொழுதிலையோ உமக்கென்றாய் மேலும் நானும்
பூமென்மை புலர்காலை போல இங்கே
...புள்ளினமாய்க் கற்பனைகள் கலந்து கட்டி
பூமியிலே உன்னோடு வாழப் பாடல்
..புனைந்தாலோ சிரிக்கின்றாய் ஏனோ மானே..
அந்தக் காலத்தில் தேவி தியேட்டரில் எஸ்வி.சேகர் நாயகனாகப் பார்த்தபடம்ஸ்பரிசம்..கல்லூரிக் காதல் கதை..அந்தக்கால சூழ் நிலைகளுக்கேற்ப கதானாய்கன் கதா நாயகி லவ் செய்ய கடைசியில் மரபுப்படி மங்களகரமாகச் சாகடித்திருப்பார்கள்..
அதில் ஒரு பாட் ..ஊடல்சிறு மின்னல்..குளிர் நிலவே வாடலாமா.( முன்பு கேட்டது தான்..காணொளியை இங்கு தருகின்றேன்..போய் த் தான் கேட்கவேண்டும்) பட் அதுவே வெவ்வேறு விதமான ராகங்க்ளில் பாடப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்..
https://youtu.be/6JaM79_gv6k
ஆமாம்! ஹீரோயின் யார் சி.க?:)
ஸ்ரீ லஷ்மின்னு போட்டிருந்த நினைவுங்க வாசு. இந்தப் படத்துக்கு அப்புறம் வரவில்லை என நினைக்கிறேன்..( திருவிளையாடல் டி.ஆர்.எம் மனைவி பாணியில்.. “எல்லாம் தெரிந்த தாங்களா இப்படிப் பேசுவது!”
ம்ம் இன்னொரு பழைய கவிதை..?!
*
தாபம் கொண்டு
பாராமல் பார்க்கும் பார்வை
எனக்குப் புரியாதா என்ன..
விமான நிலையம் போகிறேன்
என்றவுடன்
உன் அம்மா அப்பா
தங்கை தம்பி
குதிகுதித்து வந்து விட்டார்கள்..
ரெண்டு கார் எடுத்துக்கலாம்
என்று
பெருந்தன்மை வேறு..
இரண்டரை வருடம் பிரிந்திருந்து
நீ வருகிறாய் என
எப்படிச் சொல்வது..
கேட்டால் அவர்களும் தான்
அப்படி இருந்தார்கள் எனச் சொல்வார்கள்..
ஆனாலும் நீ மோசம்
ஏன்முகம் சுருங்கினாய்..
ஆசையாய்த் தானே
உன் தங்கை தம்பி
காரினுள் அருகில்...
அவ்வப்போது முறைப்பது
புரிகிறதெனக்கு..
தோ..இன்னும் ஒரு மணி நேரம் தான்..
வந்துவிடும் அண்ணா நகர்..
பொறுத்துக்கொள்..
ம்ம்..
இது நான் உனக்குச் சொல்லவில்லை
எனக்குச் சொன்னேன்..!
*
https://youtu.be/3vFw2qwKYCU
வாசு சார்,
தங்கள் புரிதலுக்கு நன்றி. மன்னிக்க வேண்டும். தயவு செய்து ஒரு வேண்டுகோள். நடிகர் திலகம் திரியில் இன்று நீங்கள் இட்ட பதிவில் (பதிவு 2606) 17 -வது வரியில் ‘நாகேஷைவிட நடிகர் திலகம்தான் டாப் என்று அள்ளிவிடும் அறிவிலிகளுக்கு.... ’ என்று உள்ளது.
அது.. ‘நடிகர் திலகத்தை விட நாகேஷ்தான் டாப் என்று அள்ளிவிடும் அறிவிலிகளுக்கு....’ என்று இருந்திருக்க வேண்டும். தயவு செய்து அதை சரியாக மாற்றி விடுங்கள். இல்லாவிட்டால் முதுகு சொறிவதற்காக வேண்டுமென்றே நீங்கள் நாகேஷை தூக்கி வைத்தும் நடிகர் திலகத்தை தாழ்த்தியும் எழுதியிருக்கிறீர்கள் என்று ‘கலை’ப்பற்று கொண்ட யாராவது சொல்வார்கள். எதற்கு வம்பு?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கல்நாயக்,
இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும்.
இதோ பதில் சொல்லி நான் பிறந்ததை நிரூபித்து விட்டேன். நான் பிறந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. இதோ, இப்போதும் சொல்கிறேன். ஆனால், நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. ஒரு வயது ஏறுவதையே என்னால் தாங்க முடியவில்லை. 18-ல் இருந்து 19 ஆவதைத்தான் சொல்கிறேன்.
அதையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எல்லாம்.... ஹூம்...உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமாயிருக்கு .. ராஜா ஹரிச்சந்திரா பற்றி உங்களுக்கே நன்கு தெரிந்த விவரங்களை நெட்டில் பார்த்து கூறியதாக நீங்கள் கூறினாலும் நாங்கள் நம்பத் தயாரில்லை.
சின்னக்கண்ணன்,
//வெள்ளை வெளேர் ப் பன்னீர் மீது கொஞ்சம் கடலைமாவைக் கலந்தாற்போல பொன்னிறமஞ்சளில் ஹிந்தி சீரியலின் நங்கையரின் முதுகு தென்படும்.. காட்சியின் தேவைக்கேற்பவோ அலலது டைரக்டர் சொல்லியதாலோ என்னவோ ரவிக்கையின் பின்புறம் ஒரே ஒரு முடிச்சு மட்டும் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.. அல்லது ஜன்னல் அல்லது கண்ணாடி அணிந்திருக்கும் ரவிக்கைகளும் உண்டு ..அதைத்தாண்டியும் முதுகு தென்படும்..இதைப் பார்த்தாலும் பார்க்காதது போல் நான் கடமையே கண்ணாயிரமாக -பரப்பிரம்மமாக -எழுதிக் கொண்டிருப்பேன். அன்றி அந்த முதுகுகள் பற்றி எனக்கு எதுவும் தோன்றியது கிடையாது (உண்மைங்க.. நம்புங்க)//
நம்பிட்டோங்க. ஆஹா...கடமையிலேயே என்ன ஒரு கண்.
வேலை கழுத்தை நெரிக்கிறது. விரைவில் பாட்டோடு வரேன்.
கிருஷ்ணா சார்,
உங்களின் கவிஞனும் கண்ணனும் பதிவு அருமை. ரசித்து படித்தேன். கோபாலா சீரியலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ரவி சார் எங்கே காணோம்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மாற்றி விட்டேன் கலை சார், நன்றி! மிகுந்த மனவருத்தத்தில் இருந்த போது எழுதிய பதிவு அது.
இன்னொன்று பார்த்தீர்களா கலை! என்னையுமறியாமல் அப்போதும் நடிகர் திலகம்தான் டாப் என்று எழுதியிருக்கிறேன் கவனித்தீர்களா? அதுதான் அவர் மீது உள்ள பக்தி. அதுதான் அவர் தந்த ஆசிகள். மறந்தும் கூட இன்னொருவர் டாப் என்று எழுத வரவில்லை. இயற்கையும் அனுமதிக்கவில்லை.
தங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி!
மற்றபடி டைமிங் 'சொறி' நையாண்டியை மிகவும் ரசித்தேன்.
நன்றி வாசு சார்,
உங்களின் நடிகர் திலகம் மீதான பக்தி பாராட்டுக்குரியது. உண்மைதான் சார், நமக்கு நமது நாயகர்களைத் தவிர வேறு யாரையும் டாப் என்று எழுத வராது. மற்றபடி, எனது வேண்டுகோளையும் தயவுசெய்து பரிசீலியுங்கள். அங்கும் தொடருங்கள். நீங்கள் அங்கு பங்கு கொள்வது எனக்கு மிகப்பெரிய பலம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சி.க,
http://i.ytimg.com/vi/wUsTdYkNTC0/hqdefault.jpg
http://www.maastars.com/Profiles/553...ilakshmi-1.jpg
கரெக்ட். ச்சும்மா சீண்டினேன். 'ஸ்பரிசம்' படத்தின் ஹீரோயின் பெயர் ஸ்ரீலஷ்மிதான். ஒரிஜினல் பெயர் மணப்புரம் ஸ்ரீலஷ்மி. சென்னையில் பிறந்தவர்.
ஆனால் ஆந்திரா வாழ வைத்தது. தற்சமயம் ஹைதராபாத்தில் வாசம்.
முதலில் காமெடியினி ஆக 1980 இல் 'சுவர்க்கம்' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகம். பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் என்று தலை காட்டல். தெலுங்கில் ஸ்வர்ண கமலம், சுபலக்னம் போன்ற படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. தெலுங்கில் நந்தி அவார்டெல்லாம் வாங்கியிருக்கிறார்.
நிறைய தொலைக்காட்சி சீரியல்களில் பிஸி.
படித்துவிட்டு முதுகு சொறிவீர்கள்தானே!
இன்னும் விவரம் வேணும்னா இதைப் பாருங்க.
https://youtu.be/kQfxEtWAWR4
ஹாய் கலை.. வாங்க வாங்க .. செளக்கியமா.. பார்த்து நாளாச்சு..:) மிக்க நன்றி நம்பியதற்கு..
வாசு.. ஒரு வெண்பா பழசு எடுத்துப் போட்டேனா உங்களுக்காக...அப்புறம் நானே டெலீட் பண்ணிட்டேன்..ஸ்ரீ லஷ்மி அந்தப்படத்துக்கு அப்புறம் நினைவிலேயே இல்லை..இன்னும் அந்தபாட்டு வீடியோ கூட பார்க்கவில்லை..அட அட அடா.. தகவல்கள் கொடுக்கறதுக்கு உங்களை விட்டால் யார் இருக்கா :) பட் ஸ்ரீ லஷ்மிக்கு பெண் ஏதாவது நடிகையாய் இருந்தால் அவர் படத்தைப் போட்டிருக்கலாம்..யூத் கல்ஸ் அண்ட் கலை சந்தோஷப் பட்டிருப்பார்கள்!
கலை சார்
நன்றி!
நண்பர்களுக்கு,
குறுகிய நோக்கம் கொண்டு நடிகர் திலகம் திரியை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நான் ஆரம்பித்த திரி மதுர கானங்கள் என்பது என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.
நடிகர் திலகத்தின் புகழ் எங்கும் வெளியே பரவக் கூடாது என்பது எனது லட்சிய வாழ்நாள் குறிக்கோள். நடிகர் திலகமே என் பரம எதிரி. என்ன செய்யலாம் என்று பார்த்தேன். மதுர கானங்களை ஆரம்பிக்கலாம் என்று உள்ளே குறுகிய கெட்ட நோக்கம் உருவாயிற்று. வஞ்சமாக ஆரம்பித்தும் ஆகி விட்டது.
அதில் மிகப் பெரிய வெற்றியும் கிடைத்தது. கூட நடிகர் திலகம் திரியின் நண்பர்களை விலைக்கு வாங்க அவர்களிடம் பேரம் பேசினேன். ஆளாளுக்கு தலா ஐந்து லட்சங்கள் கொடுத்து அவர்களை இங்கே வரவழைத்தேன். நடிகர் திலகம் திரியின் மீதான பகையை பழியை இப்படி அங்கிருப்பவர்களை இங்கு வரவழைப்பதன் மூலம் தீர்த்துக் கொண்டேன்.
பணம் வாங்கிய நண்பர்கள் சொல்லியபடி அங்கிருந்து இங்கே வந்து வாங்கிய பணத்துக்கு வஞ்சனை இல்லாமல் இங்கே பதிவுகளாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சின்னக் கண்ணனுக்குதான் இன்னும் இரண்டு லட்சம் தர வேண்டும். அவர் பரவாயில்லை வேண்டாம் என்று பெரிய மனது பண்ணி சொல்லியதோடு அல்லாமல் பதிவுகளையும் அதிகமாக அளித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சிலர் நட்புக்காக கௌரவ ரோல் செய்தனர் பணம் காசு வாங்காமலேயே. ஆனால் அவர்களை இங்கே தக்க வைக்க முடியவில்லை. நடிகர் திலகம் திரியிலேயே இருந்தார்கள். பின்னும் சில புதிதான நண்பர்கள் வேறு அங்கு உறுப்பினர்களாய் சேர்ந்து இருந்தனர். சரி! எல்லோரையும் இங்கு திரும்ப அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும்...முற்றிலுமாக நடிகர் திலகம் திரியை கூண்டோடு இல்லை இல்லை பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற வெறியுடன் பேரம் பேச ஒரு சாக்குப் பை நிறைய பண மூட்டையுடன் அங்கு போனேன். ஆனால் இன்று வகையாக கையும் களவுமாக ஒருவரிடம் மாட்டிக் கொண்டேன். இப்போது எனது குறுகிய நோக்கம் வெற்றி பெறவில்லை.தோற்று விட்டேன். அதற்கு பின் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!
எனக்கு என்ன வருத்தம் தெரியுமா! இங்கிருக்கும் நண்பர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்களே! அதுதான் பெரிய வருத்தம்.
நடிகர் திலகம் திரியில் மட்டும்தான் பதிவுகள் இட வேண்டும் என்று யாராவது சட்டம் போட்டு இருக்கிறார்களா? இல்லை இங்குதான் பதிவேன் இங்கெல்லாம் பதிய மாட்டேன் என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்களா?
சி.க சொன்னது போல் அவரவர்களுக்கு தெரிந்ததை ஜாலியாக பகிர்ந்து கொள்கிறோம். காசு, பணம் எல்லாவற்றையும் மீறி முகம் தெரியாத ஆனால் முத்திரை பதிக்கும் அன்பர்கள் தனக்குப் பிடித்த திரிகளில் ஆசையாய் வருகிறார்கள். கொஞ்ச நேரம் தங்கள் கவலைகளை மறந்து நமது எண்ணங்களை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இதில் என்ன முதுகு சொறிதல்? மாமனா மச்சானா?... முதுகு சொறிவதால் என்ன கிடைக்கப் போகிறது? நமக்கு எல்லோரும் முதுகு சொறியும் போது சுகமாக இருந்தது அல்லவா? அடுத்தவர்கள் சொறிந்து கொண்டால் மட்டும் கசக்கிறதா?
//போட்டது உமக்காகங்காணும். அதை விட வயசான போட்டோ கிடைக்கலியேன்னு நானே நொந்து போய் இருக்கேன்// ஓய்.. உமக்காக எல்.ஆர்.ஈ பாட்டுத் தேடிக்கிட்டிருந்தேன் பாருங்க எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் :)
நீங்க ஸ்ரீ லஷ்மி கொடுத்தா நான் ஐஸ்வர்யா கொடுக்கறேன்..
பாவம் புள்ள.. சின்ன வயசுல ஒல்லியா இருந்துச்சா..ரமேஷ் அர்விந்த் கொஞ்சம் ஷார்ட்டா கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு ஆடுது..ஆனா பாட் நல்லபாட்டுங்க்ணா..சரி அந்தப் பாட்ட அப்புறமா போடறேன்..
உங்களைப் பத்தி ஒரு பாட் இருக்கே.. அது போடறேன்..எங்கே கொஞ்சம் புறம் காண்பிங்க :)
**
எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார் என் வாழ்வில் நான்கண்ட மிக நல்லவர்
யாரோ என்ன பேரோ யாதிவர் சொந்த ஊரோ
ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது..
முதலாளி..தேவிகா… ஆனால் வாயசைப்புதான்கொஞ்சம் ஓடுது..
https://youtu.be/PE8VrcPxUTY
போனஸா ஒரு சைக்கிள் பாட்டு..
குங்குமப் பொட்டுக்காரா கோலக் கிராப்புக்காரா உன்னை நான் பிரியேனே
மத்தாப்பு சேலைக்காரி மகிழம்பூ ரவிக்கைக்காரி
புளிமூட்டை போலே நீயும் பின்னாலே ஏறி வந்தா
எளிதாக சைக்கிள் ஓடுமாம்..எஸ் எஸ் ஆர் ஒல்லி ஒல்லி தேவிகாட்ட சொல்றார் நற நற..:)
https://youtu.be/96217RrvV0U
From Samsaram (1950)
kada kada loda lodaa vaNdi.....
http://www.youtube.com/watch?v=WfdDZeIiZuU
From the Telugu version Samsaram
Taku taku tamakula........
http://www.youtube.com/watch?v=wzMt896e_uA
From the Hindi version Sansar
khat khat gaadi.....
http://www.youtube.com/watch?v=dIwHuC0ZQJ8
Enjoy a bullock cart ride ! :) That is, if you can find one ! :lol:
A few years back we visited my ancestral villlage in Tanjore district. We thought it would be fun to ride a bullock cart.
There was no bullock cart. Bullock carts have been replaced by automobiles, motor cycles, scooters and tractors! :)
விளக்கத்திற்கு நன்றி நண்பர்களே. என் கோபத்திற்கு காரணம் புரிந்து வாசு நேற்றே எனக்கு 50 லட்சம் செட்டில் செய்து விட்டதால் தொடர்கிறேன்.(பின்னே ஐ.பீ.எல். போல எனக்குத்தானே அதிக பட்ச ஏல தொகை??)
எம்.எஸ்.வீ. பாதியில் தொங்கலில் நிற்கிறது. அதை முடித்து விட்டு, அடுத்து எடுக்க இருப்பது உலகளவில் என்னை கவர்ந்த இசை மற்றும் பாடகர்கள்,குழுக்கள். மதுர கானமும் globalise ஆக வேண்டாமா? தமிழில் அதிக பட்சம் ஒரு 1000 நல்ல பாடல்கள் கடந்த 80 வருடங்களில் தேறலாம். மதுர கானத்திலோ 6000 பாடல்களாவது குறிக்க பட்டிருக்கலாம். பிணங்களை புதை பொருள் ஆராய்ச்சி பண்ணுவது போல பண்ணினால்தான் இனி ஏதாவது தேறும்.
இதை பற்றி நேயர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
எதுவாக இருந்தாலும் ஜூலைக்கு பிறகே. பார்க்கலாம்.
வாசு ஜி கேட்ட தாலாட்டு படப்பாடல் கிடைக்கவில்லை
ஆனால் அதே படத்தில் ஒரு அழகு பாடல்
https://www.youtube.com/watch?v=B-5J-_n_KNA
கேலிப்பாடல்கள் என்றாலே ஒரு குதூகலம் தான்
இதோ
https://www.youtube.com/watch?v=7P0AO27ReZw
மறந்து போன பாடல்களின் தொடர்ச்சி
அடடா இங்கு விளையாடும் புள்ளி மானே
ஜாலி ஆப்ரஹமின் அழகான குரலில் ராஜா இசை
https://www.youtube.com/watch?v=Vrj6RIEnZ60
ஆறடிச்சுவரு தான் ஆசையைத்தடுக்குமா கிளியே .. வாலி ஐயாவின் அழகான வரிகள்
https://www.youtube.com/watch?v=rreSgAoMzV0
தென்மதுர சீமையில..மீனாட்சி கோவிலில .. இது மிகவும் பிரபலமான பாடல்
https://www.youtube.com/watch?v=JLmfwnqhgqI
டி.வி.ஜியின் மகள் தேவி இவருக்கு ராஜா நிறைய வாய்ப்புகள் கொடுத்தார்
இது அவரின் நல்ல பாடல்
https://www.youtube.com/watch?v=xlEWXS5UmAo
எஸ்.ராஜேஸ்வரராவ் அவர்கள் இசையரசியை மட்டுமே நம்பினார்.
அவரது குரலில் பல கடினாமான பாடல்களை உருவாக்கி அதை அவர் மட்டுமே பாட முடியும் என்று நிரூபித்தார்.
அவர் மகனான கோட்டியிடம் கேட்டபோது அவர் சொன்னது தான் உருவாக்கியதை 100% பாடக்கூடியவர் இசையரசி மட்டுமே என்று சொல்வாராம்
இதோ அதற்கு சான்று
https://www.youtube.com/watch?v=iqN4IC4VMV8
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
ராஜேஷ்.. கேலிப் பாடல்கள் குட்.. எனக்கு நினைவுக்கு வருபவை சிங்கார சோலையே, பறக்குது பறக்குது கண்ணாலே பச்சைப் புடவை தன்னாலே இழுக்குது எங்களை ஓடத்திலே, பூந்த மல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே, என்ன வேணும் நில்லு பாமா ம்ம்
கல்ஸ் ரவி காணோமே..
சரிபார்த்துக் கொண்டேன்
பொட்டு சரியாய் இருக்கிறதா..
இந்த பிங்க் சுடிதாருக்கு ஓகேயா
லிப் க்ளாஸ் போட்டாச்சு
இந்த இயர்ரிங்க்ஸ் நே சூட்டபிளா இல்லை
ஓ இந்த கோரல் இஸ் குட்
போட்டுக்கலாம்..
காதில் போட்டுக் கொண்டு
ஆடுவதைப்பார்க்க
குட்.. அவன் சந்தோஷப் படுவானா..
வீட்டு மணி அழைப்பு
அவன் தான்..
மாடிப்படிக்கட்டில்
தாவிக்குதித்து இறங்க
சுண்டுவிரலில் கொஞ்சம்
அடி பலமாய்..
கண்ணில் வலி..
பொறுத்துக்கொண்டு
திறந்தால்
சிரிப்பூ முகத்தில்..
ஹை.. நல்லா இருக்கே
இந்த டிரஸ் உனக்கு..
தோடு புதுசா..
சுண்டுவிரல் தந்த வலி
போயே போச்சு
*
https://youtu.be/DNJ9kWmWKTQ
விற்க முடியாது..
ஓவியன் கண்டிப்பாய்
தலையசைத்து மறுக்க்
வியப்பாய்த் தான் இருந்தது..
கண்காட்சியில்
அவனது மற்ற ஓவியங்கள் எல்லாம்
அழகு.. மிக அழகு..
இது கொஞ்சம் சுமார் தான்..
சின்னக் கிறுக்கலாய்
ந்திக்கரையில் இருக்கும் ஒரு
பெண்பற்றிக் கோட்டோவியமாய்....
ஒரு வேளை காதலியோ
மெல்லிய புன்முறுவல்..
இன்னும் கொஞ்ச்ம்
உற்று நோக்குகையில்...
ஒரு வேளை அந்த
ஓவியனின் பையன் வரைந்ததாய் இருக்குமோ..
அல்பாயுசில் அவன் இறக்க
இவன் தர மறுக்கிறானோ..
மறுபடியும் ஓவியனை நோக்க
அவன் முகத்தில் மாற்றமேதும் இல்லை..
நானும் எதுவும் கேட்கவில்லை..
வந்துவிட்டேன்..
எதற்காகக் கலைத்துக் கொள்ள வேண்டும்
என் கற்பனையை..
*
https://youtu.be/f2hoKR5rdfE
தெரியாதா என்றால்
ஆம் என்றாய்...
எனக்குத் தெரிந்ததை
மிளகு உப்பெல்லாம் போட்டு
கொஞ்சம் நீட்டி முழக்கிச்
சொன்னால் கேட்டு விட்டு..
அதைப் பற்றியே
இன்னும் நிறையச் சொல்கிறாய்..
ஏன் முதலில் தெரியுமெனச் சொல்லவில்லை என்றால்
ஏதாவது சொல்கையில்
என் காதின் ஜிமிக்கியின் அசைவுகள்
உன் மனதை அசைக்கிறது என்கிறாய்..
ச்சீ போ
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
கிட்டே வா படவா..
*
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே -ன்னு தான் பாட்டு இருக்கு லேட்டஸ்டா எனில்.. ஜிமிக்கிக்குப் பதில் லோலாக்கு
https://youtu.be/U4r1JRy48R0
எல்லாம் முன்பு எழுதியிருந்தவை..
***
உறுத்தினால் என்ன செய்வது..
இது தான் விதி
ஏற்க வேண்டியது தான்..
மூன்றாவது மாடி அடுக்ககத்தில்
பார்த்தால் கொஞ்சம் தள்ளி
ஒரு வீட்டின் மொட்டை மாடி, பின்
அந்தப் பக்கம் ஆரம்பித்து வளர்ந்திருக்கும்
நெடிதுயர்ந்த மரம்..
மாடியின் பாதி மறைந்திருக்கும்..
அந்தி வேளையில்
கசமுச கசமுச எனக் கூச்சலாய்க்
குருவிகள்
டபக் டபக் என அந்த மரக்கிளைகளில்
சரணடையும்..
அதிகாலையில் மறுபடி கசமுச..
இரைதேடக் கிளம்பும்
நிதப்படி விஷயம்..
குடிவந்தமுதல் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தஒலி
இன்னிசையாய் மாறிப்போனது நாட்பட..
திடீரென வந்த புயல்
மரத்தைசாய்க்க
ஓரிரு நாட்களில் முழுவதுமாய்
வெட்டுப்பட்டுக் காணமற் போக..
முதலில் தவித்த குருவிகள்
பின் அவையும் காணாமல் போக..
எப்போது வரும் என நினைப்பில்
நாட்கள் நகர்ந்த போது..
வீட்டில்
ஸ்ப்ளிட் ஏசி வைக்க வேண்டும்
மனைவி மகள் மகன் அடம்பிடிக்க
வேண்டாம் நேரா என்மேல் அடிக்கும்
ஒத்துக்காது என நான் மறுத்தாலும்
சரி என பொருத்தவேண்டியதாய்ப் போனது..
முன்னம் இருந்த ஜன்னல் ஏசியைக் கழட்டி
ப்ளைவுட்டால் மறைத்தால்..
ஒரு நாள் அதிகாலையில்
மறுபடி குய் குய்..
ஏசி ஓட்டையின் பின்புறம்
காணாமல் போயிருந்த குருவிகளில் சில
மறுபடியும் குடித்தனம்..
மாற்றத்திற்கு குருவிகள்
பழகிவிட்டன..
எனக்குத் தான் புதிய ஏசி
ஒத்துக்கொள்ளவில்லை
அடிக்கடி சரியில்லாமல் போகிறது உடம்பு
*
https://youtu.be/w0DuxkCIsEA
பந்தயம் தான்.
ஒப்புக் கொண்டாயிற்று..
இதோ வந்தாயிற்று...
கிழவனாரின் கண்கள் சுழல
அடுக்குமாடிக் குடியிருப்பில்
மனங்கள், பணங்கள் வேறுபட்டிருந்தாலும்
மைதானத்தில் கூடியிருக்க..
கிழவர் வேட்டியை குறுக்கில்
கட்டிக் கொண்டார்..
நெற்றிக் குறுக்கில் பேரனின் குரல்..
தாத்தா
சர்க்கரை பிபி மாத்திரை
போட்டுக் கொண்டாயா..
கொஞ்சம் யோசி
உன்னால் முடியுமா..
முடியுண்டா
மனதில் உறுமி நிமிர்ந்தால்
அருகில் பேரனின் நண்பன்
இள் வயது
புதிய ஷீக்கள் கால்களில்
கைகள்
உடற்பயிற்சியில் உரமுடன்..
கைகால் நீட்டி வளைத்து
இவரைப்பார்த்த சிரிப்பில்
சினேகமில்லை..
கூடவே நிறைய அலட்சியம்..
பெரிசு..
சும்மா கூவாத
முடிஞ்சா எங்கூட
ஓடி வர முடியுமா..
நீ ஜெயிச்சா
நாங்க விளையாடவே மாட்டோம்
தோத்தா...
உசுப்பேற்ற
எழுபது வருடமாய்
உடன் வளர்ந்த ரோஷம்
விஸ்வரூபமெடுக்க..
சரிடா..
எதிர் கிரெளண்ட்ல ஒரு ரவுண்ட்
யார் முதல்ல வரான்னு பாக்கலாம்
நாள் குறித்து
இதோ வந்தாயிற்று..
நடுவராய் இருந்தவர்
ஒன்று இரண்டு மூன்று சொல்ல.
பெரிய புயலும் சின்னச் சூறாவளியும்
பறக்க
வெற்றிக் கம்பம் வந்ததும்
ஒருவர் மூச்சிரைக்க
மற்றவர் கொஞ்சம் மூச்சிரைத்து நின்று
கீழே விழ..
கூட்டத்தில் குரல்கள்.
அச்சச்சோ என்னாச்சு.
தெரியலையே
இந்த வயசுல இதெல்லாம் வேண்டாம் தானே
பார்க்காத ஒருவர் சொல்ல
என்ன சொல்றீங்க நீங்க..
விழுந்த்து கிழவனார் இல்லை.
பின்...
கூட்டத்ததை விலக்கி
பரிசோதித்த வைத்தியர் முகம் மாறித்
தோள் குலுக்க..
என்ன ஆச்சு..
மாரடைப்பாம்..ச்ச்
ரொம்பச் சின்ன வயசுப்பா..
இப்படி ஆச்சே...
கிழவனார்
மூச்சிரைப்பையும் பொருட்படுத்தாமல்
அடப்பாவி எழுந்திருடா
எழுந்திருடா விளையாடலாம்..
அச்சோ.. நான் தப்புப் பண்ணிட்டேனே
எனக் கதற..
பார்த்தவர்களுக்குப் புரிந்ததொன்று..
வாழ்க்கை மாறுவதற்கு
போதும் ஒரு நொடி..
இல்லைஇல்லை அதற்கும் குறைவாக.
*
https://youtu.be/lp6hxVyp5g4
வாசுவையும் காணோம்.:)