கைக்குள் இருப்பதைக் காக்க இயலாக்கால்
பைக்குள் பொருள்வேண்டல் ஏன்?
Quote:
Death toll in Pakistan blasts climbs to 115 people http://www.theglobeandmail.com/news/...rticle7172728/
Printable View
கைக்குள் இருப்பதைக் காக்க இயலாக்கால்
பைக்குள் பொருள்வேண்டல் ஏன்?
Quote:
Death toll in Pakistan blasts climbs to 115 people http://www.theglobeandmail.com/news/...rticle7172728/
ஒற்றைக்கால் பேயொன் றுளதாமே பள்ளிக்குள்
வெற்றுரையென் றெண்ணாதீர் வீணாக -- உற்றுப்பார்த்
தீரோ அதுகாண்பீர் தீரவே சிந்தித்து
வேறோசொல் வீரும் கருத்து.
The quote has been abridged to save space.Quote:
GHOST PICTURE OF KANDY SCHOOL GIRL CAPTURED ON CAMERAS:
http://i1125.photobucket.com/albums/...io/page-33.jpg
Gossip Lanka News [English Edition]: INCIDENTS AFTER RAIN
A ghost picture of a Kandy School girl who had one leg amputated after an accident captured on cameras
A few weeks back, June 30th to be precise a hall of a famous Kandy High school had been taken as the venue to hold a passing out parade of nurses. Usually there are two or three halls of High schools in Kandy ................................ts about the entire story could be read from see online edition:
These lines were lost whilst editing but now reconstructed.
வானிற் பதிந்தபடி வந்த நிலாமகளும்
தானும் கடலனைக் காதலித்தாள் --- ஏனோ
ஒருமை கடைப்பிடித் தொப்ப ஒழுகாமல்
இருமை இறைகொண் டனள்.
Note:
நிலாமகட்கு யார் பதி (கணவன்) என்றால், அவள் பதிந்திருக்கும் வானமே பதி. ஆகவே வானிற் பதிந்தபடி எனப்பட்டது. கடலன் = கடல். ஆண்பாலில் கூறப்பட்டது. ஒருமை கடைப்பிடித்தல் = ஒரே காதலனோ கணவனோ உடைய நிலை. இருமை நெறியாவது இரு கணவர்களோ (காதலர்களோ) உள்ள நிலை. (bigamous state).
polygamy - பல்கணவம்
இறை என்பது இறைவனையும் கணவனையும் குறிக்கும் சொல். இங்கு கணவனைக் குறிப்பது.
மீண்டு வந்ததைக் கண்டு மீண்டுவந்தேன்..!
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
கால்கட்டில் மாட்டிய காரிகைக்கு – பால்கலந்த
தேன்வண்ணம் மாறியே தேவியவள் வெட்கத்தில்
பூண்டாள் பொய்க்கோபம் தான்..
மனித உரிமைகள் மாய்விலாக் கோளில்
இனிது மகிழ்பொங்க ஏயும்---கனிவுநாள்
என்றென் றிருந்தேங்கும் ஏதென்ப(து) இல்லாகி
நன்று பிறந்தால் நலம்.
பெண்கள் உரிமைகள் பேணலுற் றிப்புவியில்
கண்களாய்ப் போற்றுபொற் காலமொன்று --- பண்களிலே
பாடல்மட் டின்றித்தான் பட்டிதொட்டி யாவினிலும்
கூடிவர ஆடிடுவம் கூத்து.
உங்கள் தேவிக்கு நீங்கள் காதலர்தின வாழ்த்துச் சொல்வது இயல்பானது. "நன்றி" என்று சொல்வதே அதற்கு இயல்பான பதில். ஏன் பொய்க்கோபம் வருகிறது? பொருத்தமாக இல்லை. உண்மையான கோபமும் வரக் காரணமில்லை..... தீண்டியதும் சுட்டதே தீ" என்பதை மாற்றிக் குழப்பத்தில் போய்க்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
சி.க அவர்களே, மறுமுயற்சி செய்யுங்கள்.
முதலில் நீங்கள் என்ன உங்கள் வீட்டில் செய்தீர்கள் எனக் கேட்பது போல எழுதியிருந்தேன்.. எழுதலாமா எனத் தெரியவில்லை..எனில் என் மனைவியிடம் சொன்னது போல் எழுதினேன்..(ஆமா ஆக்சுவலா நேத்து என்னவாக்கும் செஞ்சீங்க?!)-வெண்பா ப்ளீஸ்
உங்கள் மனைவியை நீங்கள் "கால்கட்டில் மாட்டிய காரிகை" என்பது அவர்கள் அடிமைப் பட்டுவிட்டு மாட்டிகொண்டிருப்பதையே வரணிப்பதாகக் கொள்ளவேண்டி யுள்ளது. வாழ்க்கையில் இணையான இடமில்லை என்று காட்டுகிறது. காலுக்குக் கட்டுப்போட்டா வைத்திருக்கிறீர்கள்! இல்லாவிட்டால் .......
என்ன வரணணை இது?
பால்கலந்த தேன்வண்ணம் மாறியே
எந்த வண்ணத்துக்கு மாறியதாம்?
உதாரணமாக, கோபத்தில் முகம் சிவந்தது எனலாம். இப்படிச் சொல்லாமல், கோபத்தில் கருவண்ணம் மாறிற்று எனலாமா?
You must describe the end effect.
திருமணம் என்பதற்கு கால்கட்டு என்று சொல்வது காலந்தொட்ட வழக்கம்..கால்கட்டு என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை ஆணுக்கும் தான்.. ஓ நான்மோனை வரவேண்டும் என எழுதியது சரியில்லையோ.. சரி மாற்றி எழுதப் பார்க்கிறேன்.. வேறு எதுவும் உள்ளர்த்தம் வைத்து எழுத்வில்லை ம..
பால்கலந்த தேன்வண்ணம் மாறியது என்பது பொன்னிறம் என்பது செந்நிறம் என்ற அர்த்தத்தில் எழுதினேன்.. அது எப்படிகருவண்ணம் ஆகும்..
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
பால்வண்ணம் தான்கொண்ட பைங்கிளிக்கு - நூல்போல்
மெலிந்த இடையாளும் மென்னகை சிந்த
மிளிர்ந்தது சந்தோஷ மே
இப்ப சரியா.. பைங்கிளி காதலி,மனைவி என வைத்துக் கொள்ளலாம்.. அதெப்படி பெண்களுக்கெல்லா கிளிமூக்கா எனக் கேட்காதீர்கள் :)
ஏதாவது தவறுதலாக எழுதி மனம்புண்பட்டிருந்தால் மன்னிக்க
Why have u resorted to apologies. You have done nothing wrong. Everyone has the liberty to express his or her views unless what you have put out conflicts with the rules. So not to worry.
Write and let me read some more! I assure you, you are a good writer.
Let Sivamaalaa enjoy a good veNpaa or other poems from you. This is not a venpaa thread. So feel free.
I am with you.
முதலில் ஒரு நேரிசை ஆசிரியப்பாவில் முயலலாம் என நினைத்தேன்.. அதற்கு முன் வெகு காலம் முன் வெண்பா கற்கையில் எழுதிப் பார்த்தஒரு வெண்பா(?)
கடைசி இருவ்ரி மாற்றி இடுகிறேன்..
வானத்தைப் பார்த்து வரும்மழை என்றெண்ணி
கான மயிலும் களிநடனம் ஆடிவிடும்:
மேகம் கலைந்துவிட மண்ணும் நனையாது
வேகமாய் ஆடும் ஒயிலாட்டம் நிற்காது
கற்பனை வெள்ளம் கரைபுரண் டோடுகையில்
சொற்பொருள் மாறிவிட்ட தே..
(Hope you are cool now)
அன்புடன்
சி.க.
நீங்கள் சொல்வது: மயில்கள் தெரியாத்தனமாக ஆடிவிட்டன. மண்ணோ சிறிதும் நனையவில்லை. ஒயிலாட்டம் ஆடுகிறவர்கள், மழை வருகிறதோ இல்லையோ அவர்கள் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஒரு புறம் மயில் மழை இவைகளுக்கும் மற்றொருபுறம் ஒயிலாட்டக்கார்களுக்கும் தொடர்பொன்றுமில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி வெள்ளம் கரைபுரண்டது, மழையே இல்லாதவேளையில்! உங்களுக்குக் கற்பனையில்தான் கரைபுரள்கிறது என்றாலும், நீங்கள் சொன்ன இயற்கைக் காட்சிகள், நடனங்களோடு என்ன பொருத்தம் என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.
மழை வராவிட்டலும் ஆடிய மயில்கள்போல, கரை புரளாவிட்டலும் நீங்கள் சொற்பிழை செய்திருந்தால் அது பொருத்தம் என்று சொல்லலாம். அதாவது நான் சொல்வது உவமை, மற்றும் காட்சிப் பொருத்தங்களை!
மேகங்கள் கலைந்துவிட்டதனால் ஏமாந்துவிட்ட மயில்போல, கற்பனை உருப்பெறாததனால் சொற்பிழையில் ஏமாந்துவிட்டேன் என்றால் இன்னும் பொருத்தம்.
Let us hear from chi.ka avl.
anbudan
என்ன ஆச்சு.. நான் இந்த மூன்றாவது பாரா அர்த்தத்தில் தான் எழுதினேன்..
மழை வரப்போகிறது கரு மேகங்கள் சூழ்ந்து விட்டன என மயில் ஆட ஆரம்பிக்கிறது.. இந்தக் காற்று வில்லன் வந்து கலைத்து விடுகிறது மேகங்களை.. மேகம்கலைந்தாலும் மயில் ஆடும் ஒயிலான ஆட்டம் நிற்காது..அது நிற்காமல் ஆடும்..
அது போல டபக்கென்று எழுத ஆரம்பித்ததால் (உங்கள் பார்வையில்) கால்கட்டுப் போட்ட காரிகை என நீங்கள் பொருளில் பிழையாக நினைக்கும் வண்ணம் எழுதி விட்டேன்.. ஒயிலாட்டம் என்றுஆட்டத்தையே எடுத்துக் கொண்டீர்களானால் எப்படி..
ஏன்..ஏன்.. இப்படிக் கோபம்..
ஒயில் என்பதற்கு நளினமான என்ற அர்த்தம் தானே..
நான் இங்கு மெளன ரசிகனாகவே இருக்கிறேன் இனிமேல்..
ஒயில் என்பது நீங்கள் கூறிய அர்த்தம்தான். ஒயிலாட்டம் என்பது ஒருவித நடனம்.
ஒயிலான ஆட்டம் ஒயிலாட்டம் என எழுதுவது தவறா..
சே.. என்னை வளரவே விட மாட்டேன் என்கிறீர்கள்..சரி சரி..சி.க வாக வெ இருப்பதற்கு வந்து விட்டேன்..!
பரத கண்டத்தில் (இந்தியாவில்) ஆடும் நடனம் எல்லாம் பரத நாட்டியம் என்று சொல்லலாம் என்றாலும், அது ஒரு தனிவகை நடனம் ஆகிவிட்டது. ஆகவே குச்சுபுடி, மணிபுரி என்றெல்லாம் வேறுபடுத்திச் சொல்கிறார்கள். அதுபோல்தான் ஒயிலாட்டம் என்பது.
Not that it is wrong, it may (not must) fail to carry the meaning you intended. Suppose you become very famous later and 500 years from, someone is trying to read and understand you. He might wrongly deduce that you are referring to the dance called oyilattam. You won't be there to explain it to him. Having conversed with you now, I know that you did not mean that dance. It then becomes the duty of every writer to be understood by others correctly. But you can keep the description there if you insist. After all, it is your poem. It is your inalienable right to do so.
பாபநாசம் சிவன் ஒரு பாடலை எழுதும்போது,"முகமது சந்திர பிம்பமோ" என்று எழுதி, தியாகராஜ பாகவதரிடம் கொடுத்தாராம். "முகமது" என்றுவருவதால் பாடமுடியாது என்று மறுத்ததால், பின் வதனமே சந்திர பிம்பமோ " என்று மாற்றிவிட்டாராம். தவறு என்பதற்காக அல்ல, தவறான பொருள்கொள்ளும்படி பிறரை இட்டுச் சென்றுவிடும் என்பதற்காகத்தான்! முகம் அது என்று பிரித்தால் சரியாகவே உள்ளது......
If you separate the words as oyil aattam - oyilaana aattam, it looks ok. Yours is a similar situation.
You like the usage,you can hold on to it.
I cannot object. and exit from this discussion. Thank you chi ka avl.
You may be older and more experienced than me in such matters.
ஐநூறு வருஷத்துக்கப்புறம் நான் எழுதறது இருக்குமா.. இப்ப நிஜமாவே கிண்டல் பண்றீங்க...(மயிலைத் தொடர்ந்து - வேகமாய் ஆடும் ஒயிலாட்டம் என்பது மயில் ஆடுவதைத் தான் குறிப்பது போல் வருமென்பது என் எண்ணம்..அதுவும் கிட்டத் தட்ட பதின்மூன்று வருடங்களுக்கு முன் எழுதியிருந்தது இது..அப்போதே சொன்ன உங்களைப் போன்ற பாவலர்கள் இதில் பொருள் மாறுகிறது எனச் சொல்லவில்லை..)( நான் வெண்பா கற்றுக் கொண்டு எழுத முயற்சித்துக் கொண்டிருப்பது இதே மையம் தான்).. எனிவே இந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம்..
சந்தடி சாக்கில் நான் பெரியவனா..அனுபவத்திலா..இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன் குருவே..
என்ன ஆச்சு கவிச்சாரலுக்கு..ஏன் தூவவில்லை..
தெருவில் திரிந்தநாய் கர்ப்பமுற்று -- நிறம்
தெறிக்கும் அழகுள்ள குட்டிகளை,
அருகில் ஒருவீட்டின் முன்புறத்தில் -- ஈன்றே
அன்புடன் பால்தந்து போற்றியதே!
தட்டுத் தடுமாறி அங்குமிங்கும் - அவை
தவழ்ந்து சிறிது பருத்துவிட,
குட்டிகள் பத்துமே காணவில்லை -- அந்தக்
குக்கலுக் கங்கோ துணையுமில்லை.
பத்தையும் வீட்டிற் குரியவனே - விற்றுப்
பணம்பண்ணி விட்டான் துயரிதுவே!
எத்தனி டத்தே இழந்தது சேய்களை!
இனிப்பே ரிருட்கடல் சுழ்ந்ததுகாண்!
வாங்க சிவமாலா நலமா..
அழகிய கவிதை. குக்கல் என்றால்என்ன பொருள்
குக்கல் என்றால் நாய்
http://ta.wiktionary.org/wiki/%E0%AE...AE%B2%E0%AF%8D
நன்றி வெங்கி ராம்..அதுவாகத் தான் இருக்குமென நினைத்தேன்..இருந்தும் உறுதிப் படுத்தக் கேட்டேன்
நலம், நலமறிய ஆவல், சி.க. அவர்களே.
குக்கல் என்ற சொல்லின் பொருளைத் தந்துதவிய வெங்கிராம் அவர்களுக்கு நன்றி
.முன் வளர்த்த சீன வீட்டினர் வீடுமாறிச் சென்றபோது, இது தெரு நாயாகிவிட்டது. பின்னர் தான் தற்போது கூறிய சீன வீட்டின் அண்டையில் பெரும்பாலும் தங்கியது ஆகவே தெருநாய்தான். குட்டிகளை விற்றுவிட்டு தாய் நாயைக் கவனிக்காமல் விட்டுவிட்டதுடன், எங்கள் நாய் அல்ல என்றும் சொல்லுகிறார்கள் அந்த வீட்டுக்கரர்கள். (சீன வீடு). பாவமாக இருக்கிறது.இப்போது நான் கொஞ்சம் சோறு போட்டேன். நான் வீட்டைவிட்டுச் செல்லும்போது அது என்னைச் சுற்றிவருகிறது.....பாவம்.
பசி அதிகம் போலும். சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் சாப்பிடுகிறது.
குற்றங்கள் குவிந்தன பேரலை ஆயின
திட்டங்கள் தேடினர் ஆய்வறிஞர்!-- துன்பம்
உற்றிங்கு மக்களும் ஓலமிட்டார்-- ஓர்
உய்தியுண்டோ என்று சாவலுற்றார்.
இத்தகு சூழலில் மலேசியக் காவலர்
மெத்தத் திறத்தோடே ஐவர்தமை --சுட்டு
மீளாத மேலுல குக்கனுப்பி--மக்கள்
தாளாத துன்பம்வி லக்கிவைத்தார்..
துப்பாக்கி காவலர் கைப்பற்றினார்-- படு
தோல்விக்குத் தீயாரும் மெய்ப்பற்றினார்.
ஒப்பூக்கம் தந்திதைப் பாராட்டுவோம் -- ஊரே
உண்மைத் திறம்காணத் தேரேற்றுவோம்..
notes
மெய்ப்பற்றினார் -- இறுதி பெருந்தோல்வியில் முடிய வேண்டுமென்பதே இந்தக் கொள்ளைக்காரர்களைப் பற்றிக்கொண்ட பேய்ப்பற்று போலும். (=உண்மையான பற்று உடையவர்கள்.)