:redjump: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :bluejump:
Printable View
:redjump: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :bluejump:
Happy New Year to Fellow Hubbers, and Fellow NT fans in particular.
Dear friends,
Happy to meet all of you. Tamil New Year Greetings to you. This day is more significant in that our website, www.nadigarthilagam,com, completes 2 years and enters the 3rd year on 14th April 2009, only with the encouragement of all of you and the blessings from Nadigar Thilagam. Thank you all so much and seeking your continued patronage.
Sincerely,
Raghavendran.
Sivaji rasigarkalukku, ulamkanintha
Iniya Puthandu nalvazthukkal
Check out Joe's avatar.
Parthavudaney I heard MSV's drum and trumpet, and felt like getting up and salute. What a powerful image :notworthy:
SP Chowthri -mma ..Mathathellam avarukku pinnala thaan :DQuote:
Originally Posted by groucho070
Quote:
Originally Posted by joe
:oops: I thought it is from Navarathiri ...... B & W image parthu yemandhuttaen
:) Navarathiri getup-la hair style vera maathiri irukkum ..Thooki vaarirupparu NT.Quote:
Originally Posted by HonestRaj
முதல் மரியாதை - விகடன் விமரிசனம்
எஸ்.ராமானுஜம், கோவை-2
'சிவாஜியின் சகாப்தம் முடிந்துவிட்டது' என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்க, சிவாஜிக்கேற்ற அழுத்தமான கதாபாத்திரத்தைக் கொடுத்து அவருடைய சகாப்தம் முடிய வில்லை என்று நிரூபித்திருக் கிறார் அல்லவா பாரதிராஜா?
நடிப்பில் சிவாஜி இமயம் என்பது உலகறிந்த விஷயம். அவர் ஏற்காத பாத்தி ரங்கள் இல்லை. வெளிப்படுத்தாத உணர்ச்சி கள் இல்லை. இதுவரையில் அவருடைய அற்புதமான நடிப்பாற்றலைப் பாராட்டி எழுதப்பட்ட வர்ணனைகளுக்கும், புகழ்ந்து எழுதப்பட்ட வார்த்தைகளுக்கும் மீறிய திறமை அவரிடம் இருப்பதால், இனி அவர் நடிப்பைப் பற்றிப் பாராட்டுவதில் அர்த்த மில்லை.
கற்பனையில் டைரக்டர் காண்பதை காமிராவுக்கு முன் வெளிப்படுத்துவதுதான் நடிப்பு. அந்த இலக்கணம் சிவாஜியிடம் பிசகியதே இல்லை. ராஜா சாண்டோ காலத்தில் நடித்திருந்தால், அவர் கேட்டதையும் கொடுத்திருப்பார். இன்று பாரதிராஜா கேட் பதையும் கொடுக்கிறார். அந்த அளவுக்கு தேவைக்கேற்பவும் காலத்துக்கேற்பவும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது டைரக்டர்களின் கையில்தான் உள்ளது!
இந்தக் கதையில், பஞ்சத்தால் அடி பட்டு அடைக்கலம் தேடி வரும் ராதா விடம் தூய்மையான உள்ளத்தோடு பழகுவ தாகட்டும், தாய்மாமனுக்குக் கொடுக்கப் பட்ட வாக்கு காப்பாற்றப்பட வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் காரணமாய், மனைவி வடிவுக்கரசியின் ஏச்சுக்கும் பேச்சுக் கும் கட்டுப்பட்டுப் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போவதாகட்டும், மனைவி யைச் சார்ந்தவர்கள் ராதாவோடு தன்னைச் சம்பந்தப்படுத்தி எள்ளி நகையாடும்போது சீறி எழுவதாகட் டும்... எந்த இடத்திலும் அளவுக்கதிக மாக உணர்ச்சிவசப்படாமல் சிவாஜி அடக்கமாக நடித்ததிலும், அவரை பாரதிராஜா அப்படி நடிக்க வைத்ததி லும் இருவருமே சம அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கே.எம்.இளங்கோ, கு.பாளையம்.
பாரதிராஜா எந்தெந்தக் காட்சிகளின்போது நமக்குத் தெரிகிறார்?
எந்தக் காட்சியின்போது தெரிய வில்லை என்று கேட்பதே பொருத்தம்.கலப்படம் செய்யாமல் கிராமத்து மண் வாசனையைப் படம் நெடுக நறுமணக் கச் செய்திருக்கிறார் பாரதிராஜா.
கதாநாயகிக்கு வெள்ளை ஆடை உடுத்தி ஸ்லோமோஷனில் காற்றில் நீச்சலடிக்க வைப்பது, திருவிழாக் காட்சியை வலுக்கட்டாயமாகப் புகுத்தி வண்ண வண்ணத் துணிக ளைச் சலசலக்க வைப்பது, கையில் தீப்பந்தத்தோடு கிராமத்து மொத்த ஜனங்களும் ஒருவித ஆக்ரோஷமான வெறியில் ஓடிவருவது போன்ற தன் பலவீனங்களைத் தவிர்த்து, கொஞ்ச மும் குழப்பமில்லாமல் திரைக்கதை அமைக்கும் தன் பலத்தை மட்டுமே இம்முறை பயன்படுத்தியிருக்கிறார்!
படத்தில் டைரக்டருக்கு வலக்கரம் ஒளிப்பதிவாளர் கண்ணன். 'நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது காமிராவை எடுத்துச் செல்வதில்லை.என் கண்ணனின் இரண்டு கண்களைக் கொண்டு செல்கிறேன். அந்தக் கண்க ளுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறு பக்கத்தையும் பார்க்கத் தெரியும்' என்ற பாரதிராஜாவின் பாராட்டுக்குத் தன்னை உரியவராக் கிக்கொண்டுவிட்டார் கண்ணன்.
ஜி.ஜோதிமணி, கோவை-1.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராதாவின் அபார நடிப்பு அசத்திவிட்டதே?
'வெறும் ஷோ கேஸ் பொம் மையாக வந்து போகிறார்' என்று ராதா மீது எல்லோராலும் (எங்களையும் சேர்த்து) ஏகமனதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்தப் படத்தில் தவிடுபொடியாகிவிட்டது. மலையோடு மோதியிருந்தாலும், நடிப்பில் மலைக்க வைத்துவிட்டார்!
ஜி.ராஜகோபாலன், சென்னை -24
அறிமுகமாகியுள்ள இளஞ்ஜோடி தீபன் - ரஞ்சனியைப் பற்றி...
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுச் சோடை போன முதல் ஜோடி என்ற பெருமை(?) இவர்களைச் சாரும்!
- விகடன் விமர்சனக் குழு
பெரும்பான்மையான வாசகர்களுக்குப் பிடித்த அம்சம்:
சிவாஜி, ராதா நடிப்பு; பாரதிராஜாவின் இயக்கம்.
பிடிக்காத அம்சம்:
ஜனகராஜின் பாத்திரம்.
Twinkle Twinkle little starQuote:
Originally Posted by joe
How I wonder what you are
Up above the world so high
LIKE A DIAMOND IN THE SKY
hi friends :)
Murali sir,Quote:
Originally Posted by Murali Srinivas
After watching a few scenes from " En Magan" in Raj TV on a Saturday morning (unfortunately I had to rush up to office), the urge to see this film got intensified. On the same day I enquired Raj Video Vision, but I was told that there is no stock.
Pls let me know sir, if you come across this DVD.
நேற்று ராஜ் டிவியில் மிருதங்க சக்கரவர்த்தி பார்த்தேன்.அதில் ஒரு காட்சியில் நடிகர் திலகம் தன்னை சங்கத்திலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக சொல்லுபவர்களிடம் உனர்ச்சி கொந்தளிக்க பேசுவார்."நான் வளர்த்த சங்கத்திலிருந்து என்னையே நீக்குகிறார்களா?" போன்ற வசனங்களுடன்.
ஏதோ சில காரனங்களுக்காக நடிகர் திலகம் நடிகர் சங்கத்துக்குள் கால் வைக்க மாட்டேன் என்று சபதம் செய்ததாக படித்திருன்தேன்.அந்த காட்சியை பார்த்தபோது இதுதான் ஞாபகத்துக்கு வந்தது
Dear Mohan,Quote:
Originally Posted by rangan_08
Welcome back. Hope your occupation allows you to stay back and continue.
Regarding En Magan, I am not sure whether Raj have the rights because Moser Baer had signed up with Balajee for the entire lot of 17 movies that he produced with NT. But unfortunately MB is yet to bring out the VCD/DVD of Thangai, En Thambi, Thirudan, En Magan and Unakkaaga Naan [all Balajee films].
But all said and done, Raj may also bring out En Magan. Because recently they had brought out DVDs of Anbu, Chithoor Rani Padmini, Mangaiyar Thilagam in addition to Irumbu Thirai as a 2 in 1 combo. Other interesting announcements that are going to hit the stores are Iruvar Ullam [in the CD/DVD format for the first time]Arunodayam etc.
You know something? Raj who holds the telecast rights of the film has not brought out the CD so far. Yes, I am talking about the one and only Vasantha Maaligai. They may bring out the DVD soon.
Let us wait for the stocks to arrive. For En Magan, please check with Raghavendar sir who has close to 220 Films in his collection.
Regards
welcome back rangan :D
Dear Rangan and Murali Srinivas,
I think the Balaji's movies are with NSE which releases DVDs or VCDs through Moser Baer. There are two songs (i) thattattum kai thazuvattum from En Thambi and (ii) Pazhaniyappan Pazhaniyammava from Thirudan, which were post in Youtube. The song from En Thambi was embedded in our website. But I do not know if it continues because one I found the message video removed and another time it played. May be we can expect Balaji's films through Moser Baer (We shall pray the almighty for a speedy recovery of K Balaji who is hospitalised). The film General Chakkaravarthy, Vidivelli are available for download in the website, www.techsatish.net.
Raghavendran.
Thank you Thiru. I really miss you all. :( Will try to visit the hub as far as possible.
Dear Murali sir & Raghavendra sir, thank you so much for the reply. Let's wait for the release of the DVD collections. It would be a real treat. Recently, in one of the stores in Vadapalani, I saw a VCD of Pilot Premnath. I'm not sure about the quality so I refrained from buying it.
Last week, in " Thirumbi parkiren" program in Jaya TV, Muktha Srinivasan was the guest. Most of the time he was fondly referring NT, while sharing his past. He said that he stopped making films due to few reasons. One, is the death of his brother who used to help him a lot in making films and the other is the loss of NT. What a great relationship he had with NT !!
நீல வானம்
தயாரிப்பு: பட்டு பிலிம்ஸ்
கதை வசனம் : கே. பாலச்சந்தர்
இயக்கம் : பி.மாதவன்
வெளியான நாள்: 10.12.1965
நாயகன் பாபு ஒரு அநாதை. ஒரு செல்வந்தர் உதவியினால் படித்து பட்டம் பெறுகிறான். வேறு வேலை கிடைக்காததால் தியேட்டரில் வேலை செய்கிறான். ஒரு சமயம் ஒரு பெண் ஒட்டி செல்லும் காரில் லிப்ட் கேட்டும் ஏறும் பாபு நாளைடைவில் அந்த பெண் விமலாவை காதலிக்க ஆரம்பிக்க அவளும் அவனை விரும்புகிறாள். அவளுக்கு தாய் இல்லை. தந்தை மட்டுமே இருக்கிறார். ஒரு மாமனும் இருக்கிறான். தினம் விமலாவின் காரில் ஏறி செல்லும் பாபு ஒரு நாள் தவறுதலாக விமலாவின் கார் என்று நினைத்து வேறு ஒரு காரை நிறுத்தி விட அதிலிருப்பது வேறொரு பெண் கௌரி. வெகுளியாக பேசும் அவள் தன் பிறந்த நாளுக்கு அவனை அழைக்க பாபுவும் செல்கிறான். அங்கே செல்லும் போதுதான் தன்னை படிக்க வைத்த செல்வந்தர் மில் ஓனர் சோமநாதனின் ஒரே மகள்தான் கௌரி என்பது அவனுக்கு தெரிய வருகிறது. பிறந்தநாள் விழாவில் வைர நெக்லஸ் காணாமல் போக, பாபு மீது சந்தேகப்பட்டு சிலர் கேள்வி கேட்க, சிலர் அவன் அணிந்திருக்கும் கோட்டை கழட்ட, சட்டையில்லாமல் வந்திருக்கும் பாபு அவமானத்தில் வெளியேறுகிறான்.
அவன் வீடு தேடி வந்து வந்து மன்னிப்பு கேட்கும் கௌரியும் அவளது தந்தையும் அவனுக்கு அவர்களது நிறுவனத்தில் வேலை தருகின்றனர். எல்லோருடனும் கலகலப்பாக பேசிக்கொண்டு, பக்கத்து வீடு தோழியுடன் செல்ல சண்டை போட்டுக் கொண்டு வளைய வரும் கௌரியின் வாழ்வில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது. அடிக்கடி வயிற்று வலியினால் அவதிப்படும் அவளை டாக்டர் பரிசோதித்து விட்டு அவளுக்கு வயிற்றில் புற்று நோய் அதுவும் கர்ப்பப்பையையும் பாதித்திருக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார். அனால் அவள் பெற்றோர்கள் கௌரியிடமிருந்து இதை மறைத்து விடுகிறார்கள்.
இதனிடையே பாபு விமலா கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். விமலாவின் மாமன் பிரகாஷ் கௌரியை திருமணம் செய்ய நினைக்கும் போது யாரோ சொல்வதை கேட்டு பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட கல்யாணத்தை பற்றி மிகுந்த கற்பனை செய்து வைத்திருக்கும் கௌரி மிகுந்த வருத்தம் அடைகிறாள். பாபு விமலாவை காதலிக்கும் விஷயம் தெரியாமல் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கௌரி கேட்க பாபு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க, இதை கேட்டுக்கொண்டிருக்கும் சோமநாதன் பாபுவை தனியாக கூட்டி சென்று தன் மகளின் நிலைமையை விளக்கி சொல்லும் சோமநாதன், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி பாபுவை மன்றாடி கேட்டுக் கொள்கிறார். பாபு தன் நிலைமையை எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் வற்புறுத்தவே, தனக்கு வாழ்வளித்த அவரை மீற முடியாமல் பாபு கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான். கௌரியின் நோய் பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையினால் அவன் பணத்திற்கு ஆசைப்பட்டு கௌரியை மணந்து கொள்வதாக நினைத்து கொள்ளும் விமலா, பாபு மீது மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைகிறாள். திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்கு பிறகு பாபுவையும் கௌரியையும் சந்திக்கும் விமலா அவர்கள் கொடைக்கானல் செல்வதை தெரிந்து கொண்டு அங்கும் வந்து விடுகிறாள். தினசரி கடிதங்களை அனுப்பி வைக்கிறாள். பாபுவை நேரிலும் சந்தித்து தொல்லை செய்ய அவன் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறான். சென்னை திரும்பும் பாபு, சோமநாதனின் உடல் நல குறைவு காரணமாக கம்பெனியின் நிர்வாக பொறுப்பை ஏற்கிறான். கௌரி மூலமாக அங்கே வேலையில் சேரும் விமலா அங்கும் தன் திட்டத்தை தொடருகிறாள்.
கௌரிக்கு இப்போது வலி அதிகமாகவே டாக்டரிடம் காண்பிக்க அவர் நோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும் அவளின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் சொல்கிறார். சூழ்நிலையை சமாளிக்க கௌரியிடம் அவள் கர்ப்பமாக இருப்பதாக பாபு சொல்கிறான். குழந்தைக்காக ஏங்கிய கௌரிக்கு இது மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கிறது. அதை உண்மை என்றே நம்பும் கௌரி தனக்கு வளைகாப்பு நடத்த சொல்கிறாள். வளைக்காப்பு நடை பெறுகிறது. அந்த நேரத்தில் பன்னாட்டு மருத்துவர்களின் காஃன்பிரன்ஸ் டெல்லியில் நடப்பதை அறிந்து கொள்ளும் பாபு அங்கு சென்று டாக்டர்களை சந்திக்கிறான். முதலில் மறுக்கும் அவர்கள் பிறகு சென்னை வந்து கௌரியை பரிசோதிக்க ஒப்புக் கொள்கின்றனர்.
இதற்கிடையே தன் கணவனின் வாடிய முகத்தையும் இரவில் தனியாக கண் கலங்குவதையும் பல முறை பார்க்கும் கௌரி, பாபு கிழித்து போட்ட ஒரு போட்டோ-வின் ஒரு பகுதியை பார்த்து விட அவளுக்கு சந்தேகம் அதிகமாகி விடுகிறது. இதைப் பற்றி விமலாவிடம் விலாவரியாக பேச மனம் பொறுக்க முடியாமல் விமலா தான் அந்த பெண் என்பதை உணர்த்தி விட்டு போய் விடுகிறாள்.
டெல்லியிலிருந்து திரும்பும் பாபுவை எதிர்கொண்டு ஏன் இந்த உண்மையை மறைத்தீர்கள் என்று கௌரி கேட்க, தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்ற உண்மை புரியாமல் அவளுக்கு நோய் பற்றி தெரிந்து விட்டது என்று நினைத்து பாபு உண்மையை சொல்லி விட கௌரிக்கு மீண்டும் மிக பெரிய அதிர்ச்சி. அவளை மிகுந்த பாடுபட்டு சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கும் நேரத்தில், நோய் முற்றி கௌரி இறந்து போகிறாள். அவள் நினைவாகவே பாபு தொடுவானத்தை நோக்கி நடந்து போவதோடு படம் நிறைவு பெறுகிறது.
(தொடரும்)
அன்புடன்
நீல வானம் - Part II
இயக்குனர் சிகரம் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் இணைந்த படம். மாதவன் இயக்கத்தில் பாலச்சந்தர் கதை வசனம் எழுதினார். கான்சர் எனப்படும் புற்று நோய் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை அடிப்படையாக வைத்து ஒரு இயல்பான கதை கே.பி எழுதியிருக்க அதை தெளிவாக கையாண்டிருந்தார் மாதவன்.
நடிகர் திலகத்தை பொறுத்தவரை அனாயாசமாக செய்த படங்களில் ஒன்று நீலவானம். எப்போதும் அவரது படங்களில் அவரது வேடங்கள் பலதரப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும். இதிலும் அப்படியே. ஹாப்பி கோ லக்கி கய்-யாக ஆரம்பிக்கும் அவரது பாத்திரம் பிறகு நன்றி, தியாகம், குற்ற உணர்வு, கோபம், நேசம், தவிப்பு, துடிப்பு, இயலாமை, முனைப்பு, ஏமாற்றம் என பல உணர்வுகளில் பயணித்து இறுதியில் சோகம் மற்றும் விரக்தியில் முடியும். இவை அனைத்தையும் கலந்து கொடுத்திருப்பார் சிவாஜி.
காரில் லிப்ட் கேட்டு போய் விட்டு, தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் போது ராஜஸ்ரீயிடம் மாட்டிக் கொண்டு அசடு வழிவது, ராஜஸ்ரீயின் கார் என்று நினைத்து தேவிகாவின் காரை நிறுத்தி விட்டு பிறகு அந்த காரிலும் பயணம் செய்யும் போது வெகுளியாக பேசும் தேவிகாவிடம் தானும் வெகுளியாக பேசுவது, தன் ஒண்டு குடித்தன போர்ஷனுக்கு வரும் தேவிகா உடைந்து போன சேரில் உட்கார்ந்து விடாமல் இருக்க அவர் காட்டும் முகபாவங்கள், தேவிகாவின் பிறந்த நாள் விழாவில் நகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அணிந்திருக்கும் கோட்டை கழட்ட வெறும் உடலோடு நிற்கும் அவரை அனைவரும் கேலி செய்து சிரிக்க அவமானம் தாங்காமல் கூனி குறுகி வெளியேறுவது, செய்த தவறுக்கு பரிகாரமாக தேவிகாவின் மில்லில் வேலை போட்டு கொடுக்க அதை ராஜஸ்ரீயிடம் வந்து ஸ்டைலாக சொல்வது, என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்கும் தேவிகாவை பார்த்து பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நிற்க அந்த நேரம் அங்கு வரும் சகஸ்ரநாமத்தை பார்த்து விட்டு தன்னை தவறாக புரிந்து கொண்டு விட்டாரோ என்று அவர் காட்டும் பதைபதைப்பு, தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி யாசகம் கேட்கும் சகஸ்ரநாமதிடம் மறுத்து பேச முடியாமல் தவிப்பது, பணத்திற்காக விலை போய் விட்டதாக குற்றம் சாட்டும் ராஜஸ்ரீயிடம் உண்மையை சொல்ல முடியாமல் துடிப்பது, கல்யாணத்திற்கு பிறகு தன்னை பழி வாங்குவதற்காக கடிதங்களையும் போட்டோகளையும் ராஜஸ்ரீ அனுப்ப அதை பார்க்கும் தேவிகாவிடம் மென்று முழுங்கி சமாளிப்பது, தான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஆசை ஆசையாய் சொல்லும் மனைவியிடம் அவள் கொஞ்ச நாட்கள் தான் உயிரோடு இருக்க போகிறாள் என்பதை சொல்ல முடியாமல் மருகுவது, அவளின் வயிற்று வலிக்கு காரணம் கர்ப்பம் என்று பொய் சொல்ல அப்போது கல்யாணத்திற்கு முன்பும் வலி வந்ததே என்று கேட்கும் தேவிகாவிடம் சமாதானம் சொல்வது, குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று சொல்லும் தேவிகாவிடம் விளையாட்டாய் பேர்கள் சொல்லி விட்டு அந்த பேச்சை ரிகார்ட் செய்து வைத்து பிறகு போட்டு காட்டி கிண்டல் செய்வது, எப்போதும் மனக் கவலையில் முழுகி இருக்கும் தன்னிடம் விஷயம் தெரியாமல் விஷம் கக்கும் ராஜஸ்ரீயிடம் கோபத்தை வெளிக் காட்ட முடியாமல் துடிப்பது, வாய் தவறி பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று தேவிகாவிடம் பாடி விட்டு சட்டென்று உண்மை உறைக்க கலங்குவது, சர்வதேச டாக்டர்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் டாக்டர்கள் தேவிகாவின் நோய் குணப்படுத்த முடியாத ஒன்று என்று கை விரிக்க, தன் மனைவிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று மன்றாடுவது, டெல்லி சென்று திரும்பி வரும் தன்னை எதிர்கொண்டு என்கிட்டேந்து இந்த உண்மையை ஏன் மறைச்சீங்க என்று தேவிகா கேட்க தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்பது தெரியாமல் "நீ கூடிய சீக்கிரம் சாக போறங்கற உண்மையை உன்கிட்டயே நான் எப்படிமா சொல்லுவேன்" என்று போட்டு உடைக்க இப்படி வேறு ஒன்னு இருக்கா என்று தேவிகா கேட்க அப்போதுதான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விட்டோமே என்று துடித்து போவது, ட்ரீட்மென்ட்-கு ஒத்து கொள்ள வைக்க மனைவியிடம் முன்பு அவள் சொன்ன டெய்லி பீச்சுக்கு போகலாம், சினிமாக்கு போகலாம், நிறைய கடலை உருண்டை சாப்பிடலாம் என்று சொல்லி சிரிக்க முயன்று முடியாமல் உடைந்து போய் அழுவது, தேவிகா எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வர மறுக்கும் சகஸ்ரநாமதிடம் "எனக்கு மட்டும் வருத்தமில்லை, சோகமில்லை சந்தோஷமாக இருக்கு" என்று கோபமாக கத்தி விட்டு ஒரு முறைப்போடு "வாங்க" என்று சொல்லி விட்டு போவது, இப்படி படம் முழுக்க நடிகர் திலகம் பிச்சு உதற, நமக்கு சரியான நடிப்பு விருந்து.
தேவிகாவின் நடிப்புலக வாழ்க்கையிலே மிக சிறந்த படம் நீலவானம் என்றால் அது மிகையாகாது. ஒரு வெகுளியான அனைவரையும் நம்பும் பெண்ணாக,நோய் பாதிக்கப்பட்டு அனால் அதை பற்றி தெரியாதவராக, டாக்டர் என்றால் பயந்து நடுங்குபவராக, பக்கத்து வீடு தோழி தம்பட்டம் அடித்து கொள்வதை வந்து அப்பாவிடமும் கணவனிடமும் சொல்லி குறைப்பட்டு கொள்வதாகட்டும் ["அவ கல்யாணத்திலே கை கழுவுற தண்ணியிலே கூட ஏலக்காய் போட்டிருந்தாங்களாம்"], தன் அறையில் பாம்பு எப்போதாவது வரும் என்று சிவாஜி சொன்னவுடன் பயந்து கொண்டே அப்படி இப்படி பார்த்து கொண்டு பேசுவதிலும் சரி, வலி பொறுக்க முடியாமல் துடிப்பதிலாகட்டும், அதை குழந்தை உதைப்பதால் ஏற்படும் வலி என்று சொல்லி சிரிப்பதிலாகட்டும், தன் கணவன் தங்கு பிடித்த முறையில் தலை சீவ வேண்டும் என்று ஹேர் ஸ்டைல்-ஐ மாற்றி அமைப்பது, பிறகு தான் இறந்து போக போகிறோம் என்று தெரிந்தவுடன் கல்யாணத்திற்கு முன்பு இருந்த அந்த பழைய ஸ்டைல்-ஐ மீண்டும் அமைப்பது, கொடைக்கானலில் கணவனோடு வருங்காலத்தை பற்றி ஏராளமான கனவுகளுடன் ஆடிப் பாடி மகிழ்வது, தன்னை கேட்காமல் ராஜஸ்ரீயை ஏன் வேலைக்கு சேர்த்தாய் என்று கோவப்படும் கணவனை பார்த்து பயந்து போய் அழுவது, தன் கணவன் கல்யாணத்திற்கு முன்பு காதலித்திருப்பான் என்ற சந்தேகத்தை மன வருத்ததோடு ராஜஸ்ரீயிடம் பேசுவது, "ஆறிலே சாகலாம் அறியா வயசு, நூறிலே சாகலாம் அனுபவிச்ச வயசு ஆனா பதினாறிலே மட்டும் சாக கூடாது அது ரொம்ப கொடுமையான விஷயம்ங்க" என்று கதறுவது, தன் நோய் பற்றி உண்மை தெரிந்தவுடன் அவரிடம் வரும் ஒரு விரக்தி கலந்த முதிர்ச்சி என பல்முக பரிணாமம் காட்டியிருப்பார். தன்னுடைய படங்களை பற்றிய one liner -ல் "திருமதி தேவிகாவின் மிக சிறந்த நடிப்பை இதில் காணலாம்" என்று நடிகர் திலகம் குறிப்பிட்டிருப்பார். வஷிஷ்டரே பிரம்மரிஷி பட்டம் கொடுத்து விட்டார் எனும்போது அதற்கு மேல் சிறப்பாக நாம் என்ன சொல்லி விடப் போகிறோம்?
நடிகர் திலகத்தோடு இந்த படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தன் பங்கை சரியாக செய்திருப்பார். சகஸ்ரநாமத்திற்கு ஏற்ற பாத்திரம். படத்தில் ராஜஸ்ரீயின் தந்தையாக வி.கே.ராமசாமியும், மாமனாக நாகேஷும் இருந்தாலும் இந்த கதைக்கு சற்றும் ஒட்டாத காமெடி அவர்களோடது. சீரியஸான கதைக்கு ஒரு outlet என்ற முறையில் செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் கே.பியிடமிருந்து இப்படி ஒரு அபத்தத்தை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மற்றபடி அவரது வசனங்கள் வெகு இயல்பு. தன் மகளுக்கு வாழ்வளிக்க சொல்லி சிவாஜியிடம் சகஸ்ரநாமம் பேசும் காட்சிகள் கூட மெலோ டிராமாவாக செய்யாமல் இயல்பாக இருக்கும். அது போல் அந்த கால படங்களில் வரும் டாக்டர்கள் போல் இல்லாமல் யதார்த்தமாக நோய் பற்றி பேசுபவர்களாக அமைத்திருப்பார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் "ரொம்ப வலி அதிகமானா நோவல்ஜின் கொடுங்க" என்று டாக்டர் சொல்லும் போது அந்த காலத்திலேயே தியேட்டரில் பயங்கர சிரிப்பொலி கேட்கும்.
காமிரா கர்ணன். அவரின் பிற்காலத்தில் அவர் செய்த ஆங்கில் (angle)சேட்டைகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இருக்கும். மெல்லிசை மன்னர்கள் பிரிந்த பிறகு முதன் முதலாக எம்.எஸ்.வி தனியாக இசையமைத்த நடிகர் திலகத்தின் படம் [இன்னும் சொல்ல போனால் இதுதான் முதல் படமோ என்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் கலங்கரை விளக்கம் தான் தனியாக எம்.எஸ்.வி இசையமைத்து வெளி வந்த முதல் படம் என்று சொல்கிறார்கள். க.வி. ரிலீஸ் தேதி எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்]. அந்த பிரிவு தன்னை பாதிக்கவில்லை என்பதை மெல்லிசை மன்னர் உணர்த்தியிருப்பார்.
ஒ லட்சுமி ஒ மாலா - நீச்சல் குளத்தில் ராஜஸ்ரீ பாடும் பாடல் - ஈஸ்வரி
ஒ லிட்டில் பிளவர் - நடிகர்திலத்திற்கு இந்த படத்தில் இந்த ஒரே பாடல் தான். அவரது ஸ்டைல் நடை பற்றி கேட்க வேண்டுமா.? சரணத்தில் உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே என்று ஸெல்ப் மாக்கிங்-ம் (self mocking) உண்டு.
ஓஹோ ஒ ஓடும் எண்ணங்களே - கொடைக்கானலில் வைத்து எடுத்திருப்பார்கள். தேவிகா தன் ஆசையை எல்லாம் பாடலாக பாட உள்ளுக்குள் நடிகர் திலகம் மருகும் காட்சி. குறிப்பாக
வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மோதும் பனியில் அலைவோம் இங்கே
என்ற வரிகளும்
நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
என்ற வரிகளும் மனதை வாட்டும். பாடலின் போது Round ஹாட், கூலிங் கிளாஸ் சகிதம் நடிகர் திலகம் நிற்க தியேட்டரில் கைதட்டல் + விசில் பறக்கும்.
மங்கல மங்கையும் மாப்பிளையும் வந்து - வளைக்காப்பு பாடல் - சுசிலா + ஈஸ்வரி. "தாமரை கோயிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகை செண்டாக" என்று கண்ணதாசனின் தமிழ் விளையாடலை இதில் கேட்கலாம்.
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று - சுசிலாவின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று. சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்று கண்ணதாசன் எழுதிய வரிகள்.
மலரில்லாத தோட்டமா
கனியில்லாத வாழையா
மகனில்லாத அன்னையா
மகனே நீ இல்லையா
என்ற வரிகளின் போது சுசிலாவும் தேவிகாவும் கிளப்பியிருப்பார்கள்.
இவை அனைத்தும் இருந்தும் நூறு நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை இந்த படம் தொட முடியாமல் போனது வருத்தமே. நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஆனால் 100 நாட்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் போன படங்களில் ஆண்டவன் கட்டளைக்கு அடுத்தபடியாக நீலவானம் இடம் பிடிக்கும். படத்தின் மைய இழையே சோகம் என்பதால் மக்களுக்கு அதை ஏற்பதில் ஒரு தயக்கம் இருந்ததா, இல்லை திருவிளையாடல் என்ற இதிகாச காவியம் தமிழகமெங்கும் ஏற்படுத்திக் கொண்டிருந்த தாக்கத்தினால் இந்த படம் பாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை[திருவிளையாடல் வெளியாகி 132 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக் கொண்டிருந்த போதுதான் அடுத்த படமாக நீலவானம் வெளியானது].
எப்படி இருப்பினும் நடிகர் திலகத்திற்காகவும் தேவிகாவிற்கும் வேண்டியே பார்க்க வேண்டிய படம் நீலவானம்.
அன்புடன்
MURALI SIR,
Excellent write up on neelavaanam.Though it did not complete 100 days ,I think it collected more money in re runs.In 1994 it ran for three weeks in chennai meghala(raghavendran sir ,please confirm).
and coming to rajashree, she has acted with NT even in sorgam.
Thanks Senthil. Yes, in subsequent releases Neelavanam did well. But many films of NT, which did not run for 100 days in the initial run had done excellent business in re-releases.
How I missed Sorgam? There was this song sequence at the back [Muthaarathil Muppathu muthhu] of my mind but I was thinking it to be Sorgam Pakkathil from Enga Mama and since that was Vennira Aadai Nirmala, didn't think further. Again thanks.
Regards
Dear Murali,
Your write up on Neelavanam is amazing. Certainly Neelavanam is my all time favourite. During the rerelease it ran for two weeks at the Megala Theatre with full house. And that particular scene where NT will reveal Devika's disease to herself which she did nt expect was later on absorbed in few more films. Chinnanchirusugala with Prabhu in the lead role, was one such where Mohan and Sulakshana would reveal facts which Prabhu wouldnot have expected. Such was Neelavanam's impact. Had Balachander worked more films with NT, we would have more and more classics from that team. (He was adamant to stand alone away from MGR and Sivaji and to establish his individuality which is understandable. But NT was a director's actor and Balachandar would not have had any problem with him. So I personally feel ego would have been the only reason for KB not to associate himself with NT after Ediroli).
Coming to Rajasri, she had acted a few more films with NT (I do not exactly remember). But she has given good performance in whichever film she acted with NT. Even in Sorkkam her performance was good. She was fully utilised by KB in Bama Vijayam, Anubavi Raja Anubavi, Poova Thalaiya etc.).
Regarding Mellisai Mannar's films I am giving below the first few films released date wise:
1. FILM: NEE
Banner: Sri Vinayaka Pictures
Length of the Film: 3977 metres
Date of Censor: 17.08.1965
Date of Release: 21.08.1965
2. இரண்டாவதாக இடம் பெறுவது சரவணா பிலிம்ஸ் கலங்கரை விளக்கம்.
தணிக்கையான தேதி 23.08.1965
படம் வெளியான தேதி 28.08.1965
3. இவ்வரிசையில் மூன்றாவதாக
நாவல் பிலிம்ஸ் மகனே கேள்
இயக்கம் - V.சீனிவாசன்
கதை வசனம் - இராம. அரங்கண்ணல்
பாடல்கள் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தணிக்கையான தேதி - 22.10.1965
படம் வெளியான நாள் - 19.11.1965
4. 4. AVM ப்ரொடக்ஷன்ஸ் குழந்தையும் தெய்வமும்
இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு
கதை வசனம் ஜாவர் சீதாராமன்
நடிகர் நடிகையர்
ஜெய்சங்கர், ஜமுனா, குட்டி பத்மினி, மேஜர் சுந்தரராஜன், ஜி.வரலட்சுமி, நாகேஷ் மற்றும் பலர்
தணிக்கையான தேதி 15.11.1965
வெளியான நாள் 19.11.1965
5. பட்டு பிலிம்ஸ் நீலவானம்
தணிக்கையான தேதி 04.12.1965
வெளியான தேதி 10.12.1965
தயாரிப்பு வரதன்
This is based on date of censor and release. But Neelavanam composing was starting much early and there was not much delay in production too. But other films got released even earlier. And in fact Anandhi is supposed to have been the last film in Viswanathan-Ramamurthi duo, since most part of that film was done by them. But a little delay in production made things different. The last few portions of the film Anandhi was done by MSV as a solo md and completed by him. The song kannile anbirundal was composed by Viswanathan Ramamurthi and recorded in P Susila's voice. But during the last schedule TMS wanted to sing the tune and the situation was contrived in recorded again by MSV individually with TMS' s voice.
But I think the title of Anandhi read MSV's name only.
So actually Anandhi is supposed to be the last film of Viswanathan Ramamurthi.
Raghavendran.
Just finished reading. Excellent review, Murali-sar.
I have the VCD of this film and have watched it sometimes back. I thought it was the best performance by the one and only supergorgeous Devika. Such a natural in a role, the types that are hardly available for current day actresses. Certainly in top five of my favourite NT/Devika combo (may I add that this review for you, sir, coming after Andavan Kattalai review recently is hardly a coincidence :wink: ).
NT is NT, doing what he can with the role, and doing more. Much has been discussed about K.B, and I think director Mathavan should be applauded too, for keeping things simple.
Thanks for re-writing those terrific scenes and relating to us the details of the performance. Certainly worth revisiting.
Note: I noticed three of the songs starts with "O", MSV entha moodla iruntharoo? :D
Raghavender Sir,
Thank you so much for the details. So Nee is the first movie to have come out under MSV's name after the break up. One surprise is Magane Kel having songs written by Pattukottai because he had passed away many years before that. Probably they must have used his already written songs.
Rakesh,
Thanks. Yes, it is one of the best by Devika. I do admit it is no coincidence that reviews of Aandavan Kattalai and Neela Vaanam came one after another. They belong to my favourite set of movies. Another thing is our friend Sivan wanted that each and every film of NT to be discussed here and friend tacinema wanted the lesser known jems to be highlighted. So putting both views together, this is being done. Again if you check the films during that period (ie) from 1962 to 1972 or so, you would find lot of interesting films and with NT at his best in appearence, they are worth watching many times.
Regards
மாலை சூடிய மணநாள் - சிவாஜி
ரசிகர்கள் வாழ்வில் திருநாள் - தினம்
வாழ்விலும் துயிலிலும் வாழ்த்தி
எம்மை நடத்திடுவீர் வழி காட்டி!
ராகவேந்திரன்
Murali,
As usual, wonderful writings on Neela Vaanam.
There is an interesting article about MGR & his movie rickshawkkaran on this blog: http://tamilmagan.blogspot.com/2009/04/30.html
Scroll down to the para-heading எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?
NT veterans: Anyone aware of this?
How unlucky our NT was!!
tac,
Thanks. I knew you are trying but try to be more frequent in this thread. I remember you had mentioned about NeelaVanam some time back. Ofcourse being a NT- Devika combo, it is bound to be our favourite.
Regarding the link and the news in it, I very much doubt about the veracity of the same. Because it starts with an assumption that selection commity had decided to award someone from TN. How can that be decided? What happens if no Tamil film had come for contest? Actualy what transpired in the award process was something that was influenced by "then political powers" and as you know, post mortem of the same would only leave a sour taste.
மே ஒன்று. இன்று நம் நடிகர் திலகத்தின் மண நாள். கமலா அம்மையாரை கரம் பிடித்த நாள். அன்னை இல்லம் விழாக் கோலம் கொள்ளும் நாள். இப்போது விண்ணிலிருந்து அவர்கள் "பிள்ளைகளை" வாழ்த்தும் நாள்.
Regards
:) thakavalukku nanri Murali.. nam vaazthukkalaiyum inaithuk kolvoom.Quote:
Originally Posted by Murali Srinivas
I have to say .. u r doing a gr8 job.. i was reading a lot of your posts when i find time.. so informative and amazing.. hats off.. the argument u have put to set the records straight to prove the BO power of Sivaji is excellent.. keep up the good work.. one thing is for sure.. thr wud be a lot of people like me ( who read, but dont reply :( )
நடிகர்திலகத்துக்கும் எம் ஜி ஆருக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா கமிட்டி உறுப்பினராக இருந்திருப்பார்கள்?
I can't believe this
Thank You so much Hamid for your Kind Words. I am aware that there are so many silent readers [which includes hub members as well as guests] of this thread but a small post like yours lifts the spirits and makes us give out more. Thanks again.
Regards
நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் நடிகர் திலகத்தை வைத்து மிக அதிகமான படங்களை (17) தயாரித்தவரும் நடிகர் திலகத்தின் சாமான்ய ரசிகனின் மனதை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்தவரும் நடிகர் திலகத்தோடு பல படங்களில் இணைந்து பணி புரிந்தவருமான பாலாஜி அவர்கள் காலமானார் என்ற வருத்தத்துக்குரிய செய்தி அனைத்து சிவாஜி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வருத்தத்தில் பங்கு கொள்ளும் நாம் அவரை இழந்து வாடும் அவரது மகன் சுரேஷ் மகள்கள் சுஜாதா, சுசித்ரா மற்றும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
K Balaji was one producer in Sivaji camp who stood firm till his last in the side of NT. NT would bear any body's exit but K. Balajee, such was their relationship. His company Sujatha Cine Arts/ Suresh Arts produced following films with Nadigar Thilagam:
1. Thangai
2. Thirudan
3. Enthambi
4. Engirundo Vandhal
5. Raja
6. Needhi
7. En Magan
8. Unakkaaga Naan
9. Deepam
10. Thyaagam
11. Nalladoru Kudumbam
12. Theerppu
13. Needhipadhi
14. Bandham
15. Marumagal
16. Viduthalai
17. Kudumbam Oru Kovil
Sivaji Fans would remember K Balajee not only as a producer but as a co=artiste. His roles with NT in Bale Pandiya, Padithal Mattum Podhuma (who can forget Pon Ondru Kanden), Thyaagam, are some to cherish memories.
The only film he acted with MGR was En Kadamai
May his Soul Rest in Peace.
Raghavendran.
heart felt condolences. Particularly, this is a big loss to NT fans. Balaji was the one who successfully projected NT in action oriented roles. You had a terrific run with NT - thank you very much Balaji sir for such a great service! NT fans will always owe a big Salute.
Long live Raja-Radha names. May your soul rest in peace.
Murali sir, just now finished reading your write-up on Neelavanam. Excellent. As I've said, I'm yet to watch the film and will do so very soon.
Nadigar Thilagam does it again. நடிகர் திலகத்தின் மீண்டுமொரு வெள்ளிவிழா சாதனை. This time in Forum Hub.
As everybody is well aware, the thread of our hub is NT thread. Now it has been proved that it is the most popular thread. Running in Part 5, the Part 4 of NT thread completed 100 pages on November 17th of 2008 and was locked. At that point, the number of hits it had was around 1,31,000. Today May 10th of 2009 is the 175th day (starting from Nov 17th) and it has crossed 2,00,00 hits. On an average, it had taken around 375 hits per day and that too for a locked thread. As for as I could see no other thread (except say CC and PP) had so many visitors. Additional information is Part 3 has taken around 2,34,000 hits.
On this happy occasion (when the hub membership is about to touch 1,00,000) I would like to place my Heartiest Thanks to all hubbers, moderators and guests who have made this possible.
Come let us talk more about the one and only Nadigar Thilagam.
Regards
.... ok I will :lol2:Quote:
Originally Posted by Murali Srinivas
Congratulations Murali :clap:
You have taken statistics to a new high! :bow:
ellaa pugazhum maanadigar thilagaththukkE!
Murali,
எப்படி தலைவா இப்படி? statistics finger tips வைத்துளீர்கள். தொடரட்டும் தங்களின் NT நற்பணி.
Have you seen the movie Arunodhayam? May be that was a weird question to you because you must have seen it. How is this movie? This is supposed to be one of never-discussed NT movies.
We must dig out all not-so popular but quality NT movies.
Murali sar, may I say that you owe yourself a big chunk of credit for the success of this thread. If not for you, I'd not be here. Of course, if not for NT, you'd not be here.
I echo NOV by saying, Ellam Pughazhum Nadigar Thilagathirkee.
முரளி சார்,
அன்றும் இன்றும் என்றும் சாதனைத்திலகம் நம்மவர்தான் என்பதை ஆதாரத்தோடும் புள்ளி விவரங்களோடும் நிரூபித்து வந்துள்ளீர்கள்.உங்களைப்போன்ற ஒரு நடிகர்திலகத்தின் ரசிகர் மற்ற நடிகர்களின் 1 லட்சம் ரசிகர்களுக்கு சமம் என்பதை நினைத்து மிகவும் பெறுமைப்படுகிறோம்.
நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களாகிய நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்
:exactly:Quote:
Originally Posted by groucho070
Murali Sir :clap:
yes, yes, yes. same pheeling :-)Quote:
Originally Posted by joe