Ragavendra,
Big Thanks for the Murphy Kid......... romba piidkum.. indha kid ai.....................................
Printable View
Ragavendra,
Big Thanks for the Murphy Kid......... romba piidkum.. indha kid ai.....................................
paatai elalm gavanikalai.. inime dhan paatai gavaikanam.............
அன்பு தமிழ்த்திரையிசைப்பிரியர் அவர்களே,
பரோபகாரம் பாடலுக்கு என் உளமார்ந்த நன்றி. அப்பாடல் என்னிடமும் உள்ளது என்றாலும் இணையத்தில் பார்க்கும் போது தனி அலாதி.
அனாதை ஆனந்தன் 1970ம் ஆண்டு - இசை கே.வி.மகாதேவன். குரல் டி.எம்.எஸ். பி.சுசீலா - பாடல் - கண்ணாடி முன்னாடி
இணைப்பு -
http://www.jointscene.com/php/play.p...gid_list=18160
அல்லது
http://music.cooltoad.com/music/song...0c2bc20bfe8007
அதன் ஹிந்தி வடிவம்
கேரவன் 1971ம் ஆண்டு - இசை ஆர்.டி.பர்மன்
http://www.youtube.com/watch?v=OBXdo34MY90&feature=fvsr
அன்புடன்
Hi,
One more rail song....."varushathai paaru arubathi aaru, uruvathai paaru irubathi aaru", PS and chorus from "Kumari Penn" Jayalalitha and friends making fun of Ravichandran with his "kudumi" in a rail compartment.
Anbudan
Ramaswamy
Hi,
If you can stretch it a bit, that is if a rail engine or compartment is seen in the background, then we can add "Amaidiyana Nadiyinile Oodum" from "Aandavan Kattalai" as the prelude of this song coincides with the old steam engine dragging the rest of the train in the background. Which river is it, by the way, and which bridge? Kaveri?
Anbudan
Ramaswamy
அன்புள்ள நண்பர்கள்
தமிழ்த் திரை இசைப் பிரியர் ( TFM LOVER என்ற பெயருக்கு நல்ல தமிழாக்கம் தான் , அன்பு ராகவேந்திரா சார் ! )
ராமசாமி அய்யா,
உங்கள் இருவருக்கும் எனது மாலை வணக்கம் .
கை ராசி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த நான் ரசித்த ஒரு பாடல்
சுசீலா அம்மையார் பாடிய
'' அன்புள்ள அத்தான் வணக்கம் ''
என்ற பாடல் தான் !
http://www.youtube.com/watch?v=TIVPKqfqDXo
ஏனெனில் இந்தப் பாடலில் கவிஞனின் தமிழ்ப் புலமை அப்படியே நம்மை சங்க காலத்துக்குக் கொண்டு சென்று விடும் .
இந்தப் பாடலில் ஒரு வரி இருக்கிறது .
'' மாலைப் பொழுது வந்து படை போலக் கொல்லும் ''
ஒரு திருக்குறள் பாடல் !
'' காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய் ''
காதல் உணர்வு என்ற மலர் காலையில் மொட்டாக இருந்து, பகல் முழுவதும் பெரிய மலராக மாறி, மாலைப் பொழுதில் மலர்ந்து விடும் என்கிறார் திருவள்ளுவர் !
காதல் கொண்ட இருவரைக் கேட்டுப் பாருங்கள் .
மாலைப் பொழுதில் தான் காதல் உணர்வு பொங்கி வரும் என்பார்கள் !
இந்தப் பாடல் முழுவதும் எல்லா வரிகளையும் ரசிக்கலாம் .
நீங்களும் ரசியுங்களேன் !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Prof Sir,
Thanks for the song - Anbulla athan vanakam............ ipodhu dhan parikiren indha paatai........................
Nanbargale,
"Anadai Anandan" "Chanda Aur Bijli" yin marupadippu endru enakku theriyadhu. Enendral naan irandu padangalayum paarthathu illai!
To get back to the topic, KVM RDB idam irundhu inspire aanara alladu vice versa endru endru theriyavillai. Andha "kannadi" paadalai ketta pin ezhunda thought.
"Caravan" oru varusham piragu vandadu endru ezhudi irukkureergal. Aanal antha kaala kattangalil paadalin olippathivu padam varum munne vandu vidumallava? Appadi KVM "Caravan" pada paadalai kettu vittu tune pottirukkalame. Antha paadal KVM stylil ennavo illai endru thondrugiradhu. KVM 1970s Tamil films il irundu pin vangi kondu Telegu films il adiga gavanam koduthar enbathu oru fact.
RDByum pira paadalgalidam irundu inspire aagi irukkirar enbadhu thinnam. "Zindagai Hai Khel" endru "Seeta Aur Geeta" vil vanda paadalin arambam "Andu Oomai pennallo" endru PS_ALR duovin "Paarthal Pasi Theerum" paadalai ninaivu paduthum. Also he has been inspired from ABBA albums too.
"Caravan" il more famous paattu Helen cage il irundu kondu aaduvadaga amaindha paadal. Again Asha Bhosle paadi iruppar. Very famous song. "Piya Too Ab To Aaja" endra paattu. RDBin katthal pinnaniyil olikkum. Ithu "Apna Desh" (Nam Naadu) padathin paadalin (Duniya Mein Logon Ko) munnodi.
Anbudan
Ramaswamy
Anbulla TFM Lover avargale,
Eppadi neengal indha jaala vithai kaattugireergal video clipsil endru theriyavillai. "Porter Kandan" endra padathin credits side by side koduthu irukkireergal (converted vertical credits into horizontal ones). Wonderful. Enakku paarthu rasikka mattum thaan theriyum. Ungalai pol jaala vithai seyaa theriyadhu! Congrats.
Also, "Porter Kandan" VRin mudal sila padangalil ondru endru ninaikkiren. Neither TMS nor PS pinnani paadi irukkirargal endru ninaikkiren. In fact, matra MDs intha legendary duovirku chance kodutha piragu thaan VR ivargalai duet paada seithu irukkirargal. "Pathini Deivam" VRin batonil TMS=PSin mudal padama serndhisayaga olippadarku?
Anbudan
Ramaswamy
Hi TFM Lover,
My query was, which was the maiden duet sung by TMS and PS under VR baton? Was it in Pathini Deivam or earlier?
Also a bit of digression. This topic was started only late last year but has already filled up a whopping 51 pages of views, contributions - both audio and video - etc, making it among the most happening topic at least in the MoY section. My congrats to all the contributors who have kept this topic red hot and not allowed it to sag.
Anbudan
Ramaswamy
அன்புள்ள தமிழ்த் திரை இசைப் பிரியர் ( TFM LOVER ) அவர்களுக்கு
எனது காலை வணக்கம்
S.C.கிருஷ்ணனின் குரல் வளம் மிகவும் சிறப்புடையது தான் ! அதில் சந்தேகமே இல்லை ! அவரை நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டும் பின்னணி பாட வைத்து தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்கள் அவரது திறமையை நன்றாகப் பயன் படுத்தாமல் விட்டு விட்டார்களோ என்ற ஆதங்கம் எனக்கு உண்டு !
அவர் பாடிய போர்ட்டர் கந்தன் பாடலை நான் பல முறை கேட்டிருக்கிறேன் .
இன்று தான் பார்த்தேன்.
நன்றாக இருந்தது .
உங்களுக்கு எனது நன்றிகள் !
அப்புறம் ஒரு விஷயம் !
T.M.சௌந்தரராஜனும், P.சுசீலாவும் சேர்ந்து பாடிய முதல் பாடல் செல்லப் பிள்ளை படத்தில் உள்ள
'' கோவில் காளை நீ பாப்பா ''
என்று எழுதியிருந்தீர்கள் .
நான் அறிந்த வரை அவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய முதல் தமிழ் பாட்டு
பெண்ணின் பெருமை
படத்தில் இடம் பெற்ற
'' அழுவதா இல்லை சிரிப்பதா ''
என்ற பாடல் என நினைக்கிறேன் .
http://www.youtube.com/watch?v=_JbAAtuLGJE
கொஞ்சம் தெளிவு பண்ணுங்கள் .
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Nanbargale,
Porter Kandan padathin still credits TFM Lover avargal koduthirukkirar. Athil vasanam endra subjectil "Sandilyan" endru irukkiradhu. "Yavana Rani", "Kadal Pura", "Jala Deepam" pondra historical fiction ezhudiya "Sandilyan" endru assume seigiren. Correct thane?
Male playback singers endru gavaneethargalanal "Ghantasala" irukkirar, SC Krishnan, Tiruchi Loganathan iruvarum irukkirargal. No AM Raja or TMS or PBS or Seergazhiyar or even CSJ - VR piragu niraya use panniya paadagargal.
VR duo's early gyration towards Ghantasala perhaps was understandable because of his path-breaking singing in 'Devdas" which VR had to complete after the untimely demise of their mentor CRS. Ghantasala miga nalla paadagar thaan, aanaal avarudaya Thamizh ucharippu thaanga mudiyadadu!
Anbudan
Ramaswamy
அருமையான அதிகம் யாருக்கும் தெரியாத பாடல் புரொபசர்
ஆஹா ! நன்றி
பெண்ணின் பெருமை 1956 இல் பெப்ரவரியில் வெளிவந்தது
செல்லப்பிள்ளை 1955 இல் ஜூன் மாதம் 24 th திரையிடப்பட்டது
Regards
Hello nga ks sir............what a beautifulllllllll song anbula athaan vanakam.....lyrics are superbbb.....want to keep on watching for the music /lyrics & picturization....thank u nga for sharing....sure is a keeper.
tfm nga.....enjoyed the ads as well as the enna ithu.....kvm :-) tms & ps..... you & prof sir...seem to hold the akshayapaathiram for musical treasures:clap::clap: thank u
suvai welcome :)
Regards
anbu tfml ,
pEraasiriyarin sontha Oor SEKKAARAKKUDI. Karaikkudi enbathu vEru oru Oorin peyar.
Ippozhuthellaam yaarum arunagiri soapnut powder use paNNuvathillai;Meera sikakkAi shampoo vandhu vittathE!
endrum anbudan,
siva.G
நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில், டி.எம்.சௌந்தரராஜன், சுசீலா குரலில், கவியரசர் கண்ணதாசன் வரிகள் -
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது
கண்ணொன்று வந்தது
காண் என்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
பாட்டொன்று வந்தது
பருவத்தைக் கேட்டது
காட்டுக்குள் நான் போனேன்
கனியங்கே நின்றது
கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது
(வண்டு)
யாரென்று கண்டது
யார் சொல்லி வந்தது
நீர் கொண்ட மேகம் போல
நெஞ்சத்தில் நின்றது
நெஞ்சத்தில் நின்றது
கொஞ்சத்தில் மாறுமோ
வஞ்சிக்கு வாழ்வெல்லாம்
தஞ்சம் உன் பாதமே
(வண்டு)
பார்த்து மகிழ
http://www.youtube.com/watch?v=HJ0eaEaWfdw
அன்புடன்
Wow
oru vaaram oorukku poi varadhukulle ithanai vishayam nadandhu pocha ?
Hi TFML..
sabash maple padathil MGR train-il bombay pogumbodhu oru paattu varum.
appuram vaazhvu en pakkam padthil "thirupathi malai" enRu oru rail song.
mm... "naanum kooda rajathane nattu makkalile" appadinnu nagesh paadum song.. smile..
appuram edho oru song... marandhe pochu... chennai to thanjavur stations peyar ellaam varum
kutti pasanga paadura maadhiri..
arunagiri vilas seeyakkai power ad paarthahdum
1431 payoriya palpodi, gopal palpodi appuram kurangu mark karuppu nira palpodi ad ellaam ninaivukku varudhu..
Ushaji... murphy pappavoda sharmila tagore irukkum padam pakkureengala ?
http://www.cuttingthechai.com/2010/0...rphy-radio-ad/
murphy pappa namma friendthan... :kikiki: :glux:
உங்கள் மனைவியும்
மிகுந்த சுவையுள்ள
தித்திப்புக்களை தயாரிகின்றாளா ?
http://i871.photobucket.com/albums/a...ml/Thushar.jpg
uyirullavarai thushar !
Regards
அன்புள்ள தமிழ்த் திரை இசைப் பிரியர் ( TFM LOVER ) அவர்களுக்கு
இந்தப் பேராசிரியரின் மாலை வணக்கங்கள் .
இந்த வலைத் தளத்தின் நண்பர்களுக்கெல்லாம் என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன் .
நான் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி என்ற கிராமம் . நான் வளர்ந்தது , படித்தது எல்லாம் தூத்துக்குடி நகரத்தில் தான் !
தூத்துக்குடி நகரத்தில் உள்ள காமராஜ் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியராக ( PHYSICS PROFESSOR ) முப்பத்து மூன்று ஆண்டுகள் , பணி புரிந்து விட்டு , ஓய்வு பெற்று, தூத்துக்குடி நகரத்திலேயே வசித்து வருகிறேன் .
என்னை எல்லோரும் SSK ( SEKKARAKUDI SUBBIAH PILLAI KANDASAMY ) என்று தான் அழைப்பார்கள் .
நான் ஒரு இன்னொரு தமிழ்த் திரை இசைப் பைத்தியம் !
தமிழ்த் திரைப் படங்களைப் பார்ப்பதும் , அதுவும் பழைய படங்களைப் பார்ப்பதும் அவைகளில் உள்ள பாடல்களை சேகரிப்பதும் தான் எனது பொழுது போக்கு !
உங்களைப் போன்றோர் வழங்கும் பழைய தமிழ்த் திரைப் படப் பாடல்களின் ஒளிப் பதிவுகளைப் பெற்றுக் கொள்ளவே இந்த வலைத் தளத்துக்கு வந்திருக்கிறேன்.
இங்கே நான் என்னிடம் உள்ளதை வழங்கிக் கொண்டும், உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டும் ஆனந்தமாக எனது ஓய்வுக் காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறேன் .
எங்கள் தூத்துக்குடி ஒரு பெரிய மாநகரம். தமிழ் நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தப் படியாக ஒரு பெரிய துறைமுக நகரம். பல தொழிற்சாலைகள் பல இங்கு இருக்கின்றன . .
இங்கு கிறித்தவர்களும் பலர் இருக்கின்றனர் .
என்னிடம் கல்வி பயின்ற ஒரு கிறித்தவ மாணவன் எனக்கு அனுப்பிய
எங்கள் ஊர் பனிமய மாதா கோயிலின் தங்கத் தேரோட்டம் ஒளிப் பதிவினை
http://www.youtube.com/watch?v=jcNKiAshdxw
ஒரு மாறுதலுக்காக ( திரைப் படப் பாடல்களை மட்டும் தானே நாம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் )
உங்களுக்கு இன்று சமர்ப்பிக்கிறேன் .
உங்களில் பலர் தங்கள் முகத்தினை மறைத்துக் கொண்டு இங்கு
'' மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன ? ''
என்று எனக்குக் கேட்கத் தோன்றுகிறது !
நான் கேட்பது தவறு என்றால் என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள் !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
vathiyarayya....
innaikuthan vandhu serndhen !
professor sir,
periya kovil therottam superb.
enakkum muyal theevukku poi neechal kathukka try senjadhu.. port-ukku pogum rail thandavalathil odiyadhu, coronation theatre-la murukku vaangi saapitu konde padam parthadhu, jambu mess-la vatha kuzhambu saptadhu, dhanalakshmi bakery macroons... hayyo hayyoo... marupadi rusiyai kilappi vittuteenga !!
Hi all,
"Manapandal" padappadalgalin video thara mudiyuma, esp. "unakku mattum unakku mattum" (P Suseela) and 'Paarthu paarthu nindradile paarvai izhanden" endra arumayana PBS-PS duet (VRin melodious musickirku oru siranda sandru indha paadal esp. the beginning humming).
Anbudan
Ramaswamy
wow !
inru malar solvadhum
vaazhai maram solvadhum
endhan manam solvadhum
(ramaswamyji solvadhum)
orey peryarallavo ?
adhudhan Manapandhal :P
(பேராசிரியர் கந்தசாமி, ராமசாமி, தமிழ்த் திரை இசைப் பிரியர், மது என அனைவரின் உள்ளங்களும்)
ஒரே ராகம்,
ஒரே தாளம்,
ஒரே (bha)பாவம்
பாடுதம்மா...
அன்புடன்
1960களின் கடைசியில் திரை இசைத் திலகம் அவர்கள் தெலுங்குத் திரை யுலகில் அதிகம் படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அவ்வப்போது தமிழ்த் திரைப்டங்களிலும் தன் கோலோச்சிக் கொண்டிருந்தார். என்றாலும் இந்தக் கால கட்ட்த்தில் அவர் இசையமைத்த படங்களில் தெலுங்கின் பாதிப்பு இருக்கத் தான் செய்தது. அப்படிப் பட்ட ஒரு நேரத்தில் வந்த படம் தான் துணைவன். இப் படம் அவருக்கு ஒரு சவாலாக அமைந்து மிகவும் அருமையான தமிழிசை தந்தார். இப்படத்தில் அனைத்துப் பாடல்களுமே மிகப் பிரபலமாயின. ஆனால் அதற்குப் பின் அதிகம் ஒலிபரப்பப் படாத சில பாடல்களில் ஒன்று இப்போது நாம் காணும் இப்பாடல். டி.எம்.சௌந்தரராஜன், சுசீலா இணையில் மிகவும் இனிமையான பாடல். நான் யார் என்பதை நீ சொல்ல, நீ யார் என்பதை நான் சொல்ல, என்று பல்லவியிலேயே கவிஞர் தாம்பத்யத்தின் பெருமையையும் புரிதலின் அருமையையும் எடுத்துரைத்த பாடல். ஏவி.எம். ராஜன், சொகார் ஜானகி இணையில் இப்பாடலைப் பார்ப்போம்.
http://www.youtube.com/watch?v=QVUlvWpbnN0&feature=relmfu
அன்புடன்
அன்புள்ள மது ( மது தானே, மாது இல்லையே ! , இந்த ஆங்கிலம் நம்மை ரொம்பக் குழப்புகிறது ! ) அவர்களுக்கு
எனது மாலை வணக்கங்கள் !
நீங்கள் வசிப்பது நமது பெங்களூருவாகத் தான் இருக்க வேண்டும் என்று நான் அனுமானிக்கிறேன்.
அதனால் தான் பெங்களூருவை எங்களூரு என்று சொந்தம் கொண்டாடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆமாம், கணியன் பூங்குன்றன் சொன்னது போல
நமக்கு
'' யாதும் ஊரே யாவரும் கேளிர் ''
தானே !
ஜாக்கிரதை, கன்னடத்துக்காரர்கள் அப்படி சொந்தம் கொண்டாட உங்களை அனுமதிக்க மாட்டார்கள் !
ஆனால் இந்தியாவில் உள்ள எந்த ஊரும் நம்ம ஊரு தான் !
அப்படித் தானே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லுகிறது !
ஆமாம், எங்களூரில் நீங்கள் இருந்தீர்களா, என்ன ?
அல்லது எங்களூரு தான் உங்களூருமா ?
முயல் தீவு கடலில் குளித்ததும் , ஓடும் ஊதும் ரயிலைப் பார்த்ததும் , காரனேசன் தியேட்டரில் முறுக்கு வங்கித் தின்று கொண்டே படம் பார்த்ததும்
( நானும் முறுக்கு தின்று கொண்டே வஞ்சிக் கோட்டை வாலிபனைப் பார்த்து ரசித்திருக்கிறேன் ) !
என்ன ஒரு மலரும் நினைவுகள் !
உங்கள் மலரும் நினைவுகளை நானும் ரசித்தேன்.
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
professor ayya
நான் எங்களூரு என்பது நம் சிங்கார சென்னையைத்தான் :P
ஆனாலும் நான் பெங்களூரு, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், மும்பை இன்னும் பல சிறிய பெரிய நகரங்கள், கிராமங்கள் எல்லாவற்றிலும் குப்பை கொட்டி இருக்கிறேன். ஹி ஹி.. அதாங்க வேலை பார்த்திருக்கிறேன்.
முத்து நகரத்தில் இரண்டு வருடங்கள் இருந்தேன். அவ்வளவுதான். ஆனாலும் எங்கே இருந்தாலும் அந்த ஊரை நான் மறப்பதே இல்லை.
அன்புடன்.
மது
அன்புள்ள ராமசாமி அய்யா அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
மணப் பந்தல் படத்தில்
'' உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே ''
http://www.youtube.com/watch?v=amzet82AHqY
என்று E.V.சரோஜா இன்பமாக ரகசியம் சொன்னதைப் பார்த்து ரசியுங்கள் .
அடுத்து
இதே E.V.சரோஜா
'' உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் , அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே ''
http://www.youtube.com/watch?v=0807VMOzsCA
என்று சோகமாகப் பாடுவதையும் பார்த்து ரசியுங்கள் .
அந்த ரகசியம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை !
உங்களுக்காகவது தெரிந்ததா ?
மெல்லிசை மன்னர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலத்தில் வந்த பாடல் இது !
நல்ல இனிமையான இசையமைப்பு !
உங்களிடம் ஒரு கேள்வி !
மாலையிட்ட மங்கை படப் பாடல்களைப் பார்த்து விட்டீர்களா ?
படம் பார்த்த திருப்தி வந்து விட்டதா ?
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
யாதும் ஊரே, யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம், நண்பர் உண்டு, பகைவர் இல்லை, நன்மை உண்டு தீமை இல்லை -
இது வெறும் பாடல் வரிகள் அல்ல ... நம் பேராசிரியர் நடைமுறையில் கடைப்பிடித்து வரும் கொள்கை...அதே போன்று மது அவர்களும் ...அனைவரும்.
மணப்பந்தல் பாடலை அளித்து மனப்பந்தலில் அமர்ந்து கொண்ட பேராசிரியர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
அனைத்து நண்பர்களுக்கும் ஓர் இனிய செய்தி. VINTAGE HERITAGE என்ற அமைப்பு சென்னை மாநகரில் பல ஆண்டுகளாக மாதந்தோறும் 50களின் படங்கள், பாடல்களைப் பற்றிய ஆய்வுடன் கூடிய நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார்கள். அந்த அமைப்பின் 19வது ஆண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 19.06.2011 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் என்கின்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு மட்டும் என்றாலும் கூட பொது மக்களும் நுழைவிற்கான அனுமதியைப் பெற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் 91 44 24728396. திரு சர்வேஸ்வரன், செயலாளர், அல்லது திரு ராகப்பிரவாகம் சுந்தர் அவ்ரகளை இந்த எண்ணில் அணுகலாம்.
http://www.thehindu.com/multimedia/d..._j_111909f.jpg
அன்புடன்
அந்த ரகசியம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை !
உங்களுக்காகவது தெரிந்ததா ?
யார் கண்டது புரொபஸர் ஐயா
தங்கமலை ரகசியமாக இருக்கலாம்
இல்லையேல் சிதம்பர ரகசியமாகவேனும் அமையலாம்
அது அவளுக்குள் ஓர் ரகசியம் அல்லவா
அதனால் அற்புதத் தீவு ரகசியத்தையும் மிஞ்சலாம்
ஏன் என்றால் அதைவிட ரகசியம் ஏதுமில்லை
அப்புறம் நான் சொல்லும் ரகசியம் என்று ரகசியமாய்
ஆகிவிடக் கூடாது இல்லையா
அதனால்
எங்கள் ரகசிய பொலிஸ் 115 வந்து கண்டு பிடித்து சொல்லட்டும் !
Thanks
Regards
ஆண் போலீஸ் கண்டு பிடிக்காவிட்டால் என்ன, ரகசியப் பெண் 117 சொல்வாளே சி.என்.பாண்டுரங்கன் துணையோடு...
நன்றி திரு ராகவேந்தர்ஜி. ( அருமையான வாய்ப்பு.. எனக்குதான் கிட்டாமல் போகுது :( )
பேராசிரியர் ஐயா.. ரகசியத்தை இப்படி வெளிப்படுத்தி விட்டீர்களே ? நன்றி !!
hi TFML..
அந்த ரகசியம் என்னன்னு கேட்டீங்கன்னா.,. எங்க குட்டி பாப்பா சங்கத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அதாவது எதை வேணுமானாலும் நம்ம பொம்மைஸ்.. கிட்டே சொல்லலாம். யாருக்கும் சொல்லாது.. ம்ம்.. தத்தி தத்தி நடந்து வரும் தங்க பாப்பா நீ இத்தனை நாள் எங்க்கிருந்தாய் சொல்லு பாப்பாவிலிருந்து... கண்ணன் என்ன சொன்னான் சிறு பிள்ளையே என்கிற கேள்வி வரை எதுக்காவது பதில் சொல்லி இருக்காங்களா ?
ம்ம்ம்.. என் கிட்டேயும் ஒரு கரடி குட்டி இருக்கு !
இது என் கடமை மது,
உங்கள் சங்க உறுப்பினர் என்ன செய்கிறார் என்று நீங்கள் அறிய வேண்டாமா... இதோ பாருங்கள்
http://www.youtube.com/watch?v=ay2NUCfJ538
professor அவர்களே,
மிக்க நன்றி இத்தனை வீடியோ பாடல்களை சிரமம் பாராமல் தந்ததற்கு.
அருமையான பாடல்கள் அனைத்துமே. விசு ராமு அட் தெயர் பெஸ்ட் என்று சொல்லலாம். பார்த்து ரசித்தேன் ரசித்து கொண்டு இருக்கிறேன், அதனால் தான் தாமதம் ரியாக்ட் செய்வதற்கு. மன்னிக்கவும்!
"மணபந்தல்" பாடலின் ரகசியம் எனக்கும் புரியவில்லை! அருமையான மெலடி. "ஒரே ராகம்" அண்ட் "பார்த்து பார்த்து" தர இயலுமா?
அன்புடன்
ராமஸ்வாமி
19.06.2011 அன்றைய நிகழ்ச்சியின் கவரேஜ்Quote:
( அருமையான வாய்ப்பு.. எனக்குதான் கிட்டாமல் போகுது )
அன்புடன்
நன்றி ராகவேந்திராஜி.
அருமையான பாடல்கள் தொகுக்கப் பட்டு இருக்கின்றன.
ஆனால் நாட்டியப் பேரொளியின் பாரம்பரிய நடனம் உள்ள
காத்திருப்பான் கமல கண்ணன் அல்லது பரத நாட்டிய
அசைவுகள் உள்ள கலையே என் வாழ்க்கையின் போல இந்தப் பாடல்கள்
எதிலும் இல்லை என்று நினைக்கிறேன்.
அவற்றையும் சேர்த்திருக்கலாமே ! ஆனாலும் நேரப் பற்றாகுறை
இருந்திருக்கும். மேலும் வேறு காரணங்களும் இருந்திருக்கலாம்.
அடுத்த முறையாவது நேரில் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்தால்
நன்றாக இருக்கும்
மீண்டும் நன்றி.
hi tfml
என்ன கொடுமை பாத்தீங்களா ? குப்பை தொட்டி, நாய் குட்டி, தாடி பூச்சாண்டி... ஊஊஊஊ...
வீ வாண்ட் மில்க் அண்ட் சாக்லேட்ஸ் :yes: