-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 4
ஆதலால் நானிங்கே ஆர்வமாய்க் கேட்டிடுவேன்
காதலன் நெஞ்சுவக்கும் கண்
*
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்கவே வரவேண்டும்
http://www.youtube.com/watch?feature...&v=nAraoNbwb9g
-
தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் வெளி வந்த மேக சந்தேசம் சுசீலா அம்மாவின் திறமைக்கு ஒரு மணி மகுடம் போல் அமைந்தது என்றால் அது மிகை ஆகாது. 6 அல்லது 7 பாடல்கள் என்று நினைக்கிறன் .பெண் குரல் சுசீலா அம்மா மட்டுமே . ரமேஷ் நாய்டு இசை .அம்மாவுக்கு தேசிய விருது பெற்று தந்த பாடல் 'பிரிய சருஷீலெ'
http://upload.wikimedia.org/wikipedi..._Sandesham.jpg
http://www.youtube.com/watch?v=4NWs_rKxL6g
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 5
கண்ணுக்குள் வந்தே கலகத்தைச் செய்தவனை
திண்ணமாய்க் கேட்கின்ற தோழியே – அன்னமே
நன்றாகச் சொல்லிடுவேன் நாவலர் தாமென்றே
எண்ணி மகிழும் இதழ்.!
*
சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ
இந்தக் கட்டிக் கரும்பினைத் தொட்டுக்குழைத்திடத் தான் வந்தவரோ
http://www.youtube.com/watch?v=2Qh8b...yer_detailpage
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்.. 6
*
கார்காலக் கூந்தல் களிப்புடன் தானலைய
வேர்வையின் முத்தும் விகசிக்க – பார்த்திடுவாய்
கண்கள் கவிசொல்லும் காரிகையின் பேரழகை
எண்ணியே ஏங்குவாய் நீ..
*
நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று கேட்கவில்லை எந்தப் பாட்டிலும் இல்லை
என்னாட்டிலும் இல்லை பார் பார்கண்களில்லையோ ஓ ஓ.
.
http://www.youtube.com/watch?feature...&v=x5RWZj01Ia8
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள்..7
சுசீலாம்மாவின் பாடல்கள் என லிஸ்ட் எங்கும் பார்க்காமல் டபக்கென மனதிலுதித்து லிஸ்ட் போட்டேன் பின் வீடியோ தேடல்..அண்ட் இப்போ போஸ்ட் பண்ணப் போகையில் தான் வெண்பா சுடச்சுட எழுதி இடுகிறேன்.. ஹோப் இட் வோண்ட் பி போரிங்க்!
*
கள்ளம் பலகொண்டார் காரிகையைத் தானடிக்கும்
பள்ளமென உள்ளத்தைப் பாங்காகக் கொண்டவரும்
எள்ளியே நாயகி இழுத்துதான் ஆடசொல
துள்ளியே பாடல் வரும்
*
ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
http://www.youtube.com/watch?v=cuoz-...yer_detailpage
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள். 8
உன்னுள்ளம் என்னுள்ளம் ஒன்றாகி விட்டதென
பெண்ணுள்ளம் எண்ணியே பேருவகை கொண்டதனால்
வண்ணமயில் வானில் வயணமழை ஆடுதற்போல்
திண்ணமாய்த் தானுதித்த பாட்டு...
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்.
.
http://www.youtube.com/watch?feature...&v=Rc6TEnbfkbs
-
https://encrypted-tbn0.gstatic.com/i...7pNjp8vQp1X42M
நினைவிற்கு வந்த சுசீலா அம்மாவின் சில தாலாட்டு பாடல்கள்
1989 ஆம் ஆண்டு வெளிவந்த வரம் - தமிழ்நாடு மாநில அரசு விருது பாடல் 'மகனே மகனே கண்ணுறங்கு'
1980 ஆம் ஆண்டு வெளிவந்த தண்ணீர் தண்ணீர் பாடல்
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
அதிலும் இந்த வரி பாடும் போது சுசீலா அம்மா பின்னி இருப்பாங்க கூட சேர்ந்து சரிதாவும் ஜொலிப்பாங்க
வீட்டு விளக்கெரிவதற்கு கண்ணீர்…….
எண்ணை இல்லயடா
எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்காத, உள்ளத்தில் சோக உணர்ச்சியை தூண்டிவிடும் பாடல்
சித்தி - காலம் இது காலம் இது கண் உறங்கு மகளே
காலம் இதை தவற விட்டால் தூக்கம் இல்லை மகளே
பெற்ற மனம் பித்து - 'காலம் நமக்கு தோழன் காற்றும் மழையும் நண்பன் '
துலாபாரம் - 'பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே'
https://encrypted-tbn2.gstatic.com/i...4YC04x-nNWWPGI
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள். 9
ஓவியப் பாவையென ஓராள்தான் இங்கதுவும்
தேவிகை என்றே தெளிவென்பர் – காவியப்
பாடலாய் இப்பாடல் பட்டாக உள்சென்றே
ஆடலைக் கொண்டுவிடும் ஆம்..
கண்களில் எங்கே நிம்மதி ஏது..ம்ம்
http://www.youtube.com/watch?feature...&v=kFeUT5ZJWHA
-
கிருஷ்ணா!
இதோ லட்டு மாதிரி இன்னும் 2 தாலாட்டுப் பாடல்கள்
'மணாளனே மங்கையின் பாக்கியம்' திரைப்படத்தில்
அன்பில் மலர்ந்த நல்ரோஜா
கண் வளராய் என் ராஜா
வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்
http://www.youtube.com/watch?feature...&v=3qC3ytEfBXQ
'பதிபக்தி' படத்தில்
சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவழ வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத் தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ
http://www.youtube.com/watch?v=XZeMXeT9e1w&feature=player_detailpage
-
குட்டியானையின் (சி.க வின்) மனங்கவர்ந்த குயிற்பாடல்கள். 10
அள்ளி இதயம் அழகாகக் கேட்டுவிட்டு
துள்ளியே பாடல் தொடுத்தவர் – தெள்ளிய
நீரோட்டங் கொண்டுள்ளம் நின்றிருக்கும் என்றென்றும்
தேரோட்டம் தோற்றமாய்த் தான்..
இசையரசிக் கெண்பதாம் யார்சொன்னார் இங்கே
இசைவுடன் சொல்லிடுவர் மக்கள் – திசையெங்கும்
கூவும் குயிற்குரலும் கொண்டுவிட்ட மென்னிளமை
மேவியே நிற்குமென் றே..
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா
நீரோட்ட்ம் போலே இங்கு வா வா வா
http://www.youtube.com/watch?v=3jzBY...yer_detailpage
முற்றும்.. (இருந்தாலும் வாசு சார் மாதிரி தமிழ் வரலை எனக்கு விக் விக் விக்!) :)