தமிழ்நாடெங்கும் ஜனவரி 3ஆம் திகதி ரீ றிலீஸ் செய்யப்பட்ட
வசந்த மாளிகை படத்தினது வெற்றிச் செய்திகள் தமிழ் பத்திரிகைகளில்
வெளிவந்த தகவல்கள்.
Attachment 6193 Attachment 6194
Attachment 6195 Attachment 6196
Printable View
தமிழ்நாடெங்கும் ஜனவரி 3ஆம் திகதி ரீ றிலீஸ் செய்யப்பட்ட
வசந்த மாளிகை படத்தினது வெற்றிச் செய்திகள் தமிழ் பத்திரிகைகளில்
வெளிவந்த தகவல்கள்.
Attachment 6193 Attachment 6194
Attachment 6195 Attachment 6196
நெல்லையில் வசந்த மாளிகை.
Attachment 6197 Attachment 6198
Attachment 6199 Attachment 6200
திண்டுக்கல்லில் வசந்த மாளிகை.
Attachment 6201 Attachment 6202
Attachment 6203 Attachment 6204
Attachment 6205
விருதுநகர் அரங்கம் நிறைந்த காட்சிகளோடு அமர்க்களம் வசந்த மாளிகை.
Attachment 6206
https://www.facebook.com/reel/495989...e_unit&__cft__[0]=AZXvFEaSgD28IDeGuEGwxB80r7PP9dgTsRgkg7v7iVWPiwHBq neseavkUurmO_A-Fif6e5mS-Poc9a0wAG4G3m041lJIEtX5o3OY02bxNCh1-GKWo5gk8vjdPG0uDxK-dRENYDJEEUAZEg6FrHW2kUiYPZKUk74OCyGx6lTwglYd5lrdS1 fV3zUQbPiZzmIILoY&__tn__=H-R
நன்றி சந்திரசேகரன் வீராசின்னு முகநூல்
14.01.1965 அன்று வெளியாகி (இன்று) 14.01.2025, 60 ஆண்டுகளை நிறைவு செய்து வைரவிழா காணும் காவியம் பழநி திரைப்படம் பற்றி 5 வருடங்களுக்கு முன் (2020ல்) இந்து தமிழ் திசை நாளிதழில்திரு முரளி சீனிவாசன் அவர்கள் எழுதிய கட்டுரை.
வியர்வையின் வாசனை வீசிய காவியம்.
Attachment 6207Attachment 6207
திருநெல்வேலி அருணா திரையரங்கில்
31/01/2025 வெள்ளி முதல்
நடிகர் திலகம் வெற்றி விஜயம்.
சிவகாமியின் செல்வன்.
Attachment 6210
ஜனவரி 31 முதல்
சென்னை மஹாலட்சுமி சினிமாவில்
வசந்த மாளிகை.
Attachment 6211
சிவாஜியை மிகச்சிறந்த நடிகராக மட்டுமே இன்னமும் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது .
அவர் மிகச்சிறந்த
ஆச்சரியங்களை
புதைத்து வைத்திருக்கிற ஒரு அற்புத மனிதர் .அவருடன் பல வருடங்களாக பழகிக் கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 50 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிவதில்லை.அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இந்த பதிவில் கூறப்போகும் விஷயம்.
சரஸ்வதி சபதம் படத்தில் உச்சகட்ட காட்சி. புலவராக நடித்திருக்கும் சிவாஜியை யானை இடறி கொல்ல வேண்டும் என்று அரச தண்டனை விதிக்கப்படும். இந்த காட்சியில் ஒரு மேடையில் நடிகர் திலகத்தை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பார்கள் .யானை பல அடி தூரம் நடந்து வந்து காலை தூக்கி தலையை நசுக்குவதாக பட காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.இந்த காட்சியை படமாக்கும்போது டம்மியை வைத்து படமாக்கிவிடலாம் என்று இயக்குனர் உள்பட பட யூனிட்டும் சிவாஜியிடம் சொன்னது.ஆனால் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நடிகர் திலகம் அதை மறுத்துவிட்டார்.நானே அதில் நடிக்கிறேன் என்று உறுதி கூறி விட்டார் .பட யூனிட்டை சேர்ந்தவர்கள் அது வேண்டாம் என்று சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது .படமாக்க ரிகர்சல் பார்த்தபோது யானையானது முரண்டு பிடித்து சரியாக ஒத்துழைக்க மறுத்ததுடன் படப்பிடிப்பில் வைத்திருந்த பொருட்களை காலால் மிதித்தும் ததிக்கையால் அடித்து நொறுக்கியும் கலவரம் செய்ததாம்.இதையெல்லாம் பார்த்துத்தான் பட யூனிட் நடிகர்திலகத்தை நடிக்க வைக்க யோசித்தார்களாம்.நடந்து வரும் யானையையும் சிவாஜியையும் காட்டி பக்கம் வந்து நிற்கும் போது டம்மியை வைத்து விடலாம் என்று யோசித்து அதை சிவாஜியிடம் சொன்ன போதுதான் சிவாஜியவர்கள் மறுத்திருத்கிறார்.சிவாஜியவர்கள் இவ்வளவு உறுதியாக இருப்பதை பார்த்து பட யூனிட்டை சேர்ந்தவர்கள் பரபரப்புடன் பீதியுடனும் நின்றிருக்கிறார்கள்.காட்சி படமாக்கம் தொடங்குகிறது.சிவாஜி அவர்கள் மேடைமீது படுத்திருக்க 200 அடிக்கு அப்பால் இருந்து யானை நடந்து வருகிறது ..யானை நடந்து வர வர நடிகர் திலகம் அவர்கள் வசனங்களை பேசுகிறார். சிவாஜியின் அருகில் வந்து நின்ற யானை காலை தூக்கியது. சூட்டிங் ஸ்பாட்டே பெரிய கலக்கத்துடன் பார்த்தது .உணர்ச்சி பொங்க வசனங்களை பேசிக் கொண்டிருந்த சிவாஜி அவர்கள் கடைசி சொல்லாக ' நில்' என்ற வார்த்தையை தன் சிம்மக் குரலில் பெரிதாக கர்ஜித்தார். அந்த நில் என்ற வார்த்தையை அவர் சொல்லும்போது ஒரு பெரிய மந்திரத்தை சொல்வது போல தான் இருக்கும். என்னாகுமோ? ஏதாகுமோ? என்று பரபரப்புடன் யூனிட்டார்கள் சுற்றிலும் பயத்துடன் நின்று
பார்த்துக் கொண்டு இருந்தார்கள் ..அப்போது பெரிய அதிசயம் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். கணேசனாரின் அந்த 'நில்' என்ற வார்த்தையை கேட்டதும் யானையானது காலை தூக்கி அப்படியே நின்றது. இதுதான் பெரிய ஆச்சரியம்!
ஆரம்பத்தில் சொன்ன விஷயத்துக்கும் இப்போது சொல்லப்படுகின்ற இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? சற்று பொறுங்கள்.
சிவாஜி அவர்களும் யானைகளும் சம்மந்தப்பட்ட காட்சிகள் பல படங்களில் வருகின்றன .தங்கமலை ரகசியம் ,காத்தவராயன் வணங்காமுடி ,அந்தமான் காதலி ...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சிவாஜி அவர்கள் வேட்டையாடுவதில் பெரும் வீரர் என்று தெரியும். பெரும்பாலும் எல்லா விலங்குகளையும் வேட்டையாடி இருக்கிறார் சிவாஜி அவர்கள் .யானைக்கு முன் துப்பாக்கி தூக்கியது இல்லை. யானை சவாரி செய்து வேட்டைக்கு சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டின் பிரபலமான கோவில்களுக்கு யானைகளை கொடையாக கொடுத்திருக்கிறார்.
அமெரிக்காவின் மிருகக்காட்சி சாலைக்கு குட்டி யானையை பரிசாக அனுப்பி வைத்தார் .
இன்னும் ஒரு ஆச்சரியமான சம்பவம். கலைஞர் கருணாநிதி அவர்கள் தஞ்சைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அப்போது சூரக்கோட்டையில் சிவாஜி இருப்பதாக கேள்விப்பட்டு அப்படியே நடிகர் திலகத்தை பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு கருணாநிதி தன்னை பார்க்க வருவதாக தகவல் சொல்லபட்டது .என்ன? இப்படி திடீர் என்று சொல்கிறாரே!
முதன் முதலாக வருகிறார்!
என்ன செய்யலாம் என்று யோசித்த சிவாஜி அவருக்கு நன்றாக வரவேற்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் .
விலை உயர்ந்த மாலையை தயார் செய்தார்.திருவானைக்காவல் கோவிலில் இருந்து யானையை வரவழைத்தார் .
சூரக்கோட்டை வீட்டுக்கு வரும் கருணாநிதியை வாசலில் நிற்க வைத்து யானையிடம் மாலையை கொடுத்து கருணாநிதியின் கழுத்தில் போட ஏற்பாடு செய்திருந்தார் சிவாஜி அவர்கள் .
கருணாநிதி வந்ததும் அவர் கழுத்தில் மாலை போட யானை முரண்டு பிடித்தது. தயங்கி தயங்கி நிற்பது போல் அது நின்றது.இதை பார்த்த சிவாஜி அவர்கள் யானையிடம் ஏதோ சொல்ல உடனே யானையானது முரண்டு பிடிக்காமல் அந்த மாலையை கருணாநிதி கழுத்தில் அணிவித்தது.
இதைப் பார்த்து வியந்து போன கருணாநிதி என்ன கணேசு ,நீ சொன்னபடி எல்லாம் யானை கேக்குது இன்று ஆச்சரியமாக கேட்டாராம்.
யானைகளுடன் படு இயல்பாக நடிப்பார் .ஒன்றல்ல, இரண்டல்ல பல யானைகளை கொடையாக கொடுத்துள்ளார். அந்த யானைகளுடன் படு நேசமாக பழகுவார்.
யானைகளுடன் நடிகர் திலகத்தின் பந்தமானது மிகவும் உணர்வுபூர்வமானது.
யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் இருப்பார்கள் .யானைக்கென்று ஒரு பாஷை இருக்கிறது .யானைகள் முரண்டு பிடிக்கும்போது எல்லாம் அந்த பாஷையில் பேசி தான் யானை பாகன்கள் அதை கட்டுப்படுத்துவார்கள். அந்த பாஷையில் ஒரு அன்பு இருக்க வேண்டும். அந்த பாஷைக்கு யானைகள் அடிபணியும்.
யானைகளுக்கும் பாகன்களுக்கும் உண்டான ஒரு சங்கேத பாஷை அது .
பொன்னியின் செல்வன் புதினத்தில் கூட ராஜ ராஜ சோழத் தேவர் அந்த பாஷையை தெரிந்து வைத்திருந்தார் என்று அந்தப் புதினத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
சிவாஜி அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து யானைகளுடன் மிகவும் விருப்பமாக பழகி இருக்கிறார் .
யானைகளுடன் பழக ,நேசத்தை காட்ட ,அதை கட்டுப்படுத்த அதன் பாஷையை தெரிந்து வைத்திருந்தார் என்பது தான் நடிகர் திலகத்தின் இன்னொரு சிறப்பு ..இந்த யானை பாஷையை தெரிந்து வைத்திருந்ததால் தான் சரஸ்வதி சபதம் படத்தில் நடிக்கும் போது யானை ஆனது அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டது. கருணாநிதிக்கு மாலை போட சொன்ன போது அது பணிந்தது. நடிப்பு தொழிலை மீறி என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் இந்த ஆச்சர்ய மனிதர் ! இது போன்ற விஷயங்களை கேட்கும் போது அவர் நடிகர் என்பதைவிட அவர் எவ்வளவு பெரிய ஆச்சரிய மனிதர் என்பதை எண்ணும்போது நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? கடவுளின் அருளும் ,
ஆசியும் இருந்தால் தான் ஒரு மனிதருக்கு இத்தனை சிறப்புகள் அமையும். அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் தான் சிவாஜி அவர்கள்.
அவரிடத்தில் இன்னும் எத்தனையோ ?
Attachment 6212
Thanks Senthilvel Sivaraj
ஏறக்குறைய 116 முறை 20 மாதங்களில் நாடகமாக நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்து நாடகம் நடிகர் திலகம் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன்.
கெய்ரோவில் எகிப்து படவிழாநடைபெற்ற சமயத்தில் ஒரே நாளில் பதினைந்து அரங்குகளில் திரையிடப்பட்டு 15, 650 அமெரிக்க டாலர்களை வசூலித்த படம் இது .
நாகர்கோவில் பயனியர் பிக்சர்ஸ் பேலஸ் அரங்கில் 100-வது நாள் விழாவின் போது சிவாஜியை காண வருகை தந்த ரசிகர்களிடம் 25 பைசா டிக்கட் 125 பைசாவாக வசூலிக்கப்பட்டது. ஐந்து மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது. அரங்கம் நிறைந்து வெளியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிவாஜியை பார்க்காமல் நகர மாட்டோம் என்று அடம்பிடிக்க முடிவில் சிவாஜி அரங்கை விட்டு வெளியே வந்து காரின் மேல் ஏறி நின்று கொண்டு அரை மணி நேரம் உரையாற்றிய பின்னர் சிவாஜி பார்த்த மகிழ்ச்சியில் அவருடைய பேச்சைக் கேட்ட திருப்தியில்ல அனைவரும் கலைந்து சென்றார்கள் .
கேரளாவில் திருவனந்தபுரத்தில் 100 நாட்கள் உள்ள முதல் படமும் இதுதான்.
Attachment 6213
Thanks Senthilvel Sivaraj
சேலம் நகரில் நடிகர் திலகத்தின் முப்பெரும் விழா.
நண்பர்களுக்கு வணக்கம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் மறைந்து 24-ஆண்டுகள் ஆனபோதிலும், தமிழகம் எங்கும் உள்ள சிவாஜி மன்றத்தினர்கள் தங்களால் முடிந்த நலதிட்டங்கள், அன்னதானம் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள் செய்து நடிகர் திலகத்தின் புகழ் பரப்பியும், பெருமை சேர்த்தும் வருகிறார்கள். அந்த வகையில் கும்பகோணம் திரு.m.v.சிவாஜிசேகர் அவர்கள் நடத்திய சேலம் முப்பெரும் விழாவின் சில துளிகள்.
01. சேலம் சிவாஜி மன்றத்தினர் மற்றும் கும்பகோணம் திரு.m.v.சிவாஜி சேகர் அவர்கள் இனைந்து நடத்திய முப்பெரும் விழா சிறப்பாக நடந்து நடிகர் திலகத்திற்கு பெருமையும் புகழையும் சேர்த்தது. விழாவை சார்ந்த வரவேற்ப்பு மற்றும் வாழ்த்துக்கள் அடங்கிய வால் போஸ்டர்கள் சேலத்தில் ஒட்டி அழகு படுத்தியிருந்தார்கள் பார்த்து மெய் சிலிர்த்து போனேன்.
02. தமிழகம் மெங்கும் உள்ள நடிகர் திலகம் இளைய திலகம் பிரபு மன்றத்தினர்கள் தங்கள் ஊர் மற்றும் ரசிகர் மன்றத்தின் பெயர்களை பதித்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ரசிகர்களை வரவேற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார்கள் பார்க்க அழகாய் இருந்தது கண்ணை கவர்ந்தது. ஒவ்வொன்றிலும் நடிகர் திலகத்தின் பல வித்தியாசமான படங்களை பதிவிட்டு வைத்திருந்தார்கள்.
03. நடிகர் திலகத்தின் காவல் துறை அதிகாரி கம்பீரமான தோற்றத்தை கட்அவுட் வைத்து அதற்கு பெங்களூரில் இருந்து சிவாஜி மன்றத்தினர்கள் திரு.ரவி அவர்கள் தலைமையில் மாலையிட்டு பூசை செய்தார்கள். அது சமயம் வாணவேடிக்கை தூள் கிளப்பியது. சேலம் அதிர்ந்தது.
04. கட்அவுட்களுக்கு வழக்கமாக பாலாபிஷேகம் செய்வார்கள் . ஆனால் சற்று வித்தியாசமான முறையில் பணத்தை கொண்டு (உணச்சி வசப்பட்டு) இரைத்து அபிஷேகம் செய்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அதை எடுத்தார்கள். அதை ரசிகர்களை பொறுக்க வைத்து விட்டார் என்று நண்பர்கள் எழுதுகிறார்கள். (பொறுக்குகிறார்கள் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம்)
05. வெளியூரில் இருந்து வரும் ரசிகர்களுக்கு மதிய உணவும் பறிமாறப்பட்டன. உள்ளூர்வாசிகள் நுழைந்து விடக்கூடாது என்று கருதி டோக்கன் வழங்கப்பட்டது பாராட்டத்தக்கது
06. அரங்கத்தில் உள்ளூர் ரசிகர்கள் இடம்பிடித்து விட்டால் வெளியூரில் இருந்து வரும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்று vip பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. Vip இடத்தில் எனக்கு இடமில்லையா என்று நண்பர்கள் கோபித்து கொண்டது அங்கங்கே சலசலப்பு ஏற்பாட்டது. பின்னர் அவர்களாகவே சமாதானமாது வரவேற்க தக்கது.
07. திருமண மண்டபம் மூன்று பிரிவாக இருந்ததால் ரசிகர்கள் பார்க்க வசதியாக led தொலைக்காட்சி கள் வைக்கப்பட்டது. இதுவும் பாராட்டதக்கது.
08. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அணிந்து கொள்ள நடிகர் திலகத்தின் படம் பொருந்திய t சர்ட் வழங்கப்பட்டு ரசிகர்கள் அணிந்து கொண்டு . ஊர்வலத்தில் நடந்து சென்றது மிகவும் அழகாய் இருந்தது. பார்ப்போர் எல்லாம் பிரமித்து போனார்கள்.
09. சரியாக மாலை 3.00- மணிக்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தொடங்கியது. சென்னை மாம்பலம் திரு.சிவாஜி ரவி அவர்கள் ஏற்பாட்டில் இன்னிசை கச்சேரி இரவு 10.00- மணி வரை நடந்தது.
10. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலமாக நடிகர் திலகம் படம் பதித்து அதினுள்ளே எவர் சில்வர் பாக்ஸில் இனிப்பு காரம் வைத்து கொடுத்தார்கள்.
இத்தனை நிறைவான நிகழ்ச்சியில் அங்கொன்றும் இங்கொன்றும் குறைகள் இருக்கத்தான் செய்தது.
எங்களுக்கு சரியான மரியாதை கொடுங்கவில்லை எங்களை வேண்டுமென்றே புறக்கனித்து விட்டார்கள் என்று விமர்சனங்கள் வருகின்றன. நம் வீட்டு சுபகாரியங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும் உறவினர்களே குறை சொல்லுவது கோபித்து கொள்வது நடக்கிறது. சில காலம் போனால் எல்லாம் சரியாகி போகும்.
நம்ம வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளிலே இப்படி இருக்கும் போது...
தமிழகம்மெங்கும் இருக்கும் சிவாஜி ரசிகர்கள் அதிக அளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குறைகள் இருந்தால் பொறுத்து கொண்டு வழக்கம் போல் நண்பர்களாக நடிகர் திலகத்தின் அன்பு பிள்ளைகளாக இருப்போம்.
நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்திய திரு.m.v.சிவாஜி சேகர் அவர்களையும் சேலம் சிவாஜி மன்றத்தினரையும் மனதார பாராட்டுகிறேன்.
வாழ்க சிவாஜி! வளர்க அவர் புகழ்!!
ச.அமரன்.
வேலூர் மாவட்ட சிவாஜி மன்றம்.
Attachment 6214 Attachment 6215
Attachment 6216 Attachment 6217
நன்றி ச.அமரன்.