Originally Posted by Murali Srinivas
ராகவேந்தர் சாரும், சாரதாவும், பாலாவும் படத்தின் சிறப்புகளை வர்ணிக்க மீண்டும் பழைய நினைவுகள். செந்தில், மோகன் ஏன் சுவாமி போன்றவர்களுக்கு இது தெரியுமா என்பது தெரியவில்லை. படம் முதலில் வெளியான போது கிளைமாக்ஸ் முடிந்து அரண்மனை வாசலில் நடிகர் திலகம் மக்களிடையே பேசும் ஒரு காட்சி இருந்தது. நாட்டின் சுதந்திரத்தை பற்றிய ஒரு உரையாக அது அமைந்திருந்தது. முடிவில் நடிகர் திலகம் ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிக்க வணக்கம் போடுவார்கள். முதல் சுற்றில் படம் ஓடிய போது இடம் பெற்ற இந்த காட்சி சில வருடங்களுக்கு பிறகு திரையிட்ட போது வெட்டப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அது போல முதல் வெளியீட்டில், இறுதி பாடலான சொல்லவோ [சுசீலா பின்னியிருப்பார்] பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் மிக பெரிய Prelude இடம் பெற்றிருந்தது. சில வருடங்கள் கழித்து வெளியான பிறகு அந்த Prelude இல்லாமல் சட்டென்று ஆரம்பிக்கும்.