-
சில விஷயங்களைப் பற்றி படிக்கும் போதோ அல்லது பேசும் போதோ நாம் ஒரு சபை மரியாதைக்காக மனம் கலங்கியது கண்கள் குளமாகியது என சொல்வது உண்டு. ஆனால் உண்மையில் வெகு சில நேரங்களில் மட்டுமே அது நடக்கும். அப்படி ஒரு உணர்வு இன்று நமது தேசிய நடிகன் சசிகுமார் அவர்களின் மறைவைப் பற்றி மீண்டும் படித்த போது தோன்றியது. அது நடந்த காலத்தில் நமது ரசிகர்கள் எப்படி மன வேதனை அடைந்தனர் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் மகன் வெளியிட்டு விழாவைக் கூட கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர் ரசிகர்கள். மதுரையில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது நினைவிருக்கிறது.
பெருந்தலைவரின் மேல் மாறாத பற்றும் நடிகர் திலகத்தின் மேல் அளவற்ற அன்பும் வைத்திருந்த அந்த மனிதன் அந்த இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்தது ஒரு பெரிய இழப்பே. எப்போதும் சுவாமியிடம் பேசும்போது ஒரு விதயத்தை அடிக்கடி குறிப்பிடுவேன். பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் இரு கண்களாக நினைத்து வாழ்ந்த ஒரு பெரும் படை தமிழகத்தில் நமக்கு வாய்த்திருந்தது. எண்ணிக்கையிலும் செயல்திறனிலும் அதை வெல்ல யாரும் இல்லாத நிலை. ஆனால் காலம் செய்த கோலம் என்று சொல்வதா அல்லது விதியின் விளையாட்டு என்று கூறுவதா என்று தெரியவில்லை. அது பல திசைகளில் சிதறுண்டது.
அப்படி இருந்த அந்த படையின் ஒரு எஃகு தளபதி மறைந்த சசிகுமார் என்றால் அது மிகையில்லை. வாழ்க அவர் புகழ்!
அன்புடன்
-
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
தேசிய நடிகர் கேப்டன் சசிகுமார் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்த நன்றிகள் தங்களின் ஈடு-இணையற்ற சேவைக்கான சிறந்த அங்கீகாரம்.
அமரர் சசிகுமார் அவர்களது குடும்பத்தினருக்கு நமது மனமார்ந்த நன்றிகள் !
அவர்கள் வாழ்வில் மென்மேலும் உயர்ந்து எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்க !
[தாங்கள் செலுத்திய அஞ்சலியை அவர்களது பார்வைக்கு கொண்டு சென்ற திரு.மோகன்ராம் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி !]
அன்புடன்,
பம்ம்லார்.
-
டியர் வாசுதேவன் சார்,
தொடர்ந்து அசத்தி வரும் தாங்கள் அளித்த அன்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
"பாரத விலாஸ்" வீடியோ பதிவு, தேசிய நடிகருக்கு தாங்கள் செலுத்திய சிறப்பான அஞ்சலி.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
டியர் ஜேயார் சார்,
மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
சகோதரி சாரதா,
சிறிய இடைவெளிக்கு பிறகு வந்துள்ள தங்களுக்கு நல்வரவு !
எப்பொழுதும் போல் தாங்கள் அளித்த உயாந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
தங்களது பதிவு இல்லாத நமது திரி, பாயசம் இல்லாத விருந்து போல் அல்ல - விருந்தே இல்லாத திருமணம் போல் உள்ளது.
எனவே, தொடர்ந்து தங்களது பொன்னான பதிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் !
அன்புடன்,
பம்மலார்.
-
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி
வரலாற்று ஆவணம் : மின்னல் கொடி : 10.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/.../GEDC4389a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4394a.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4393a-1.jpg
24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி
வரலாற்று ஆவணம் : மின்னல் கொடி : 10.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/.../GEDC4392a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4390a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4391a.jpg
24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/.../GEDC4395a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4399a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4400a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4401a.jpg
24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/.../GEDC4402a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4403a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4404a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4405a.jpg
24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.
தவப்புதல்வனைப் பெற்று கலை உலகுக்குத் தந்த அன்புத் தெய்வம், லட்சக் கணக்கான நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளின் பேரன்புத் தாய், தன் கணவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றதும் நிராதரவாக ஏழ்மையில் உழன்று, சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் தன் அன்புப் பிள்ளைகளை ஆளாக்கிய அற்புத அன்னை, தெய்வ மகனை ஈன்றெடுத்து, நமக்களித்து, இந்த உலகையே உவகையுறச் செய்த ஈடு இணையில்லா மாணிக்கம், "அன்னை இல்ல"த்தின் இல்லற ஜோதி "அன்னை ராஜாமணி அம்மையார்" அவர்களின் 39வது ஆண்டு நினைவு தினம். அம்மையார் அவர்களுக்கு நமது ஆத்மார்த்தமான இதய அஞ்சலி.
அம்மையார் அவர்களின் நினைவாக "கிரஹப் பிரவேசம்" திரைக்காவியத்தில் இருந்து ஒரு சிறு ஒலி-ஒளிக் காட்சியின் மூலமாக நம் இதய அஞ்சலி.
இந்தத் திரைக்காவியத்தில் நம் நடிகர் திலகம் அவர்கள் தன் அன்புத் தாயார் அவர்களின் திருவுருவப் படத்தின் முன் நின்று அவர்களிடம் பேசுவதாக வரும் ஒரு உணர்ச்சிமயமான அற்புதக் காட்சி. தன் தாயார் அவர்களின் மேல் உள்ள பாசத்தையும், வாஞ்சையையும் நடிகர் திலகம் வெளிப்படுத்துவதைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துருகுமே....
http://www.youtube.com/watch?v=L3dai...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
மரியாதைக்குரிய சாரதா மேடம்,
உங்களுக்கு என் 'முதல்' வணக்கங்கள். தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.
இந்த hub-இல் அங்கத்தினர் ஆவதற்கு முன்னம் ஏகலைவனாய் வெளியே நின்று உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை பாடம் செய்தவன் என்பதில் வானளாவிய பெருமை எனக்கு. அதிலும் குறிப்பாக அந்த "ராமன் எத்தனை ராமனடி" ஆய்வுக்கட்டுரை காந்தமாய் என்னை ஈர்த்தது. இத் திரியில் நான் இணையவும் அடிகோலியது. நடிகர் திலகத்தின் காவியப் படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்குவதற்கு அஸ்திவாரமும் போட்டது.
இதற்கெல்லாம் காரணகர்த்தா நீங்கள்தான். இதற்கு நீங்கள் பொறுப்பேற்றே ஆக வேண்டும். என்னுடைய ஆழ்மனத்தின் நன்றிகளை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும். வழிகாட்டியாய் துணை நின்று ஏற்றம் பெறச் செய்ய வேண்டும். நன்றி!
(சிறு இடைவெளிக்குப் பின் வந்தாலும் அந்த இடைவெளியில் வந்த அத்தனை பதிவுகளையும் பார்த்து, படித்து,தங்களின் வழக்கமான, அசத்தலான நடைப் பதிவில் கருத்துக்களை பதிவு செய்ததற்கு எங்கள் இதய பூர்வமான நன்றிகள் மேடம்).
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.