இருவர் உள்ளம் & தெய்வ மகன்:- இரண்டு படங்களிலும், நடிகர் திலகம் முதல் ப்ரேமிலிருந்தே, திரை அரங்கத்திலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்டிருப்பார். (இன்னும் இது போல் நிறைய படங்கள் உண்டு என்றாலும்). முன்னதில், ஜாலியாக, பின்னதில், உணர்ச்சி மயமாக.
1985-இல், இருவர் உள்ளம் சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது, மாபெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து, ஒன்றரை வருடங்கள், சுற்றி சுற்றி ஓடிக் கொண்டே இருந்தது. முக்கியமாக, ஏராளமான, சமூகத்தின் பல்வேறு தட்டுகளிலிருந்து, புதிய ரசிகர்களை, நடிகர் திலகத்திற்குப் பெற்றுத்தந்தது. முக்கியமாக, ரசிகைகள்; அதுவும், இளம் ரசிகர்/ரசிகைகள்.
இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி