-
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :25
நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்
பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 31.3.1961
http://i1110.photobucket.com/albums/...GEDC6634-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 15
நடிகர் திலகத்தின் 74வது காவியம்
கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 11.3.1977
http://i1110.photobucket.com/albums/...GEDC6633-1.jpg
சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் சுவாமி,
தங்களுடைய பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் மீது மேம்போக்கான அன்பாய் அல்லாமல் ஆழமாய் பற்று வைத்திருக்கும் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதற்கு தாங்கள் கூறிய கருத்தே சான்று.
அன்புடன்
ராகவேந்திரன்
-
தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் வாரத்தில் பழைய திரைப்படங்கள் -
Zee Tamil 17.09.12 3 pm – AVAN THAN MANIDHAN
18.09.2012 3 pm – PESUM DEIVAM
20.09.2012 3 pm – RASAVE UNNAI NAMBI
21.09.2012 3 pm – KANDHAN KARUNAI
Raj TV 17.09.2012 1.30 pm – BALE PANDIYA
18.09.2012 1.30 PM – AVAN ORU CHARITHIRAM
19.-09.2012 1.30 PM - PONNUNJAL
20.09.2012 1.30 PM – ENNAI POL ORUVAN
21.09.2012 1.30 PM - ENGA MAMA
22.09.2012 1.30 PM - MIRUDANGA CHAKKARA VARTHY
Raj Digital Plus 17.09.2012 10 am – PANNEER NADHIGAL 1 PM – ORU VASANTHA GEETHAM 4 PM – PASATHAI THIRUDATHE 8 PM – PARISAM POTTACHU
18.09.2012 SANGU PUSHPANGAL 1 PM - NAAN UNGAL RASIGAN 4 PM – KADHAL VENNILA 8 PM – JULIE GANA PATHY
19.09.2012 9 AM – KALLAZHAGAR 1 PM - ULAGAM SUTRUM VALIBAN 5 PM = UNNAL MUDIYUM THAMBI 8.30 PM – RAGASIYA POLICE 115
20.09.2012 10 AM – IRU NILAVUGAL 1 PM - OYILATTAM 4 PM – MINNAL 8 PM – ULLATHAI KILLADHE
21.09.2012 10 AM – ANANDA JOTHI 1 PM – KIZHAKKU VEEDHI 4 PM – MURATTU KARANGAL 8 PM – PATTIK KAATTAN
22.09.2012 10 AM – SUGAMANA RAGANGAL 1 PM – BAGAVATHI PURAM RAILWAY GATE 4 PM - RANUVAM 8 PM – RAMAN ABDULLA
POLIMER TV 17.09.2012 2 PM – AVAL
18.09.2012 2 PM – AIRPORT
20.09.2012 2 PM – GEETHANJALI
21.09.2012 2 PM – NAYAK KARIN MAGAL
22.09.2012 2 PM – RASAVE UNNAI NAMBI
MURASU TV 17.09.2012 7 PM – MEENDUM VAZHVEN
18.09.2012 7 PM – KODI MALAR
19.09.2012 7 PM – DEIVAM
20.09.2012 7 PM – BAIRAVI
21.09.2012 7 PM – ATTUK KARA ALAMELU
22.09.2012 7 PM - GNANA OLI
MEGA TV 17.09.2012 12 PM – PATTANATHIL BUDHAM
18.09.2012 12 PM – BAMA RUKMINI
19.09.2012 12 PM – YARUKKAGA AZUDHAN
20.09.2012 12 PM – MUGA RASI
21.09.2012 12 PM – VAIDEHI KALYANAM
22.09.2012 1.30 PM – AMBIGAI NERIL VANDHAL
MEGA 24 17.09.2012 10 AM – KOLLI MALAI MAVEERAN 2.30 PM - SAKUNTALAI 6.30 PM – POOVIL RAGAM
18.09.2012 10 AM - URIMAI THEDUM URAVU 2.30 PM – MARAGA THAM 6.30 PM – RAJAVIN PARVAI
19.09.2012 10 AM – POLICE POLICE POLICE 2.30 PM – VIDI VELLI 6.30 PM – OH MANJU
20.09.2012 2.30 PM – AARA VALLI 6.30 PM – VASANTAME VARUGA
21.09.2012 2.30 PM – THEROTTAM 6.30 PM – THISAI MARIYA PARAVAIGAL
22.09.2012 2.30 PM – HELLO MR JAMINDAR 6.30 PM – VIRUNTHALI
J MOVIES 17.09.2012 9 AM – ENGAL THANGA RAJA 1 PM – EZHAI PADUM PADU 5 PM – ARADHANAI 9 PM – VETTAIK KARAN
18.09.2012 9 AM – PADHA PUJAI 1 PM – ILLARAME NALLARAM 5 PM – KARAI YELLAM SENBAGA POO 9 PM – ANNAI ILLAM
19.09.2012 8 AM – SRI VINAYAGAR VIJAYAM 11 AM – DEIVA CHEYAL 5 PM – THIRUVARUL 8 PM – THIRU MALAI DEIVAM
20.09.2012 9 AM – ULAGAM IVVALAVU THAN 1 PM – PANGALIGAL 5 PM – THUNAI 9 PM – KULA MAGAL RADHAI
21.09.2012 9 AM - ANNAI ABIRAMI 1 PM – THEDI VANDHA THIRUMAGAL 5 PM – KANNODU KAN 9 PM – KARUPPU PANAM
22.09.2012 9 AM – VARA PRASADAM 1 PM – KANNADI MALIGAI 5 PM - SHANKARLAL 9 PM - NEELA VANAM
-
-
அன்புள்ள ராகவேந்தர் சார்,
இந்த வாரம் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு தொகுத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.
வீட்டில் இருந்தபடியே இத்தனை திரைப்படங்களையும் (போதாக்குறைக்கு ஏகப்பட்ட சீரியல்கள், வாடகைக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் சி.டி.க்கள்) பார்க்க முடிகிறது எனும்போது, திரையரங்குகள் அனைத்தும் வணிக வளாகங்களாகவும், குடியிருப்பு ஃப்ளாட்டுகளாகவும் விரைந்து மாறி வருவதில் வியப்பில்லை.
தற்போது 'உமாபதி திருமண மண்டபமாக' மாறிவிட்ட பழைய 'ஆனந்த் (70 mm)' தியேட்டர் உரிமையாளர் (மறைந்த ஜி.உமாபதியின் மகன்) சொன்ன தகவல் : "தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டுமே படம் பார்க்க வந்தாலும் தியேட்டர் முழுக்க நாங்கள் ஏ.சி.போடவேண்டியுள்ளது. ஏ.சி.க்கு ஆகும் செலவுக்குக்கூட வசூலாவதில்லை. மற்ற செலவுகளுக்கு நாங்கள் எங்கே போவது?. ஆகவேதான் திருமண மண்டபமாக மாற்றிவிட்டோம்". (அவர் சொல்வது உண்மைதானே)
-
அன்புள்ள ராகவேந்தர் சார்,
நீலவானம் திரைப்படத்தில் இடம்பெற்ற, சாந்தி திரையரங்கின் முந்தைய தோற்றத்தை பதிவுகளாக அளித்து பழைய இனிய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள். மரணம் வரை மறக்க முடியாத நினைவுகள் அவை. அந்த வளாகம் முழுக்க நம் கால்கள் படாத இடமேயில்லை. நம் சாயங்காலப்பொழுதுகளை சந்தோஷமாக்கிய நாட்கள் அவை. உள்ளே சென்று படம் பார்ப்பதைவிடவும், வெளியே நின்று அவற்றை நண்பர்கள் வட்டத்தில் அலசித்தீர்ப்பது பலமடங்கு இனிமையைத்தருபவை என்பதை பூரணமாக உணர்ந்த நாட்கள்.
எத்தனை எத்தனை புதிய நண்பர்கள் அங்கு அறிமுகமானார்கள். எவ்வளவு கருத்துப் பறிமாற்றங்கள், விவாதங்கள், சிலசமயம் விவாதம் முற்றி வாய்ச்சண்டைகள். (மாற்றுக்கருத்துடையோர்களுடன் பெரும்பாலும் வாய்ச்சண்டையிடுவோர் நண்பர் சீதக்காதி மற்றும் குமார்). வெளியூர் மன்றத்தினர் அவ்வப்போது அனுப்பிய அந்தப்பகுதியில் வெளிவரும் தினத்தந்தி செய்தித்தாள்கள், அவற்றில் வந்திருக்கும் பட வெளியீடுகள் பற்றிய அலசல்கள்.
நடுவில் நீரூற்றைக்கொண்ட தண்ணீர்த்தொட்டியின் சுற்றுச்சுவர்களில் (கம்பித்தடுப்பைத்தாண்டி) அமர்ந்துகொண்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்த சுகமான நினைவுகள். சுற்றிலும் உட்காருவோர் எண்ணிக்கை அதிகமானதால், ரசிகர்களின் அன்புத்தொல்லையைக் கட்டுப்படுத்த கம்பித்தடுப்பின் உயரம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டபின், பக்கத்திலிருந்த 'பால்ஸ் ரெஸ்டாரண்ட்டின்' ஜன்னல் தடுப்புகளில் அமர்ந்து பேசிய நாட்கள் (அந்த இடத்தில்தான் தற்போது நடிகர்திலகத்தின் படப்பட்டியல் கொண்ட கல்வெட்டு இடம்பெற்றுள்ளது).
சாந்தியில் வழக்கமாக கூடும் ரசிகர்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அவர்கள் எப்போது கேட்டாலும், எவ்வளவு கூட்டம் இருந்தபோதிலும் காட்சி நேரத்துக்கு முன்பாக 2 ரூபாய் டிக்கட்டுகளை குறிப்பிட்ட அளவு தனியாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தும் மாப்பிள்ளை வேணுகோபால், திரிசூலம் வெளியாகும் முன்பு, நடிகர்திலகத்தைப்பற்றியும் சிவாஜி பிலிம்ஸைப்பற்றியும் சற்று தவறாக செய்தி வெளியிட்ட 'பிலிமாலயா' பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கப்புறப்பட்ட மன்றத்தினராகிய நம்மை, ஒவ்வொருவர் தோள்மீதும் கைபோட்டு சமாதானப்படுத்திய 'நடிகர்திலகத்தின் புதல்வர்' பிரபு. (அப்போது அவர் நடிகராகவில்லை). அண்ணன் ஒரு கோயில் வெள்ளிவிழாவைக்காண இடைஞ்சலாக வந்த தியாகம் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று உரிமையுடன் ஆர்ப்பாட்டம் செய்தபோது, சிவாஜி பிலிம்ஸ் சார்பில் சமாதானம் செய்ய வந்து, அண்ணன் ஒரு கோயில் பக்கத்திலுள்ள அண்ணா தியேட்டரில் நிச்சயம் ஷிஃப்ட் செய்யப்படும் என்று (பொய்யான) வாக்குறுதியைத் தந்து நிலைமையை சமாளித்த சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிர்வாகி மோகன்தாஸ்..... இப்படி சொல்லிக்கொண்டே போக எத்தனை இனிய நினைவுகள்.
சுருக்கமாகச்சொன்னால், ஏதாவது சொந்த வேலையின் காரணமாக ஒருநாள் மாலை 'சாந்தி'க்கு வராமல் போனாலும், அன்று எதுவோ குறைந்தது போன்ற உணர்வு மனதில் அலைமோதும்.
இன்றைக்கு சாந்தி திரையரங்கம் தோற்றத்தில் எவ்வளவோ மாறிப்போய்விட்டது. ஆனால் நம் மனதில் பசுமையாக நிலைத்து நிற்கும் அந்த பழைய 'சாந்தி'யும் அதோடு ஒன்றிப்போன இனிய நினைவுகளும் என்றும் நம் மனதை விட்டு அகலாது.
-
அன்புள்ள பம்மலார் சார்,
இன்றைக்கும் எந்த ஒரு காங்கிரஸ் மேடையிலும் அண்ணன் நடிகர்திலகத்தின் பெயரை ஒருமுறையேனும் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் துக்ளக் இதழ் கட்டுரையைப்பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி.
அதைப்படிக்கும்போதே, அண்ணன் தலைமையில் தமிழக முன்னேற்ற முன்னணியில் இணைந்து பணியாற்றிய அந்த இனிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இன்றைக்கும் அந்த இய்க்கம் இருந்திருக்குமானால் இன்னும் அதில்தான் இணைந்திருப்போம். இப்போதுபோல, இருக்கின்ற இரண்டு கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி என்று பார்த்துக்கொண்டிருக்கின்ற அவசியம் வந்திருக்காது.
அவர் அடுத்த வாரம் சொல்லப்போகும் அந்த ஆஃபர் என்ன என்பது த.மு.மு.வில் இணைந்திருந்த நமக்குத் தெரிந்ததுதான். இதைப்பற்றி ஏற்கெனவே சாரதா தன்னுடைய வலைப்பூ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எப்படியாவது கட்சியை வளர்த்தால் போதும் என்று நினைத்திருந்தால், தி.மு.க.தலைவர் சொன்ன அந்த 25 சீட் ஆஃபரை அண்ணன் ஏற்றுக்கொண்டிருப்பார். தி.மு.க.வுக்கு போதிய எதிர்ப்பில்லாமல் இரண்டாகப்பிரிந்து கிடந்து அவர்களுக்குள்ளேயே தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. வை எதிர்த்து, தி.மு.க. கூட்டணியில் அட்லீஸ்ட் ஒரு 15 எம்.எல்.ஏ.க்களாவது த.மு.மு. பெற்றிருக்கக்கூடிய நல்ல வாய்ப்பு வந்தது. ஆனால் அண்ணன் நாணயம், வாக்குறுதி, நம்பிக்கை என்றெல்லாம் அரசியலுக்கு ஒவ்வாத வாதங்களை வைத்து, அந்த வாய்ப்பை கைநழுவவிட்டார். தூய்மையான, நேர்மையான அரசியல்வாதி என்ற பெயர்மட்டுமே மிஞ்சியது.
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கட்டபொம்மன் நாடகத்துக்கு அண்ணா தலைமை தாங்கிய 1957 விளம்பரத்தை வெளியிட்டமைக்கு நன்றி. அண்ணா ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தது 57 - 62 காலகட்டம் மட்டுமே. அதை அந்த விளம்பரத்தில் காண முடிகிறது. (62 - 67 ராஜ்யசபா எம்.பி., 67 - 69 எம்.எல்.சி. மற்றும் முதலமைச்சர்).
அரிய ஆவணங்களுக்கு அளவில்லாத நன்றிகள்.
-
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
நிஜமாகவே அதிர்ச்சி விளம்பரம்தான்.
இது எப்போது...??. எப்படி...??.
விளம்பரத்தில் கண்டது உண்மையா, அல்லது எதாவது விஷமிகளின் வேலையா...??.