-
புதிய மனிதன் 1974
ஜெய் ஜெயசுத ஜோடி (இந்த ஜோடி வேறு எதாவது படம் உண்டானு நினவு இல்லை )
ஜெய் புஷ்குல்ல வைத்து கொண்டு கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு கொண்டு பார்த்த போஸ்டர் ஒன்று நினைவு
திருமலை மகாலிங்கம் (beemsingh assistant ) இயக்கம்
பாலா வாணி குரல்களில்
நான் சொல்ல வந்தேன் , நலமான செய்தி
வைகாசி மாதம் கல்யாண தேதி
பாலா குரல் ஜானகி ஸ்ரீ ராமனின் காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான செய்தி
நான் கண்டுகொண்டேன் நீ எந்தன் பாதி
பாலா ஜானகி என்று ஒரு அழுத்து அழுத்துவார்
http://www.inbaminge.com/t/p/Puthiya%20Manithan/
-
சார், திசை மாறிய பறவை கொஞ்சம் வித்தியாசம்தான். ஆனால் பறவை சுருண்டு விட்டது. சுமலதா கன்னிகாஸ்திரி.
http://images.boxtv.com/clips/663/14...7713_14663.jpg
அருள்ஜோதி தெய்வம்
என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
ஜி.சீனிவாசனுக்கு பாலமுரளி கிருஷ்ணா (கொஞ்சமும் மாறாத பாலமுரளி கிருஷ்ணா பாணியில்)
'அட்ரா மேளத்தை ராஜா'
ஒரு குத்துப் பாடல் அதே திசை மாறியப் பறவைகள் படத்தில் . கோவை சௌந்தரராஜன், ஈஸ்வரியின் குரலில் கலக்கல்.
'அட நிறுத்தோங்கண்ணா' ஈஸ்வரி அமர்க்களம்.
-
-
கிருஷ்ணா சார்,
'புதிய மனிதன்' படத்தில் ஜெயசங்கர். ஜோடி ஜெயசுதா.
'நான் சொல்ல வந்தேன்' பாடலை நீங்கள் ஞாபகப் படுத்தியவுடன் எனக்கு 'பாலூட்டி வளர்த்த கிளி' படத்தில் வரும் 'நான் பேச வந்தேன்... சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை' பாடல் நினைவுக்கு வந்து விட்டது.
இரண்டுமே டாப்.
-
யூ டியூப் வீடியோவில் 'புதிய மனிதன்' படத்தில் ரவிச்சந்திரன், விஜயநிர்மலா என்று தகவல் தந்துள்ளார்கள். ஸ்லைட் ஷோவில் ரவி, விஜய நிர்மலா படமாக ஓடுகிறது 'நான் சொல்ல வந்தேன்' பாடல் ஒலிக்கும் போது.
தவறான நியூஸ்தானே கிருஷ்ணா சார்?
-
அதே போல 'புதிய வாழ்க்கை' என்றொரு படம் ஜெயசங்கர் நடித்து வெளிவந்தது.
சூப்பர் ஹிட் பாடலான பாலா பாடும்
'பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு'
ஜானகி பாடும்
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்.
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
இரண்டும் அருமை.
http://www.youtube.com/watch?v=sSvET...yer_detailpage
-
தவறான நியூஸ்தானே கிருஷ்ணா சார்?
வாசு சார் சொன்னா தப்பா இருக்குமா
-
புதிய வாழ்கை நம்ம cvr இயக்கம்
பேசு மனமே பேசு எச்செள்ளன்ட் சாங்
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
என்ன முதலாளி சௌக்கியமா 1972
காதல் மன்னன்,கே ஆர் விஜய சுந்தர்ராஜன் நடித்து வெளிவந்த ஈஸ்ட்மேன் கலர் இயக்கம் மல்லியம் . கே ஆர் விஜய டீச்சர் . ஜெமினியை லவ் பண்ணிட்டு மேஜர் சுந்தர்ராஜனை திருமணம் செய்யற மாதிரி கதை வரும்
இது கண்ணதாசன் கதைன்னு போஸ்டர் பார்த்த நினவு
பாலா சுசீலா குரல்களில் குழந்தைகளுடன் ஒரு நல்ல பாடல் ஒன்னு உண்டு சார்
1.அன்பை குறிப்பது அனா ஆசையின் விளக்கமும் ஆவன்ன
பாலாவின் குரல் ஜாலத்தை கேட்கலாம்
2. ஈஸ்வரி குரலில் "என்ன முதலாளி சௌக்கியமா " னு ஒரு பாட்டு ஒன்று உண்டு
பாடல் லிங்க் கிடைக்க வில்லை
-
-
தேன்கிண்ணம் 1971
சித்ரமஹால் கிருஷ்ணமுர்த்தி இயக்கம்
நாகேஷ் விஜயலலித vkr mrr வாசு சுருளி s .n லக்ஷ்மி எல்லோரும் நடித்து வெளிவந்த ஒரு காமெடி படம். நன்றாக ஓடியது . ஆனால் இதே மாதிரி இதே டீம் எடுத்த ஹல்லோ partner சோலியை பெருக்கிடிச்சு
நாகேஷ் இன் நண்பர்களாக சுருளி,சதன்,ISR எல்லோரும் வருவார்கள்
மோகன் (யோககார நாகேஷ்) லலிதா (விஜயலலித) இருவரும் காதல்ர்கள் லலிதாவின் அத்தை மகன் தான் மோகன் .ஆனால்
vKR இதற்கு சம்மதிக்க மாட்டார் . அவருடைய அல்லக்கை வாசு
இருவரும் சேர்ந்து காதல் ஜோடியை பிரிக்க முயற்ச்சி செய்வார்கள் .
முயற்ச்சி வெற்றி அடைந்ததா அல்லது காதலர்கள் எதிர்ப்பை மீறி ஒன்று சேர்ந்தார்களா ? முடிவை வெள்ளித்திரையில் காண்க
இசை ஷங்கர் கணேஷா அல்லது குமரா என்று ஒரு சிறு சந்தேகம் உண்டு
ஆனால் பாட்டு எல்லாம் அப்ப ஹிட்
சுசீலாவின் இனிமையான் குரலில்
"தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண் ஒரு தேன் கிண்ணம் பால் அன்னம் பால் அன்னம் பழுகும் விதத்தில் பால் அன்னம் "
http://www.youtube.com/watch?v=9yun_LFvuD4
பாடகர் திலகம் குரலில் குழுவினருடன்
"போடனும் நல்ல 'போடணும்' ஜோரா 'போடணும்' சோப்பு 'போடணும்'
நினச்சது நடக்கனும்ன நேரம் காலம் பார்த்து நல்ல "
ஒரு நல்ல டூயட் tms சுசீலா
"காதலோ காதல் காதலோ காதல் "
மீண்டும் tms
"அக்கம் பக்கம் யாருமில்லே வெட்கமா வெட்கமா "
tms ஈஸ்வரி குரல்களில்
"சின்ன குட்டி பொண்ணு "
படத்தோட highlight எதுனா எல்லா நல்ல பாடல்களின் கலவையாக
tms ஈஸ்வரி குரல்களில் ஒரு பாத் ரூம் பாட்டு சூப்பர்
வாசு vKR இருவரும் ஒருவருக்கு தெரியாமல் நாகேஷையும் விஜய லலிதாவையும் ஒரே அறையில் அடைத்து விடுவார்கள் .
விஜய லலிதா பாத்ரூம் டப் இல் குளித்து கொண்டு இருக்கும் போது நாகேஷ் தெரியாமல் பாத் ரூம் கதவை திறந்து விடுவார் .
உடனே நம்ம ராட்சசி
"உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் காதல் கொண்டேன் வா " என்பார்
உடனே TMS
"மெதுவா மெதுவா தொடலாமா" னு தலையை துவட்டி விடுவார்
பின்
"பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் "
"இப்படி கேட்டால் எப்படி சொல்வேன் "
இதுக்கு நடுவில் VKR வாசுவிடம் "என்ன ஒரே சினிமா பாட்டு சப்தமாக இருக்கே அறையில் " என்று கேட்பார். அதற்கு பதிலாக வாசு "இப்ப ரேடியோவில் தேன் கிண்ணம் நேரம்ங்க " என்று கூறுவார் .
உடனே ராமசாமி "என்னதான் சினிமா பாட்டா இருந்தாலும் இப்படி துண்டு துண்டா வருதே " என்பார்
இந்த மாதிரி எல்லா சினிமா பாடல்களையும் அந்த படத்தில் இருந்தே இணைத்து வந்த காமெடி க்கு இது ஆரம்பம் என்று நினவு
http://www.youtube.com/watch?v=WD6pLzBmJ6s
http://www.inbaminge.com/t/t/Then%20Kinnam/