சி.க
நீங்கள் குறிப்பிடுவது இதுவா?:)
http://www.mkpplasticsandessence.com/images/tace01.jpg http://preethe.sylera.com/images/kutti_yaanai.jpg
Printable View
சி.க
நீங்கள் குறிப்பிடுவது இதுவா?:)
http://www.mkpplasticsandessence.com/images/tace01.jpg http://preethe.sylera.com/images/kutti_yaanai.jpg
சுசீலா அம்மாவின் தாலாட்டின் அருமையை மேலும் மெருகு கூட்டுகிறீர்கள்
நன்றி வாசு சார்
இந்த குட்டி பாப்பாவுக்கு இன்று பிறந்த நாளாம்,,, வாழ்த்துகள்.
அம்மம்மா! காற்று வந்து ஆடை
தொட்டுப் பாடும் !
பூவாடை கொண்ட மேனி தன்னை ஆசை
கொண்டே மூடும் !”
https://www.youtube.com/watch?featur...&v=q9Sxn9aZwCA
நன்றி கிருஷ்ணா சார்,
சுசீலாவின் பின்னாளைய பாடல்களுக்கு நன்றி கிருஷ்ணா சார். நிறைய இருக்கிறது. நேரம் போதவில்லை. நைட் ஷிப்ட். தூக்கம் தூக்கமாய் வருது. ராகவேந்திரன் சார் ஜெயுச்சுட்டார்.:)
ரெஸ்ட் எடுங்கள் வாசு சார்
சுசீலா அம்மாவின் பெருமையையும் பாடலையும் பேசி கொண்டு இருக்க இன்று 'ஒரு நாள் போதுமா '
நடிகர் திலகத்தின் 'நிவ்விரு கப்பின நிப்பு' படத்தைப் பிடித்த கதை.
டியர் SSS சார்!
வணக்கம். உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
நான் தங்களுக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும். சில நாட்களுக்கு முன் நடிகர் திலகம் திரியில் (15th October 2014) நீங்கள் நான் கொஞ்சமும் எதிர்பாராவிதமாக ஒரு பதிவை அளித்து என்னை வாழ்நாள் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்திருந்தால்கூட நான் அப்படி சந்தோஷப் பட்டிருக்க மாட்டேன். இதய தெய்வத்தின் 'மிஸ்டர்.மகேந்திரா' முழுப் படத்தை கண்டுபிடித்து பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் சார்.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/mr.jpg
இந்தப் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன் பல நாட்களாய். உங்கள் புண்ணியத்தால் டவுன்லோட் செய்து 'லபக்'கிக் கொண்டேன். இந்தப் படம் கிடைக்குமென்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. அப்லோட் பண்ணிய புண்ணியவானுக்கும் ஓராயிரம் நன்றி.
இன்னொரு விஷயம். இந்தப் படத்தைப் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தீர்கள்.
இந்தப் படம் தெலுங்குப் படம்தான். 'நிவ்ரு கப்பின நிப்பு' என்ற பெயரில் (18-04-1982) அன்று வெளிவந்தது. நடிகர் திலகம், கிருஷ்ணா, ஜெயபிரதா, காந்தாராவ், கிரிபாபு, சௌகார் ஜானகி நடித்த இப்படம் நடிகர் திலகம் நடித்திருந்ததால் தமிழில் 'மிஸ்டர் மகேந்திரா' என்று 24.06.1982 அன்று வெளியானது என்று நினைவு. நடிகர் திலகத்திற்கு அற்புதமான ரோல். ஆடிப்பாட, சண்டை போட ஹீரோ கிருஷ்ணா இருந்தாலும் நிஜ ஹீரோ நடிகர் திலகம்தான். படம் முழுக்க வியாபித்து ஆர்ப்பாட்டமாக நடித்திருப்பார். கே.பாப்பையா இயக்க, சக்கரவர்த்தி இசை அமைத்திருந்தார்.
இது ஒரு மொழி மாற்றுப் படம்தான். ஆனால் ஒரு சிறப்பு. நடிகர் திலகம் தன் சொந்தக் குரலில் பேசியிருப்பார். பொதுவாக ஜக்கையா, முக்கமாலா போன்ற நடிக பிரபலங்கள் நடிகர் திலகத்திற்கு டப்பிங் கொடுப்பார்கள். ஆனால் இந்தப் படத்தின் கதையே வேறு. நடிகர் திலகம் சொந்தக் குரலில் பேசியது மட்டுமல்ல நடிகர் திலகம் நடித்த காட்சிகள் அனைத்தும் நேரிடையாக தமிழிலேயே எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. ஆனால் நடிகர் திலகத்தின் காட்சிகள் மட்டுமே.
நீங்கள் படத்தைப் பார்த்தால் புரியும். நடிகர் திலகம் நடிக்கும் போது அவர் நடிக்கும் காட்சிகள் அப்படியே தமிழ்ப்படமாகவே இருக்கும். ஆனால் உடன் நடிப்பவர்களுக்கு தமிழில் மொழி மாற்ற வாய்ஸ் தரப்பட்டிருப்பதை உணரலாம். உதாரணமாக நடிகர் திலகமும் காந்தாராவும் சந்திக்கும் காட்சிகளில் நடிகர் திலகம் காந்தாராவிடம் நேரிடியாக தமிழிலேயே உரையாடுவார். ஆனால் பதிலுரைக்கும் காந்தாராவ் தெலுங்கில் பேசியிருப்பதை தமிழில் டப் செய்யப்பட்டிருப்பது நன்றாகத் தெரியும். நடிகர் திலகம் தமிழில் உரையாடுவதால் அவர் போர்ஷன் டப்பிங்காகத் தெரியாது. வாயசைப்பு தமிழில் துல்லியமாகத் தெரியும்.
ஒரே சமயத்தில் தெலுங்கிலும், தமிழுலும் நேரிடியாகத் தயாரிக்கப்பட்ட படமும் அல்ல இது. தெலுங்கில் மட்டுமே.
ஆனால் நடிகர் திலகம் நடித்த காட்சிகள் மட்டும் நான் முன்பு சொன்னது போல முதலில் நேரிடி தெலுங்கிலும், பின் தமிழிலும் இரண்டு முறை படமாக்கப்பட்டன.
இந்த உண்மை பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
எனவே இதை டப்பிங் படம் என்பதா அல்லது இல்லை என்பதா? இது எதில் சேர்த்தி என்று தெரியவில்லை.
சரி! இந்த 'நிவ்விரு கப்பின நிப்பு' படத்தையும் நான் எப்படியோ ஒரு வழியாகப் பிடித்தேன். ஆந்திராவில் என் நண்பர்களிடம் சொல்லியும் இந்தப் படம் எந்தக் கடைகளிலும் கிடைக்கவில்லை. இணையத்தில் அப்போது இந்தப் படத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒரு சில போஸ்டர்கள், பாடல்கள் ஆடியோ மட்டும் இருந்தன. நானும் தேடாத நாளில்லை. (இப்போது இருக்கிறதா என்று தேடித் பார்க்க வேண்டும்)
ஒரு முறை எதேச்சையாக என் மகன் தொலைக் காட்சி சானல்களை மாற்றிக் கொண்டிருக்கும் போது 'ஜெமினி மூவீஸ்' தொலைக்காட்சியில் நடிகர் திலகம் தெலுங்கு பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வெளியில் இருந்த எனக்கு போன் செய்தான். நான் 'எதுவாயிருந்தாலும் ரெகார்ட் செய்து வை' என்று சொல்லி விட்டேன். பின் விட்டுக்கு வந்தால் இந்தப் படம். ஆடிப் போய்விட்டேன். என் கெட்ட நேரம் பாதிப் பாடம் கூட இல்லை ஒரு மணி நேரப் படம்தான் ரெகார்ட் ஆகி இருந்தது. ஏதோ இதாவது கிடைத்ததே என்று DVD யில் சேமித்து வைத்துக் கொண்டு அதிலிருந்து தினமும் நெட்டில் (what's on tv) விடாமல் ஜெமினி மூவீஸ் தினம் தினம் என்ன படம் போடுவார்கள் என்று நிகழ்ச்சி நிரலை விடாமல் பார்த்து தொடர்ந்து கண்காணித்து வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் இதே போல் கண்காணித்து வந்தேன். ஒரு நாள் வசமாக மாட்டியது. அன்று லீவ் போட்டுவிட்டு கரண்ட் கட் ஆகக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டு ரெகார்ட் செய்ய உட்கார்ந்தேன். நடிகர் திலகத்தின் அருளால் படம் முழுவதையும் பார்த்தபடியே ரெகார்ட் செய்து முடித்து பெரு மூச்சு விட்டேன்.
நடிகர் திலகத்தின் அத்தனை படங்களையும் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற அடங்காத வெறி எனக்கு. அதனால் கணக்கில் மேலும் ஒரு அரிய படம் சேர்ந்ததில் பெருமகிழ்வு எனக்கு.
இப்போது என்னிடம் தெலுங்கு, உங்கள் புண்ணியத்தால் தமிழ் என இரண்டு வெர்ஷன்களும் என நடிகர் திலகத்தின் சேமிப்புக் கிடங்கில் ராஜாங்கமாய்க் கொலு வீற்றிருக்கின்றன.
தெலுங்கில் 'ஜீவன தீராலு' (12.08.1977) என்ற நடிகர் திலகம் நடித்த படம் ஒன்று உண்டு. 'வாழ்க்கை அலைகள்' என்ற பெயரில் தமிழில் டப்பாகி வெளி வந்தது. தெலுங்கு டிவிடி என்னிடம் உள்ளது. தமிழ் வெர்ஷன் 'வாழ்க்கை அலைகள்' இல்லை.
இதையும் உங்களையறியாமலேயே நீங்கள் தேடிப் பிடித்து கொடுத்து விடுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. :)
அதே போல நடிகர் திலகம் நடித்த படங்கள் தெலுங்கில் வெளியான லிஸ்ட்டையும் சில நாட்களுக்கு முன்னம் அளித்திருந்தீர்கள். அதற்கும் என் மனமார்ந்த நன்றி.
வாழ்நாளில் என் இதய தெய்வத்தின் அத்துணை படங்களையும் ஒன்று விடாமல் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதில் 90% நிறைவேறிவிட்டது நடிகர் திலகத்தின் ஆசீர்வாதமே.
vasu,
Amazing. I am caught in a remote corner of Vietnam on a trip . internet connections are weak. I took my time off to see your posting on Mr.Mahendra. What can I say ,How can I react? I look up on you with awestruck exclamation and my jaw dropping to ground. Kudos.
I think with valarpirai,senthamarai,aval yar ,cycle will be complete ,I suppose.
Susila,
sivaji to acting, ashoka mitran to writing, adoor Gopalakrishnan to direction,Viswanathan-ramamoorthy to music, barathi to poetry, periyar to social cause, sher shah suri to leadership, bathal circar to theatre , our susila to singing.
I keep susila in the highest pedestal (more than latha) as a singer , and the only request that I made for my children was to not keep me unnecessarily on life supports when my body giving way, and to play selected 10 Songs of Susila solos during my last hours.. (I mentioned them in my earlier postings)