ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
Quote:
Originally Posted by
madhu
வாசு ஜி..
முகூர்த்த நாள் டி.வி.யில்தான் பார்த்தேன். அதுவும் சில காரணங்களால் முழுசா பார்க்க முடியவில்லை. இந்தப் பாட்டு அதுல வரலையே ! இதுதான் ஆரம்பமா? டியூன் கேட்டால்தான் தெரியும் என்று நினைக்கிறேன்.
மதுண்ணா, ராகவேந்திரன் சார்,
அதுவேதான் ஆரம்பம்.
http://i1087.photobucket.com/albums/..._000094680.jpg
பாட்டோட வீடியோவே இருக்கு. 'யூ டியூப்ல' அப்லோட் பண்ண முயசிக்கிறேன். (ஜெயா டிவி ரைட்ஸ் ப்ராப்ளம்ஸ் குடைச்சல் கொடுப்பாங்க):)
இப்போ முதல்ல 'மீடியா பயர்'ல பாட்டோட ஆடியோவை வீடியோவிலிருந்து பிரிச்சி அப்லோட் செய்து தர்றேன். முதல்ல பாட்டை கேட்ச் பண்ணிக்கோங்க.
பாட்டு வரிகளையும் முழுசா படிச்சுட்டு கேட்டா ரொம்ப சுவைக்கும்.
காட்டுவாசிப் பொண்ணு மாதவியை கல்யாணம் பண்ணிக் கொண்டு அவதிப்படுவார் நாகேஷ்.
காட்டுவாசி உடையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மாதவியைப் (மாதவி படுகவர்ச்சி) பார்த்து ஏங்குவார் நாகேஷ். அப்படியே ஏக்கங்களை கனவு கண்டு பாடலாக ஆரம்பிப்பார்.
இந்தப் பாடலில் இரண்டு விசேஷங்கள்.
1. பாடலை ஜமுனாராணியும், ஏ.எல்.ராகவனும் பாடுவார்கள். இதில் நாகேஷ் ஒரு பாதி ஆணாகவும், மறு பாதி பெண் முக, உடை அலங்காரத்திலும் ஆடுவார். ஆண்பக்கம் காட்டி பாடும் போது நாகேஷுக்கு ராகவன் குரலும், அப்படியே பொம்பளை சைடு காட்டிப் பாடும் போது அதே நாகேஷுக்கு ஜமுனா ராணியும் குரல் கொடுத்திருப்பார்கள். சூப்பரப்பு. ஆகவே ஒரே நாகேஷுக்கு இரு பின்னணி குரல்கள்.
2. அடுத்து மாதவி நாகேஷுடன் இணைந்து பாதிப் பாடலுக்கு மேல் பாட ஆரம்பிப்பார். இபோது மாதவிக்கு ஜமுனாராணி குரல்.
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
அழைத்தால் வரலாம்
அன்பைப் பெறலாம்
தொடலாம்... விழி படலாம்... உடல் குளிரலாம்
(ஆம்பள பாதி)
காட்டுப் பொண்ண காதலிச்சேன்
மாட்டுப் பொண்ணா மாத்தி வச்சேன்
ஏ ஏ ஏ ஏ ஏ ஏய்...(வழக்கமா நாகேஷுக்கு ராகவன் பண்ணும் அமர்க்களம்)
காட்டுப் பொண்ண காதலிச்சேன்
மாட்டுப் பொண்ணா மாத்தி வச்சேன்
காலைப் புடிச்சேன் கையைப் புடிச்சேன்
காலைப் புடிச்சேன் கையைப் புடிச்சேன்
காரியம் நடக்கல...
இந்த செவிலிப் பொண்ணுக்கு சித்திரக் கண்ணுக்கு என்னைப் பிடிக்கல
ஓ...செவிலி...செவிலி...செவிலி செவிலி செவிலி.
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
இதுவரை ராகவன் பாடுவார். உடலில் ஒரு பாதி வெள்ளை உடையிலும், மறுபாதி கருப்பு உடையிலும் நாகேஷ் ஆடுவார்.
http://i1087.photobucket.com/albums/...31355055/4.jpg
http://i1087.photobucket.com/albums/...31355055/3.jpghttp://i1087.photobucket.com/albums/...31355055/2.jpg
இப்போது நாகேஷ் ஒரே வேடத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பார். சைடில் திருபி கூந்தல், பூவுடன் பெண்ணாகக் காட்சி தந்து பாடுவார்.
இப்போ ஜமுனாராணி (பெண் தோற்ற நாகேஷுக்கு)
அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
ராகவன் (ஆண் தோற்ற நாகேஷுக்கு)
அழைத்தால் வரலாம்
ஜமுனாராணி (பெண் தோற்ற நாகேஷுக்கு)
அன்பைப் பெறலாம்
ராகவன்
தொடலாம்
ஜமுனாராணி
விழி படலாம்
ராகவன்
உடல் குளிரலாம்
(இப்போ இருவரும் சேர்ந்து நாகேஷ் ஒருத்தருக்கே பாடுவார்கள்)
http://i1087.photobucket.com/albums/...31355055/1.jpg
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
(இப்போ மாதவி பாடுவார் ஜமுனாராணி குரலில்)
உறவிருக்கும் பகையிருக்கும் இந்த மனசி(ல்)லே
கை அடிக்கும் தொட்டு அணைக்கும் இளம் பொழுதிலே
உறவிரு(று)க்கும் பகையிரு(று)க்கும் இந்த மனசில்ல்ல
கை அடிக்கும் தொட்டு அணைக்கும் இளம் பொழுதிலே
('உறவிரு(று)க்கும் பகையிரு(று)க்கும்'...வரிகளில் ஜமுனாராணியின் அழுத்தமான உச்சரிப்பைக் கவனியுங்கள்):)
ஆயிரம்தான் இருக்கட்டுமே என் புருஷனடி
இவன் ஒனக்கு இல்லை எனக்கு மட்டும் அரசனடி
(நாகேஷின் பாதி பெண் தோற்றத்திடம் பொறாமையில் சவால் விடுவார் மாதவி):)
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
அழைத்தால் வரலாம்
அன்பைப் பெறலாம்
தொடலாம்..
விழி படலாம்...
உடல் குளிரலாம்
ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
http://www.mediafire.com/download/pa...i+aagalaam.mp3