-
வசந்த மாளிகை மதுரையில் அலங்கார் திரையரங்கில் வெளியாகி பொது மக்கள் ஆதரவுடன் வெற்றி வாகை சூடி வருவதை நாம் ஏற்கனவே இங்கே பகிர்ந்துக் கொண்டோம். பொதுவாக பழைய திரைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு அடுத்து வரும் வார நாட்களில் அவை வேலை நாட்கள் என்பதால் சற்று டல்லடிக்கும். ஆனால் மாளிகைக்கு இந்த வார நாட்களிலும் கூட கணிசமான மக்கள் பார்க்க வருகிறார்களாம். திரை அரங்க ஊழியர்கள் தகவலை பகிர்ந்துக் கொண்டதாக சொன்னார்கள்.
மதுரையில் திரையிடப்பட்ட அன்றே ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் வசந்த மாளிகை திரையிடப்பட்டு ஒரு வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற செய்தியும் வந்திருக்கிறது. ஸ்ரீவி நகரில் வெகு நாட்களுக்கு பிறகு ஞாயிறு மாலைக் காட்சி ஜே ஜே என்றிருந்ததாக சொன்னார்கள்.
திருச்சி மாநகரில் வரும் வெள்ளி முதல் ராமகிருஷ்ணா திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாகிறது.
அனைத்து தகவல்களுக்கும் நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
-
-
பாச மலர் விளம்பர நிழற்படத்திற்கு நன்றி நவ் சார்.
1960ம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்திய அரசு தேர்ந்தெடுத்தைப் பற்றிய ஹிந்து நாளிதழ் செய்தி 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2010ல் பிப்ரவரி 17ம் நாள் நாளிதழில் மீள்பதிவு செய்யப் பட்டது. இதற்கான ஹிந்து இணைய தள பக்கத்திற்கான இணைப்பு
http://www.hindu.com/2010/02/17/stor...1755541402.htm
-
Hi,
Before the release of Pasamalar infact even before trailer release on 29th
Coimbatore people are ready to welcome our Style Samrat's successful dual role movie under the direction of TR Ramanna's
Ennai Pol Oruvan form tomm @ Royal Theatre daily 4 shows
Following the success of Raja which was screened in same theatre just a month before
The posters are also quite big & attractive
Point to be noted is it was screened after a long gap in Delite theatre last year & again screened in same theatre some 4 months back
Happy to inform that NT's action & entertaining movies are being screened
MAdurai & Srivilliputhur- Vasantha Maaligai
Covai- Ennai Pol Oruvan
From Aug 15th World wide- Pasamalar
-
நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவுகளை சிறப்பாக பதிப்பித்த முரளி சார், வாசுதேவன் சார், ராகவேந்தர் சார், சுப்பு சார், சந்திரசேகர் சார், பம்மலார் சார், மற்றும் அனைவருக்கும் நன்றி.
பம்மலார் சார்,
தங்களின் 'நடிகன் குரல்' அரிய பொக்கிஷப்பதிவு மிக மிக அருமை. அதில் எம்.ஜி.ஆர். அவர்களின் கட்டுரை மிகச்சிறப்பு. ரொம்ப ரொம்ப நன்றி.
ராகவேந்தர் சார்,
அன்னை இல்லத்திலும், சாந்தி வளாகத்திலும் நடைபெற்ற நடிகர்திலகம் நினைவு அஞ்சலி நிழற்படங்களுக்கு மிக்க நன்றி.
முரளி சார்,
சென்னை, மதுரை, திருச்சி நகரங்களில் நடைபெற்ற நடிகர்திலகம் நினைவுநாள் நிகழ்ச்சித் தொகுப்பு மிக விரிவாக அமைந்திருந்தது. தமிழகமெங்கும் நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள் திரையீடு பற்றிய தொடர்ந்த 'அப்-டேட்'களுக்கு ரொம்ப நன்றி.
சந்திரசேகர் சார்,
தங்கள் தலைமையிலான சமூகநலப் பேரவையின் சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கும் அவை பற்றிய செய்தித்தாள் தொகுப்புகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.
நெய்வேலி வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவாக தங்களின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் மனதை நெகிழ வைத்தன. தெய்வமகன் பதிவு மிக மிக அருமை. காட்சியை நேரில் பார்ப்பது போலிருந்தது.
மறைந்த மஞ்சுளா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தாங்கள் அளித்திருந்த பதிவுகளும் பாடல் காட்சிகளும் மனத்தைக் கனக்க வைத்தன. தங்கள் உணர்வுகளை உணர முடிந்தது. எங்களுக்கும் அதே மனநிலை. இதுகுறித்த என் அடுத்த பதிவு தங்களுக்காக...
-
மறக்க முடியாத "மஞ்சுளா"
முதலில் மஞ்சுளா பற்றிய இப்பதிவை நடிகர்திலகத்தின் திரியில் பதித்தமைக்காக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். மஞ்சுளாவுக்கு தனித்திரி இல்லையென்பதாலும், நான் இத்திரியில்தான் அதிகம் உலவுபவன் என்பதாலும், மஞ்சுளா மீது அதிகப் பற்றும் பாசமும் கொண்ட அன்புச்சகோதரர் வாசுதேவன் அவர்களுக்குப் பிடித்த பதிவாக இருக்குமென்ற நம்பிக்கையாலும் இங்கு பதிக்கிறேன். நான் அதிகம் நேரில் சந்தித்த அதாவது நேரில் பார்த்த நட்சத்திரம் மஞ்சுளா ஒருவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐந்தாறு முறை இருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு முறை தவிர மற்றவையெல்லாம் தற்செயலாக அமைந்தவையே. எல்லா சந்திப்புகளும் 1977 முதல் 81 வரை மட்டுமே.
மஞ்சுளாவை முதலில் பார்த்தது 'சங்கர் சலீம் சைமன்' படப்பிடிப்பின்போது. அப்படத்தில் வரும் 'சிந்துநதிப் பூவே' பாடலின் காட்சிகளை ஏற்கெனவே வேறொரு கடற்கரையில் எடுத்துவிட்டு சில ‘பேட்ச்-அப்’ காட்சிகளுக்காக சென்னை எலியட்ஸ் பீச்சில் எடுப்பதாக கேள்விப்பட்டு நண்பர்கள் ஐந்தாறு பேர் புறப்பட்டுப் போனோம். காலை 10 மணி என்பதாலும், படப்பிடிப்பு நடப்பது பலருக்கு தெரியாததாலும் அவ்வளவாக கூட்டம் இல்லை. ரஜினிகாந்த், விஜயகுமார், ஜெய்கணேஷ், லதா, மஞ்சுளா, முஸ்லிம் பெண்ணாக (சலீம் ஜெய்கணேஷ் ஜோடியாக) நடிக்கும் இன்னொரு நடிகை, மற்றும் நடன பயிற்சியளிக்கும் குழுவினர், மற்றும் படப்பிடிப்புக்குழுவினர் இவர்களுடன் ஒருசில பார்வையாளர்கள் மட்டுமே. அப்போது நட்சத்திரங்களுக்கு 'காரவன் பந்தா' எல்லாம் கிடையாது என்பதால் ஷுட் செய்யப்படும் நட்சத்திரங்கள் தவிர மற்றவர்கள் அங்கு போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலின் கீழேயே நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்தனர். ரஜினிகாந்த் மட்டும் தனது காட்சிகள் இல்லாத நேரங்களில் தனது ஏ.சி. காரில் அமர்ந்திருந்தார். அப்போதுதான் மஞ்சுளா, லதா ஆகியோரை மிக அருகில் பார்க்க முடிந்தது மட்டுமல்ல அவர்களோடு உரையாடவும் முடிந்தது. இருவருமே பந்தா எதுவுமில்லாமல் மிக சரளமாக பேசினார்கள். அப்போது கண்ணாடியில் பார்த்து மேக்-அப் டச் பண்ணிக்கொண்டிருந்த ஜெய்கணேஷ் எங்களைப்பார்த்து, "ஏன்பா, பொம்பளைங்களை மட்டும்தான் கண்டுப்பீங்களா, எங்களையெல்லாம் பார்க்க மாட்டிங்களா?" என்று கேட்க அதற்கு மஞ்சுளாவே பதிலளித்தார். "பெண் ரசிகைகள் வந்தா உங்களைத்தானே மொய்க்கிறாங்க. எங்களைக் கண்டுக்கிறாங்களா? ஏன் இப்படி பொறாமையில வேகுறீங்க?" என்று கேட்க ஜெய்கணேஷ் வாயை மூடிக்கொண்டார். அவரவர்கள் ஷாட் வரும்போது எழுந்துபோய்விட்டு மீண்டும் வந்து அமர்ந்ததும் மறுபடியும் பேசுவார்கள். சுமார் ஒன்றரை மணிக்கு லன்ச் பிரேக் என்று p.மாதவன் அறிவித்ததும் அனைவரும் அவரவர்கள் காரில் அருகில் இருந்த ரிசார்ட்டுக்குப்போக, நாங்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டோம்.
மஞ்சுளாவை இரண்டாம் முறையாகப் பார்த்தது 'பைலட் பிரேம்நாத்' படத்தின் 100-வது நாள் விழாவன்று. (அந்த விழாவில் நானும் நண்பன் விஜியும் பட்டபாட்டை ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கின்றேன்) . அப்படத்தில் மஞ்சுளா நடிக்காத போதிலும் கணவர் விஜயகுமாருடன் வந்திருந்தார். மிக மிக நெருக்கத்தில், கிட்டத்தட்ட உரசுகிற மாதிரி சென்றபோது, நான் 'ஹலோ மேடம்' என்றதும் சிரித்துக்கொண்டே 'ஹலோ' என்றவாறு கடந்து சென்றார். வேறெதுவும் பேச வாய்ப்பில்லை.
மூன்றாவது முறையாக மஞ்சுளாவை பார்த்தது சாந்தியில் "ரிஷிமூலம்" திரைப்படம் ஓடிக்கொண்டிருப்போது. பிற்பகல் மூன்றரை அல்லது நாலு மணியிருக்கும். சாந்தி வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த ‘சிண்டிகேட் பேங்க்’ வாசலருகே நாங்கள் ஐந்தாறு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, விஜயகுமாரின் பியட் கார் வாசலருகே வந்து நின்றது. (எந்தக்கூட்டத்திலும் கண்டுபிடிக்கக்கூடிய வித்தியாசமான பிஸ்கட்கலர் கார் அவருடையது). டிரைவர் சீட்டிலிருந்து விஜயகுமாரும், மறுபக்கம் மஞ்சுளாவும் காரிலிருந்து இறங்கியதும் அருகில் நெருங்கிச்சென்றோம். நாங்கள் ஐந்தாறு பேர்மட்டுமே என்பதால் விஜயகுமார் எல்லோரிடமும் கைகொடுத்தார். (சாந்தி ரசிகர்கள் என்றாலே கலைஞர்கள் மத்தியில் ஒரு கரிசனம் உண்டு). அப்போதிருந்த விஜயகுமாரின் தோற்றமே வேறு. அழகான சுருள் சுருளான தலைமுடியும் சிரித்த முகமுமாக இருப்பார். 'பேங்கில் ஒரு வேலையாக வந்திருக்கோம்' என்று அவராகவே தெரிவித்தார். மஞ்சுளாவை பார்த்து 'ஹலோ மேடம்' என்றதும் பதிலுக்கு எல்லோருக்கும் 'ஹலோ' சொன்னவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு 'ஹலோ நீங்களா' என்றார். எனக்கு ஆச்சரியம். என்னடா இது, இதுக்கு முன்னால் இரண்டு தடவை பார்த்திருக்காங்க. இவ்வளவு ஞாபகசகதியா என்று வியந்தேன். அதற்குள் இருவரும் பேங்கினுள் சென்றுவிட்டனர். 'என்னடா, மேடம் உன்னைமட்டும் தனியா விசாரிக்கிறாங்க' என்று நண்பர்கள் கிண்டலடித்தனர். சுமார் ஐந்து மணிக்கு அவர்கள் வெளியே வந்தபோது, கூட்டம் அதிகமிருந்ததால் யாரிடமும் எதுவும் பேசாமல் காரில் ஏறிச்சென்று விட்டனர்.
நான்காவது முறை மஞ்சுளாவை சந்திக்க நேர்ந்தது சென்னை திருவள்ளுவர் மத்திய பேருந்து நிலையத்தில். சென்னை ஹைகோர்ட் அருகிலிருந்த புறநகர் பேருந்து நிலையத்தில் (இப்போது அந்தப்பேருந்து நிலையம் கோயம்பேடு போய்விட்டது) உறவினர் ஒருவரை திருச்சி செல்லும் பேருந்தில் வழியனுப்ப நான் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக விஜயகுமாரின் கார் உள்ளே நுழைந்தது. அதிலிருந்து விஜயகுமார், மஞ்சுளா, இன்னொரு நடுத்தர வயதுக்காரர் மூவரும் இறங்கினர். (அவரை வழியனுப்பத்தான் இருவரும் வந்திருப்பார்கள் போல). இவர்கள் மூவரையும் கூட்டத்தினர் கூடி நின்று வேடிக்கை பார்க்கத் துவங்கினர். அவர்களது டிரைவர் கார் டிக்கியைத்திறந்து லக்கேஜ்களை எடுத்துச்சென்றார். அவர் எந்த பஸ்ஸில் ஏற்றுகிறார் என்று நான் கவனித்தபோது, தஞ்சாவூர் செல்லும் வண்டியில் ஏற்றுவதைப் பார்த்ததும், எப்படியும் அவர்களும் பஸ்ஸில் ஏறுவார்கள் என்று எண்ணி முன்கூட்டியே தஞ்சாவூர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். நினைத்தபடியே அந்த உறவினருடன் இவர்களும் பஸ்ஸில் ஏற, அவர்களைத்தொடர்ந்து ஏற முயன்ற ரசிகர்களை கண்டக்டர் தடுத்து வாசலில் நின்றுகொண்டார். (கார்த்திக், நீ கில்லாடிடா). விஜயகுமார் சீட் நம்பரைப்பார்த்து அவரது உறவினரை உட்கார வைக்க, நான் வழக்கம்போல மேடம் அருகில் நின்று 'ஹலோ மேடம்' என்றேன். பதிலுக்கு 'ஹலோ' என்றவர், 'எங்கே, தஞ்சாவூருக்கா?' என்றார். 'நான் போகவில்லை, மேடம், நண்பரை வழியனுப்ப வந்தேன்' என்றேன். ‘அப்படியா’ என்று கேட்டுக்கொண்டு அவரது உறவினரிடம் பேசத்தொடங்கினார். அவர் மூச்சுக்காற்று என்மீது படக்கூடிய நெருக்கத்தில் நிற்க, அவர் பேசியபோது மது அருந்தியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். (நான் மது அருந்தும் பழக்கம் இல்லாதவன், இன்றுவரை. அதனால் அது என்ன வகை என்று தெரியவில்லை. பின்னாளில் என் நண்பன் ஒருவன் வாயில் இதே வாடை வந்தபோது மேடம் நினைவு வரவே, அது என்ன வகைஎன்று கேட்க 'ஸ்காட்ச் விஸ்கி' என்று சொன்னான்). நட்சத்திர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்துக்கொண்டேன். அவர்கள் இறங்கும்வரை கூடவே நின்றுவிட்டு அவர்களோடு நானும் இறங்கினேன். தமாஷ் என்னவென்றால், நான் வழியனுப்ப வந்திருந்த நண்பர் ஏறிய பஸ் ஏற்கெனவே போய்விட்டிருந்தது. நண்பரை எப்போதும் பார்த்துக்கொள்ளலாம். மஞ்சுளா மேடத்தைப் பார்க்க முடியுமா?. இதென்ன இவரை மட்டும் அடிக்கடி பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது என்று எண்ணி வியந்திருக்க, அந்த ஐந்தாவது சந்திப்பு நிகழ்ந்தது.
சென்னை தி.நகர் பனகல் பார்க்கிலிருந்து நந்தனம் நோக்கிப்போகும் வெங்கட நாராயணா சாலையில் டாக்டர் சி.ஜி.ரெங்கபாஷ்யம் அவர்களின் ஸ்ரீ ரமணா சர்ஜிகல் கிளினிக்கில் என் மாமாவுக்கு ஹெரனியா ஆப்பரேஷன் நடந்திருந்தபோது நான்தான் உடனிருந்து கவனித்து வந்தேன். அது ஆறு பெட்கள் கொண்ட ஹால். ஒவ்வொரு பெட்டுக்கும் இடையே ஸ்கிரீன் தடுப்புதான். அப்படி ஒருநாள் மாமாவின் பெட்டருகே உட்கார்ந்திருந்தபோது, பக்கத்தில் பெட்டில் ஆபரேஷன் செய்துகொண்டவரைப் பார்க்க ஒரு சினிமா ஸ்டார் வருவதாக வார்ட்-பாய் பரபரத்தார். (ரெங்கபாஷ்யம் பல நட்சத்திரங்களுக்கு குடும்ப டாக்டர் என்பதால் அடிக்கடி நட்சத்திரங்கள் வருவார்கள்). யார் அந்த நட்சத்திரம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வந்து நுழைந்தவர் சட்சாத் மஞ்சுளா மேடம்தான். எனக்கு ஆச்சரியம். என்னடா இது எந்த நட்சத்திரத்தையும் நான் இத்தனை தடவை பார்த்ததில்லையே. இவங்களைப் பார்க்கும் வாய்ப்பு மட்டும் அடிக்கடி, அதுவும் முயற்சிக்காமல் தானாக அமைகிறதே என்று அதிசயித்தேன். இம்முறை விஜயகுமார் வரவில்லை. தனியாக வந்திருந்தார். உடலைக்கவ்விடிக்கும் டைட் பேண்ட் மற்றும் டி ஷர்ட் அணிந்து வந்திருந்தார். என்ன இந்த உடையில் வந்திருக்கிறார் என்று நினைத்தபோது, அவரே அதற்கு விடை சொல்வதுபோல தான் பார்க்க வந்திருந்த பேஷன்ட்டிடம் சொன்னார். "ஷூட்டிங்கிலிருந்து நேராக இங்கேயே வந்துட்டேன் அங்கிள்" என்று சொன்னவர் தொடர்ந்து அவரை நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். கூடை நிறைய ஆப்பிள் பழங்களை டிரைவர் கொடுவந்து வைத்தார். வெளியிலிருந்த யாரும் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க வார்ட்-பாய் கதவை மூடி விட்டார்.
வைத்த கண் வாங்காமல் நான் மஞ்சுளா மேடத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, யதார்த்தமாக எங்கள் பக்கம் அவர் திரும்பியபோது, வழக்கம்போல 'ஹலோ மேடம்' என்று விஷ் பண்ணினேன். சட்டென்று நினைவு வந்தவராக "ஹலோ, நீங்களா? நீங்க எப்படி இங்கே" என்று கேட்க விவரம் சொன்னேன். உடனே கூடையிலிருந்து இரண்டு பெரிய ஆப்பிள்களை எடுத்து என் மாமாவிடம் கொடுத்தவர் "சீக்கிரம் குணமாயிடுவீங்க, ஆல் தி பெஸ்ட்" என்று கை குலுக்கினார். கொஞ்சமும் தாமதிக்காமல் நானும் கையை நீட்ட என்கையையும் பிடித்துக் குலுக்கினார். எனக்கு உடம்பு ஜிவ்வென்று பறப்பது போல இருந்தது. அதிலிருந்து மீளவே சிறிது நேரம் ஆயிற்று. இதற்கிடையே அவரது அங்கிளுடன் பேசிவிட்டு மஞ்சுளா புறப்பட்டார்.
அவர் புறப்பட்டுப்போனதும் மாமா "என்னடா மஞ்சுளா கிட்டே உனக்கு இவ்வளவு செல்வாக்கா? எப்படிடா?" என்று அதிசயித்தார். 'இல்லை மாமா, நாலைந்துமுறை அவங்களை சந்தித்திருக்கிறேன். அதை அவ்வளவு ஞாபகம் வச்சிருக்காங்க' என்று சொன்னேன். அப்போ எனக்கு 21 வயது இருக்கும். இரவு வெகுநேரம் வரையில் தூக்கமில்லை. தூங்கியபின்னும் என்னென்னவோ கனவுகள். இவை நடக்கும்போது அவர் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் நடித்து முடித்து விட்டார். 'நெஞ்சங்கள்' மட்டுமே அப்புறம் வந்தது.
'சங்கர் சலீம் சைமன்' படப்பிடிப்பின் சந்திப்பைத்தவிர மற்ற சந்திப்புகளில் ஒருசில வார்த்தைப் பரிமாற்றங்கள் மட்டுமே. இத்தனை தடவை சந்தித்தேனே தவிர, அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்றோ, போன் நம்பரைக்கேட்டு வாங்க வேண்டுமென்றோ, வீட்டுக்கு வந்து சந்திக்க விரும்புவது பற்றியோ, குறைந்த பட்சம் அவரிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்க வேண்டுமென்றோ தோன்றவில்லையே என்று பின்னர் வருந்தியிருக்கிறேன்.
1984-ல் வேலை கிடைத்தது. அவ்வளவுதான் சென்னையின் அத்தனை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு ஹொசூரில் தூக்கி எறியப்பட்டேன். பின்னர் அண்டை மாநில வாசம். இன்றுவரை என் சென்னையோடு ஒன்ற முடியவில்லை.
நேற்று முன்தினம் மஞ்சுளா மேடத்தின் மறைவுச்செய்தி அறிந்தது முதல் இந்த நினைவுகளே என் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன....
-
டியர் கார்த்திக் சார்,
சிவாஜி சமூகநலப்பேரவையின் பணிகளுக்கு - தங்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி.
தங்களின் மஞ்சுளா நினைவுகள் - பல வருடங்களானாலும் நிகழ்வுகளைக் கோர்வையாக, சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை.
-
டியர் வாசுதேவன் சார்,
மஞ்சுளாவின் மறைவிற்கு, பாடல்களைப் பதிவிட்டு சிறப்பான அஞ்சலியை செலுத்தியுள்ளீர்கள்.
-
-
Quote:
Originally Posted by
kcshekar
sivaji peravai doing commandable job as usual.
Kudos to kc sir and his team.