நன்றி எஸ்வி சார்
என்ன முதலாளி சௌக்கியமா திரைபடத்தில் உள்ள
எகிபுது நாட்டின் இளவரசி பாடலை நினவு கூர்ந்ததற்கு நன்றி
Printable View
நன்றி எஸ்வி சார்
என்ன முதலாளி சௌக்கியமா திரைபடத்தில் உள்ள
எகிபுது நாட்டின் இளவரசி பாடலை நினவு கூர்ந்ததற்கு நன்றி
டியர் கிருஷ்ணாஜி,
ஒரு சின்ன யோசனை. சொல்லலாமா? (சற்று பயத்துடனும் கவனத்துடனும் சொல்ல வேண்டியிருக்கு. இருந்தாலும் நீங்கள் ஏற்கெனவே பர்மிஷன் தந்திருக்கும் தைரியத்தில் சொல்கிறேன்).
நிறைய அள்ளி அள்ளித் தருகிறீர்கள். அதை ஒரு கோர்வையாக்கித் தரலாமே. நிறைய பாடல்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு சரமாரியாக அள்ளி வீசுகிறீர்கள். மலைத்துபபோகிறோம், உங்கள் அபார நினைவாற்றல் கண்டு. அதே சமயம் அவற்றை இன்னும் கொஞ்சம் கோர்வையாக்கித் தந்தால் இன்னும் பல மடங்கு சிறப்பாக அமையும் என்பது என் தாழ்மையான எண்ணம்.
(யோசனை எல்லாம் சொல்றானே என்று கோபப்பட வேண்டாம். "அங்கே" எழுத்துப்பிழை திருத்தியவருக்கே சரமாரித் தாக்குதல்கள். சிவன் ரேஞ்சுக்கு 'என் பதிவிலே குற்றம் கண்டுபிடித்தவன் எவன்?' என்ற எக்காளம். அநேகமாக 'இலங்கை ஆவண பதிப்பாளரின்' விக்கெட்டும் அவுட் என நினைக்கிறேன். நிறைய மன்னிப்பெல்லாம் கேட்டு, நிறைய நன்றியெல்லாம் சொல்லி விட்டார்.
ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து கடைசியில் 'எங்கள் உயிருக்குயிரான முரளி சார்' மீதும் கைவைக்கிறாற்போல் தெரிகிறது. நாங்கள் யாவரும் ஒதுங்கித்தான் இருக்கிறோம். செத்துவிடவில்லை).
அன்பை குறிப்பது அனா ஆசையின் விளக்கமும் ஆவன்ன
பாடலின் லிங்க்
அன்பை குறிப்பது அ'' ன
ஆசையின் விளக்கம் ஆவன்னா
ஆவன்னா
அன்பை குறிப்பது ''அ'' னா
''அ'' ன
ஆசையின் விளக்கம் ஆவன்னா
ஆவன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
'ஈ'யன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
'ஈ'யன்னா
அன்பை குறிப்பது ''அ'' ந்னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
உயிர்க்குயிர் என்பது 'உ' னா
'உ' னா
ஊடலில் கூடல் ஊவன்னா
ஊவன்னா
உயிர்க்குயிர் என்பது 'உ' னா
ஊடலில் கூடல் ஊவன்னா
என்னையே தருவது 'ஏ' னா
'ஏ' னா
ஏக்கமோ ஏக்கம் 'ஏ'யன்னா
'ஏ'யன்னா
லா லலலல் லா லா
லா லலலலல்ல லா லா
ஐக்கியப்படுவது 'ஐ' யன்னா
'ஐ' யன்னா
ஒழுக்கத்தை உணர்த்தும் 'ஒ' னா
'ஒ' னா
ஐக்கியப்படுவது 'ஐ' யன்னா
ஒழுக்கத்தை உணர்த்தும் 'ஒ' னா
ஓர் முடிவெடுப்பது 'ஓ' வன்னா
'ஓ' வன்னா
ஔடதம் நோய்கென 'ஔ' வன்னா
'ஔ' வன்னா
ஃதே காதலா 'ஃ' னா
'ஃ' னா
ஹும் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆனா ஆவன்னா இனா
ஆனா ஆவன்னா இனா
லலல லலல் லலலல் லலல லா
உள்ளத்தில் லாபத்தை கூட்டிவிடின்
உண்மை காதல் கைகூடிவிடும்
கள்ளத்தை எண்ணத்தில் கழித்துவிடின்
கற்பு நெறி ஒன்றே மிச்சப்படும்
இல்லற வாழ்க்கையை வகுத்திவிடின்
இருவரின் பங்கென்ன புரிந்துவிடும்
வெள்ளம் போல் ஆசையை பெருக்கிவிடின்
வேலியிட்டு முக்கோணம் தடுத்துவிடும்
அன்பை குறிப்பது ''அ'' ந்னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
அன்பை குறிப்பது ''அ'' ன
ஆசையின் விளக்கம் ஆவன்னா
https://www.youtube.com/embed/Fa0SHu8GZtA
கிருஷ்ணா சார்,
அழகான 'தேன் கிண்ணத்'துல இனிமையான பாடல்களை இட்டு விருந்தளித்தமைக்கு நன்றி!
எனக்கென்னவோ 'தேன் கிண்ணம்' படம் ஒரு 'கிச்சு கிச்சு'தான். டக்கென்று சிரிப்பு வராது.
தேங்காய் கொஞ்சம் கலகலக்க வைப்பார்.
சுருளிக்கு ஜோடியாக விஜயசந்திரிகா டைட் பேண்ட்டெல்லாம் போட்டுகிட்டு கொடுமைப்படுத்துவார்.
'போடணும்... நல்லா போடணும்'.... கொஞ்சம் தத்துவத்தையும் சொல்லும்.
இது போன்ற படக் கலவைப் பாடல் 'நவராத்திரி' திரைப்படத்தில் பைத்தியக்கார ஹாஸ்பிடல் காட்சியில் வரும். சாவித்திரி, முத்துலஷ்மி, மனோரமா இன்னும் பலர் பங்கு கொள்வார்கள்.
அதே போல 'அன்னை' திரைப்படத்தில் லைலா என்று ஒரு பாட்டு. நாகேஷும், சந்திரபாபுவும் விதவிதமான பாட்டுக்கள் பாடி கூத்தடிப்பார்கள்.
'கல்யாணமாம் கல்யாணம்' படத்திலும் சோ, தேங்காய், ஜெய், ஜெயசித்ரா கலந்து கொள்ளும் கதம்பப் பாடல் ஒன்று உண்டு.
'தேன் கிண்ணம்' படத்தின் 'உத்தரவின்றி உள்ளே வா' நகைச்சுவைக் கதம்பப் பாடல்.
http://www.youtube.com/watch?feature...&v=WD6pLzBmJ6s
கார்த்திக் சார்
பிட் பிட் ஆ நினைவில் வருகிறது சார் என்ன பண்றதுன்னு தெரியலை
நடுவில் வேறு வேலையும் வந்து விடுகிறது .disturb ஆகி விடுகிறேன்
ப்ளீஸ் சார் . எப்படியும் ஒரு கோர்வையாக கொண்டு வர முயற்ச்சி செய்கிறேன் . நீங்கள் தாரளமாக சொல்லலாம் சார் .
நிச்சயமாக நான் தவறாக எடுத்து கொள்ள (கொல்ல) மாட்டேன்
'அன்னை' திரைப்படத்தில் வரும் கதம்பப் பாடல்' ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு லைலா'
http://www.youtube.com/watch?v=Rt-6pWA02QE&feature=player_detailpage
vasu sir
காமெடியை விட விஜயலலித செம 'தமாஷ்'
வாசு சார்
நீங்கள் சொல்றது 100 சதவிகிதம் கரெக்ட் .
நவராதிரியிலும் அன்னை திரைப்படத்திலும் கொஞ்சம் பாடல் வரிகளை மாற்றி இருப்பார்கள் என்று நினவு
தேன் கிண்ணம் திரை படத்தில் அந்த பாடல்களை அப்படியே உபயோகபடுத்தி இருப்பதாக நினவு . அதனால் தான் இது ஆரம்பம் என்று எழுதினேன்