ராகவேந்திர சார் - நானே ராஜா அலசல் மிகவும் அருமை - எவரும் நான் ராஜா என்று இனி சொல்ல முடியாதபடி செய்து விட்டீர்கள்
Printable View
ராகவேந்திர சார் - நானே ராஜா அலசல் மிகவும் அருமை - எவரும் நான் ராஜா என்று இனி சொல்ல முடியாதபடி செய்து விட்டீர்கள்
வாங்க ரவி
நலமா
நலமே ஜி --- உங்கள் "திரையில் பக்தி " மிகவும் நெகிழ வைக்கின்றது - மிகவும் சிரமம் எடுத்துக்கொள்கிறீர்கள்
Thanks to winwallpapers.net
http://www.winwallpapers.net/w1/2013...lpapers-14.jpg
http://www.winwallpapers.net/w1/2013...941-Photos.jpg
http://www.winwallpapers.net/w1/2013...llpapers-2.jpg
http://www.winwallpapers.net/w1/2013...lpapers-15.jpg
http://www.winwallpapers.net/w1/2013...llpapers-8.jpg
http://www.winwallpapers.net/w1/2013...lpapers-12.jpg
http://www.winwallpapers.net/w1/2013...lpapers-16.jpg
ரவி சார்,
வாங்க..ஊர்ப் பயணமெல்லாம் நல்ல படியா முடிந்ததா?
கடலூர் பக்கம் வந்தவர் எனக்கு ஒரு போன் பண்ணியிருகக் கூடாதா? கண்டிப்பாக வந்திருப்பேனே.
வைத்தீஸ்வரன் கோவில் சென்று தரிசித்தீகளா? நெய்வேலியில் இருந்து பக்கம். கோபால் சாரும், நானும் இரண்டு முறை போய் வந்தோம். செம ஜாலியான ட்ரிப்.
ஜி! 'பொப்பிலி யுத்தம்' பாடல் இப்போதுதான் பார்த்தேன். விஜி நன்றாகவே ஆடுகிறார். இளம் வயதில் அழகாகவே இருப்பார். ஆனால் போகப் போக முகம் மாறி முகத்தில் ஆண் தன்மை சற்று கலந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஊட்டி வரை உறவு பட ஷூட்டிங்கில் நடிகர் திலகம் விஜியை கேமிராவினால் படம் பிடித்துக் கொண்டு இருப்பாராம்.
பாடலும் நன்றாக இருந்தது. Thanks.
ஜி பாடல் உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி
ஜி!
இசையரசி பாடிய இன்னொரு கிராம பாணி பாடல். கொஞ்சம் வெளியே தெரியாத பாடல்.
http://cdn.600024.com/store/image/ca...ai-500x500.jpg
நடிகர் திலகம் அமர்க்களப்படுத்திய 'குருதட்சணை' படத்தில் ஜெயா மேடம் பாடும் பாடல்.
'சின்னஞ்சிறு உலகம்' படத்தில் 'மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சப் புள்ளையாட்டம்' அப்படி என்று ஒரு பாடல் வருமே! அது போலவே மேலே சொன்ன பாடலும் இருக்கும்.
'அடி ஆயி ஆயி ஆயி ஆயி... உய்யா' என்று உற்சாகத்துடன் அற்புதமாக பாடலைத் தொடங்குவார் சுசீலா அம்மா. 'அம்மா'வுக்கும் பொருத்தமாக இருக்கும்.
'ஆத்தோரம் மரமிருக்கு... காத்தாட எடமிருக்கு
ஆளான பொண்ணுரிக்கேன்... கண்ணு மச்சான்
கொஞ்சம் அப்படி இப்படி பார்த்தாக்க என்ன மச்சான்
மாசி மக சந்தையிலே மச்சான் ஒன்ன பாக்கையிலே
மனச விட்டு பேசினேனே கண்ணு மச்சான்
அந்த மர்மம் கூட புரியலையா சொல்லு மச்சான்
ஜல்லிக்கட்டு காளைகளை அள்ளிக் கட்டும் கைகளுக்கு
என்னக் கட்டத் தெரியலையா கண்ணு மச்சான்
இன்னும் என்ன சொல்லி புரிய வைப்பேன் சொல்லு மச்சான்'
செம பாட்டுஜி. நடிகர் திலகம் என்னா முறைப்பு... விறைப்பு! ஜெயா விரட்டி விரட்டித் துரத்துவார்.
'தூங்கையிலே உன் நினைப்பு'
என்று சுசீலா அம்மா 'ஹஹஹஹாங் ...ஹஹஹஹாங்... ஹாங்' பெருமூச்சு விடுவது போல பாடுவது அப்படியே அள்ளும் ஜி.
உங்களுக்குத் தெரியாததா? இருந்தாலும் இப்ப ஒரு தபா கேளுங்க. இப்படத்திற்கு இசை புகழேந்தி என்பது இன்னொரு விசேஷம்.
http://www.inbaminge.com/t/g/Guru%20Dhakshinai/
கானகத்தில் மரக்கிளையில் கருங்குயில்கள் இன்னிசையாய்
கானத்தைப் பாடுவதை கேட்டந்த சிறுகுருவி
பானகமாய்ப் பண்ணிசைக்கத் தெரியாத சின்னதுதான்
படபடத்துத் தன்னினைவில் ஊடித்தான் தேடுகையில்
வானமது கூரையென வருவதுவும் வரட்டுமென
…வஞ்சிமகள் தானொருத்தி வாழ்ந்திருந்த போதினிலே
மோனத்தில் மூழ்கித்தான் சோகத்தில் இருந்தசிலர்
..வாழ்வினையே மாற்றியது நினைவினிலே வந்ததுவே..
in my next post :)