Thalaivar's 60 on Dec 10.
http://onlysuperstar.com/?p=9541
SanthEgam theernthathu. Thalaivar's YOB is 1950 and not 1949.
Printable View
Thalaivar's 60 on Dec 10.
http://onlysuperstar.com/?p=9541
SanthEgam theernthathu. Thalaivar's YOB is 1950 and not 1949.
Rajinikanth Legend award for Dharam and HemaQuote:
Originally Posted by Nerd
2010-Dec-08
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1565
டிசம்பர் 10-ல் ரஜினி – லதா தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம்!Quote:
Originally Posted by Cinemarasigan
2010-Dec-08
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1564
Orkut Fans at Karunai Illam Thalaivar's Birthday Celebrations 2010-Dec-09
Today we (Orkut SSRK Army) celebrated our Thalaivar's 61st BIRTHDAY in Advance @ KARUNAI ILLAM with ALL THALAIVAR fans for the People who are in need and with Physically Challenged persons... HAPPINESS SPREAD-ED THE ENTIRE ATMOSPHERE only cos the name Called RAJINIKANTH.
GREATEST FAN (Mrs. GOWERI) who is Following Thalaivar's Each n Every Moment for the PAST 20 Years!!!!!!!!
She LOVES THALAIVAR to the CORE... the Way she Express her Happiness abt his SUPERSTAR just makes me to shed Tears... Also She has Met Thalaivar in many occasions... This is not alone the Big part... She got her own Personal ALBUM of Thalaivar's Collections... then Here CUTE n SWEET Children's( a Teenage Girl n a Handsome School Boy). BOTH of them are in the SAME BLOOD like her towards Thalaivar...MAIN THING- She has Got a Pierced TATTOO on her hand which states "MY GOD RAJINIKANTH"- We salute U madam.
SHIVA (moderator of Orkut Group) took them to Thalaivar's home and got Permission from the Guards there to take a Photo OUTSIDE his House.... Never Felt SO CLOSE like this... I Felt THALAIVAR's PRESENCE in my Nerves.... WoWWWWWWWWW... SOON i hope to Take a Photo with Thalaivar also... tats a DREAM COME TRUE for all of US:)
- Photos and Descriptions by Andrew (Orkut Rajini Fan group member)
http://www.orkut.com/Main#Community?cmm=104675
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1567
ரஜினியும் இயக்குனர்களும் - Birthday Special 1
2010-Dec-09
சிவாஜிராவ் என்கின்ற தனி மனிதன் இன்று ரஜினிகாந்தாக வானளவு வளர்ந்து விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு அவரது கடின உழைப்பு, தொழில் பக்தி, சமயோகித புத்தி, முடிவெடுக்கும் திறன், அடக்கம், அதிஸ்டம், ஆண்டவன் ஆசி போன்ற பல அககாரணிகள் முக்கிய பங்குவகித்தாலும்; ரஜினியை இயக்கிய இயக்குனர்கள், தொழில்நுட்பப கலைஞர்கள், சக நடிகர்/நடிகையர், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், அவரது நண்பர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் 'கோடான கோடி' ரசிகர்கள் போன்ற புறக்காரணிகளும் ரஜினிகாந்தின் அசுர வளர்ச்சியில் மறக்கப்பட/மறுக்கப்பட முடியாதவர்கள் என்பது வெளிப்படையான உண்மை. அந்தவகையில் சிவாஜிராவை ரஜினிகாந்தாக மாற்றி இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க உதவிய புறக்காரணிகளை பற்றியதே இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்.
ரஜினியின் வெற்றியில் பங்காற்றிய புறக்காரணிகளில் இயக்குனர்களின் பங்கு மகத்தானது, அப்படி ரஜினியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இயக்குனர்களையும் அவர்களது பங்களிப்பையும் சற்று நினைவு கூருவோம்.
கே.பாலச்சந்தர்
சினிமா இன்ஸ்டிட்யூட்டில் படிப்பை முடித்துவிட்டு சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து நின்ற சிவாஜிராவ் என்னும் 25 வயது இளைஞனை அழைத்து (ஒருதடவை இன்ஸ்டிட்யூட்டில் ஒருசில நிமிடங்கள் சந்தித்து வாய்ப்பு கேட்ட ஞாபகத்தில்) அவனை சில டெஸ்ட்களை வைத்த பின்னர் ஒரேயடியாக மூன்று திரைப்படங்களுக்கு வாய்ப்பு தருவதாக வாக்களித்தவர்தான் கே.பாலச்சந்தர். அந்த மூன்று திரைப்படங்களில் ஒன்று 'அபூர்வ ராகங்கள்', இரண்டாவது 'மூன்று முடிச்சு', மற்றையது ஒரு தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய வேடம் (அவள் ஒரு தொடர்கதையின் மறு ஆக்கத்தில் ஜெய்கணேசின் வேடமென்று நினைக்கிறேன்).
ஒரே தடவையில் மூன்று இன்ப அதிர்ச்சிகளை சிவாஜிராவிற்கு வழங்கிய k.பாலச்சந்தர் சிவாஜிராவின் முதல்ப்படமான அபூர்வராகங்களில் அவரது பெயரை தனது 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான 'ரஜினிகாந்த்' பாத்திரத்தின் பெயரை சூட்டினார். அந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான 'ஸ்ரீகாந்தின்' பெயரை சற்று நாட்களுக்கு முன்னர் இன்னொருவருக்கு சூட்டியதால் சிவாஜிராவிற்கு 'ரஜினிகாந்த்' என்னும் பெயர் கிடைத்தது. ஸ்ரீகாந்திற்கு பெயர் சூட்டுமுன்னர் சிவாஜிராவ் கே.பியை சந்தித்திருந்தால் இன்று உலகம் வியக்கும் 'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்' என்று அழைக்கப்படும் சிவாஜிராவ் 'சூப்பர்ஸ்டார் ஸ்ரீகாந்த்' என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருப்பார்.
உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஸ்டையிலான மானரிசம் என்பன கே.பியால் ரஜினிகாந்திற்கு அதுவரை மக்கள் பார்த்திராத வண்ணம் புதுமையாக வழங்கப்பட்டது. மூன்று முடிச்சு திரைப்படத்தில் வில்லனாக வந்தாலும் ரசிகர்களை "யாரிந்த பையன்?" என்று புருவத்தை உயர்த்தப் பண்ணிற்று. பின்னர் 'அவர்கள், நினைத்தாலே இனிக்கும், தப்புத்தாளங்கள் போன்ற திரைப்படங்களில் ரஜினியை இயக்கிய கே.பி நீண்ட நாட்களுக்கு பின்னர் இயக்கிய திரைப்படம்தான் 'தில்லு முல்லு'.
நகைச்சுவை என்னும் புதிய பரிமாணத்தில் ரஜினியை ரசிகர்களுக்கு வெளிக்காட்டிய திரைப்படமான 'தில்லு முல்லு'த்தான் ரஜினி கே.பி இணைந்த இறுதிப்படம், ரஜினியை வைத்து கே.பி இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் நடித்திருந்த கமல் ரஜினியுடன் இணைந்து கடைசியாக நடித்ததும் 'தில்லு முல்லு' திரைப்படம்தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
அதன் பின்னர் இயக்குனராக பாலச்சந்தர் ரஜினியுடன் இணையாவிட்டாலும் ஆசானாகவும், தயாரிப்பாளராகவும், விமர்சகராகவும் இன்றுவரை ரஜினியுடன் பக்கபலமாக இருந்து வருபவர். குசேலன் தயாரிப்பு விடயத்தில் ரஜினி ரசிகர்கள் பலருக்கு இவர்மீது கோபம் இருந்தாலும் சிவாஜிராவை ரஜினிகாந்தாக எமக்கு அறிமுகப்படுத்திய பாலச்சந்தர்மீது மரியாதை குறையவில்லை என்பதுதான் உண்மை.
எஸ்.பி.முத்துராமன்
புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த நடிகர் சிவகுமாரை வில்லனாக்கி, வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய எஸ்.பி.முத்துராமன் அவர்கள்தான் ரஜினியை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர், ரஜினியைவைத்து 25 திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.எம் தான் இளையராஜாவை அதிக திரைப்படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புக்கொடுத்த இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'பிரியா', 'ஆறிலிருந்து அறுபதுவரை' என வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன்தான் ரஜினியை ஒரு அக்ஷன் ஹீரோவாக, வணிக சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாற்ற வித்திட்ட ரஜினியின் முதல் மசாலா திரைப்படமான 'முரட்டுக்காளை'யை இயக்கினார். அதன் பின்னர் ரஜினியின் வணிக சினிமாவின் முக்கிய மைல் கற்களான பாயும்புலி, நல்லவனுக்கு நல்லவன், போக்கிரி ராஜா, நான் மகானல்ல, mr.பாரத், வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இந்தமாதிரி வணிகரீதியான திரைப்படங்களுக்கிடையில் எங்கேயோ கேட்டகுரல், ஸ்ரீ ராகவேந்திரா, நெற்றிக்கண் போன்ற வித்தியாசமான நடிப்பு திறமையுள்ள திரைப்படங்களையும் ரஜினிக்காக எஸ்.பி.எம் இயக்கியுள்ளார்.
'முரட்டுக்காளை' என்றொரு திரைப்படத்தில் நடித்திருக்காவிட்டால் ரஜினி என்கின்ற 'நல்ல நடிகனை' இழந்திருக்க மாட்டோம் என்று சிலர் அறிவுபூர்வமாக பேசுவதாக நினைத்து புலம்புவது வழக்கம். ஒருவேளை இவர்கள் சொல்வதுபோல ரஜினி அன்று தனது பாதையை வணிகரீதியாக மாற்றாமல் இருந்திருந்தால் ரஜினி என்கின்ற நடிகர் வணிகரீதியில் இன்று ஒரு சாதாரண நடிகராகவே இருந்திருப்பார், இதைத்தான் ஆறிவுஜீவிகள் விரும்புகிறார்களே அன்றி ரஜினியின் குணச்சித்திர நடிப்பை அல்ல, இதுதான் உண்மை. ரஜினியின் வணிக சினிமாவுக்கான சரியான தேர்வு அவரை எப்படி உச்சத்துக்கு கொண்டுபோனதோ; அதேபோல பாமர மக்களுக்கு மகிழ்ச்சியான, சந்தோசமான சினிமாவையும் கொடுத்தது. அந்த முடிவுதான் இன்று சர்வதேச அளவில் தமிழ் சினிமாவிற்கான அங்கீகாரமாக ஒரு அடையாளமாக மாறியது. அந்தவகையில் எஸ்.பி.எம்மின் முரட்டுக்காளை ரஜினியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமைல்கல்.
மகேந்திரன்
ரஜினியின் திரைப்படங்களில் மிகவும் முக்கியதிரைப்படமான 'முள்ளும் மலரும்' திரைப்படத்தை இயக்கியவர் என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் அதை அவர் இயக்கி முடிப்பதற்குள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல!!! படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியார் எழுத்தாளர் உமா சந்திரனுடைய கதையை படமாக்கித்தருமாறு மகேந்திரனிடம் கேட்டுக்கொண்டதற் கிணங்க திரைப்படத்தை இயக்க சம்மதித்த மகேந்திரன் போட்ட ஒரே கண்டிஷன் என்ன தெரியுமா? "ரஜினி நாயகன் என்றால் இயக்குகிறேன் இல்லையென்றால் நான் இயக்க மாட்டேன்" என்பதுதான்.
மகேந்திரனது திறமையை கைவிட மனமில்லாத தயாரிப்பாளர் விரும்பியோ விரும்பாமலோ ஒப்புக்கொள்ள 'முள்ளும் மலரும்' திரைப்படத்தை மகேந்திரன் இயக்கினார். ஒருசில காட்சிகளை இயக்குவதற்கு பணம் போதாதென்று கேட்டபோது; அதுவரை இயக்கிய படத்தின் காட்சிகளில் வசனங்கள் குறைவாக இருக்கின்றன என்ற காரணத்தாலும் ரஜினியை பிடிக்காத காரணத்தாலும் பணம் தர மறுத்துவிட்டார். பின்னர் மகேந்திரன், நடிகர் கமல்ஹாசன் போன்றோரது வேண்டுகோளால் பணத்தை கொடுத்த தயாரிப்பாளருக்கு படம் வெளியாகிய முதல் இரண்டு வாரமும் திரையரங்கிற்கு மக்கள் அவ்வளவாக போகாதது அவர் எதிர்பார்த்தது போலிருந்ததனால் படத்திற்கு விளம்பரம் செய்யவும் மறுத்துவிட்டார்.
ஆனால் அடுத்தடுத்தவாரங்களில் word of mouth மூலம் காட்டுதீபோல பரவிய நேர்மறையான விமர்சனங்கள் முள்ளும் மலரும் திரைப்படத்தை 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடுமளவிற்கு கொண்டுவந்தது. முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினியின் நடிப்பை அன்றுமுதல் இன்றுவரை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதேபோல 'ஜானி' திரைப்படத்தில் நேரெதிரான இரண்டு வேடங்களை ரஜினிக்கு வழங்கிய மகேந்திரன் மென்மையான காதல் காட்சிகளில் நடிப்பதிலும் ரஜினி 'கிங்' என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தினார். தமிழ் சினிமாவின் வரலாற்றிலும் இரண்டு சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனர் மகேந்திரன் & ரஜினி கூட்டணி தமிழ் சினிமாவின் மறக்கப்பட/மறுக்கப்பட முடியாத கூட்டணி என்றால் அது மிகையில்லை.
சுரேஷ் கிருஷ்ணா
ரஜினியின் உச்ச 'மாஸ்' அந்தஸ்தை இன்றுவரை ரஜினியால் தக்கவைத்திருக்க முடிகிறதென்றால் அதற்க்கு முக்கிய காரணமான திரைப்படம் 'பாட்ஷா'தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அண்ணாமலையில் ரஜினியின் ஹீரோயிசத்தின் உச்சத்தை தொட்ட சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷாவில் அதை வேறு ஒரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றிருந்தார் என்பதே உண்மை. ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்றாற்போல் இவர் ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாமலை, பாட்ஷா, வீரா திரைப்படங்கள் ரஜினியின் நட்சத்திர அந்தஸ்தை அதிகரித்த திரைப்படங்கள்.
பாபா திரைப்படத்தை இயக்கியது சுரேஷ்கிருஷ்ணா என்றாலும் பாபாவின் சறுக்களுக்கு அவர் முழுக்காரணமாக முடியாது. ரஜினியின் கதை, திரைக்கதையில் பாலகுமாரனின் வசனத்தில் பாபாவை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா முழுமனதுடன் பாபாவில் ஈடுபடவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது!!! ரசிகர்களின் நாடித்துடிப்பையும் ரஜினியின் 'மாஸ்' பவரையும் நன்கு அறிந்துவைத்துள்ள சுரேஷ்கிருஷ்ணாவிற்கு ஒருவேளை நாளை ரஜினியின் திரைப்படமொன்றை இயக்கம் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவரால் சிறப்பாக ரஜினியை இயக்கமுடியும் என்று நம்பலாம்.
p.வாசு
"அண்ணன் அவ்ளோதான்" என்று இருந்தவர்களுக்கு அண்ணன் எப்போதுமே டாப்புத்தான் என்பதை சந்திரமுகி மூலம் நிரூபித்தவர் p.வாசு. ரஜினிக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் ரஜினி ரசிகர்களுக்கும் படம் வெளிவருவதற்கு முன்னர் சற்று பதற்றமாக இருந்த திரைப்பட மென்றால் அது சந்திரமுகிதான். 'பாபா' சரியாகப்போகாத நிலையில் மூன்றாண்டுகளுக்கு பின்னர் ரஜினி நடிக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதை அன்று ஊகிக்க முடியவில்லை; படத்தின் பெயர்வேறு பெண்ணின் பெயர் என்பதால் இன்னும் கொஞ்சம் பதட்டம் படம் வெளியாகும்வரை இருந்தது.
ஆனால் அறிமுகக்காட்சியில் கதிரை நுனிக்கு அழைத்துவந்த p.வாசு இறுதிக்காட்சியில் வேட்டையனாக தலைவர் அவதாரமெடுக்கும் காட்சியில் திரையரங்கையே அதிரச்செய்திருந்தார். பக்கா கமர்சியல் திரைப்படம் என்றில்லா விட்டாலும் ரஜினி ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் கதைக்குள் கொண்டுவந்து சந்திரமுகியை சிறப்பாக இயக்கியிருப்பார் p.வாசு. இனிமேல் படம் நடிப்பாரா? மாட்டாரா ? என்று ஏங்கிய ரசிகர்களுக்கு மீண்டும் 'ரஜினி கவுண்ட்டவுன் ஸ்டாட்' என சொல்லாமல் சொல்லிய சநிதிரமுகியை இயக்கிய p.வாசு உழைப்பாளி, பணக்காரன், மன்னன் போன்ற வணிகரீதியான வெற்றித் திரைப்படங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக குசேலன் திரைப்படத்தில் மொழிமாற்றம் செய்யும்போது சில தவறுகளை p.வாசு செய்திருந்தாலும் முழுக்கமுழுக்க ரஜினிபடமாக அது இருந்திருந்தால் அதன் நிறம் வேறுமாதிரி இருந்திருக்கும். குசேலன் சரியாக போகாதற்கு p.வாசு மட்டுமே காரணமென்று சொல்லமுடியாது. சண் நெட்வேர்க்கின் சதி, கவிதாலயாவின் பேராசை, பிரமிட் சமீராவின் பிழையான வர்த்தக அணுகுமுறை, போன்றவைதான் குசேலனின் சரிவிற்கு மிக முக்கியமானகாரணிகள் என்பதால் வாசுவை மட்டும் குறைசொல்வது தவறு. எது எப்படியாக இருந்தாலும் ரஜினிக்கு 80 % (4:1) சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் p.வாசு என்பதால் ரஜினியின் வெற்றி படிகட்டுகளில் p.வாசுவின் பாங்கு மறக்கப்பட/மறுக்கப்பட முடியாதது என்றால் அது மிகையில்லை.
கே.எஸ்.ரவிக்குமார்
ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் என அடையாளப்படுத்தப்படும் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியின் இரண்டு History re writer திரைப்படங்களை இயக்கியவர். கமலுக்கு ஐந்து திரைப்படங்களை இயக்கினாலும் ரஜினியின் ஆஸ்தான இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமார் இன்னும் அறியப்படுகின்றார் என்றால் அந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் வீச்சை நீங்கள் உணரலாம். ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்களை உருவாக்கிய 'முத்து' திரைப்படமென்பது வெளிப்படை உண்மை. அந்தவகையில் சர்வதேச ரீதியில் ரஜினிக்கு ரசிகர்கள் உருவாகுவதற்கு கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய காரணியாக இருந்துள்ளார் என்று சொல்லலாம்.
படையப்பாவில் ஆறு படையப்பனாக ரஜினியை பட்டையை கிளப்பவைத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது ரஜினியின் அனிமேஷன் திரைப்படமான 'ஹரா'வை இயக்குகிறார். 'சௌந்தர்யா அஷ்வினிடமிருந்து' ரவிக்குமாருக்கு கைமாறிப் போன ஹரா; பாதி 'அனிமேஷன்' மீதி 'ரியல் ரஜினி' என அவதார் போன்று இருக்குமென்று கூறப்படுகிறது. ரஜினியை கையாள்வதில் வல்லவரான ரவிக்குமார் 'ஹரா'வை வெற்றியாக்கி கொடுப்பார் என நம்பலாம்.
ஷங்கர்
ஷங்கர் பற்றி புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை எ&#
The article is truncated due to its length. Here is the remaining part:
ஷங்கர்
ஷங்கர் பற்றி புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை என்றாலும் தன்னைவிட ஒருவரை ரஜினி அதிகமாக நம்பினார் என்றால் அது ஷங்கர் ஒருவர்தான் என்று சொல்லலாம். சிவாஜியில் ரஜினியின் நம்பிக்கையை சம்பாதித்த ஷங்கர்மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையில் எந்திரனில் தன்னையே ஷங்கரிடம் முழுமையாக ஒப்படைத்திருந்தார் ரஜினி; அதற்க்கான பலன் தான் 'இந்தியாவிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம்' என்கின்ற சாதனையை படைத்த எந்திரனின் இமாலய வெற்றி.
ஷங்கருக்கு ரஜினியி மாஸ் பவர் நன்கு தெரியும் என்பதனை 'மொட்டை பாஸ்' மற்றும் 'சிட்டி வேஷன் 2.0' கேரக்டர்கள் மூலம் நிரூபித்திருப்பார். ஷங்கருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை ரஜினி இல்லாமல் எந்திரனை விட பிரமாண்டமாக ஒரு படத்தை எப்படி எடுப்பதென்பதுதான்!!! அதுக்கு ஒரேவழிதான் இருக்கு அது என்னன்னா......ஷங்கர் கிட்டயே சொல்லுவம் :-) " என்திரனைவிட பெரிய பட்ஜட் படமா? கவலையை விடுங்க ஷங்கர் சார், அதுதான் ரஜினிசார் இருக்கிராரெல்ல; அப்புறமென்ன? அவரையே அப்ரோச் பண்ணுங்க, ஆனா தலைவருக்கு படத்தில ரொம்ப கஷ்டம் குடுக்காதீங்க, படத்தையும் 1 வருசத்தில முடிச்சுக்கொங்க", சரிதானே?
மணிரத்தினம் அவர்கள் 'தளபதி' திரைப்படத்தை மட்டுமே இயக்கியிருந்தாலும் ரஜினியின் திரை வாழ்க்கையில் 'தளபதி' ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அதே போல ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களான '16 வயதினிலே' திரைப்படத்தை கொடுத்த பாரதிராஜா, 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' திரைப்படத்தை கொடுத்த ஸ்ரீதர், பில்லாவை அற்ப்புதமாக ரீமேக் செய்த ஆர்.கிரிஷ்ணமூர்த்தி போன்றோரும் ரஜினியின் வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் முதன்மையானவர்கள்.
இவர்கள் அனைவருக்கும், இவர்களைவிட பெயர் குறிப்பிடாத ரஜினியை இயக்கிய அனைத்து இயக்குனர்கள் 'ரஜினி ரசிகர்கள்' சார்பில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவில் மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கின்றேன்.
Thanks, Nerd! Here's the link...
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1566
From Vikatan:
சீக்கிரமே வருவேன்... நல்லதே நடக்கும்! : ரசிகனிடம் ரஜினி சத்தியம்
ஒவ்வொரு வருடமும் 'டிசம்பர் 12’ தமிழக காலண்டரில் சிறப்புத் தினம். அது ரஜினியின் பிறந்த நாள்!
'ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?’ என்கிற பட்டிமன்றம்தொடங்கி, அடுத்த பட எதிர்பார்ப்பு வரை 'பாட்ஷா’வுக் குப் பிறகான அனைத்து ரஜினி பிறந்த நாட்களுமே சென்சேஷன்தான். இந்த முறை ஒரு தந்தையாகத் தன் குடும்பக் கடமைகள் நிறைவேற்றிய திருப்தி, 'எந்திரன்’ வெற்றி என உச்சக்கட்ட உற்சாகச் சூழல் ரஜினியைச் சுற்றி. ஆனால், சௌந்தர்யா திருமணத்துக்கு 'ரசிகர்கள் வர வேண்டாம்’ என்று ரஜினி அறிவித்ததும், அதைத் தொடர்ந்த சர்ச்சைகளும் திருஷ்டி. திருமணத்துக்கு என்று இல்லை, பல வருடங்களாகவே ரஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பது இல்லை என்பதுதான் ரசிகர்களுக்கு அவர் மீதான ஆகப் பெரிய அதிருப்தி.
இந்தச் சூழலில் ரஜினியைத் தனியே சந்திக்கும் வாய்ப்பு ஒரு ரசிகனுக்குக் கிடைத்தால்? சந்தித்து, ரஜினியிடம் வகைதொகை இல்லாமல் கேள்விகளும் கேட்டுத் திரும்பி இருக்கிறார், பழனி பாட்ஷா என்கிற ரஜினி ரசிகர்.
சமீபத்தில், துரை தயாநிதியின் திருமணத்துக்காக மதுரைக்குச்சென்ற ரஜினியை கும்பலாகச் சூழ்ந்து கொண்டார்கள் ரசிகர்கள். ரஜினியின் கார் வேகம் எடுக்க, பின்னாலேயே தொடர்ந்து ஓடி வந்த கார்த்திகேயன் என்ற வாலிபர் விபத்தில் பலியானார். அந்த இளைஞரின் குடும்பத்தை ரஜினி சந்திக்க விரும்ப... அவர்களை அழைத்து வரும் பொறுப்பு மன்றத் தலைவர் சுதாகரால், பழனி பாட்ஷா விடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 4-ம் தேதி காலை 11 மணிக்கு கார்த்திகேயனின் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு ராகவேந்திரா மண்டபத்தில் ஆஜரான பழனி பாட்ஷா, ஒட்டுமொத்த ரசிகர் களின் ஆதங்கத்தையும் அங்கே ஒலித்து இருக்கிறார். பழனி பாட்ஷாவைச் சந்தித்தேன்.
''கார்த்திகேயனின் குடும்பத்தி னரைப் பார்த்ததுமே தலைவருக்குக் கண்கள் கலங்கிவிட்டன. கார்த்தி கேயனின் இளைய சகோதரியைப் பார்த்து, 'நீ என்னம்மா படிக்கிற?’ன்னு கேட்டார். 'பி.எஸ்ஸி-யோட நான் படிப்பை நிறுத்திட்டேன் சார். இப்போ வீட்ல வரன் பார்த்துக்கிட்டு இருக்காங்க’ன்னு அந்தப் பொண்ணு சொல்ல, 'வெரிகுட்... வெரிகுட்... நல்ல வரனாப் பாருங்க. சொந்தத்துலயா... இல்லை, வெளியிலேயா?’ன்னு விசாரிச்சு, சட்டுனு உற்சாகமாகிட்டார். அந்தப் பொண்ணுக்கு வயது 28-ன்னு தெரிஞ்சுக்கிட்டதும், 'சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுடுங்க... வரன் பார்த்த உடனே சொல்லுங்க... என்ன உதவின்னாலும் நான் செய்றேன்’னு தைரியம் கொடுத்தார். கார்த்திகேயன் குடும்பத்தோடு குரூப் போட்டோ எடுத்துக்கிட்டவர், நாலு லட்ச ரூபாய் பணத்தை அவங்ககிட்ட கொடுத்தார். கார்த்திகேயனோட அம்மா கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. தலைவர் அந்தம்மாவைத் தேத்தினப்ப, 'உங்ககூட சேர்ந்து படம் எடுத்துக்கணும்கிறதுதான் என் பையனோட ஆசை. அதுகூட நிறைவேறாமப் போச்சு. இன்னிக்கு நாங்க எல்லோரும் உங்ககூட படம் எடுத்துக்கிறோம். அதைப் பார்க்கக்கூட அவன் இல்லாமப் போயிட்டானே’ன்னு அழுதாங்க. உடனே, கார்த்திகேயனோட போட்டோவை வாங்கின தலைவர், அதைக் கையில் வெச்சுக்கிட்டு போஸ் கொடுத்தார். 'கவலைப்படாதீங்கம்மா... கார்த்தியும் நானும் சேர்ந்து எடுத்துக்கிட்ட படமா நினைச்சு, இதை வெச்சுக்கங்க’ன்னு சொன்னார். அந்த வார்த்தையில சுத்தி நின்ன எல்லோருமே கலங்கிட்டோம் சார்!'' என விவரித்த பழனி பாட்ஷா, ஒரு ரசிகனாக ரஜினியோடு உரையாடிய நிமிடங்களையும் பகிர்ந்து கொண்டார்.
''தலைவர் தன்னோட ரசிகர்களைப் பார்க்கிறது இல்லை... பேசுறது இல்லைன்னு பெரிய குமுறலே இருக்கு. ஆனா, தலைவர்கிட்ட அதை யாரும் சொல்றது இல்லை. கார்த்திகேயனின் குடும்ப சந்திப்பு முடிந்ததுமே, தலைவர்கிட்ட சில நிமிஷங்கள் பேச எனக்கு நேரம் கிடைச்சது. அஞ்சு நிமிஷம் பேசினாலும், அத்தனை ரசிகர்களோட உணர்வு களையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கிட்ட கொட்டிடணும்னு நினைச்சுதான் நான் சென்னைக்கே கிளம்பினேன். அதனால், ரசிகர்கள் தலைவருக்காக ரெடி பண்ணிய விளம்பர நகல்களையும், பத்திரிகை செய்திகளையும் புகைப்படங்களாக்கி, கூடவே எடுத்துட்டுப் போய்இருந்தேன். 'சார், உங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும்’னு நான் கேட்டதும், 'அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் இந்த நேரத்துல மன்றம் குறித்துப் பேசணுமா?’ன்னு கேட்டார். 'அவசியம் பேசணும் தலைவா!’னு நான் சொன்னதும் சிரிச்சுட்டார். 'நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு நம்பி, நாங்க அடிச்ச ஃப்ளெக்ஸ், பேனர், போஸ்டர்களை எல்லாம் பாருங்க தலைவரே’ன்னு சொல்லி, அத்தனை புகைப்படங்களையும் காட்டினேன்.
ஒவ்வொண்ணாப் பார்த்தவர், 'இந்த மாதிரில்லாம் செலவு பண்ணாதீங்க. முதல்ல குடும்பத்தைப் பாருங்க’ன்னு சொன்னார்!'' என விவரித்த பழனி பாட்ஷா, மேற்கொண்டு நடந்ததை உரையாடல் வடிவிலேயே சொன்னார்.
''சமீப காலமா நீங்க ரசிகர்களைச் சந்திக்கிறது இல்லை. ரசிகர் மன்ற மாநாடும் போடுறது இல்லை?''
''சீக்கிரமே எல்லாம் சரியா கிடும். உங்க எல்லோரையும் பார்க்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா கண்ணா? நேரம் கை கூடட்டும். நிச்சயம் சந்திக்கிறேன். அதுவரைக்கும் நீங்க உங்க நேரத்தை குடும்பத் துக்காகச் செலவிடுங்க!''
'' 'சட்டமன்ற நாயகனே’, 'நாளைய ஆட்சியே’ன்னு நாங்க அடிக்கிற போஸ்டர்களைப் பார்க்கிறப்ப, என்ன நினைப் பீங்க தலைவரே?''
''நான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ரசிகர்கள் எனக்காக ஏன் இப்படிச் செலவு பண்றாங்கன்னு தெரியலை. சீக்கிரமே இது சம்பந்தமாப் பேசிடலாம்! நான் மதுரைக்கு வந்தப்ப, யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சேன். ஆனா, அங்கேகூட அவ்வளவு ரசிகர்கள் திரண்டு வந்துட்டாங்க. அதுல துரதிஷ்டவசமா ஒரு விபத்தும் நடந்துடுச்சு. அதனாலதான் எல்லாத்துக்குமே தயங்க வேண்டி இருக்கு!''
''தலைவரே... ரஜினிங்கிற வார்த்தையோட சக்தி உங்க ளுக்குத் தெரியலை. நீங்க வரு வீங்களான்னு தெரியாதப்பவே இத்தனை ரசிகர்கள் வந்தாங்க. நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சி ருந்தா, ஏர்போர்ட்லயே ஆயிரக்கணக்கில் குவிஞ்சு இருப்பாங்க தலைவரே!''
''வேணாம் கண்ணா... அப்படி எல்லாம் கூட்டம் சேர்க்க வேண்டாம்!''
''நீங்க அரசியலுக்கு வரணும்கிறதுதான் எங்க எல்லோருடைய ஆசையும். ஆனா, நீங்க அரசியல் சம்பந்தமா எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க. நீங்க அரசியலுக்கு வருவீங்களா... மாட்டீங்களா?''
(ரஜினியிடம் ஹா... ஹா... சிரிப்பு)
''இந்தக் கேள்விக்கு நீங்க நிச்சயமா சிரிப்பீங்கன்னு தெரியும் தலைவா... தயவுபண்ணி வெளிப்படையா சொல்லுங்க?''
''எல்லோருடைய நம்பிக்கையையும் மதிக்கிறவன் நான். எந்த முடிவையும் எடுத்தோம், கவிழ்த்தோம்னு எடுத்துட முடியாது கண்ணா. நமக்கு மேல இருக் கிறவன் சரியான நேரத்தில், சரியா நம்மளை வழி நடத்துவான். இத்தனை வருஷம், எல்லா விஷயங் களிலும் என்னைச் சரியா வழி நடத்தியவன், அரசி யலிலும் நாம என்ன செய்யணும்கிறதை நிச்சயம் அடையாளம் காட்டுவான்!''
''இந்த சந்திப்பில் நீங்க என்ன சொன்னதா ரசிகர்கள்கிட்ட நான் சொல்றது?''
''எல்லாம் நல்லபடி நடக்கும்னு சொல்லுங்க. சீக்கிரமே சந்திக்க வருவேன். உட்கார்ந்து பேசுவோம். அப்புறம், நல்ல முடிவை எடுப்போம்!''
ரஜினி சந்திப்பு முடிந்து திரும்பியதும் பழனி பாட்ஷாவுக்கு தமிழகத்தின் பல திசைகளில் இருந் தும் தொலைபேசி அழைப்புகள்...
'தலைவர் என்ன சொன்னார்?’ என ஆர்வம் அடங்காமல் கேட்கும் ரசிகர்களுக்கு, 'அதெல்லாம் மேல இருக்கிறவனுக்குத்தாம்பா தெரியும்!’ என ரஜினி பாணியிலேயே சொல்லிச் சிரிக்கிறார் பழனி பாட்ஷா!
Vijay TV Special Show on Superstar's Birthday
2010-Dec-10
Vijay TV has been the pioneer in celebrating the birthdays of Kollywood stars. Each and every year Vijay TV organizes special programs and events on account of Superstar Rajinikanth’s birthday. As a part of Rajinikanth’s birthday celebration for the year 2010, Vijay TV will be presenting a special show titled ‘Happy Birthday Super Star’ on 12th December 2010, Sunday at 4 pm.
The three hour special show features the life of the Super Star, his career and his spiritual side.Firstly Super Star’s daughters Aishwarya Dhanush and Soundarya Ashwin would speak about the star as a father. Here the fans get to know about the Super Star through his lovable daughters who come to the sets of Happy Birthday Super Star and share their best moments of their life with their dad!
Secondly eminent film directors like K.S. Ravikumar, P. Vasu, Suresh Krishna and S.P. Muthuraman walk into to the show and speak about Rajnikanth the star. All these renowned directors have worked with the super star and would share their experience of working him.
Last but not the least; super star Rajnikanth’s friends who have accompanied him during his spiritual journey to the Himalayas speak about the super star’s spiritual side. Actor Surya along with many other stars have come forward to wish the super star a very happy birthday on the show.
‘7 Up Happy Birthday Super Star powered by Parle Marie’ hosted by ‘Neeya Naana’ Gopinath will bring in Super star’s family, friends and colleagues to share their thoughts, memories and to wish the super star a very happy birthday.
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1570
ரஜினியும் சக நடிகைகளும் - Rajini Birthday Special 2
2010-Dec-10
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1569