https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...bf&oe=5E76748D
Printable View
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3c&oe=5E6840DD
நடிப்பும் ஒரு தொண்டு தான்..
-நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
பேட்டி..
கண்ணுக்குத் தெரியாத ஒரு உலகத்தின் ரகசியங்களை எல்லாம் இயற்கை புலப்படுத்துகிறது என்பார் பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ.
அதைப் போல் நம் கற்பனைக்கும் புலப்படாத கலையின் ரகசியங்களை எல்லாம் நடிகர் திலகத்தின் நடிப்பு வெளிப்படுத்துகிறது, என்று சொல்லலாம். அந்த கலை புதல்வரின் பிறந்தநாளை ஒட்டி ,பேட்டி காணச் சென்றோம் .
"பொம்மையில் நான் சொல்லாததா? "
என்று சிலிர்க்க வைத்தார். இருந்தாலும் தேனில் நனைந்த திருவாசகங்களாய் சில சொன்னார் .
அந்த வாசகங்கள் ...
நடிகர்திலகம் பேசுகிறார்:
ஒவ்வொருத்தரும் என்னென்னமோ சாதிச்சு இருக்காங்க. நான் என்ன சாதிச்சிட்டேன்? ஏதோ நடிச்சேன்...
ஜெமினி ,எஸ் எஸ் ஆர் இவங்கெல்லாம் நடிக்கிறப்ப நானும் நடிச்சேன்.இப்ப சில பேர் ரிட்டயர்ட் ஆகிட்டாங்க.சில பேர் இல்லை .நான் இன்னும் இருக்கேன் . அதுதானே உண்மை!
அரசியல் எத்தனையோ பேர் என்னை புரட்டி புரட்டி எடுத்தாங்க.என் சொந்த செலவிலேயே என்னை தோற்கடிச்சாங்க. சிவாஜிகணேசனை தோற்கடிச்சுட்டோம்னு
அவங்களுக்குள்ளேயே
சந்தோஷப் பட்டாங்க .அப்படி பல பயில்வான்கள் அரசியல்ல இருக்காங்க . சிலர் பதவியில் இருக்காங்க .சிலர் பதவி இல்லாமலும் இருக்காங்க.
எம்எல்ஏ வாகவும் இருக்காங்க.
எம்.பி. யாகவும் இருக்காங்க..ஆனா, யாருமே என் முன்னால வந்ததில்லை. 'எப்படி இருக்கேன்னு? ' கேட்டிடுவேன்னு பயம் போல இருக்கு ....
இருந்தாலும்,
நான் எல்லோரையும் தாண்டி முன்னாலே
போயிக்கிட்டுத்தான் இருக்கேன்.
அய்யா பெரியார் ,ராஜாஜி ,அண்ணா, காமராஜர் எல்லோருடைய வாழ்த்தையும் பெற்றிருக்கிறேன் ...
காஞ்சி முனிவர் அவர்களின் வாழ்த்தையும் பெருமையாக பெற்றுள்ளேன.கோயில்களில் எல்லாம் உன்னோட யானைகளைத்தான் பார்க்கிறேன்.இதனாலே ,உங்க அம்மாவும் அப்பாவும் நல்லபடியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்னு அவர் வாழ்த்தினார் ,இதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருக்கு...
பெரியவங்க பல விஷயங்களையும் அழகாக சொல்லியிருக்கிறார்கள். அதையெல்லாம் மக்களிடத்தில் சொல்ல நாமும் பயன்பட்டிருக்கோம்.
அவர்களெல்லாம் பாட்டு ,நானோ பாடகன் .
தமிழ் மூலமா நாமும் பயனடைந்தோம். நாடும் பயனடைந்தது .நாம பேசியதை அடுத்த தலைமுறையும் பேசியது. நாம் மட்டுமே சாதித்தோம் என்று சொல்லமுடியாது .ஒன்றுக்குள் ஒன்றாக எல்லோரும்தான்.
தமிழ் தொண்டு என்பது கலைத் தொண்டு, அரசியல் தொண்டு எல்லாமே சேர்ந்தது தான் .
ஐயா காமராஜர் பல விஷயங்களைச் சொன்னார்.அதையெல்லாம் கலை மூலமாக சொன்னோம்.அவர் வர முடியாத இடங்களுக்கெல்லாம் சென்று சொன்னோம் .நாமே ஒரு 'மவுத் பீஸாக' இருந்து சொன்னோம். அதனால நாடு பயனடைந்ததா இல்லையா ...
அந்தக் காலத்திலேயே மன்னர்கள் மக்களிடத்தில் கருத்துக்களை சொல்ல கலைஞர்களைத்தானே வச்சிருந்தாங்க .. ஏன்? இன்னைக்கும் அப்படித்தானே...! எதுக்காக ,ஒவ்வொரு கலைஞனையும் என் கட்சிக்கு வா ,என் கட்சிக்கு வான்னு இழுக்கறாங்க .. அதுக்காகத்தானே...
சில புத்திசாலிங்க அதிலிருந்து தப்பிச்சுடறாங்க ... என்னை மாதிரியானவங்க மாட்டிக்கிடறாங்க.
அரசியல்ல எப்படி இருந்தாலும் ,பொதுவாக கலைஞர்கள் மக்களை மகிழ்விக்கிறாங்க! அது ஒரு தொண்டுதானே... டிவி ,வீடியோ... இதெல்லாம் இப்ப தானே வந்து இருக்கு. அப்ப எல்லாம் ஏதும் மீடியா?
கலைஞர்கள் தானே ...! நாள் முழுக்க உழைப்பவனுக்கு ஒரு நாளு மணி நேரம் பொழுதுபோக்கு இல்லைன்னா என்ன செய்வான் ...?
ஒரு விஞ்ஞானி கூட ஓயாமல் உழைத்து ஒரு கண்டுபிடிப்பை வெளியிடறான்னா அது மக்கள் நன்மைக்காக தானே.. கண்டுபிடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மக்களுக்கு பொழுதுபோக்கு இல்லைன்னா என்ன செய்வாங்க?
நாலு நாளைக்கு சினிமா ,டிராமா எதுவுமே இல்லைன்னு நிறுத்திப் பாருங்கள்.. எல்லோரும் பைத்தியம் பிடித்ததை போல் ஆகி விடுவாங்க ..
அன்னை தெரசா, இந்த நாட்டில் 40 வருஷத்துக்கு மேல உழைச்சாங்க... சமீபத்தில் இறந்து போனாங்க. அதே நேரத்தில் டயானாவும் இறந்தாங்க. ரெண்டு பேரும் மரணமும் ஒரே நேரத்தில் நடந்ததால் ,கிளாமரான டயானா அதிகமாகப் பேசப்பட ... அந்த அளவுக்கு தெரசா அம்மை பேசப்படவில்லை. காரணம் இளமை ...!
இன்னைக்கும் நானும் இளமையானவனும் நடிச்சா நம்மை யார் பார்ப்பார்கள்? இளமையானவனைத்தான் பார்ப்பார்கள் ...!
நமக்குத் தெரிந்ததை இதுவரை நடிச்சோம். அது நடிப்புன்னா நடிப்பு ..
சரியில்லைன்னா சரியில்லை தான் ...!
நன்றி Senthilvel Sivarai (sivaji group)
.................................................. .....
பின்னூட்டம்
கள்ளக்கபடமில்ல வார்த்தைகள். இவரை வைத்து வாழ்ந்தவர்கள் இன்னும் நன்றியில்லாமல் வளமுடன் வாழ்ந்துகொண்டுதான் தான் இருக்கிறார்கள். சிவாஜிகணேசனை இருந்தும் கெடுதத்தவன் செத்தும் கெடுதத்தவன் எல்லாம் உண்மையான சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு செய்ய வேண்டிய மரியாதை எந்த கடன்காரனும் கட்சி காரனும் செய்யவில்லலை