-
வாசு சார்,
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு உங்கள் உணர்ச்சிகரமான மீள் வரவு! ஆரூர்தாஸ் கூட இந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக அந்தக் காட்சியை அணுகியிருப்பாரா என்பது சந்தேகமே! தெய்வ மகன் என்றாலே நானும் சாரதி அவர்களும் நெகிழ்ந்து விடுவோம்! இது போல் உணர்ச்சியலைகள் சுழன்றடிக்க சங்கரையும் கண்ணனையும் நீங்கள் வர்ணிக்கும் போது மனக் கண்ணில் மீண்டும் மீண்டும் அம்மூவரும் [விஜய் included] களிநடனம் புரிகிறார்கள்! இது போன்ற படைப்புகள் உங்கள் keyboard-லிருந்து வந்துக் கொண்டேயிருக்கட்டும்.
மஞ்சுளாவின் மறைவு உங்களை எப்படி பாதித்திருக்கிறது எனபதை உங்கள் அஞ்சலி பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அன்புடன்
-
கார்த்திக்,
மஞ்சுளாவை சந்தித்தேன் என்பதையே ஒரு தொடர் கட்டுரைக்குரிய சுவையுடன் அந்த ஐந்து சந்திப்புகளையும் நீங்கள் விவரித்திருந்த விதம் உங்களால மட்டுமே முடியக் கூடிய ஒன்று. எழுதுவதையே ஒரு நல்ல ரசனையாக பார்க்க கூடியவர்களுக்கு மட்டுமே இந்த சரளமான நடை கைவரும்!
நடிகர் திலகத்தின் படங்களின் மறு வெளியீடுகள் குறித்து நீங்கள் அளித்த பாராட்டிற்கு நன்றி!. நாளை வெள்ளி முதல் கோவை ராயல் திரையரங்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த என்னை போல் ஒருவன் வெளியாகிறது.
தம்பி ராகுல் ராம் முன்னரே இதை பதிந்திருக்கிறார். இருப்பினும் இந்த செய்தியை நீங்களும் பதியுங்கள் என்று தகவல் தந்த கோவை திரு ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி
அன்புடன்
-
டியர் கார்த்திக்
மஞ்சுளா அவர்களை தாங்கள் சந்தித்தது பற்றிய நினைவுகளை அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீண்டும் இங்கே நம்முடன் நினைவு கூர்ந்தது மட்டுமின்றி அதனை மிகவும் உணர்ச்சிகரமாக எழுதியுள்ளது, தங்கள் நினைவாற்றலை நன்கு புலப்படுகிறது மட்டுமின்றி அவருக்கு சிறந்த அஞ்சலியாகவும் அமைந்துள்ளது.
-
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள நடிகர் திலகம் நினைவாஞ்சலி போஸ்டரின் நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/...ps303e6945.jpg
-
Pasamalar Release & Trailer Function - Times of India Ad 26.7.2013
http://epaper.timesofindia.com/Repos.../Ad0320601.png
-
டியர் கார்த்திக் சார்,
மஞ்சுளா அவர்களின் நினைவுகளை மறக்க முடியாமல் மனம் ஆறுதலடையாமல் தவித்துக் கொண்டே இருக்கும் வேளையில் எனக்காக தாங்கள் மிக்க சிரமம் எடுத்து மஞ்சுளா அவர்களுடனான தங்கள் அனுபவங்களை மிக அழகாகத் தொடுத்து அந்த அழகுச் சிலைக்கு சிறப்பாக அஞ்சலி செலுத்தி விட்டீர்கள். என் மனதையும் நெகிழ வைத்து விட்டீர்கள். என்னையுமறியாமல் தங்கள் பதிவைப் பார்த்து என் கண்கள் கலங்கியபடியேதான் இருக்கின்றன. மஞ்சுளாவுடனான தங்கள் சந்திப்புகள் எதிர்பாராதவை என்றாலும் சுவாரஸ்யமானவை. எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது. நான் இருமுறை நம் இதய தெய்வத்தின் பிறந்த நாளன்று அன்னை இல்லத்தில் மஞ்சுளா அவர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. தன்னை வரவேற்ற இளையதிலகத்தின் கன்னங்களில் அவர் பாசத்துடன் முத்தமிட்டது நன்றாக நினைவிருக்கிறது.
தாங்கள் மஞ்சுளாவிற்கென்று தனித் திரி இல்லாததால் இங்கு மஞ்சுளா அவர்களைப் பற்றி பதிவிட நேர்ந்ததாய் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு எதற்கு சார் சங்கடம்? நம் நடிகர் திலகத்துடன் நடித்த அற்புதக் கலைஞரல்லவா அவர்! அவரைப் பற்றி எழுத இதை விட சிறந்த இடம் எ(ஏ)து?
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைகள் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அது அவர்களுடைய பெர்சனல். அது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. திரையுலகில் அவர்களுடைய சிறப்பான பங்கு என்னவென்று அலச ஆராய நமக்கு உரிமை பிளஸ் தகுதிகள் இருக்கின்றன. தங்களுடைய உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த மஞ்சுளா தற்செயலாக தங்களை சந்தித்து அளவளாவி பின் பழங்களை தங்கள் உறவினருக்குத் தந்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று கூறியது என் கண்களை பனிக்க வைத்தது. எத்தனை பேருக்கு இந்த மனது வரும்? அதுவும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவருடனும் நடித்து கொடி கட்டிப் பறந்த நடிகை. எவ்வளவோ பந்தா பண்ணலாம். ஆனால் மஞ்சுளாவைப் பொருத்தவரை அப்படி எதுவும் செய்யத் தெரியாத குழந்தை உள்ளம் படைத்தவர்.
விஜயகுமாரின் இரண்டாவது மனைவி ஸ்தானத்தில் இருந்தாலும் அவரின் முதல் மனைவி குடும்பத்துடன் மஞ்சுளா இணக்கமாகவே இருந்துள்ளார். அதே போல முதல் மனைவி பிள்ளைகளுடன் மிகுந்த பாசம் கொண்ட சித்தியாகவும் திகழ்ந்திருக்கிறார். எத்தனை வீட்டில் இது சாத்தியம்? அதுவும் ஒரு நடிகரின் குடும்பத்தில். மஞ்சுளாவின் பூத உடலைப் பார்த்து விஜயகுமாரின் முதல் மனைவியின் குழந்தைகள் பாசத்துடன் உண்மையாக கதறிய காட்சியே இதற்கு உதாரணம். ரஜனி, கவுண்டமணி, சினேகா, மனோரமா போன்றவர்கள் உணர்வுபூர்வமாக உண்மையாக வடித்த கண்ணீர் நம் கண்களைக் குளமாக்கியது. இறப்பிற்கு வந்திருந்த கூட்டமும் வியக்க வைத்தது. நல்லதோ கேட்டதோ கல்யாணம் பண்ணிக்கொண்ட முதல் மாதத்திலேயே விவாகரத்துக் கோரும் நட்சத்திர ஜோடிகளுக்கிடையே இத்தனை வருட காலம் பிரியாது மனம் ஒத்த தம்பதியராய் மஞ்சுளா விஜயகுமார் தம்பதிகள் வாழ்ந்து வந்தது பாராட்டத்தக்கது.
ஒருமுறை ஜெயா தொலைக்காட்சியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் இந்த ஜோடி கலந்து கொண்டது. நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அற்புதமாக குழந்தை போல மஞ்சுளா சிரித்தபடியே பதிலளித்தது மறக்க முடியாதது. அதில் ஒரு சுவையான நிகழ்ச்சி. தீபம் படத்தில் விஜயகுமாரும், சுஜாதா அவர்களும் பாடும் 'பூவிழி வாசலில்' பாடலைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது மஞ்சுளா தன் கணவரைப் பார்த்து "அருமையான பாட்டு... ஆனால் நீங்களும் சுஜாதாவும் டான்ஸில் சொதப்புவீர்கள்" என்று கலாய்த்தபடி மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பளிச்'சென்று அவர் தெரிவித்த விதம் அருமை. உண்மைதானே! அற்புதமான அந்தப் பாடலில் விஜயகுமாரும், சுஜாதாவும் ஆடுவது சற்று சொதப்பலாகத்தான் இருக்கும்.
மறுபிறவி, அம்மன் அருள், டாக்டரம்மா, பூக்காரி, சங்கர் சலீம் சைமன், நீயா என்று பல படங்களை மஞ்சுளா அவர்களுக்காகவே பார்த்ததுண்டு.
கார்த்திக் சார்! தங்களின் அற்புதமான மஞ்சுளா அவர்களைப் பற்றிய பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி!
இறுதியாக ஒன்று. நீயா படத்தில் வரும் பாடல்தான் ஞாபகம் வருகிறது.
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை.
உண்மை! மஞ்சுளாவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.
ஆழ்ந்த நினைவுகளுடன்
வாசுதேவன்.
-
இனிய நண்பர் வாசுதேவன் சார் / கார்த்திக் சார்
உங்கள் இருவரின் மஞ்சுளாவை பற்றிய பதிவுகள் மிகவும் நன்றாக இருந்தது .பல சுவாரசியமான நிகழ்வுகளையும்
விருப்பமான பாடல்களையும் தெரிவித்தமைக்கு நன்றி .
1970ல் ரிக்ஷாக்காரன் படத்திற்கு ஒப்பந்தம் செய்த நாள்
முதல் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்டவர் .1970லே உசுவா படத்திற்க்கு வெளிநாடு சென்றவர் . 1971ல் ஒரே நேரத்தில்
நினைத்ததை முடிப்பவன் - இதயவீணை - நேற்று இன்று நாளை
மூன்று படங்களில் ஒப்பந்தமானார் .
ரிக்ஷாக்காரன் முதல் நினைத்தைமுடிப்பவன் வரை 5 படங்களில்
இடம் பெற்ற மக்கள் திலகம் - மஞ்சுளா காதல் பாடல்கள்
மிகவும் பிரபலமானவை .
மஞ்சுளாவின் திடீர் மறைவு -ரசிகர்களுக்கு ஒரு பேரிழப்பு .
-
-
-
கோவை ராயல் தியேட்டரைக் கலக்க வந்திருக்கும் நடிகர் திலகத்தின் வெற்றிச் சித்திரம் என்னைப் போல் ஒருவன் போஸ்டர்களின் நிழற்படங்கள்
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...99621888_n.jpg
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...26653848_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...33985521_n.jpg
நன்றி முகநூல் நண்பர் செந்தில்வேல் சிவராஜ்