http://www.imagesbuddy.com/images/18...lebrations.jpg
Printable View
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 17)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
http://2.bp.blogspot.com/-lbSElGs-Ed...nshot+(14).png
http://1.bp.blogspot.com/_jo1xsRVxX7...ppadithaan.jpg
ராகமஞ்சரியின் 'அவள் அப்படித்தான்'
http://tcrcindia.files.wordpress.com...d-ph000098.jpg
டைட்டிலில் கமல், ஸ்ரீப்ரியா, ரஜினி கார்டு மட்டும் போடுவார்கள்.
பாடல்கள் கண்ணதாசன், கங்கை அமரன்
பின்னணி ஜேசுதாஸ், ஜானகி, கமல்.
தயாரிப்பு, இயக்கம் ருத்ரய்யா.
தரத் தமிழ் சினிமா வரிசையில் இப்படத்திற்கு நிச்சயம் முதலிடம் உண்டு.
ராஜாவின் கதை, பாத்திரம் உணர்ந்த உணர்வுகள் சங்கமிக்கும் இசை வடிவப் பாடல்கள் மற்றும் பின்னணிகள். (பாடல்கள் மட்டும் ராஜா பின்னணி இசை வேறொருவர் என்றும் சொல்வார்கள்)
தியேட்டர்களில் ஒரே நாளில் சுருண்டு பின் நம் இதயங்களில் விரிந்த படம். கலெக்ஷன் காணாத படம். செலெக்ஷன் ஆன படம். அதி புதுமையான முயற்சி. டாகுமெண்டரி பாணியில். புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டவர் பலர். புரிந்து புளகாங்கிதம் அடைந்தவர் சிலர். இப்படத்தைப் பார்த்து உணர்ந்தால் நான் தரமான ரசிகன் என்று இறுமாப்பு கொள்ளலாம்.
அது அப்படித்தான்.
மிகவும் புகழ் பெற்ற பாடல்கள்.
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
மழைக் காலங்களில் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் எழுந்து, பின் சோம்பலுடன் 'இன்னும் கொஞ்ச நாழி' என்று கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் போல அப்படி ஒரு சுகம் தரும் பாடல்.
ஜேசுதாசின் மென்மையான குரலில். ராஜாவின் பியானோ விளையாட்டுக்களில், தேசிய கீதம் போல் அனைவர் நெஞ்சிலும் பதிந்த பாடல். சிவச்சந்திரன் பியானோ இசைத்து ஸ்ரீப்ரியாவின் சோகம் தீர்க்க பாட, மெய் மறந்து கேட்டு ஆறுதலடையும் ப்ரியா.
கார் பயணங்களில், பேருந்து பயணங்களில் இந்த பாடல் இல்லாமல் வேறெந்தப் பாடல்களும் இல்லை.
ஹைகிளாஸ், லோ கிளாஸ் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் எல்லோர் இதயத்திலும் ப(ற)ரந்து விரிந்த பாடல்.
கோட்டையும் ரசிக்கும். கூவமும் ரசிக்கும். அதுதான் இளையராஜா.
http://www.youtube.com/watch?feature...&v=7ua__BwWGfc
'அவள் அப்படித்தான்' தொடருவாள்.
வணக்கம் வாசு
சின்ன கண்ணன் நேற்று தன்னை குட்டி யானை என்று அறிமுகம் செய்து கொண்டார்.:) இன்று சின்ன குழந்தை என்று சொல்லி இருக்கிறார் :) .நாளைக்கு நீங்கள் சொன்னது போல் சொல்வாரோ என்னவோ :)
சி கே நானும் கொஞ்சம் சீண்டலாம்னு தான் :)
இந்த குட்டி யானை கொழுக் மொழுக் குஷ்பு கன்னம்,ஜோதிகா கன்னம் இப்ப எப்படி வலி குறைந்து விட்டதா ?
'இரு வல்லவர்கள்' படத்தில் வேதாவின் இசையில்
குவா குவா பாப்பா
இவ குளிக்க காசு கேப்பா
எல்லோரும் விரும்பும் குழந்தை பாட்டு. மாடர்ன் தியேட்டர்ஸாரின் செல்ல பேபி மனோகருடன் பேபி ஷகீலா.
இதே ஷகீலாதான் 'குமாஸ்தாவின் மகள்' படத்தில் புதுமுக நடிகையாக அறிமுகமானார். ('எழுதி எழுதிப் பழகி வந்தேன்' கன்னட ஆர்த்தியுடன்)
http://www.youtube.com/watch?v=7-qLcmsboVw&feature=player_detailpage
http://2.bp.blogspot.com/-Yj0iORuVy8...hthanfront.jpg
அவள் அப்படித்தான் . வாசுவின் எழுத்தும் இப்படித்தான் வழ வழ கொழ கொழ என்று இல்லாமல் நச் என்று இருக்கும். படம் வெளியாகி 35 வருடங்கள் இருக்கும் . இன்றும் பார்க்கும் போது ஒரு புது அனுபவம் தோன்றுமே வாசு . தமிழ் சினிமாவின் மறக்க முடியாத மறுக்க முடியாத அனுபவ படம்.
கதை திரை கதை மூவர் எழுதி இருப்பார்கள் .இதுவே புதுமை
வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா.
முழு பாடல் வாசு
ஒவ்வொரு வரியும் முத்து .கருப்பு வெள்ளையில் வந்த வண்ண பெண் அவள் அப்படிதான்
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்… வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…
வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..
'சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்'
அதே மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. படம் 'கைதி கண்ணாயிரம்'. இதில் டெய்சி ராணி.
http://www.youtube.com/watch?v=v3ambcdUdvI&feature=player_detailpage
டியர் வாசு
படம் பற்றி எழுத்தாளர் வண்ணநிலவன் சொல்வதை படியுங்கள்.
கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.
தலைசிறந்த உலகத் திரைப்படங்களைப் பற்றிய ருத்ரய்யாவின் அறிவு அபாரமானது. உலகப்பட இயக்குநர்களைப் பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்குச் சொந்தமான அபிப்பிராயங்கள் உண்டு. கமலுடனும் அனந்து சாருடனும் அவர் பல திரைப் படங்களைப் பற்றி விவாதிப்பார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தைச் செதுக்கினார்.
இளையராஜாவும் கங்கை அமரனும் குமார் ஆர்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுவார்கள். அடுக்கடுக்காக மெட்டுகளை அந்தக் காலத்திலேயே இளையராஜா ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவார். தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது. சென்னையில் காமதேனுவிலும் சபையர் வளாகத்தில் அமைந்துள்ள எமரால்டிலோ ப்ளூடைமண்டிலோ ஓடியது. காமதேனுவைவிட சபையர் வளாகத் தியேட்டரில் சற்றுக் கூடுதல் நாட்கள் ஓடியதாக ஞாபகம். பெரும்பாலும் பத்திரிகைகளில் பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது.
http://discoverybookpalace.com/produ..._16957_std.jpg
நன்றி கிருஷ்ணா! பாடல் வரிகளுக்கும் சேர்த்து. உண்மையிலே வித்தியாசமான வைடூர்யம்தான். கமல், ரஜினி, பிரியா கலக்கல். படம் முழுதும் ஒரு இனம் புரியா சோகம் நம்முடன் பயணிக்கும்.
ருத்ரய்யா போன்ற ரிஸ்க் எடுத்த இயக்குனர்கள் தொடராமல் போனது நம் துரதிருஷ்டமே.
படத்தின் இறுதியில் வரும் ஹைகூ கவிதை - கமலின் குரலில்
http://2.bp.blogspot.com/-1QgLNlGORO.../s400/aval.jpg
எரிந்து போன வீடு,
முறிந்து போன உறவுகள்,
கலைந்து போன கனவுகள்,
சுமக்க முடியாத சோகங்கள்,
மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்து போனாள்,
இந்தச்சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால் தான் முடியவில்லை,
ஹ்ம்,,,
அவள் பிறப்பாள்,
இறப்பாள்,
இறப்பாள்,
பிறப்பாள்,!!!
” அவள் அப்படித்தான்”