நன்றி நண்பா.
வசூல் சக்ரவர்த்தி புரட்சித் தலவர் வாழ்க
Printable View
உண்மைதான் நண்பா.
சிவாஜி கணேசன் நடிச்ச ராஜா டிஜிட்டல் படம் சென்னை ஆல்பட் தியட்டரில் மே 25-ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரைக்கும் 8 நாள் 2 காட்சியாக ஓட்டினார்கள். படத்துக்கு சரியான கூட்டம் இல்லை. ஒரு காட்சி கூட ஞாயித்துக்கிழமை மாலை காட்சி கூட (மே 27ம் தேதி ஞாயிறு மாலைக்காட்சி) ஹவுஸ் புல் ஆகாததால் படத்த தூக்க முடிவு செஞ்சிருக்கார்கள். சிவாஜி கணேசன் ரசிகர்கள் கெஞ்சிக் கேட்டதால் தியட்டர் நிர்வாகத்தினர்கள் ராஜா படத்தை சின்ன தியேட்டரான பேபி ஆல்பட்டுக்கு மாற்றி விட்டார்கள். மாலை ஒரு காட்சி மட்டுமே ஆக்கிவிட்டார்கள். சின்ன தியெட்டரில் போட்டும் அப்படியும் படத்துக்கு கூட்டம் சேரவில்லை. அதுவும் போன 4-ம் தேதி திங்கட்கிழமை மாலைக் காட்சிக்கு மொத்தமே 12 பேர்தான் வந்திருக்கின்றார்கள். தியட்டர் நிர்வாகத்தினர்கள் இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று திங்கட்கிழமை 4-ம் தேதியோடு படத்தை தூக்கிவிட்டார்கள். இப்போது ஆல்பட் தியேட்டரில் ராஜா படம் ஓடவில்லை. சென்னையில் வேறு எங்கும் ஓடவில்லை.
தகவல் உதவி - சென்னை நண்பர் சுப்பிரமணியன், எம்ஜிஆர் பொது நல சங்கம்)
மாற்று திரியினர் நம்பள சீன்டுகின்றார்கள். நாம்ப டிஜிட்டல்லில் வந்த ராஜா படம் சென்னையில் தோல்வி என்று சொன்னால் அவர்கள் திரியில் இன்னொருத்தர் (ஸ்ப்சோத்திரிராம் என்பவர்) வந்து திருச்சியில் மக்கள் திலகம் படங்கள் மறு வெளியீட்டில் கேவலமாக ஓடினதாக சொல்கின்றார்.
நான் திருச்சியில் உள்ள நமது நண்பருடன் போனில் பேசினேன். சிவாஜி கணேசன் நடிச்ச மறுவெளியீ்ட்டு படங்கள் திருச்சியில் முக்காடு போட்டது இருக்கட்டும்.
முதல் வெளியீட்டில் தமிழ் நாட்டில் வெளியான சிவாஜி கணேசன் நடிச்ச ஹிட்லர் உமாநாத் என்ற படம் திருச்சியில் ரிலீசே ஆகவி்ல்லை. இன்று வரை வெளியாகவில்லை. பெட்டி வாங்கக் கூட ஆளில்லை என்றார். இத ஸ்ப்சோத்திரிராம் என்பவர் தன் தாயின் மீது ஆணையிட்டு மறுக்க முடியுமா?
இதவிட சிவாஜி கணேசன் படங்களுக்கு கேவலம் உண்டா?
தகவ்ல் உதவி - ஆட்டோ சரவணன், தென்னூர், மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்கள்குழு
1000 பதிவுகள் கண்டு அற்புதமாக பயணிக்கும் திரு.சுகாராம் அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள். தொடர்ந்து பல புதிய செய்திகள் பதிவிட்டு
உற்சாகம் தருவீர்கள் என்று நம்புகிறேன் .
http://i65.tinypic.com/fc4geg.jpg
ஆர். லோகநாதன்.
திரு லோகநாதன் அவர்கள் வாழ்த்துக்கு நன்றி... மற்றபடி நாம் யாரையும் ஏளனம், கிண்டல் செய்யவில்லை, அவசியமுமில்லை, எமக்கு இணையாகவோ எவரையும் கருதவில்லை. ஏற்கனவே நம் திரியில் தகுந்த பதில் கொடுத்த விடயத்தை திரும்பவும் பதிவு தந்துள்ள தோழர் விஷயம் அறிந்திருந்தாலும் அதை உணராத படிக்கு சொல்லி உள்ளார். திரையுலகில் தம் படம் வரும்போது அந்த படைப்பை எப்போது எந்த நாளில் வெளியிடலாம் என்பது அது ஒரு ஆளுமை (Elegance) 👍 இருந்தால் மட்டுமே சாத்தியம். அந்த ஆளுமை மக்கள் திலகம் அவர்களுக்கு மட்டுமே இருந்த உண்மை விபரம் அனைவரும் அறிந்த செய்தி... உண்மை...
தினத்தந்தி -6/6/18
http://i65.tinypic.com/1znwv0w.jpg
தினகரன் -7/6/18
http://i67.tinypic.com/2urpedh.jpg
பொருத்தமான ஞாயமான பதில். புரட்சித் தலைவர் திரை உலகத்தில் இருந்தவரை அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பதும் மற்ற நடிகர்கள் எல்லாரையும் விட அவர்தான் அதிக சம்பளம் வாங்கினார் என்பதும் அவர்களுக்கும் தெரியும்.
தென்னகத்தின் வசூல் சக்ரவர்த்தி யார் என்ற கேள்விக்கு 1971-ம் வருசம் வந்த பேசும்படம் கேள்வி பதில் பகுதியிலே எம்.ஜி.ஆர். என்று பதில் சொல்லி இருந்தார்கள்.
1973-ம் வருசம் பொம்மை கேள்வி பதில் பகுதியில் சினிமாவில் நடிக்க சிவாஜி கணேசன் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா? எம்ஜிஆர் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா என்ற கேள்விக்கு எம்ஜிஆர்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று பதில் சொல்லி இருந்தார்கள். இதெல்லாம் பல முறை நம்ப திரியிலே ஆதாரத்தோடு அந்த பத்திரிக்கைகளில் வந்ததை அப்படியே போட்டாகிவிட்டது.
திரியில் போடுவதற்கு முன்னாலயே அந்தக் காலத்திலேயே அந்தப் புத்தகத்தில் வெளியான பதிலை படிச்சவர்கள் அங்கேயும் இருக்கின்றார்கள்.
நாம்ப ஏதாவது நம்பளை அறியாமல் தப்பாக சொல்லிவிட்டால் துள்ளிக்குதிச்சு வருவார்கள்.
ஆனால், அவர்கள் காத்தவராயன்,100 நாள், அன்னயின் ஆணை 100 நாள், என்று பொய்யாக பதிவு போடுவார்கள். அத நாம் சுட்டிக் காட்டினால் அந்தப் பதிவ மட்டும் படிக்காத மாதிரி இருந்து கொள்வார்கள்.
புரட்சித் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பது நம்பள விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இருந்தாலும் அத ஒப்புக் கொள்ள அவர்களின் ஈக்கோ தடுக்கின்றது. மக்களுக்கு உண்மை தெரியும்.
யாரோடயும் ஒப்பிட முடியாத இடத்துக்கு பிள்ளைகள் படிக்கும் பாட புத்தகத்தில் எல்லாம் வரும் அளவுக்கு வருங்கால தலைமுறை தெரிந்து கொள்ளும் அளவுக்கு யாரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் புரட்சித் தலலவர் போய்விட்டார். நமக்கு அது போதும்.