1992 -ல் நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது யாரும் எதிர் பாராத வகையில் புதிய படங்கள் வெளியாகும் ஸ்டார் திரையரங்கில் இருவர் உள்ளம் திரையிடப்பட்டது ..நடிகர் திலகத்தின் படங்களை பார்க்க திருச்சியின் இண்டு இடுக்குகளில் உள்ள பழைய திரையரங்குகளிலேயே ஆஜராகும் நான் இந்த வாய்ப்பை விடுவேனா ? சுமாரான கூட்டத்தை எதிர்பார்த்து சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது . புதிய படத்துக்கு நிகரான கூட்டம் , அரங்கு நிறைந்தது ..ஆரவாரத்துக்கும் குறைவில்லை.