-
-
விநாயகர்சதுர்த்தி சிறப்பு வீடியோ பாடல்.
ஆனை முகனே! ஆதி முதலானவனே!
பானை வயிற்றோனே! பக்தர்களைக் காப்பவனே!
மோனைப் பொருளே! மூத்தவனே!
கணேசா! கணேசா!
http://www.youtube.com/watch?feature...&v=juVSazxOH8c
-
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-8)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (8) 'லலிதா '
http://sphotos-d.ak.fbcdn.net/hphoto...49803050_n.jpg
திருவிதாங்கூர் சகோதரிகள் ( பத்மினி, லலிதா, ராகினி) (Thanks Haystack)
http://haystack.colby-sawyer.edu/arc...8174779c42.jpg
'ஆசிய ஜோதி' திரு ஜவஹர்லால் நேருவுடன் லலிதா மற்றும் பத்மினி
https://lh6.googleusercontent.com/-a...52520Nehru.jpg
'தூக்குத் தூக்கி ' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் லலிதா
http://i1087.photobucket.com/albums/...psf4a251f0.jpg
'உலகம் பலவிதம்' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் லலிதா (மிக அபூர்வ நிழற்படம்)
http://i1087.photobucket.com/albums/...ps60a11dc1.jpg
திருவிதாங்கூர் சகோதரிகள் (லலிதா, பத்மினி, ராகினி) என்றழைக்கப்பட்ட மூவரில் மூத்தவர். கொள்ளை அழகு கொண்டவர். நடிகர் திலகத்துடன் தூக்குத் தூக்கியில் மனைவியாக ஜோடி சேர்ந்தார். கண்களால் பேசுவது இவருக்கு கைவந்த கலை. அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு' இவரை உச்சத்தில் நிறுத்தியது. 'கணவனே கண் கண்ட தெய்வம்' திரைப்படத்தில் ஜெமினியை மயக்க விக்கிக்கொண்டே இவர் பாடும் "உன்னைக் கண் தேடுதே" பாடல் உலகப் பிரசித்தம்.
'உலகம் பலவிதம்' நகைச்சுவைக் காவியத்திலும் நடிகர் திலகத்தின் நாயகியாய் வலம் வந்தவர். கதகளி , பரதம் முதலியவற்றில் முறையான தேர்ச்சி பெற்று நிறைய படங்களில் நாட்டியக் காட்சிகளில் சோபித்தவர். நடிகர் திலகத்திற்கு பொருத்தமான ஜோடியாய் இருந்தாலும் அதிகப் படங்களில் ஜோடி சேர்ந்ததில்லை. எனக்கென்னவோ லலிதா பத்மினியை விட அழகில் ஒருபடி தூக்கலாய் இருப்பது போலத் தோன்றும். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பை இவரிடம் காணலாம். தூக்குத் தூக்கியில் கணவனுக்கு துரோகம் செய்யும் பாத்திரத்தை உறுத்தாமல் செய்திருப்பார். நடிகர் திலகமும், லலிதாவும் இணைந்த டூயட் பாடலான "கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?"அம்சத்திலும் அம்சம். 'உலகம் பலவிதம்' காவியத்தில் வரும் நடிகர் திலகம், லலிதாவின் அற்புத டூயட்டான "ஆசைக்கனவே நீ வா...வா..வா...அழகுச் சிலையே நீ வா".... பாடல் மனத்தைக் கொள்ளை கொண்டு போகும்.
நடிகர் திலகமும்,லலிதா அவர்களும் இணைந்து கலக்கும் 'தூக்கு தூக்கி' காவியத்தின் அற்புத டூயட் பாடல்... (வீடியோ)
"கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?"...
http://www.youtube.com/watch?v=eyu9T...yer_detailpage
'உலகம் பலவிதம்' காவியத்தில் லலிதா பங்கு பெறும் 'உலகம் பலவிதம் ஐயா' பாடல் வீடியோ.
http://www.youtube.com/watch?v=HovhV...yer_detailpage
A special cover was released on 01 Oct 2008 on 80th Birthday of Dr Sivaji Ganesan at Chennai. It is specially dedicated to the Travancore sisters Lalitha, Padmini and Ragini who were born in Thiruvanthapuram in what was the erstwhile Princely state of Travancore. The Three sisters were leading actresses of Indian Cinema and acted in a large number of films and worked with leading actors like 'Nadigar Thilagam 'Sivaji Ganesan , MGR, Raj Kapoor ,Prem Nazir, Rajkumar etc.
http://www.indianstampghar.com/wp-co...008/10/121.jpg
(ஜோடிகள் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன் சார்,
back with a bang - ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த மொழிக்கு உதாரணம் தங்களுடைய பதிவுகள். பம்மலாருக்கும் அநைத்து நண்பர்களுக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் அலசி ஆராய்ந்து பதில் சொல்லும் விதம், தங்களுக்கே உரிய பாணியில் மொழியில் அதை சொன்னது எல்லாமே பாராட்டுக்குரியவை. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டகாசம் அதிலும் குறிப்பாக பாகப் பிரிவினை பாடலை பதிவிட்டு தூள் கிளப்பி விட்டீர்களென்றால், லலிதாவைப் பற்றிய குறிப்புகளுக்கு என்ன சொல்ல... உலகம் பல விதம் படத்தில் நடிகர் திலகத்திற்கும் லலிதாவிற்கும் இன்னொரு டூயட் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக தற்போது வெளிவந்திருக்கும் நெடுந்தகடு பாதி படம் அளவிற்குத் தான் உள்ளது. நடிகர் திலகமும் காக்கா ராதாகிருஷ்ணனும் டி.கே.ராமச்சந்திரனும் சேர்ந்து அடிக்கும் லூட்டி .. இன்னும் சொல்லப் போனால் பாலைவனச் சோலை படத்திற்கு இந்தப் படம் ஒரு உந்து சக்தியாகக் கூட இருந்திருக்கும். இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதாநாயகியர் அதுதான் வித்தியாசம் எனவும் எடுத்துக் கொள்ளலாம். தூக்குத்தூக்கி ... உண்மையிலேயே க்ளாஸ் என்பதற்கு உதாரணம். திருவிதாங்கூர் சகோதரிகள் மூவருடனும் ஜோடியாக நடித்தவர் நடிகர் திலகம்.
பாராட்டுக்கள்.
-
டியர் முரளி சார்,
சுப்புவின் கருத்துக்குத் தங்களுடைய பதில் நன்று. என்றாலும் அவருடைய உணர்வுகள் நம் அனைவரின் உணர்வுகளையுமே பிரதி பலித்தன என்பது உண்மை. ஏபி என் அவர்களின் கடந்த கால வரலாறு நம் அனைவரின் கண்ணோட்டத்திலும் ஒரே மாதிரித் தான் தோற்றமளிக்கிறது என்றால் காரணம் நாமல்ல. பம்மலார் சொன்னது போல் இதை விவாதிக்க வேண்டாம் என்று எண்ண மனம் மறுக்கிறது.
போதாக்குறைக்கு ஹிந்து வில் வெளிவந்த கட்டுரையில் திரு பரம் கூறிய கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. சட்ட சிக்கல் வர வாய்ப்புள்ளது என்று தெரிந்திருந்தால் அதனைத் தீர்த்து விட்டு செலவழித்திருக்கலாமே என்று ஒர் கருத்து உருவாவதையும் மறுப்பதற்கில்லை. தவறு யார் பக்கம் என்பதை ஆராயாமல் இருக்க முடியாது என்பதே உண்மை நிலை. காரணம் இவ்வளவு பெரிய படத்தை திடீரென ஒரு காட்சியில் திரையிட்டால் எந்த ரசிகராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ஒருமித்த கருத்து. இது சட்ட விவகாரம் என்றாலும் அதில் ரசிகர்களின் உணர்வும் அடங்கியுள்ளது. இந்த மாதிரி ஒரு நிலைப்பாட்டை அவர் வேறு நடிகரின் படம் என்றால் செய்வாரா... இவையெல்லாம் ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் எழும் எண்ண ஓட்டங்கள். அதைத்தான் சுப்பு அவர்கள் கூறியிருக்கிறார். அவருடைய வார்த்தைகளில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர எண்ணம் நம் எல்லோர்க்கும் ஏற்புடையது தான்.
நக்கீரன் வசனத்தையே சற்று மாற்றிப் போட்டு யோசித்தால் ..
சுப்பு அவர்களின் வாதத்தில் ... பொருளில் குற்றமில்லை. சொல்லில் தான் குற்றமிருக்கிறது... சொல்லில் குற்றமிருந்தால் அது மன்னிக்கப் படலாம். ஆனால் அவருடைய பொருளில் குற்றமில்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.
அன்புடன்
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கும், அன்புப் பாராட்டுதல்களுக்கும் அகம் மகிழ்ந்த என் நன்றிகள். 'உலகம் பலவிதம்' காவியத்தில் வரும் "ஆசைக்கனவே நீ வா" என்ற அரிய அற்புதப் பாடல் முதன் முதலாக இணையத்தில் தரவேற்றப்பட்டு நம் அனைவருக்காகவும் இதோ...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ug13QIPRc6k
-
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
HAPPY VINAYAKA CHATHURTHI TO ALL !
அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 1
திருவிளையாடல்(1965)
http://i1110.photobucket.com/albums/...ps7e560505.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
டியர் வாசு சார்,
உலகம் பலவிதம் ஆசைக் கனவே நீ வா - அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் (வேறெங்கே சிலோன் ரேடியோவில் தான்) - அதை இங்கே அனைவரின் பார்வைக்கும் தந்த தங்களுக்கு உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
பம்மலார் சார்,
ஆஹா தலைப்பே சூப்பர் ... சொக்கி இழுக்குதே .... தங்களுடைய பொக்கிஷங்களின் பல கதவுகளில் இன்னொன்று தற்போது திறந்திருக்கிறது. உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் .. எவ்வளவு அபூர்வமான விலை மதிப்பற்ற மாணிக்கங்கள் . வைரங்கள் ... வைடூரியங்கள் ... என ஜொலிக்கப் போகின்றனவோ... குறிப்பாக தாங்கள் அதனைத் தொடங்கி வைத்த நேர்த்தி .. திருவிளையாடல் படத்தின் ஒரிஜினல் ஸ்டில்லுடன் ..
சும்மா சொல்லக் கூடாதய்யா ...
இங்கு குசும்புவில் யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர் ...
நன்றியுடன்
ராகவேந்திரன்
-
டியர் கோபால்,
நீதி சௌகார் ஜானகி போல் எனக்கு அவ்வளவு வயதாகி விடவில்லையே... நான் இன்னும் நடிகர் திலகத்தின் பிள்ளை தான் .. அதனால் நான் ஏற்பது என்ற கேள்விக்கே இடமில்லை.. தங்கள் கூற்றுப் படியே பார்த்தாலும் தான் மெச்சுவதை விட மற்றவர்கள் தன் பிள்ளையை மேன்மையான பிள்ளை என்று மெச்சும் போது தான் பெரிதும் மகிழ்வாள். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோர் எனக் கேட்ட தாய் ... தங்களுக்குத் தெரியாததா ...
அன்புடன்
ராகவேந்திரன்
-
அன்னை இல்லத்தின் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் (ஒரு பிளாஷ்பேக்)
மாலைமலர் june 17, 2010
http://i1087.photobucket.com/albums/...g?t=1348038858
தினத்தந்தி செய்திகள் june 18, 2010
http://i1087.photobucket.com/albums/...psec5559f5.jpg