நித்தமும்தான் சத்தம் கேட்குது
தத்தை கத்துது காலை மாலை
சுத்துது எங்க வீட்டு மாடியை
வைத்த அரிசியும் பிடிச்சிருக்கு
சுத்தமான தண்ணீரும் பருகுது
சொத்தும் சுகமும் இதுவல்லவோ
Printable View
நித்தமும்தான் சத்தம் கேட்குது
தத்தை கத்துது காலை மாலை
சுத்துது எங்க வீட்டு மாடியை
வைத்த அரிசியும் பிடிச்சிருக்கு
சுத்தமான தண்ணீரும் பருகுது
சொத்தும் சுகமும் இதுவல்லவோ
இதுவல்லவோ எனக்கென்றுதான் எழுந்தேகிளர்ந்த துவோ
பதுமையென பரிகாசமாய் பார்த்தேசிரித் தவரும்
புதுமையென புகழ்ந்தேமனம் மகிழ்ந்தேயவர் பரிசு
இதுதானென தரக்காரணி அழகானகற் பனையே..
கற்பனையே செய்யுதே வஞ்சனையே
பஞ்சகல்யாணியாய் பறக்கவில்லை
கழுதையாய் சண்டித்தனம் செய்ய
கதைப்போட்டி கடைசி நாள் நெருங்க
ஐயகோ என் செய்வேன் நான் தவிக்க
எங்கிருக்கிறாய் என் கதையின் கருவே
கருவே உருவாய் காலப் போக்கில்
…இளமைப் பருவம் எய்தும் போதில்
மருவாய் உளத்தில் மயக்கும் ஆசை
..மாற்றம் பலவைச் செய்யும் போதில்
நறும்பூக் கொண்ட நாரும் போலே
…நாலாய் மேலாய் இன்னும் இன்னும்
வருமே எண்ணம் நன்றும் நஞ்சும்
..வாகாய்த் தீமை தவிர்த்தால் நலமே
நலமே பெண்ணின் நலமே
நல் வாழ்வின் மையமே
நாகரிகத்தின் அடையாளமே
நிலைக்கட்டுமே நிரந்தரமாய்
நிரந்தரமாய்க் கனவுகளில் நித்தம் வந்து
...நீலவிழி தனையுருட்டி மிரட்டிச் செல்வாய்
புறந்தள்ளிப் போவென்றால் போகா மல்தான்
..பூவிதழை விரித்துவொரு சிரிப்பைத் தந்து
வரங்களெதும் வேண்டுமென்றால் கேளேன் என்பாய்....
..வாய்திறந்து கூறுமுன்னே மறைந்து செல்வாய்
தரவேண்டும் நனவினிலே எனக்கே கண்ணா
..தக்கபடி ஒருபதிலை சொல்வாய் கண்ணா..
கண்ணா நீ விழித்துக்கொள்ளடா
கதவுக்குப்பின் நின்று பேசியவள்
கடுகு தாளிக்க மட்டும் தெரிந்தவள்
காணாமல் போனாளடா இந்நாளில்
கச்சிதமாய் உன்னை மாதிரியே
கட்டவிழ்த்து வாழத் துணிந்தாளடா
துணிந்தாளடா தெரியுமா
உன் பாட்டி பட்ட கஷ்டம்..
என்பார் தாத்தா
ஆரம்பப் பேச்சுக் குழறிக் குழறி
வயதான தன்மையால்
பாட்டி இல்லாத் பேதமையால்..
உங்களைத் தைரியமாக வளர்க்கத்
துணிந்தாளா..
பக்கத்து ஊருக்குத் தனியாகப் போகத்
துணிந்தாளா எனப்
புரியாது..
பின் தான் புரிந்தது
என்னை எப்படி விட்டுப் போகத் துணிந்தாள் என்பது..
அதுவும்
தாத்தாவின்
கண்ணோரம் காய்ந்த
கறையைப் பார்த்தபிறகு..
பார்த்தபிறகு மனம் மாறுமா
கற்பனை பிம்பம் மறையுமா
வண்ணங்கள் தான் கரையுமா
கட்டிய கோட்டையும் சரியுமா
விபரீத பரிட்சை தேவையா
இப்படியே தொடர்வது நலமே
நலமே
எனச் சொன்னது
உன் வீட்டின் முன்னிருந்த
வேப்பமரக் கிளை,
அதை உரசிக்கொண்டிருந்த காற்று,.,.
நலமே எனச் சொன்னார்கள்
உன் வீட்டில்
உன் அப்பா,
உன் அம்மா,
உன் தங்கை
உன் பாட்டி..
ஆனால்
நலமே எனச் சொலவில்லை
உன்
மெலிந்த உடலும்,
வாடிய சருகான முகமும்,
கண்ணோரம் நீ வைத்திருந்த
என்னுயிரும்..