திலக சங்கமம்
கூண்டுக்கிளியில் தொடங்கிய நடிகர் திலகம் திரை இசைத் திலகம் கூட்டணி இறுதி வரை சிறப்பான கூட்டணியாகவே விளங்கியது.
http://i1146.photobucket.com/albums/...ps24e2f43a.jpg
தொடர்ந்து 1957ம் ஆண்டில் தமிழ்த்திரையுலகையே புரட்டிப் போட்ட மாபெரும் வெற்றித் திரைக்காவியமான மக்களைப் பெற்ற மகராசி, மிகச் சிறந்த கூட்டணிக்கு வித்திட்டது. எவ்வாறு நடிகர் திலகம்-இயக்குநர் பீம்சிங்-விஸ்வநாதன்-ராமமூர்த்தி என ஒரு கூட்டணி விஸ்வரூபமெடுத்ததோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் நடிகர் திலகம்.இயக்குநர் சோமு-இயக்குநர் ஏபி.என். - கே.வி.எம். என்ற இந்த கூட்டணியும் காவியங்களைத் தரும் கூட்டணியாக உருவெடுத்ததற்கு அச்சாரமானது மக்களைப் பெற்ற மகராசி. தமிழகமெங்கும் வெற்றி பவனி வந்த இத்திரைக்காவியம் சேலம் மற்றும் திருச்சியில் நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டது. அன்று தொட்டு இன்று வரை இப்படத்தின் பாடல்கள் பேசப்படுகின்றன. பொங்கல் திருநாளென்றால் வானொலியில் தவறாமல் இடம் பெறும் பாடலாக மணப்பாறை மாடு கட்டி பாடல் அமைந்து விட்டது.
பானுமதி அவர்களின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது மக்களைப் பெற்ற மகராசி.
ஏழிசைக்குரலோன் பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துத் தந்தது மக்களைப் பெற்ற மகராசி பாடல்கள்.
குறிப்பாக அந்நாளில், அதாவது படம் வெளியான புதிதில், அதிகம் பிரபலமான பாடலைத் தான் நாம் இப்போது காணப் போகிறோம்.
என் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் பிடித்த அந்தப் பாடல், போறவளே போறவளே பொன்னுரங்கம் பாடல் தான்..
இதோ உங்களுக்காக..
https://www.youtube.com/watch?v=QFMh6H5v3SY
இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அபிநயம்... விரலைச் சொடுக்கி கையை மேலே சுழற்றி சிரித்துக் கொண்டே பாடும் அந்த முகத்தின் வசீகரம்...கழுத்தின் பின் பக்கத்தில் அந்தக் குச்சியைப் பரப்பி இருகைகளையும் இருபுறமும் பிடித்துக் கொண்டு ஒயிலாக நடந்தவாறே பாடிக் கொண்டு முகத்தில் அந்த வசீகரப் புன்னகையை வீசி மயக்கும் அழகு இருக்கிறதே..
ஆறிப்போனா போகட்டுமே ஆசை மச்சான் என்று பானுமதி பாடும் போது தலைவர் காட்டும் முக பாவனை.... நம்மை அள்ளிக்கொண்டு போகும்...
.... பாடலை முழுதும் பாருங்கள்.. அனுபவியுங்கள்... அந்த மதிமுகத்தில் தவழும் புன்னகையை...