-
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் - உன் அழகுக்கு ஒருத்தி துணை வருவாள்
இந்த அழகு ஒன்று போதும் - நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய - புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க - பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை.
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் - நல்ல அழகன் என்பேன், நல்ல அழகன் என்பேன்
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா - அழகன் நீதான் - நீதான் - நீதான் என்று அடிக்கட்டுமா
தன்னை நாடும் காதலன் முன்னே - திருநாளை தேடிடும் பெண்மை
இப்படி, நம் மக்கள் திலகத்தை வர்ணித்து பல பாடல்களை பல்வேறு கவிஞர்கள், பல கால கட்டத்தில் எழுதினாலும் அதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொண்டதும், ஒப்புக்கொண்டதும், ரசிகர்களும் பொது மக்களும் தானே.
உலகத்திலேயே அழகான ஒரு நடிகர் உண்டென்றால் அது எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டும் தான் - இப்படி சொன்னது பிரபல
நடிகை C.I.D. சகுந்தலா (2011ல் நடந்த சென்னையில் நடந்த திருடாதே 50 வது ஆண்டு கொண்டாட்ட விழாவில்)
படகோட்டியில் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். அவர்களின் அழகான தோற்றத்தை கண்டு, இதே போன்று கருத்தினை அப்போதே தெரிவித்தவர் 1000 படங்களில் நடித்துள்ள நடிகை மனோரமா.
எந்த ஒரு நடிகரும் காதல் காட்சியில் நடிக்கும்போது நாயக-நாயகியர் ஆகிய இருவரின் பாவனைகள் ரசிக்கப்படும். . ஆனால், நம் அழகுத்தேவன் எம்.ஜி. ஆர். அவர்கள் மட்டும் காதல் காட்சியில் நடிக்கும்போது அவரது நடை, உடை, பாவனைகள் மற்றும் STYLE இவைகளை கண் கொட்டாமல், பெரும்பாலான ஆண் ரசிகர்கள் ரசிப்பர். இந்த அற்புத சாதனை அவர் ஒருவருக்கே உரித்தானது. ஆண்களே பார்த்து பொறாமைப்படும் அழகு படைத்தவர் எம்.ஜி.ஆர். என்று அந்த கால கட்டங்களில் அழைக்கப்பட்டவர்.
வரலாற்று நாயகனின் அழகிய தோற்றம் கொண்ட சில நிழற் படங்கள் கீழே :
http://i46.tinypic.com/v80gm.jpg
http://i45.tinypic.com/244wh9h.jpg
http://i49.tinypic.com/vfkyfl.jpg
http://i49.tinypic.com/rkxb37.jpg
http://i48.tinypic.com/24wzv9w.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
அனைவருக்கும் வணக்கம். மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்களுக்கு இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பக்தனின் அன்பு கலந்த வணக்கங்கள். சற்று வேலைப்பளுவின் காரணமாக சில மாதங்கள் திரிக்கு வர இயலவில்லை. ஆனால் வினோத் சார் மட்டும் அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் உரையாடும் போது சொல்லுவார் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் அடிக்கடி என்னைப் பற்றி விசாரிப்பார்கள் என்று. அந்த அன்பு உள்ளங்களுக்கு என் கோடானு கோடி நன்றி!
மக்கள் திலகம் பாகம் 4 ற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பெருமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது. நான்காம் பாகத்தை அமர்க்களமாய் தொடங்கி வைத்த அன்பு நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
எங்கள் இதய தெய்வம் நடிகர் திலகம் அடிக்கடி சொல்வாரே
http://t3.gstatic.com/images?q=tbn:A...TSar2eUodtkZEw
'ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி' என்று.
அதுபோல
தன் அன்பான அரவணைப்பால் மக்கள் திலகம் திரிகளை வெற்றிபெறச் செய்த திரு வினோத் சார், பிரதி பலன் பாராது இரவு பகலாக உழைக்கும் திருவாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயசங்கர், கலியபெருமாள், ராமமூர்த்தி, ஸைலேஷ் பாஷா, பேராசிரியர் செல்வகுமார், திரு பிரதீப் பாலு, திரு ரூப்குமார் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். எவ்வளவு அரிய புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள்! பெயர் விடுபட்டுப் போன அன்பர்களுக்கும் என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். எனது இனிய நண்பர் திரு பெங்களூரு குமார் அவர்களுக்கும் என் நன்றியும், வணக்கங்களும்.
எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் திரு.ராகவேந்திரன் சாருக்கும் என் நன்றி!
மக்கள் திலகம் புதிய திரியில் என்னால் முடிந்த ஒரு பதிவு.
http://i1087.photobucket.com/albums/...psf968ee7d.jpg
http://i1087.photobucket.com/albums/...ps833e4685.jpg
http://i1087.photobucket.com/albums/...ps3394cc12.jpg
http://i1087.photobucket.com/albums/...psf5d9bcad.png
அன்புடன்,
வாசுதேவன்.
-
http://i50.tinypic.com/200p5kj.jpg
நம் தலைவனின் அழகையும் புகழையும் மிகவும் அற்புதமாக
வர்ணிக்கும் பாடல்களை பதிவு செய்த வினோத் சார்
உங்களுக்கு என் நன்றிகள்
-
இயக்குனர் ரா.சங்கரன் அவர்களின் திருமணத்தில் மக்கள் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...pse139f588.jpg
-
-
-
-
-