-
-
-
-
-
இன்று (9/6/18) முதல் தூத்துக்குடி சத்யாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/b64ls2.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.
-
http://i66.tinypic.com/2r53wd4.jpg
வள்ளியூரை சேர்ந்தவரும், நாகர்கோவிலில் ஜவுளிக்கடை அதிபரும், உலக வானொலி நேயர்களின் முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்த திரு.ஏ.பி.எஸ். ரவீந்திரன் அவர்கள் மாரடைப்பால் நேற்று காலை (8/6/18) மரணமடைந்தார் .
சில ஆண்டுகளுக்கு முன்பாக நானும், திரு.சி.எஸ். குமார் (பெங்களூரு ), திரு.தம்பாச்சாரி, (சென்னை ) மற்றும் சில நண்பர்களுடன் , குற்றாலம் செல்வதற்கு முன்பு நாகர்கோவிலில் சென்றடைந்தபோது எங்களுக்கு திரு.ரவீந்திரன் அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, தனது ஜவுளி கடையில் சில நிமிடங்கள் , தனது மிகவும் பிஸியான நேரத்திலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகள், நெல்லை
நாகர்கோவிலில் மக்கள் தலைவரின் படங்கள் வெற்றி வாகை சூடிய வரலாறு [போன்றவற்றையம், அவரது மனித நேயத்தையும் பேசிய விதம் பசுமையான நினைவுகள் போன்றவை .அவரது சொந்த தங்கும் விடுதியில் தங்கவைத்ததோடு,
மறுநாள் , கார் மூலம், திருவட்டாறு, பேச்சிப்பாறை அணை , திற்பரப்பு அருவி, காமராஜர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை ஆகியவற்றை கண்டுகளிக்க பேருதவி செய்தவர் .
திரு.ரவீந்திரன் அவர்களின் மறைவு, எண்ணற்ற எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பேரிழப்பு .
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .
அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள், தொழிலாளிகளுக்கு என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
-
-
-
-