Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர் பார்த்த சாரதி,
எப்படி மதுரை நண்பர்கள் மதுரையைப்பற்றி சிலாகிக்கிறீர்களோ, அதே போன்று ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சென்னை சாந்தி திரையரங்கினைப் பற்றித் தன் வாழ்க்கையில் நினைக்காத நாட்களே இருக்க முடியாது. கிட்டத் தட்ட நமது வீடு போன்று வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே திகழ்ந்தது, திகழ்கிறது சாந்தி திரையரங்கு. தாங்கள் தினந்தோறும் சாந்தி திரையரங்கு வருவதாக கூறியிருந்தீர்கள், அவ்வாறானால், என்னை நீங்கள் நிச்சயம் சந்தித்திருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம். நேரில் பார்த்தோமானால் நினைவூட்டிக் கொள்ளலாம். சமீபத்தில் முரளி சாரிடம் பேசிக் கொண்டிருந்த போது தங்களை நான் சந்தித்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறினேன். கூடிய விரைவில் நாம் அனைவரும் சந்திக்கலாம் என நம்புவோம்.
ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்...
அது வரை, சமீபத்திய சாந்தி திரையரங்கினை பட வடிவில் காணுங்கள்.
அன்புடன்