-
Great presentation Vasu Sir.
One of the rare compositions. If you listen deep, you can get some resemblance of "Devan vandhaan Devan vandhaan (Kuzhandhaikkaga)" whenever you listen to shenoy.
Incidentally, both are from the same combo.
There are some songs which will take you to the past and you will start remembering / recalling certain places. Whenever I listen to this song, my memory will go to Kanniyappa theatre (Thirukkazhukkundram) and my Aunt's house (mutram, thinnai, etc. - can we get these in Chennai) where I first saw this movie in childhood.
Regards,
R. Parthasarathy
-
வாசு சார்
அருமையான ஒரு பாடலை இணைத்துள்ளீர்கள் .
அந்த பாடல் வரிகளும் அதன் விளக்கமும் அருமை .
எந்த அளவுக்கு நீங்கள் இசையை ஊன்றி கவனித்து உள்ளீர்கள் என்பது நன்கு புலனாகிறது.
கண்ணே பாப்பா படமும் ஒரு நல்ல படம்
இந்த பாடலை கேட்டவுடன் என் மனதில் தோன்றிய இன்னொரு பாடல்
இதோ எந்தன் தெய்வம் இதே முத்துராமன் கே ஆர் விஜயா ஜோடியில்
வெளி வந்த "அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளி தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் "
திருலோக் அண்ணாவின் இயக்கம் அமுதம் pictures தயாரிப்பு
பாலா சுசீலா இணை குரல்களில்
http://www.youtube.com/watch?v=டிவ்ட்ஜிமிப்ப்ங்
-
1 Attachment(s)
மகனே நீ வாழ்க 1969
ம.கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில்
ஜெய், லக்ஷ்மி. விஜயகுமாரி நடித்து
t.r .பாப்பா இசையில் வெளிவந்த திரைப்படம்
ஒரு அருமையான நாட்டுபுற பாடல்
துணை நடிகை முகத்தை பார்த்தல் கொஞ்சம் படாபட் மாதிரி இருக்கிறது
நெஞ்சம் படபடனு அடிக்கிறது
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த* மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர* உள்ளூர* எண்ணிக் க*ளித்து
உள்ளூர* உள்ளூர* எண்ணிக் க*ளித்து
நான் உற*க்க*த்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உற*க்க*த்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த* மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா ?
http://www.youtube.com/watch?v=t5-Ew96izaQ
-
நீயும் நானும் என்றொரு படம். ரவி-ராஜஸ்ரீ ஜோடி.யாரடி வந்தார் உன் நெஞ்சத்தை கொள்ள
-
பொன் மகள் வந்தாள் 1973
ஒரு நல்ல suspense thriller
ஜெய்,லக்ஷ்மி,முத்துராமன்,ஸ்ரீகாந்த்,முத்துராம ன் அப்பாவா ஒருத்தர் வருவர் .
நிறைய murders நடக்கும். யார் அதை செய்றது
முத்துராமன் வில்லன் மாதிரி வருவார் ஆனால் அவரும் கொலை செய்ய படுவார் . ஸ்ரீகாந்த் படம் பூராவும் கொலை நடக்கும் இடத்திற்கு வந்து ஒரு சுருட்டு கிடக்கும் . அதை தேடி எடுத்துட்டு போவார். இறுதியில் அவர் cid .
கருப்பு வெள்ளை .
பழய படங்களில் இந்த banner வரும்
கார்த்திக் சார் கூட ஒரு பதிவில் இது சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
திரைஅரங்க காம்போவில் வெளி வந்த படம் என்று எழுதி இருந்தார்
ஷங்கர் கணேஷ் இசையில் ஒரு அருமையான மெலடி டூயட்
ஆரம்ப ஹம்மிங்
"ல ல ல ல ல லா லா ல ல ல ல ல லா லா "
"சு சு சு சு சு சு சு சுச் சு சு " பாலாவின் இந்த ஹம்மிங் ரொம்ப நல்ல இருக்கும்
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்ற் சொல்லாதோ
அள்ளவோஒ . உண்ணவோ
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
(எந்தன் தேவியின் )
தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சிபெண் கண்ணுக்குள் நீராட கண்டேனே
நீலவானில் நீந்துகின்ற மேகங்களே
எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களே
(எந்தன் தேவியின் )
பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்
கண்ணொடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்
வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானன்ல்லவோ
(எந்தன் தேவனின்)
ஆடியோ லிங்க் தான் கிடைத்தது . விடியோ லிங்க் கிடைக்கவில்லை
முரசு sunlife சேனல் களில் இது போன்ற படம் வரவில்லை
திருப்பி திருப்பி நூற்றுக்கு நூறு,பூவா தலைய ,பெண் ஜன்மம்,மாணவன்,
சூரிய காந்தி,பூவும் பொட்டும் இது தான் வருகிறது
கார்த்திக் சார் /வினோத் சார்
இதன் பேப்பர் கட்டிங் எதாவது இருந்தால் ஏற்றி விடுங்கள்
http://www.mediafire.com/?37c48un6ptcgc2h
-
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக மலர்ந்த 'தென்றலில் ஆடை பின்ன' (கண்ணே பாப்பா) படப்பாடல் மிகவும் அருமை. ரொம்பவே அனுபவித்துஒவ்வொரு வார்த்தையையும் பதித்துள்ளீர்கள். ஒவ்வொரு வரிக்குமான விளக்கங்கள் சூப்பர்.
கண்ணே பாப்பா இயக்குனர் பி.மாதவன் சற்றே வித்தியாசமாக தந்த படம். மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக இனிமை. இப்படத்தில் ஆண்குரல் பாடலே இல்லையென்று நினைக்கிறேன். அனைத்துப்பாடல்களுமே பி. சுசீலா மட்டுமே என்றும் நினைக்கிறேன். உறுதி செய்யவும்.
படத்தில் திரும்பத்திரும்ப வரும் 'கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா' பாடலும் மிகவும் இனிமை. அப்பா, அம்மாவைத்தேடி சென்னை வரும் குழந்தை ஒரு வீட்டின் திண்ணையில் தூங்கும்போது, குழந்தையின் கனவில் விஜயா வந்து பாடும் முழுப்பாடலும் அதற்கான காட்சியும் கூட நன்றாய் அமைந்திருக்கும்...
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
அன்னையும் இங்கே சிந்தும் புன்னகை எங்கே
சித்திரத்தில் ஒரு தத்துவம் உண்டு, எழுதியவன் எங்கே
சத்தியத்தில் பெரும் நம்பிக்கை கொண்டு தழுவியவள் இங்கே
சங்கம நதியும் கடலும் என்றும் பிரிவதில்லை கண்ணே
(ஏமாந்தவளுக்குத்தான் எவ்வளவு ஒரு நம்பிக்கை...!!).
அன்னையிடத்தில் தந்தை இருந்தால் பிள்ளைக்கு பாராட்டு
அள்ளியெடுத்து பாடி முடிப்பாள் ஆயிரம் தாலாட்டு
சந்தன நிலவே நீயும் நானும் தலைவன் விளையாட்டு
சாலை வழியே செல்லும் குழந்தைக்கு இறைவா வழிகாட்டு
ஆயிரம் இரவு அவசர உறவு
இறைவனின் முடிவு இங்கு நீ வந்த வரவு
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
பாடல் முடிந்து கடைசியில் குழந்தையின் கனவு கலையும்போது இனம்புரியாத சோகம் வந்து நம் இதயத்தை தாக்கும்.
இன்னொரு சுசீலா பாடல் விஜயகுமாரிக்கு (ஜோடி சி.ஐ.டி.நம்பியார்)
சத்திய முத்திரை கட்டளையிட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டிலில் கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்
அந்த நாயகன் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா ராஜசபையை காத்தது எப்படியோ
தேவ தூதன் நம்மையெல்லாம் காப்பது அப்படியே
அந்த நாயகன் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
ஒவ்வொரு கிருஸ்துமஸ் தினத்தன்றும் வானொலிகளில் தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல்...
-
நன்றி பார்த்தசாரதி சார்.
நீங்கள் குறிப்பிட்டிருந்த 'குழந்தைக்காக ''தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே' பாடலை விவரித்து எழுத ஆசை.
அற்புதமான பாடல் சார் அது!
அந்தப் படத்திலேயே இன்னொரு பிரபலமாகாத ஆனால் என் மனம் கவர்ந்த பாடல் ஒன்று உண்டு.
அது பத்மினி பேபி ராணியைக் காப்பற்ற திருடர்களான மேஜர், ராமதாஸ், மனோகர் ஆகியோரின் கட்டளைப்படி கவர்ச்சியாக ஆடும் போது ஒலிக்கும் பாடல் (அப்படித்தான் நினைவு).
நம் பாடகியர் திலகம் பாடியிருப்பார் அவ்வளவு இனிமையாக. நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
தொட்டுப் பாருங்கள்
ஜோடிப் பூவைப் போலக் கன்னங்கள்
தட்டிப் பாருங்கள் தாளம் போடும்
ஆசைக் கிண்ணங்கள்.
இப்பாடலின் இடையே வரும் இடையிசையும் மறக்க முடியாதது.
பாருங்கள் இப்போது. மிகவும் அபூர்வமான பாடல்.
http://www.youtube.com/watch?feature...&v=QHb_FO4jhQs
-
நல்லதுக்கு காலமில்லை 1977
தொழிலாளர் films
TN பாலு இயக்கம்
ஜெய்ஷங்கர்,ஸ்ரீப்ரிய,ஸ்ரீகாந்த்,சுகுமாரி,லக்ஷ்மிஸ் ரீ (ஒரு தங்க ரத்தத்தில் என் மஞ்சள் நிலவு பாட்டில் வருவார் பின்னாட்களில் தற்கொலை செய்து கொண்டார் ஏன் என்று தெரியவில்லை )அஞ்சல்பெட்டி முத்தையா (ஒரு கால் கொஞ்சம் ஊனமாக இருக்கும். ஹிந்தி நடிகர் டேனி யை நினவு படுத்தும் முகம் ) நடித்து வெளி வந்தது
நிறைய திரைப்பட தொழிலாளர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு
14 நாட்களில் எடுக்கப்பட படம் என்று பிலிமலாயா பத்திரிகை எழுதிய நினவு .
ஸ்ரீகாந்த் அண்ணன், ஜெய் தம்பி, சுகுமாரி அம்மா,லக்ஷ்மிஸ்ரீ தங்கை
இதில் ஸ்ரீகாந்த் நல்லதுக்கு காலமில்லை என்று கூறி திருட்டு,கள்ளகடத்தல் செய்து குடும்பத்தை காப்பாற்றுவார் . ஜெய் அதற்கு நேர் எதிர் நல்லதுக்கு காலமுண்டு என்ற கட்சி அவர் காதலி ஸ்ரீப்ரிய . ஜெய் சுகுமரியிடம் எப்படியாவது ஸ்ரீகாந்தை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவேன் என்று வாக்கு கொடுப்பார் .ஆனால் ஸ்ரீகாந்தை அஞ்சல்பெட்டி முத்தையா கூட்டம் போட்டு தள்ளிரும் . ஜெய் அதற்கு பழி வாங்குவார் .
இந்த படத்தில் நான் ரசித்த TN பாலுவின் ஒரு வசனம்
ஸ்ரீகாந்த் தங்கை லக்ஷ்மிஸ்ரீயை தோளில் அணைத்து கொண்டு
- "இந்த பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும் " என்று கூறுவார்
உடனே ஜெய் தங்கை லக்ஷ்மிஸ்ரீயை தன் பக்கம் இழுத்து -
"இந்த நாரோடு சேர்ந்தால் பூவும் நாறும" -
ஒரு ரசிகரின் கைத்தட்டு விண்ணை பிளக்கும் - வேறு யாரு
ஷங்கர் கணேஷ் இன்னிசை வேந்தர்கள் இசை
சுசீலா குரலில் ஸ்ரீப்ரிய ஜெய் ஐ டீஸ் செய்து ஒரு பாடல் உண்டு
"அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கு அனுதாபம்
பள்ளத்தில் விழுந்தாரே அய்யோ பாவம் "
சௌந்தரராஜன் மீண்டும் இதே பாடலை ஸ்ரீப்ரியவை பள்ளத்தில்
தள்ளி விட்டு இந்த பாட்டை பாடுவார்
ஜெய் ஸ்ரீப்ரிய மாறுவேடம் போட்டு கொண்டு (வழக்கம் போல் )
துபாய் ஷேக் ஜெய் அவர் அடிமை பெண் ஸ்ரீப்ரிய
சௌந்தரராஜன் வாணி குரல்களில்
"ஹாப்பி returns ஒ மை பிரதர் வழங்கினேன் வாழ்த்துகள்
ஷப திப ஷப திப (கணேஷ் இன் chorus )"
இந்த பாட்டில் ஒரு வரி வரும் "இது பெரிய இடத்து விஷயம் "
என்று கூறிவிட்டு ஸ்ரீப்ரியாவின் எதோ ஒன்றை காட்டுவார்
உடனே கைதட்டல் கிளம்பும் (ஒரு)
விடியோ லிங்க் இல்லை
http://www.inbaminge.com/t/n/Nallathukku%20Kalamillai/
-
கிருஷ்ணா சார்!
'தென்றலில் ஆடை' க்கு பாராட்டு பின்னிய தங்களுக்கு என் நன்றி!
மகனே நீ வாழ்க பாடல் தந்த பெருமகனே! நீவிர் வாழ்க.
நல்ல குத்துப் பாடல் போன்ற ஒரு பாடல்.
ஆனால் பாடலுக்கும் காட்சிக்கும் பொருத்தம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.
வேட்டி சட்டை, புடவை என்று மனதில் கற்பனைக் கோட்டை கட்டினால் நாகரீக உடையில் ஜெய்யும், மட்டமான சிகை அலங்காரத்தில் லஷ்மியும் ஆடுகிறார்கள்.
-
உண்மை வாசு சார்
இந்த பாடல் ஆடியோவில் மட்டும் கேட்க வேண்டிய பாடல்
முதல் காட்சியில் வரும் அந்த துணை நடிகை படாபட் ஜெயலக்ஷ்மி யா