-
-
இணையத்தில் 60 லட்சம் ஹிட்ஸ்களைக் குவித்தது, சிம்பு-மஞ்சிமாவின் 'தள்ளிப் போகாதே'
-
-
சிம்பு படத்தில் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஒப்பந்தம் - Tamil Hindu
http://tamil.thehindu.com/multimedia...t_2757867f.jpg
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தில் ஹாலிவுட் ஒப்பனை கலைஞர் ஷான் ஃபூட் பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.
தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். சிம்புவை சந்தித்து கதையை தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
இப்படத்தை ரெபில் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தீபன் பூபதி தயாரிக்க இருக்கிறார். 3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிம்புவின் ஒப்பனைக்கு விட்டா நிறுவனத்தின் ஷான் ஃபூட் பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக ஷான் ஃபூட் ஒப்பனையில் சிம்புவுக்கு தனியாக மேக்கப் போட்டு பார்த்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 'ஐ' படத்தில் விக்ரமின் மேக்கப்பிற்கு ஷான் ஃபூட் தான் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்திலும் அவர் பணியாற்றி வருகிறார்.
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் 'இது நம்ம ஆளு' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. அப்படங்களைத் தொடர்ந்து சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிம்புவுடன் இணைவதில் என்ன தப்பு? அனிருத் கேள்வி
பீப் பாடல் சர்ச்சை குறித்து பிரச்னைகள் வெடித்த தருணம் அனிருத் தனது கனடா இசை நிகழ்ச்சிக்காக விமானத்தில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது நண்பரிடம், 2015 எவ்வித சர்ச்சையுமின்றி அமைதியாக கடத்திவிட்டேன். எனக் கூறியுள்ளார், கனடா விமான நிலையத்தில் மீண்டும் மொபைலை ஆன் செய்தபோது அவ்வளவு எஸ்.எம்.எஸ்கள் அனிருத் மொபைலை நிறைத்திருந்தன.
இப்பவும் தன்னால் அந்த நிமிடங்களை மறக்க முடியாது எனக் கூறும் அனிருத்திடம் மீண்டும் சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா எனக் கேட்டபோது அவர் கூறிய பதில் இதுதான். ” அது ஒரு சின்ன விஷயம், தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்பட்டுவிட்டது. எனக்கும் அந்தப் பாடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென நான் கோயம்புத்தூர் காவல் நிலையத்திலும் கடிதம் கொடுத்துவிட்டேன்.
இதனால் ஏன் நான் சிம்வுடன் பணியாற்றாமல் இருக்கப் போகிறேன். உண்மையைச் சொன்னால் நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் வேலை செய்தால் என்ன தரப்போகிறோம் என்பதில் கண்டிப்பாக மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார் அனிருத்
-
-
Simbu takes just a few minutes to learn dance steps: Adah Sharma
Chennai: Actress Adah Sharma, who has grooved to a special song in upcoming Tamil romantic-comedy ‘Idhu Namma Aalu’, says it was so much fun to have danced alongside actor and extremely talented dancer Simbu.
‘It was so much fun dancing with Simbu. He comes to the sets, looks at a step and starts dancing. All that it takes him to learn a step is just a few minutes. And since he's so good at dancing, it encouraged me to work harder,’ Adah told IANS.
http://img01.ibnlive.in/ibnlive/uplo.../Simbucrop.jpg
In the film, Simbu and Adah will dazzle with the introduction song ‘Maaman waiting’.
‘It's a fantastic number with a very catchy tune,’ she said, adding that Simbu is very strong at portraying the right expressions for every step in the song.
Adah had signed the song soon after the phenomenal success of her Telugu suspense drama ‘Kshanam’, in which she was lauded for her role as a hapless mother in search of her miss daughter.
Asked if she has any qualms of signing a song after impressing everyone with such a fine act, Adah said: ‘Dance is my forte, and so far I haven't had the opportunity to portray my talent. Moreover, I'd do a song or a role if I find it amazing, because I don't like to discriminate.’
Adah has signed two new Hindi projects. She also has a Tamil and Telugu project in her kitty.
‘I start shooting for one of the Hindi projects from April. I can't divulge more information now as I feel it might jinx things for me,’ she said
-
Triple A
சிம்புவின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?
சிம்புவின் ' இது நம்ம ஆளு' படத்தில் நயன்தாரா நடிக்க வேண்டிய ஒரே ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டி இருந்தது. பலமுறை பாண்டிராஜ். டி.ராஜேந்தர், சிம்பு என மும்முனை முயற்சிகள் செய்தும் அனைத்தும் அம்பேல். ஒரு கட்டத்தில் கடுப்பான டி.ஆர் ' யோவ் பாண்டிராஜ் அந்த பொண்ணுக்கு என்ன கொம்பு முளைச்சிருக்கா... சிம்புவ வச்சி படத்தை முடிய்யா...' என்று சொல்ல மளமளவென படம் ரெடியாகி விட்டது இப்போது ' மே மாசம் ரிலீஸ் செய்தே தீருவேன்' என்று ப்சங்க மாதிரி அடம்பிடித்துக் கொண்டு இருக்கிறார், பாண்டிராஜ்.
இன்னொரு பக்கம் கெளதம் மேனன் படத்திலும், தே.மு.தி.க-வின் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தயாரிப்பிலும் நடிக்கிறார்.
சிம்பு ஆன்மீக தத்துவங்களை அள்ளிவிட்டாலும் பிடிவாதம் பிடிப்பதில் அப்பாவையே மிஞ்சும் அசகாயசூரர். பீப் பாடல் பிரச்னை ஒரு வழியாக இப்போதுதான் ஓரு வழியாக ஒய்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தனது அடுத்த படத்துக்கு 'aaa' என்று சமூக விழிப்புணர்ச்சிக் கொண்ட தலைப்பைச் சூட்டி வலியபோய் வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
ரவிச்சந்திரன் இயக்கும் 'aaa' படத்துக்கான அர்த்தம் என்ன தெரியுமா? ' ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று புதிய தலைப்பு வைத்து பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார் சிம்பு.
-
ஓட்டு போட வேண்டியது உன் கடமை: வாக்களிக்க வலியுறுத்தி சிம்பு எழுதிய பாடல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சிம்பு, பாடல் ஒன்றை எழுதி தயார் செய்து வருகிறார். சிம்பு எழுதியுள்ள பாடலில் இருந்து சில வரிகள்:
ஓட்டு போட வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
இப்பாடல் குறித்து ‘தி இந்து’விடம் சிம்பு கூறியதாவது:
அப்பாவைப் போல எதுகை மோனையுடன் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இப்பாடல் மூலம் நிறைவேறி இருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும். அதற்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும் என நினைத்தேன். ஒரு வீடியோவில் அனைவரும் ஓட்டுப் போடுங்கள் என்று சும்மா சொல்ல முடியாது. பீப் பாடலை நான் வெளியிடவில்லை. அப்பிரச்சினையின்போது நீங்கள் ஒரு பாடலை வெளியிட்டால் தமிழ்நாடே கேட்கும் என்று சொன்னார்கள்.
தமிழ்நாடே கேட்கிறது என்றால் நாம் ஏன் ஓட்டுப் போடச் சொல்லி ஒரு பாடலை வெளியிடக் கூடாது என்று நினைத்து இதைச் செய்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் இப்பாடல் வெளியாகும். இந்த தேர்தல் மட்டுமன்றி அனைத்து தேர்தல்களுக்கும் இப்பாடல் பொருந்தும்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
-
The vote song by STR reminds me of Nannum Rowdy Thaan moment :
Nayanthara : Naan ungala podanum. Parthiban crawls his base over the sofa with a huge grin in his face.
A royal reply song from STR with a universal message : Vote-u Podunga, Please !