அந்த 1978 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி நான் எழுத விட்டு விட்ட ஒரு படம் இருக்கிறது. அது பிறகுதான் நினைவிற்கு வந்தது. ஆகஸ்ட் 15 அன்று அதுவரை கதை வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரன் இயக்குனராக புது அவதாரம் எடுத்தார். தமிழ் சினிமாவின் குறிப்பிட தகுந்த இயக்குனராக இன்றும் அறியப்படும் மகேந்திரன் எழுத்தாளர் உமா சந்திரனின் நாவலை முள்ளும் மலரும் என்ற பெயரில் படமாக்கி அதில் ரஜினியை நாயகனாக நடிக்க வைத்தார். இந்தப் படமும் அதில் இளையராஜா இசையும் எப்படி புகழ் பெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆக கடைசி 10 நாட்கள் என்ற போதும் மதுரை அலங்காரில் வெளியான இந்தப் படமும் ஒரு opposition என்றே சொல்லலாம்.
அன்புடன்
Thanks Chandrasekaran Sir.