வாசு ஜி
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காமெரா கட் செய்யாமல் ஒரே ஷாட்டில் எடுத்த பாடல் என்பதுதான் இந்தப் பாடலின் தனித்தன்மை. அந்தக் காலத்தில் இந்த அளவு புதுமையாகச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்திருப்பதால் அந்த ஒரே மர செட்டை மன்னித்து விடுங்கள்.
Printable View
பாருங்கள் நண்பர்களே சின்ன கண்ணனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் ,பல பெயர்களாம்?இவரை யாராவது கண்டிக்கவா முடியும்?(என்னை தவிர?)
இது ஒரு சாதாரண சுவாரசியம் கூட்டும் உத்தி. அத்தனை பெயர்களும் அவருடையதே (ஆதிராம்) என்று வைத்து கொண்டாலும்,எல்லா பெயரிலும் சிவாஜி ரசிகராகத்தானே இனம் காட்டி கொண்டார்?என்ன பிரச்சினை என்றே புரியவில்லை. பன்முக எழுத்து திறன் கொண்ட ரா.கி.ரங்கராஜன் போன்றோர் கடைபிடித்த நடைமுறை உத்தித்தானே?
அன்றைய வாசகர்களுக்கு இதை பற்றி தெரிவிக்கவும் இல்லையே?
தொடரும் தவறுகள்.
பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை இனம் காட்டிய தி.க வின் இளம் எழுத்து மற்றும் நடிப்பு புயல்கள் விவரமற்று முட்டாள்தனமாக மத நம்பிக்கைகளை நாடகம் மூலம் பரப்பினர்.
ரத்த கண்ணீர் என்ற நாடகம் திருவாரூர் தங்கராசு எழுதி, எம்.ஆர்.ராதா நடித்தது. இது பகுத்தறிவு வாதிகள் நடத்திய நாடகமாக அறிய படுகிறது. இதை விட அபத்தம் வேறெதுவும் இல்லை.
1)அநீதியை தட்டி கேளுங்கள் என்கிறது பகுத்தறிவு. எதிராக கொதித்தெழுங்கள் என்பது பகுத்தறிவு. தாயை உதைத்தவனை,மனையாள் கெடுத்தவனை,கெட்ட விஷயங்களில் தோய்ந்தவனை ,விதி தொழு நோயால் தண்டிப்பது படத்தின் கரு.இது மத நம்பிக்கைக்கு ஈடானது.
2)அப்படியே விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் வேசிகளை நாடியவன் வெட்டை நோய், மேக நோய் வர வாய்ப்புள்ளதே தவிர தொழு நோய் வரவே வாய்ப்பில்லை.
3)தொழுநோய் கடவுளின் தண்டனை என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை ஒட்டியது ,இந்த படம் போகும் போக்கு.
ஆனால் ஒரே சீர்திருத்தம் மனைவிக்கு மறுமணம்.
எப்படி எல்லோரும் கவனிக்காமல் விட்டனர்?(தி.க) ஆனால் சுவாரஸ்ய படமே.
Happy Father's Day ! :)
கோபால், குமார் மற்றும் பலர் . இது மதுர கான திரி. இங்கே சண்டை வேண்டாம்
அவரவருக்கு தனிப்பட்ட அஞ்சல் உள்ளதே அங்கே வைத்துக்கொள்ளுங்களேன் உங்கள் சண்டையை.
ஏன் இங்கே வந்து பலரும் உங்கள் வாக்குவாதத்தை படிக்க்வேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவு செய்கின்றீர்கள்.
இந்த திரி பாடல் பற்றிய திரி .. ப்ளீஸ் பாடல்களை தொடரவிடுங்கள்
பூச்சாண்டி உஷ்.... சமத்தா சாப்பிடலைன்னா ,அப்புறம் அந்த ஒத்த கண்ணன்கிட்டே பிடிச்சு கொடுத்துடுவேன்.
மதுண்ணா!
நன்றி! இதுவரை எனக்குத் தெரியாது. இப்போது உங்கள் மூலமாக அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி. உங்கள் பதிவைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை பார்த்தேன். உணர்ந்தேன். மன்னிப்பைவிட அப்போதைய புதிய முயற்சிக்கு பாராட்டியே விடலாம். தங்கள் உடல்நிலை எப்படியுள்ளது? இறைவன் தங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நலமுடன் இருக்க ஆசி தருவான். நன்றி மதுண்ணா.
http://www.families.com/wp-content/u...dia/100_01.jpg
ரவி சார்!
'கருவின் கரு' நூறு பதவுகள் அற்புதமாக முடித்து மீண்டும் அரும் சாதனை புரிந்துள்ளீர்கள். அசுர உழைப்பு. எவ்வளவு அருமையான தாய்மை நிறைந்த தகவல்கள்! அதற்கேற்ற பாடல்கள். முத்தாய்ப்பாய் மாணிக்கங்கள், கோமேதகங்கள், பவழங்கள். சாதனை பதிவுகள் என்பது மட்டுமல்ல இவ்வளவு குறுகிய காலத்தில் என்பதும் பெரும் சாதனை.
இரண்டு நாட்களாய் ரொம்ப பிஸி. அதான் கொஞ்சம் லேட்.
தங்கள் பொன்னான உழைப்பிற்கு நன்றிகள் 1000.
நூறுக்கு நூறு மார்க் வாங்கிய தங்களின் 'கருவின் கரு'விற்கு அடுத்து நீங்கள் தரப் போகும் அடுத்த அமர்க்களத்திற்கு பெயர் என்ன?
கலை சார்,
பாராட்டிற்கு நன்றி. ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகளை ரசித்ததற்கும் நன்றி!
//‘நீராழி மண்டபத்தில்’ பாடல் பதிவுக்கும் நன்றி. அந்த பதிவை திரு.எஸ்.வி. எங்கள் திரியில் மீள்பதிவு செய்து, அதை நான் மீண்டும் எடுத்துப் போட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தேன். பார்த்தீர்களா?//
பார்த்தேன் சார். அப்போதே பார்த்து விட்டேன். அதற்கும் தங்களுக்கு என் நன்றி!
கலை சார்,
அழகான பாடலை எடுத்து அதைவிட அழகாக அப்பாடலை அலசியுள்ளீர்கள். 'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்' படப் பாடல்கள் எல்லாமே அருமை. குறிப்பாக நீங்கள் பதிந்துள்ள இளமை கொலுவிருக்கும் பாடல்.
நீங்கள் சொன்னது போல அப்போதே நீச்சல் குளக் காட்சிகளில் தூக்கல்:)...அதாவது கிளாமர் தூக்கல்தான். உங்கள் குழந்தைப் பாட்டு இணைப்பு சாமர்த்தியத்தையும் ரசித்தேன்.
தாய்மை பற்றி அப்பாடலில் வந்திருக்கும் வரிகளைப் பற்றிய தங்கள் விளக்கமும், அதற்கு தோதாய் ஹிட்லரின் கதையும் அருமை.
நல்ல பாடலை நல்ல கருத்துக்களோடு தந்ததற்கு நன்றி!
From Anarkali(1955)
jeevithame sabalamo........
http://www.youtube.com/watch?v=ltl4zpyX-2c
From Telugu version Anarkali(1955)
jeevithame saphalamu.........
http://www.youtube.com/watch?v=Nmho6PcQ61M
From the Hindi original Anarkali(1953)
Yeh zindagi usiki hai......
http://www.youtube.com/watch?v=1eFso_5-bFc
A song in the same tune from Kaveri
en sindhai noyum theerumaa....
http://www.youtube.com/watch?v=ODjPNvmvHWM
A few weeks back the pomegranate bushes in our backyard started blossoming. Now they are fruits. Hope the birds leave some for us. The blossoms reminded me anarkali meaning pomegranate bloom. Strictly kali in Sanskrit means bud.
Enjoy !