http://i66.tinypic.com/102nm81.jpg
http://i68.tinypic.com/20hvimw.jpg
http://i64.tinypic.com/2zf7l6r.jpg
Printable View
நான் மிகவும் ரசித்த மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த காவல்காரன் படத்தில் இடம் பெற்ற காட்சி .
மக்கள் திலகம் நடித்த காவல்காரன் திரைப்படம்சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத விறுவிறுப்பான படம்.
கிளைமாக்சுக்கு முன் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் மக்கள் திலகம் தனது மனைவியாக நடிக்கும் ஜெயாவைக் காண வீட்டுக்கு வருவார். கர்ப்பமாக இருக்கும் ஜெயலலிதாவிடம் ‘குழந்தை பிறந்த உடன் வந்து பார்ப்பேன், கவலைப்படாதே’ என்று ஆறுதல் கூறிவிட்டு வீட்டிலிருந்து அவசரமாக புறப்படுவார்.
அப்போது, போலீஸார் அவரை கைது செய்ய வருவார்கள். அவர்கள் உண்மையில் போலீஸார் இல்லை, வில்லன் அசோகனின் ஆட்கள்தான் போலீஸ் உடையில் வந்திருக்கிறார்கள் என்பது மக்கள் திலகத்துக்கு தெரிந்து விடும்.
எந்த ஸ்டேஷனில் இருந்து வருகிறீர்கள்? என்று போலீஸாரிடம் விசாரிப்பார். ‘ஜே.1 ஸ்டேஷனில் இருந்து..’ என்று இன்ஸ்பெக்டர் வேடத்தில் வந்திருக்கும் அசோகனின் ஆள் கூறியதும், ‘அங்கே திருவேங்கடம் தானே இன்ஸ்பெக்டர்’ என்று அவரை மக்கள் திலகம் மடக்குவார். அவர் திணறும்போது, ‘கைது செய்ய வாரண்ட் இருக்கா?’ என்று கேட்டு இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருப்பவரிடம் கையை நீட்டுவார். இதனால், ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், ‘லாக்அப்பில் இருந்து தப்பி வந்துவிட்டு வாரண்ட் வேற கேட்கிறியா? ஒழுங்கா வந்துடு..’ என்று துப்பாக்கியை காட்டி மிரட்டுவார்.
அவரது கவனத்தை திசை திருப்பும் வகையில், யாருமே வராத வீட்டு வாசலைப் பார்த்து ‘அதோ இன்ஸ்பெக்டரே வந்து விட்டாரே’ என்று மக்கள் திலகம் கூறியதும் வந்திருக்கும் போலியான போலீஸ்காரர்கள் திடுக்கிட்டு திரும்பி வாசலை பார்ப்பார்கள்.
அந்த கண நேரத்தில் மின்னலாய் செயல்பட்டு இன்ஸ்பெக்டரின் கையில் உள்ள துப்பாக்கியை தன் கையில் கொண்டு வந்து விடுவார் மக்கள் திலகம். கான்ஸ்டபிள்கள் இரண்டு பேரின் கைகளையும் விலங்கால் பூட்டி, இன்ஸ்பெக்டராக நடிப்பவரின் கைகளையும் பின்னால் வைத்து கட்டி, ‘என்னை எங்கு கொண்டு போக வந்தீங்களோ, (அசோகன் இடத்துக்கு) அங்கே அழைச்சுட்டுப் போங்க’ என்பார்.
இந்தக் காட்சியில் போலியான போலீஸாரை மடக்கும் விதமும் இன்ஸ்பெக்டரின் கையில் உள்ள துப்பாக்கியை அவருக்கு போக்கு காட்டி விட்டு லாவகமாக பிடுங்கும் வேகத்திலும் மிகவும் இயல்பாக, ஸ்டைலாக நடித்திருப்பார் மக்கள் திலகம்.
இந்த காட்சிக்கு முத்தாய்ப்பாய் ஒன்று. தனது நுணுக்கமான நடிப்புத் திறமையையும் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் மக்கள் திலகம் வெளிப்படுத்தியிருப்பார்.
போலீஸாரின் கைகளை கட்டிப் போட்டு விட்டு, அவர்களை தன்னை அழைத்துப் போகச் சொல்லியபடி, நடப்பவைகளைப் பார்த்து பதறி படுக்கையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொல்லி விடை பெறுவதற்காக, பின்பக்கமாகவே 4 அடிகள் எடுத்து வைத்து பின்னோக்கி நகர்ந்து வருவார். முகத்தை திருப்பி ஜெயலலிதாவை பார்த்து நடந்தால் எதிரிகள் ஓடிவிட்டாலோ, தாக்குதலில் ஈடுபட்டாலோ என்ன செய்வது? என்பதற்காக பின்னோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடை. என்ன அற்புதம்?
ஜெயலலிதாவை நெருங்கியவுடன் அவரது அடுத்த பிரம்மாண்ட கூரிய உணர்வை வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க செய்வார். காட்சியின்படி, கவலையுடன் அழும் ஜெயலலிதாவை தழுவி அவர் ஆறுதல் சொல்ல வேண்டும். ஜெயலலிதா அருகில் மக்கள் திலகம் வரும்போது, கான்ஸ்டபிள்களில் ஒருவர் இவரை பார்த்தபடி நின்று கொண்டிருப்பதை கவனித்து விடுவார். அந்நிய ஆணுக்கு முன் ஒருவர் தன் மனைவியை தழுவி ஆறுதல் சொல்ல முடியுமா? அந்த மனைவிதான் அதற்கு இணங்குவாளா? இந்தக் காலத்திலேயே கூட கொஞ்சமாவது இன்னும் கூச்ச நாச்சம் இருக்கும் நிலையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன் 1967-ம் ஆண்டில் சாத்தியமே இல்லை.
இந்த மனோதத்துவ உணர்வை வெளிப்படுத்தும் வகையில், தன்னைப் பார்த்தபடி நிற்கும் கான்ஸ்டபிளை திரும்பி நிற்குமாறு துப்பாக்கியை ஆட்டி சைகையிலேயே அவருக்கு உத்தரவு போடுவார் மக்கள் திலகம். கான்ஸ்டபிள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜெயலலிதாவை தழுவி ஆறுதல் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? படம்தானே? இருந்தாலும், கணவன் - மனைவி அந்தரங்கத்தை காட்டும் மனத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் என்ன ஒரு தத்ரூபமாக, நுணுக்கமாக, சிந்தித்து நடித்திருக்கிறார். நான் மிகவும் ரசித்த காட்சி இது. அவரது படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவரது தனித்தன்மையான நடிப்பு, கேமரா கோணங்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என்று எல்லாவற்றிலும் புதிது புதிதாக அவரது முத்திரை நமக்கு புலப்படுகிறது. அதனால்தான் இன்றைக்கும் மக்கள் திலகத்தின் படங்களை சுவை குன்றாமல் ரசிக்க முடிகிறது.
15.28 முதல் 17,20 நிமிடங்கள் வரை நான் மேற்கூறிய மக்கள் திலகத்தின் நடிப்பை கண்டு மகிழலாம் .
https://youtu.be/b8Tov3FVvHQ
மக்கள் திலகத்தின் நடிப்பின் ரசனைகள் தொடரும் .
[SIZE=4]நக்கீரன் வார இதழ் -29/01/2016[/SIZE]
http://i64.tinypic.com/de30v6.jpg
http://i65.tinypic.com/4ta45s.jpg
http://i64.tinypic.com/531qh3.jpg
குமுதம் வார இதழ் -08/02/2016
http://i67.tinypic.com/2mfnj9d.jpg
http://i66.tinypic.com/14kz13l.jpg
http://i67.tinypic.com/15riedk.jpg
ராணி வார இதழ் -07/02/2016
http://i66.tinypic.com/2uh70yf.jpg
http://i68.tinypic.com/a160cz.jpg
http://i68.tinypic.com/dwc87q.jpg
கவிஞர் மு. மேத்தா
http://i66.tinypic.com/2mfnbcm.jpg
அன்பே வா -பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி -புகைப்படங்கள் தொடர்ச்சி............
http://i66.tinypic.com/1128yzc.jpg
அரங்கில் திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி