காதல் என்ற அந்த வார்த்தை இருக்கிறதே.. ம்ம் எவ்ளோ தடவை எடுத்தாலும்பேசினாலும் எவ்வித வயதினர்க்கும் ம்க்கும் என்னை மாதிரி சின்னப் பையன்/பெண்கள் தவிர எல்லாருக்கும் ஒரு முறுவல்., ஒரு ஸ்வீட் நினைவு அல்லது ஒரு சோக நினைவு எனக் கொண்டு வந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை அல்லவா (ஹப்பா எவ்ளோ நீள வாக்கியம்)
அதுவே ஒரு இளம் பெண்ணின் மனது காதலில் விழுந்து விடுகிறது என்றால் என்ன ஆகும்
கண்களில் கனவு மின்னும்
…கன்னமும் சிவந்து நிற்கும்
மண்ணிலே கால்கள் தாவா
..மாதுளம் இறக்கை கட்டி
விண்ணிலே பறக்கப் பார்த்து
..வேட்கையில் நாணம் கொள்ளும்
எண்ணமும் உணர்வும் அந்த
..எத்தனுள் சென்ற தாலே..
ஆமா.. எல்லாம் இவ கனவு காணுவா…கடைசில பாருங்க..காதலனை எத்தன், படவாங்கறா..இது என்னவாக்கும் நியாயம்..
ஆனால் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் சரி பூவின் கால் பூ அறியும்கறாப்புல (ஹை..இது நல்லா இருக்கே) ஒரு தலைவி என்று இருந்தால் ஒரு தலைவன் உண்டு (இது என்ன பெரிய விஷயம்) அதைத் தவிர தோழி என்பது கண்டிப்பாய் உண்டு..அதுவும் அந்தத் தோழி.தலைவியின் மாற்றத்தை டபக்கென்று கண்டு பிடித்துவிடுவாள்..
பனியா ஐயோ குளிரும் என்பாள்
…பாட்டுப் பாட வாடி என்றால்
கனிந்த இதழைக் குவித்துக் கொஞ்சம்
..கவிதைத் தனமாய் வேண்டாம் என்பாள்
வனிதை இவளோ இன்றோ மழையில்
..வாகாய் நனைந்தாள் உணர்ந்தா ளில்லை
தனியாய்ச் சென்றாள் சிரித்தாள் நெஞ்சத்
..தவிப்பும் ஏது கேட்க வேண்டும்..
கேக்கறா..பதில் வருது..பின் என்ன.. தொடர்ந்த காதல் சந்திப்புக்களில் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகுது..அப்போ என்னவாம் கல்யாணத்தைப் பத்திக் கனவு.. ஸோ தோழிக்கும் என்ன அவளைச் சீண்டி விடறதுல ஜாலி தான் இல்லை..
அந்தக்காலத்துல ஒரு பாட்டு ஒரு படத்துல வருது..
என்னவாக்கும் அது..
**
என்னடி சின்னப் பெண்ணே எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா துள்ளிவிழும் வேகமா..
*
படம் தேன்மழை பாடியவர் எம்.எஸ். ராஜேஷ்வரின்னு நினைக்கிறேன்.. படத்தில் பாடுபவர் சச்சு.. உடன் கனவு கண்டு அனிச்சப் பூவாய் சிரிக்கும் பெண்ணாக கே.ஆர் விஜயா..ம்ம் பாட்டு வரிகள் கிடைக்கலை..
நல்ல பாட்டு..லிங்க் இதோ இப்போ வரப்போகுதே ரா,வா,ம கோ கி கிட்ட இருந்து..
..