http://i67.tinypic.com/j5cgp5.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18 திரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் மற்றும் திரு சுப்ரமணியம் ராமஜெயம் அவர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
இனிய நண்பர் திரு கலியபெருமாள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 18 ல் பதிவுகள் வழங்கிய இனிய நண்பர்கள்
திரு ரவிச்சந்திரன்
திரு முத்தையன்
திரு லோகநாதன்
திரு அமரா எம்ஜிஆர்
திரு ராஜ்குமார்
திரு சைலேஷ்
திரு சுஹராம்
திரு ஜெய்சங்கர்
மற்றும் அலை பேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு பம்மலார் , திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் தொண்டன்.
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதன் தோன்றும்போதும் என்னென்ன பணிகள் என கடவுள் தீர்மானிக்கிறார் என்று ஆன்மிகத்தின் அடிப்படையில் கூறுவதுண்டு. அதேபோல் கடவுள் என்ற ஒன்றில்லை மனிதர்களின் எண்ணங்களும் அதைசார்ந்த உழைப்புமே ஒவ்வொரு மனிதரின் உயர்வுக்கும் காரணம் என்று நாத்திகர்கள் கூறுகின்றனர். இதையேதான் நம் பகுத்தறிவு பகலவனும் பறைசாற்றினார்.
நம் மக்கள் திலகத்தைப் பொருத்தவரையில் அவருடைய மனித நேயமும், இளமைக்காலம் முதல் சமுதாயத்தின் மீது அவர் கொண்ட அக்கறையும், ஒவ்வொருவரையும் தன்னுடைய உறவினராக கருதியதும், அவர்கள் நலன் பற்றி ஓயாமல் சிந்தித்து, அதற்காக அல்லும் பகலும் உழைத்த உழைப்புமே அவரை ஒவ்வொரு இல்லத்திலும் இன்றும் ஆண்டவனாக உருவாக்கி உள்ளது என்பதே உண்மை.
தன் உழைப்பின் பலன் முழுவதையும் இல்லாதவர்க்கு ஈந்து இறவாப்புகழ் பெற்றதன் காரணம் என்னவென்றால், அடிப்படையில், தன்னைப்போல் மற்றவர்களையும் கருதியதும், அவர்கள் துன்பத்தை தன்னுடையதாக எண்ணி அவர்கள் துயர் துடைத்ததும்தான். புரட்சி நடிகராய் இருக்கும்போதே உலகில் எங்கெல்லாம் இயற்கைப் பேரிடர் உருவானதோ அந்த இடங்களில் ஆண்டவன் போல் தோன்றி அவர்கள் இன்னல் நீக்கி, உதவி செய்வதிலும் முதன்மையானார். அவர் கொடுத்ததை அவர் எண்ணிப்பார்த்ததே இல்லை. அதற்கு எண்ணிக்கையும் இல்லை.
அவரது பொற்கால ஆட்சியில் இதே போன்ற வெள்ளம் உருவானபோது முழங்கால் அளவு நீரில் நின்று வெள்ளத்தை வென்ற வள்ளல் ஆனார்.. இன்றளவிற்கும் அந்த நிகழ்வு தமிழக மக்களின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல பதிந்திருப்பது, அவர்களின் தற்போதைய உள்ளக்குமுறலிலிருந்து வெளிப்படுகிறது. இன்னொரு முறை அந்த மகான் பிறந்து முதல்வராக வரமாட்டாரா என்ற ஏக்கம் அவர்கள் கண்களில் தெரிகிறது. அத்தகைய ஒரு பிரதிபலன் பாராத ஒரு மக்கள் தொண்டன் மீண்டும் வருவாரா?
http://i66.tinypic.com/9t1g05.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்