கூடிய விரைவில் திரியை புதுப்பிக்க நெய்யை காய்ச்ச முற்படுகிறேன்.பால் கறந்துவிட்டேன்.
Printable View
கூடிய விரைவில் திரியை புதுப்பிக்க நெய்யை காய்ச்ச முற்படுகிறேன்.பால் கறந்துவிட்டேன்.
excellent venkatesh :clap: :thumbsup:Quote:
Originally Posted by VENKIRAJA
venkatesh
venkinnu koopiduradhai vida venakteshnnu koopiduradhu than enakku pidichi irukku.
ettu pakkangalaiyum padichen.
paaadhasari thalaippilaye paadhi sollitte unnai pathi
puthaga sumaigalukku naduvil ivlo yeludhi irukka enna soldradhunne therilai nee nalla varuve.
suthi nadakkiradhai nalla gavanikkirai illai nalla rasikkire.
tamil vaarthaigal suthama irukku pudusa kooda irukku azhagavum irukku.
idaila vara aangila vaarthaigalai thavirkkalame
thodarattum un payanam
vaazhthukkal
venkat..
Really I dont know how to write anything about your work...
sariyaga solla vendum enraal bayamai irukkiradhu enrudhan solven..
kadarkarai oram kilinjal segarikkum kuzhanthai naan.. ennaal titanic iceberg patri nichayam edhuvum solla iyaladhu..
but ungal padaipukkal ellame verum ezhutha vendum enra kaaranathukkaga mattum ezhuthapada villai enbathu therigiradhu.
urainadaiye kavithaiyai maari iruppathai ungaL ezhuthil kaangiren.
thEn thuLi naavil sottinaal melE nimirnthu thEn koodu engE ? adhil thEn irukkiradhA ? enru paarka thOnRum. adhu pOla ungLadhu matra padaippugaLukkAga waiting. ( intha tanglishkkuaga ennai mannikkavum :P)
madhuvai thEdum madhu! :lol:
iththanai paaraata!nanri nanri.athanai paaratukkum naan innum kodi pakkangal ezutha vendum polirukkirathu,viraivil paarpom.en sitrarivai suaithavarkal kavithaikalil konjam karuppu tajmahalaiyum paarvaiyidalaame!
-deleted,double posting-
[quote="VENKIRAJA"][tscii]எனக்கு இது கொஞ்சம் அதிகப்படியான பாராட்டு.உங்களைப்போல நேர்த்தியாக சிறுகதைகள் எழுத எனக்கு வரவே வராது.அப்படி முயன்ற ஒன்ரு அனாதையாக கிடக்கிறது பாருங்கள்.இத்தனை பாரட்டுகள் பெற்று திருஷ்டி வரக்கூடாதென்பதால் தொடர்கிறேன் இன்று மட்டும்.அத்தனை பேரும் புத்தாண்டுக்குன ஏதேனும் சிறப்பாக செய்துகொண்டிருக்க,ரொம்ப நாளைக்குப் பிறகு நான் ஒரு இடைச்செருகல் பதிவு செய்கிறேன்.Quote:
Originally Posted by madhu
இடைச்செருகல் # 3.
ஒரு பார்வை,சில பரிமாணங்கள்.
சென்ற ஆண்டு என்னைப்பொருத்த வரையில் இணையத்துக்கும் எனக்கும் இருந்த பூர்வ ஜென்ம பந்தத்தின் அர்த்தம்,அதாவது நான் இனையத்தோடு பரிச்சயமான வருடம்.இந்த மையம் எனக்கு நிரய கற்றுக்கொடுத்திருக்கிறது.என் சிற்றறிவை கொஞ்சம் பெருக்கியிருக்கிறது.எனது கோணத்திலிருந்த அலசியதில் என் தேர்வுகள் இதோ.
1.இலக்கியம்,இணையம்:
சிறந்த கவிதை வலைமனை:priyan4u.blogspot உதாரணக்கவிதை இதோ:
பலூன் கேட்டு
அழுத சிறுமி
அப்படியே உறங்கிப் போனாள்!
சிறிது நேரத்தில்
அழுதபடி தூங்கியவளின்
முகமெல்லாம் புன்னகை
எத்தனை பலூன்கள்
வந்ததோ அவள் கனவில்!
__________________________________________________
சிறந்த காதல் கவிதை:அருட்பெருங்கோ
Friday, December 29, 2006
"பிறந்த நாள் வாழ்த்து!"
உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவோமா?
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான்
பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்.
உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்!
பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய் உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா?
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!
கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,
நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!
பிறந்தநாளை எப்போதும்
ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…
என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?
தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!
பிறந்தநாளுக்கு
எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்
உன் ‘பிறந்தநாள் ஆடை’? போல் வருமா?
ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!
நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?
அழகப்பன் என்று!
உன் பிறந்த நாளன்று
உன்னை வாழ்த்துவதா?
நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய்!
உன் பிறப்பு
உன் தாய்க்குத் தாய்மையையும்,
எனக்கு வாழ்வையும் தந்தது!
நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென!
என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.
உன் தாய்க்குப் பிறந்தாய்.
என் தாய்க்குப் பின் என் தாய்.
அழுகையோடு பிறந்தாயா?
அழகோடு பிறந்தாயா?
“.....”
( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
_______________________________________________
சிறந்த ஹைக்கூ:பொ.பொன்மணிச்செல்வன்
வறுத்த மீன்
மடித்த் காகிதத்தில்
'மீன்களைக் கொல்லாதே!'
_______________________________________________
சிறந்த கவிதை: (தமிழ்மணம் கவிதைப்போட்டியில் பரிசுபெற்ற கவிதை)
'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு
நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு
ஆனால்தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும்
சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
இட்டவர் பெயர் அங்கு தமிழன் என்று இருந்தது.
_______________________________________________
சிறந்த வாராந்திரத் தொடர்:அ.முத்துலிங்கம் பக்கம்(குமுதம் தீராநதி),மந்திரச்சொல்(எஸ்.கே.முருகன்,ஆனந்த விகடன்),மாயவலை(பா.ராகவன்,குமுதம் ரிப்போர்ட்டர்)
_________________________________________________
சிறந்த செய்தித்தாள்:தி ஹிந்து,தினமலர்.
_________________________________________________
சிறந்த மறுபதிப்பு:கண்ணீர் பூக்கள்(27வது)மு.மேத்தா(கடந்த பத்து வருடங்களாக காணாமல் போய் ஒன்ரிரண்டு கவிதைகள் மட்டும் தந்து பிறகு 2005ல் திரும்பி 2006ல் உலக பயணமெல்லாம் மேற்கொண்டுவரும் எழுத்துச்சிற்பி)
_________________________________________________
சிறந்த திரைப்பாடல்:கற்க கற்க(வேட்டையாடு விளையாடு,கவிஞர் தாமரை)
__________________________________________________
சிறந்த கட்டுரை நூல்:முகத்தில் தெளித்த சாரல்(வெ.இறையன்பு)
__________________________________________________
சிறந்த கச்சேரி:குருசரன்(எனக்கு சங்கீத ஞானமெல்லாம் கிடையாது,கேட்க இதமாக இருந்தது)
__________________________________________________
சிறந்த புத்தகம்:தேசாந்திரி(எஸ்.ராமகிருஷ்ணன்,விகடன் பதிப்பகம்,ரூ.110)
__________________________________________________ _
சிறந்த கவிதைத்தொகுப்பு:நகுலன் கவிதைகள்(அவரது மிகச்சிறந்த கவிதைகளின் தொகுப்பு)
__________________________________________________ __
சிறந்த பதிப்பகம்:அம்ருதா,உயிர்மை மனுஷ்யபுத்ரன்.
__________________________________________________ __
சிறந்த அட்டைப்படம்:குமுதம்(சினேகா double face)
__________________________________________________ __
சிறந்த சிறுபத்திரிக்கை:கணையாழி(உயிர்ப்பிப்பு)
__________________________________________________ ___
சிறந்த பதிப்பாளர்:குமரன் பதிப்பகத்தார்.
__________________________________________________ ___
2.மையம்:
சிறந்த மையம் திரி:கவிதைக்கு கவிதை.(குறிப்பாக பவளமணி அம்மையாரின் கவிகள்),மதுவின் சிறுகதைகள்,(வாசவியின் ஊக்குவிப்பு:எனக்கு),சூரியவிழி/பரணியின் கவிதைகள்.
__________________________________________________ ___
சிறந்த hubber:பிரபு ராம்,நிலவுப்பிரியன்,s.n.சாரதா(பிரத்தியேகமாக சிவாஜி கணேசன் திரிக்காக)
__________________________________________________ ___
சிறந்த குழு:நிஞ்சா,இலங்கை சிங்கங்கள் இதெல்லாம் எனக்கு தெரியாது.என்னைப் பொறுத்தவரை அஜித்,கமல் ரசிகர்கள்:அவர்களுடைய ஏகோபித்த வெறித்தனமான ரசிப்புக்காக.(அஜித் திரி 15 நாட்களில் 100 பக்கங்கள் நிரைந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்)
__________________________________________________ ____
சிறந்த நிகழ்வு:சத்தியமாக 27 கவிதைகள் வரும் என எதிர்பார்க்கவில்லை.அத்தனையும் புதுமை மிளிர,கவர்ச்சி ததும்ப,கருத்து விரிய சிறந்தன,சிரம் உயர்ந்தன,நன்றி அனைத்து பங்கேற்பாளர்களுக்கும்,கவிதை போட்டியில் பங்குபெற்றதற்கு.
__________________________________________________ ___
சிறந்த signatureகள்:bulb_mani.
__________________________________________________ ___
சிறந்த புதுவரவு:வெள்ளக்கோயில் சுந்தர்ராஜன்
__________________________________________________ ___
சிறந்த அவதார்:rami,(எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,நிறைய பேருடையது நன்றாக இருந்தது)
__________________________________________________ ___
சிறந்த ரத்தக்களரி:ajith vs vijay திரி,விஜய் அவார்ட்ஸ் பற்றி செய்த சண்டைகள்.
__________________________________________________ ___
சிறந்த நகைச்சுவை:raikkonen,sanguine sreedhar(அதுவும் அந்த நாச்சி ஊறுகாய்...மாங்கா ஊறுகாய்)
__________________________________________________ ___
சிறந்த சொதப்பல்:moderatorகளே அஜித்/விஜய் திரியை துவக்கி,மீண்டும் அவற்றை delete செய்த பரிதாபம்.
__________________________________________________ ___
சிறந்த reform: புதிய emoticons.
__________________________________________________ ___
மைய இதழ்:குறுக்கெழுத்துப்போட்டி,கம்பராமயண விளக்க உரைகள்.
__________________________________________________ ___
3.சினிமா:
சிறந்த குழந்தை நட்சத்திரம்:ஷ்ரேயா(SOK)
சிறந்த துணை நடிகை/நடிகர்:கமலினி முகர்ஜி(VV),ரகுவரன்(சிவப்பதிகாரம்)
சிறந்த பாடல் தொகுப்பு(picturisation):உன்னைக் கண்டேனே.......(பாரிஜாதம்)
சிறந்த கேடர்(வில்லனுக்கு தமிழ்ப்பதமாம்):அழகம்பெருமாள்(PP),டேனியல் பாலாஜி(VV)
சிறந்த ஒளிப்பதிவு:ரவிவர்மன்(VV)
சிறந்த இயக்கம்:புதுப்பேட்டை
சிறந்த நகைச்சுவை நடிகர்:வடிவேலு(IA23P)
சிறந்த தயாரிப்பு:ஷங்கர்(IA23P)
சிறந்த நடிகை/நடிகர்:பாவனா(சித்திரம் பேசுதடி)அஜித்குமார்(வரலாறு)
சிறந்த கதையம்சம்்:வெயில்
சிறந்த பாடகி/பாடகர்:ஷ்ரேயா கோஷல்(SOK),நரேஷ் ஐயர்(வரலாறு).
சிறந்த பாடல் வரிகள்:சிலுசிலுக்கும் சில்மிஷி(பா.விஜய்),முன்பே வா(வாலி),ஒரு நாளில்(PP),கற்க கற்க(VV)
சிறந்த ஒலிநாடா(அனைத்து பாடல்களும்):உன்னாலே உன்னாலே
சிறந்த இசையமைப்பாளர்:யுவன் ஷங்கர் ராஜா(PP)
சிறந்த நச்சரிப்பு:சிம்பு/நயன் விவகாரம்,குஷ்பு சர்ச்சை.
சிறந்த அறிவிப்புகள்:தமிழ்ப்பெயர்கள்,நுழைவுச்சீட்டு விலைக்குறைப்பு.
சிறந்த ஆறுதல்:சூர்யா/ஜோ,செல்வா/சோனியா திருமணங்கள்.
4.தொலைக்காட்சி.
சிறந்த நிகழ்ச்சி:GRANDMASTER(ஸ்டார் விஜய்)
சிறந்த வாராந்திரத் தொடர்:சிதம்பர ரகசியம்.(gr8 job 4m d whole crew)
சிறந்த கரு(concept):ஜோடி நெ. 1,சூப்பர் சிங்கர்,காஃபி வித் சுச்சி(நோக்கவும்:அனு அல்ல்)
சிறந்த பாடல்:நிலவைப் பிடிப்பொம்(பாடியவர்:அருணா சாய்ராம்,எழுதியவர்:டாக்டர் கிருதியாஸ்)
சிறந்த துணை நடிகை/நடிகர்:மாளவிகா(சிதம்பர ரகசியம்),வேணு அரவிந்த்(செல்வி)
சிறந்த நடிகர்/நடிகை:சந்தானம்(லொள்ளு சபா).:(:(:(:(:(:(
சிறந்த தொகுப்பாளர்:விஜய் ஆனந்த்(கே டி.வி),மக்கள் தொலைக்காட்சி:அனைத்து தொகுப்பாளர்கள்.
சிறந்த நகைச்சுவை:ஜெயா டி.வி தேர்தல் நிகழ்ச்சிகள்,அதற்கப்புறம் அது சார்ந்த நிகழ்ச்சிகள்.
சிறந்த திறமையாளர்கள்:'நாகேஷ்' செல்லக்கண்ணு,மருது(கலக்க போவது யாரு)
சிறந்த reality show:கலக்க போவது series.
சிறந்த குழந்தைகள் நிகழ்ச்சி:just for gags,mr.bean(போகோ)
சிறந்த வயிற்றெரிச்சல்:வல்லவன் சிம்பு/டி.ஆர் என சன் குழுமத்திற்கு வேண்டப்பட்டவர்களது நேர்காணல்கல்,இத்தியாதி,countdowns.
சிறந்த சிரந்தவர்கள்்:சங்கிலி போல தொடர்ந்து நடந்துவிட்ட நடிகைகள் தற்கொலைகள்.
மீண்டும் 'பாதசாரி'யை தொடரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மீண்டும் உலகத்தை வெண்கிராஜாவின் கண்ணோட்டத்தில் காண ஆவல் கொண்டிருக்கிறேன்.