http://i501.photobucket.com/albums/e...psf7bcec92.jpg
Printable View
A LETTER OF ACKNOWLEDGEMENT / ADMISSION / SUBMISSION / APPRECIATION FROM LATE PRIME MINISTER Mr.RAJIV GANDHI
http://i501.photobucket.com/albums/e...psbc724d23.jpg
SMOKING - A STYLE QUOTIENT ! & NADIGAR THILAGAM's DRESSING ! NONE CAN MATCH !! - Courtesy - Youtube
https://www.youtube.com/watch?v=i1GVPnyk9Ew
WHAT MADE HIM NADIGAR THILAGAM ? Is it acting alone ? - Watch this video - Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE
Article in The Hindu - 23-07-2014
http://www.thehindu.com/news/cities/...cle6238923.ece
Chevaliar Sivaji Ganesan Road, in the heart of T. Nagar, was christened as it housed the star at bungalow number 17, ‘Annai Illam’. The property, where his family continues to reside, was bought seven years after his debut in ‘Parasakthi’
It was in Madras city that Sivaji Ganesan became the icon that he was. In many ways, the city continues to bear signs of his presence, even as his family solemnly observed his 13 death anniversary on Tuesday.
Chevaliar Sivaji Ganesan Road, in the heart of T. Nagar, was christened as it housed the star at bungalow number 17, ‘Annai Illam’. The one-and-a-half-acre property, where his family continues to reside, was bought 55 years ago, seven years after his triumphant debut in ‘Parasakthi’ (1952). It was a prestigious address to possess, and nothing screamed his having arrived as counting the likes of M.G. Ramachandran, Jayalalithaa, and Manorama among one’s neighbours.
But where did the star find refuge before cementing his place in the annals of Tamil film history?
The 2 floor office space of National Pictures on Burkit Road, T. Nagar, was where the aspiring actor first found asylum. As a company artiste for the studio, he earned Rs. 200 per month and lived on its premises for two brief months.
According to his eldest son, Ramkumar Ganesan, it was around the 1940s his father first visited the city as part of a travelling theatre troupe from Tiruchi. Finally, in 1950, producer P.A. Perumal Madurai handed him a plane ticket to Madras for the screen test for ‘Parasakthi’, and Sivaji’s love affair with the city and its people truly blossomed.
After his bellowing debut, the newly-crowned movie star moved in to a house in Kodambakkam at No.1 United Colony. In less than a year, the star shifted into a two-storeyed house at Royapettah.
The building now functions as the headquarters for Sivaji Productions, managed by Ramkumar. He recalls, “I remember M.G.R. coming here and having dinner with us as he used to live on Walltax Road, quite a distance from the studios which were all in this part of town.”
A couple of years later, by September 1960, the star and his family made the mansion on then Boag Road their pride of place.
The mansion itself has a rather distinguished past to boast, and, uncannily, the road has successively been named after two people, both owners of the property. George T. Boag, an illustrious British ICS officer, and Venkata Reddy Naidu, the acting governor of Madras Presidency in 1936, are among the few to have inhabited the premises at different points of time.
முதல் சாதனைகளின் முடிசூடா மன்னன் என்ற பதிவை படித்த போது எனக்க்கு தோன்றியது , நம் நடிகர் திலகம் வாழும் போதும் மட்டுமல்ல , இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்ட பின்னரும் கூட முதல் சாதனைகளை தொடர்ந்து கொண்டிருந்தார் என்பது தான் .
தன்னுடைய மரணத்தில் கூட எனக்க்கு தெரிந்து இரண்டு முதல் சாதனைகளை புரிந்தார் நடிகர் திலகம்.
1. எனக்குத் தெரிந்து ஒருவரின் இறுதி ஊர்வல நிகழ்வுகளை நேரலையாக தொலைக்காட்சி ஒளிபரப்ப , ஒட்டு மொத்த தமிழகமும் தொலைக்காட்சியில் அந்த ஒரே சானலின் மீது கண்களை பொருத்திக்கொண்டது முதன்முறையாக நடிகர் திலகத்தின் மரணத்தின் போது தான் . அதற்கு முன்னர் புகழந்தவர் , இகழந்தவர் என்ற வேறுபாடின்றி , 'சிவாஜி' என்றால் தனிநபரல்ல , வெறும் கலைஞன் மட்டுமல்ல , அந்த வார்ர்த்தை தமிழ் கலை , பண்பாட்டு அடையாளச்சின்னம் என ஆழ்மனத்தில் தமிழர்கள் மனதில் பதிந்து கிடந்த உள்ளுணர்வின் வெளிப்பாடாக அந்நிகழ்வு அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது .
2. இன்றைக்கு தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் போது 'குடும்ப வாரம்' 'ஆக்*ஷன் வாரம்' என்றெல்லாம் பலவகையான தொகுப்புகளாக வாரம் முழுவதும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது .அதையும் தன் மரணத்தின் மூலம் தொடங்கி வைத்தவர் நடிகர் திலகம் ..நடிகர் திலகம் மறைவையொட்டி சோகம் தழும்பி நின்ற தமிழகத்தின் துயரத்துக்கு சிறு வடிகாலாக நடிகர் திலகத்தின் 5 திரைப்படங்களை தினம் ஒன்றாக 'நடிகர் திலகம் வாரம்' என தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்ப , தமிழர்கள் அதனை முச்சி முகர்ந்து கொண்டாடினார்கள் .அதன் மாபெரும் வெற்றி , தொடர்ந்து அது போல வாரத்தொகுப்புகளாக பல்வேறு தலைப்புகளில் தொடர்ர்ந்தது .
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டது ஒரே தொலைக்காட்சி தான் . கால ஓட்டத்தில் தடம் மாறி சென்றாலும் கூட , அன்றைக்கு நடிகர் திலகத்துக்கு இந்த இருபெரும் மரியாதையை செய்ததற்காக சன் தொலைக்காட்சி மிகுந்த பாராட்டுக்குரியது .
சந்திப்பு
மதுரை சென்ட்ரலில் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்த சந்திப்பு இன்று இரவு காட்சியோடு சிறப்பான வசூலைப் பெற்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. ஒரே வாரத்தில் ரூபாய் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சென்ற மாதம் இதே போல் வெற்றிக் கொடி நாட்டிய சங்கிலி வசூலையும் தாண்டியிருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல் அரங்க நிர்வாகத்தினரும், வெளியிட்டாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் இது போன்ற சிறப்பான வரவேற்பை பெறுவதால் இனி வரும் மாதங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் அதிகமாக வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும். செய்திகளை துல்லியமான புள்ளி விவரங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.
நெல்லை சென்ட்ரலில் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போட்ட தியாகம் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது. தகவலளித்த நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
கோவையில் புதிய பறவை வெற்றி சிறகடித்து பறந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
சந்தோஷ செய்திகள் தொடரும்.
அன்புடன்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமா வெளி வருவதற்கு முன்பு அடுத்து வெளிவரப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் பின் வரும் தேதிகளில் ரிலீஸ் செய்யும் வண்ணம் chart செய்யப்பட்டிருந்தது. தர்மம் எங்கே அடுத்த ரிலீஸ் ஆக அறிவிக்கப்பட்டு ஜூலை 1-ந் தேதி வெளிவரும் என தகவல். அதற்கு அடுத்தது தவப்புதல்வன். இதற்கு இரண்டு தேதிகள் சொல்லப்பட்டிருந்தன. ஒன்று ஆகஸ்ட் 26 அல்லது செப்டம்பர் 9 என்று. வசந்த மாளிகை தீபாவளி நவம்பர் 4-ந் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் இமாலய வெற்றி மேற்சொன்ன ரிலீஸ் தேதிகளை எல்லாம் புரட்டிப் போட்டது. சென்னையைப் பொறுத்தவரை முதலில் சாந்தியில்தான் தர்மம் எங்கே வெளியாவதாக இருந்தது. ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றியைப் பார்த்தவுடன் அதை சாந்தியிலிருந்து மாற்றுவது இயலாத காரியம் என்று தெரிந்தவுடன் வேறு தியேட்டர் தேடும் முயற்சிகள் துவங்கின. மவுண்ட் ரோடு நேரடி தியேட்டர்கள் எல்லாம் book ஆகி இருக்க மவுண்ட் ரோடின் அருகில் GP ரோட்டில் அமைந்திருக்க கூடிய ஓடியன் தேர்வு செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு சற்று கூடுதல் இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் 56 நாட்கள் இடைவெளி 70 நாட்களாக மாற்றப்பட்டு தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டது. மதுரை ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். தவப்புதல்வன் செப் 9 என்றும் மாளிகை தீபாவளி என்றும் முடிவு செய்யப்பட்டு பாலாஜியின் நீதி 1973 ஜனவரி 26 என்று தீர்மானிக்கப்பட்டது.
ஜூன் 18 அன்று ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்து சென்னையில் தொடர்ந்து ஹாட்ரிக் 100 நாள் படங்களை கொடுத்த பெருமை மீண்டும் நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 6,7 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்திருக்க வேண்டிய ஞான ஒளி பற்பல சூழ்ச்சி சூழல் காரணமாக நூலிழையில் 5,6 தியேட்டர்களை தவற விட்டது. பிளாசாவில் 100 நாட்களை கடந்தது.
இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.
(தொடரும்)
அன்புடன்
பராசக்தி திரைப்பட பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார் நேஷனல் பிக்சரஸ் திரு p a பெருமாள் . - புதுமுகம் கணேசன் தொடர்ந்து நடிக்கிறார் !
லாபம் வந்தால் இருவருக்கும் - நஷ்டம் வந்தால் எனக்கு மட்டும் ! Pa பெருமாள் சவால் ஒப்புதல் !
கணேசன் என்ற புதுமுகம் நடிப்பில் படபிடிப்பில் இருந்துவரும் திரைப்படம் பராசக்தி. எடுத்தவரையில் போட்டு பார்த்த திரு av மெய்யப்பன் அவர்கள் புதுமுகம் நடிப்பு இந்த துறைக்கு புதுமையாக இருப்பதால் மக்கள் ஏற்றுகொள்வார்களா என்றும் இவ்வளவு பெரிய risk எடுக்க வேண்டுமா என்றும் நடிகர் kr ராமசாமி அவர்களை வைத்து திரும்பவும் எடுத்துவிடலாம் என்று படபிடிப்பை நிறுத்தியது அனைவரும் அறிந்ததே.
இப்போது புதிய திருப்பமாக படத்தின் பங்குதாரர் நேஷனல் pictures pa பெருமாள் அவர்கள் புதுமுக நாயகன் கணேசன் தான் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆணித்தரமாக உரைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் லாபம் வந்தால் மட்டுமே பங்கு என்று. நஷ்டம் ஏற்படுமானால் அந்த நஷ்டம் முழுவதையும் தான் ஏற்றுகொள்வதாக கூறி படபிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் பேச்சை கேட்டு நல்ல ஒரு கலைஞனின் பயணத்தை தடை செய்யகூடாது என்றும் தனது முடிவை கூறிவிட்டதாக தெரிகிறது.
திரைப்படம் நஷ்டம் அடைந்தால் முழுவதையும் தான் ஏற்றுகொள்வதாக திரு பெருமாள் கூறியதை முன்னிட்டு av மெய்யப்பன் அவர்கள் படபிடிப்பு தொடர்ந்து நடக்க இசைந்துள்ளதாக திரை உலக வட்டாரங்கள் ஊர்ஜிதபடுத்தியுள்ளது !
இதனை தொடர்ந்து பராசக்தி படபிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
எது எப்படியோ பராசக்தி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் !
"“கள்ளர்”என்ற மலைவர்க்க சமுதாயத்தில் பிறந்த சிவாஜிகணேசனை அந்தக் கால சினிமாத் துறையிலிருந்த பிராமண மேதாவித்துவம் கணக்கில்லாமல் துன்பப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்பட உலகத்தில் பிரதிஷ்டை செய்தது."
நடிகர்திலகம் அவர்கள் தன சுயசரிதையிலும் சரி, வேறு எந்த இடத்திலும் சரி ( நடிக்க வந்தபோதும், நாடகத்தில் இருந்தபோதும்) தான் பிராமண மேதாவித்துவத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லியதேயில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகர்திலகத்தை மிகவும் நேசித்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கும் தெரியும். அவரும் அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர்திலகம் விஷயத்தில், எழுதுபவர்கள், அது ஆரூர் தாசாக இருந்தாலும் சரி, மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடாக இருந்தாலும், தங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, வக்கிர உணர்வுகளை, நடிகர்திலகத்தின் வாழ்க்கையோடு இணைத்து எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
Dear KCS Sir
You are 100% Correct. Also 90% of BRAHMIN COMMUNITY PEOPLE are deep FAN OF OUR GREAT NADIGAR THILAGAM since he is the only actor acted as POWERFUL PERSONS BELONG TO BRAHMIN COMMUNITY and also he told about positive characterestics of brahmin community in his films
C. Ramachandran.
Stills from facebook page of kumaresan sir
Stills
Super stills
அனைவருக்கும் பொதுவான சில கேள்விகள்
திரியின் அனைத்து நண்பர்களும்,முரளியும்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.மனசாட்சியை மறைக்காமல் கூறுங்கள். திரி இப்போது நன்றாக இருக்கிறதா.படிக்க சுவாரஸ்யமா இருக்கிறதா.கோபால் போன்றவர்களின் முன் கோபத்தாலும்,மூர்க்கமான வார்த்தைத் தாக்குதல்களாலும் முக்கியமாக ஒரு சிலரின் அறுவைப் பதிவுகளாலும் திரி அதன் பொலிவை இழந்ததா இல்லையா.உறுப்பினர்களின் வருகையை இழந்ததா இல்லையா உற்சாகத்தை இழந்ததா இல்லையா.பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததா இல்லையா. திரியைப் பார்க்க ஆர்வம் குறைந்து போனதா இல்லையா.இருக்கின்ற ரெண்டு பதிவாளர்களையும் விட்டு விட்டால் சுத்தமாக அதோ கதி என்று முரளி சார் நீங்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறீர்களா இல்லையா
நடிகர் திலகத்தின் மீது உள்ள அன்பால் உண்மை கூறுங்கள்.
திரி அருமையாகப் போகிறது என்றால் அனைத்து உறுப்பினர்களும் முன்னை மாதிரி ஏன் ஆர்வத்துடன் கலந்து கொள்ளவில்லை.இந்தக் கேள்விகள் எல்லாம் நியாயமா இல்லை அநியாயமா என்று
திரியின் உறுப்பினர்களே கூறுங்கள்.இதை திரியின் உறுப்பினன் என்ற முறையில் நான் கேட்கக் கூடாதா. இதில் தவறு இருக்கிறது நீ சொல்வது சரியல்ல என்றால் நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு நடையைக் கட்டுகிறேன்.முக்கியமாக ஒன்று.எம்ஜியார் திரிக்கு பதில் கொடுப்பது முக்கியமா நமது நடிகர் திலகத்தின் படங்களை அவர் பெருமைகளை அவர் திறமைகளை கலந்து கட்டிப் பேசி நாம் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைப்பது முக்கியமா.திரியில் பங்கேற்ப்பதும் பதிவிடுவதும் தனி மனித உரிமை என்று கூறுகிறீர்கள். அதே போல் திரியில் நடக்கும் அறுவைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவது எங்களுடைய உரிமை. உங்கள் இஷ்டத்திற்கு நீங்கள் ஒரு மண்ணாங்கட்டி விஷயமும் இல்லாமல் திரியை நடத்தினால் பொதுத் திரியான இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டு பூப்பறித்துக் கொண்டு இருப்போம் என்று நினைத்தீர்களா. திரி தொடங்கிய ஜோ சாரைக் கேளுங்கள். அருமையான பங்களிப்புகளை நல்கிய அவர் இந்தக் கண்றாவிக் கூத்தையெல்லாம் பார்த்து ஒதுங்கி விட்டார். எப்பேர்பட்ட ஜாம்பவான்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த திரி இது. இதை அறுவைப் பதிவுகள் மூலம் நாசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.முன்னர் போட்டபதிவுகளையே திரும்பத் திரும்ப எடுத்துப் போடுகிறீர்கள். சொந்தமாக ஒரு பதிவைக் கூடக் காணோம்.போட்ட போட்டோக்களையே போட்டுக் கொண்டு போட்ட பதிவுகளையே திரும்பத் திரும்பப் போட்டு அறுத்து தள்ளுகிறீர்கள்.இது என்ன யூ ட்யூபா இல்லை சிவாஜி திரியா வெறும் வீடியோவா போட்டு தள்ளுகிறார் ஒருவர். இதற்கு சிவாஜி திரி எதற்கு.ரவிகிரன் அண்ணன் பாவம்.என்னை தம்பி என்று கூப்பீட்டவர் அதனால் அவர் எனக்கு அண்ணன்.எல்லா சுமையும் அவர் மேல்.இவர் என்ன செய்கிறார் என்று இவருக்கே தெரியவில்லை.பம்மளார் பதிவுகளை திரும்ப திரும்ப கார்பன் காப்பி போல போட்டு திரியை ஒரு வழி பண்ணுகிறார்.கேட்டால் அட்ரெஸ் கேட்கிறார். போன் நெம்பர்கள் கேட்கிறார்.ஒரு இன்ட்ரஸ்ட்டும் இல்லை.கோபாலோ புரியாமல் ஏதோ ஒரு கவிதை எழுதி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார். எல்லாம் தெரிந்த முரளி சூழ்நிலைக் கைதியாக மௌனம் காக்கிறார்.
ராகவேந்திரன்,ஆனந்த், பாலா, சதீஷ், குமரேசன் பிரபு, ராதா கிருஷ்ணன், அப்கலபி, சந்திரசேகரன்,சாரதா, ஆதிராம், கல்நாயக்,கார்த்திக்,வனஜா, தனுஷ், ராகவன், சுப்பிரமணியம் ராமஜெயம் இன்னும் விடுபட்ட பலரும் ஏன் முற்றிலுமாக அல்லது அடிக்கடி திரிக்கு வருவதில்லை.திரியில் இருப்பவர்களின் போக்கு பிடிக்காமலா அல்லது உங்கள் வேலைப் பளுவாலா
நண்பர்களே இந்தக் கேள்விக்காவது வந்து பதில் சொல்லி விட்டு உண்மை உணர்த்தி விட்டுப் போங்கள்.இந்தப் பதிவு நீங்கள் படிப்பதற்குள் எடுத்தாலும் எடுக்கப்பட்டு விடலாம். ஆனால் உண்மை என்றுமே நிலைக்கும். யாரும் அதை மறைத்து விட முடியாது. தீர்ப்பு உங்கள் கையில்.முரளி சார் கையில்.உண்மை கசப்பாக இருக்கும். என் மேல் கோபம் கூட வரும்.ஆனால் நான் எழுதியிருப்பது உண்மையா இல்லையா என்று அவரவர் மனசாட்சிக்கே தெரியும். காத்திருக்கிறேன்.
முரளி அவர்களே!
எனக்கு வார்னிங் தருகிறீர்கள். சரி!. பலரை பலவிதமாய் கேவலமாய் தகாத வார்த்தைகளால் திட்டிய கோபாலுக்கு ஏன் எந்தவித வார்னிங்கும் நீங்கள் தரவில்லை.அசிங்க அசிங்கமாய் எல்லோரையும் திட்டிய கோபாலை கொஞ்சுகிறீர்கள். திரியின் உண்மை நிலையை எடுத்துச் சொன்னால் எனக்கு வார்னிங் கொடுக்கிறீர்கள்.நான் என்ன தப்பாகக் கேட்டேன். மனதில் கைவைத்து சொல்லுங்கள். திரி நாசமாகப் போகிறதே என்று கவலைப்பட்டால் அது தப்பா? எனக்குத் தெரியும் இந்தப் பதிவை நீங்கள் எடுத்து விடுவீர்கள் என்று. கவலை இல்லை. இதிலும் ஒரு வரிகூட நான் தப்பாக எழுதவில்லை.நீங்கள் சிவாஜியை நேசிப்பது உண்மையாக இருந்தால் இப்பதிவில் தவறு இருக்கிறதா என்று சொல்லுங்கள்.
I am a Brahmin and start my age known about cinema I liked only NT's films. In fact when I was doing my SSLC public examinations, at that time Thanga Churangam flim was about to release. I went to see the movie on the first day it-self even though the next day morning I have to face my Maths exam. I know , like me many of my Brahmin friends are still Sivaji fan and interested to see all movies of him. I have a collection of more than 125 Sivaji films CD and DVds which I used to see on almost every day.
If anyone says that Brahmins are against Nadigar Thilagam he was wrong.
ராகவன் அவர்களே
அருமையான கேள்வி.இப்படி கேள்வி கேட்காததனால்தான் இந்தத் திரி இப்படி படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. இந்தமாதிரி தேவையில்லாத பதிவுகள் படிப்பவர்களை காயப்படுத்தும் என்று யாரும் இங்கே நினைப்பதில்லை.எல்லோரும் படித்த அறிவாளிகள்.பிராமணன் சிவாஜியைத் தூக்கி வைத்து கொண்டாடினான்.
உங்கள் துணிச்சலுக்கு நன்றி.
Better avoid caste issues here.
அன்பு நண்பர்களே
என்னை விட வயதில்,அனுபவத்தில் பெரியவர்களும் சரி
அல்லது வயதில் சிறியவர்களும் அனுபவத்தில் பெரியவர்களும் சரி
அல்லது வயதில் பெரியவர்கள் அனுபவத்தில் சிறியவர்களும் சரி
அல்லது வயதில் அனுபவத்தில் சிறியவர்களும் சரி எல்லோருக்கும்
இது வரை நான் உங்களுக்கு எந்த வேண்டுகோளும் வைத்தது இல்லை
தயவு செய்து இந்த திரியை அரசியல் சாயம் பூசியோ அல்லது ஜாதி மத பேதம் கொண்டோ பிரித்து விட வேண்டாம் என்று நல்லதொரு சிவாஜி ரசிகர் என்ற முறையில் வேண்டி கேட்டு கொள்கிறேன்
தயவுசெய்து தனிப்பட்ட சண்டைகளை விட்டு பொதுவாக சிவாஜி பற்றி உரையாடுவோம்.
நான் அவர் சாதியில்லை
நான் அவர் மதமில்லை
நான் அவர் அரசியல் சித்தாந்த வழிவந்தவனுமில்லை
அவனைப்போல ஒரு கலைஞன் வேறில்லை என்பது மட்டுமே அவன் ரசிகனாக என்னை எப்போதும் வைத்திருக்கிறது .அதுவே போதுமானது.
கிருஷ்ணா அவர்களே
கண்டிப்பாக இத்துடன் முடித்துக் கொள்வோம்.யார் மனமும் புண்பட வேண்டாம்.
மலையாள கவிஞர் எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நடிகர் திலகத்தை சந்தித்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிடும் போது சாதி சார்ந்த சில கருத்துக்களை சொல்லியிருக்க அது தவறான தகவல் என்பதை நிறுவவே சந்திரசேகர் அவர்கள் அதை சுட்டிக் காட்டினார் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். எப்படி இங்கே ஆரூர்தாஸ் போன்றவர்கள் தவறான தகவலை தருகிறார்களோ அது போன்றே பாலச்சந்திரன் தன அனுமானத்தை உண்மை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். 1950-களில் ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் (கேரளம் பிரிவதற்கு முன்) பிறந்த பாலச்சந்திரன் போன்றவர்கள் அன்றைய நாட்களில் கேரளத்தில் நிலவிய சாதிய பிரச்சனைகலின் அடிப்படையில் இந்த கருத்துக்களை முன் வைக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது.
மேலும் இவரும் ஆரூர்தாஸ் போன்றே காலபிரமாணத்தில் தவறு செய்கிறார். நடிகர் திலகத்தை இவர்கள் சந்திப்பது 1995-ல். ராஜீவ்நாத் முதலில் எடுத்தது ஸ்வர்ண சாமரம் என்ற பெயரில் கருணை கொலையை அடிப்படையாக கொண்ட கதை. அது கைவிடப்பட்டு பின் சிறிது காலம் கழித்து பிரதாப் போத்தன் இயக்கத்தில் வேறு ஒரு கதையை ஒரு யாத்ரா மொழி என்ற பெயரில் எடுத்து அது 1997 ஆகஸ்ட் மாதம் வெளியானது.
தங்கபதக்கம் வெளியானது 1974 ஜூன் 1. ஆனால் பாலச்சந்திரன் நடிகர் திலகத்தை சந்திக்கும் போது (1995) 30 வருடங்களுக்கு முன்னால் பதக்கம் வெளியானது என்கிறார். ஆக பழைய சம்பவங்கள் மறந்து போகும் வயது முதிர்ந்த ஒரு காலகட்டத்தில் சொல்லபப்டும் விஷயங்களில் தகவல் பிழைகளே அதிகம் இடம் பெறும்.
எனவே இது போன்ற வயது முதிர்ந்த சில எழுத்தாளர்களின் சில வாக்கியங்களை வைத்துக் கொண்டு நாம் ஒரு நிலைப்பாட்டை எடுப்பது அல்லது எதிர் வினை புரிவது என்பது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும்.
நடிகர் திலகத்தை எந்த சாதி ஆதரித்தது அல்லது ஆதரிக்கவில்லை என்ற சொற் போர் இப்போது தேவையற்றது. வெகு எளிதாக உணர்ச்சிகளை தூண்டக் கூடிய இது போன்ற வாதங்களை தவிர்ப்போம். அனைத்து இனத்தவரும் ஆதரித்த ஆதரிக்கும் ஒரே கலைஞன் நடிகர் திலகம் என்பதில் பெருமை கொள்வோம்.
அன்புடன்
ராமதாஸ்,
உங்களுக்கு பதில் நாளை.
பாசமலர்' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாராய் என் தோழி வாராயோ...' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.
அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த 'பாசமலர்' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், 'வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.
இந்தப்பாடல் பெரிய 'ஹிட்' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.
அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, 'பாசமலர்' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த 'பணமா பாசமா' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.
அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.
டைரக்டர் ஸ்ரீதர், 'சிவந்த மண்' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.
அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.
'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த 'ஹம்மிங்', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.
திரு.முரளி சார்,
தாங்கள் கூறியிருப்பது உண்மை. நானும் இதனைச் சுட்டிக்காட்டவே விரும்பினேன். தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி.
"கலைஞர்களையும், அறிஞர்களையும், ஒரு அரசியல் கட்சி, மொழி, ஜாதி வட்டத்துக்குள் அடைக்கும் துரதிஷ்டம் இங்குதான் நடக்கிறது. சிவாஜிகனேசன் போன்ற கலைஞர்கள், ஜாதி, அரசியல், மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்தவர்கள்" - என்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருச்சி.சிவா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார். அதுதான் என்னுடைய கருத்தும். மற்றவர்களுக்கு என்றால் மறுத்துக் கூற, கண்டனம் தெரிவிக்க, அரசியல் கட்சி, ஜாதி அமைப்புகள் இருக்கிறது. நமது, நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை எந்த தவறான தகவலையும், யாரும் கூறலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்ற துணிச்சல் உள்ளது. அதற்காகவே என் தலைமையிலான நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மூலமாக இதுமாதிரி நிகழ்வுகளுக்கு அவ்வப்போது கண்டனக் குரல் கொடுத்து வருகிறேன். உதாரணத்திற்கு, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் பெயர், சத்யராஜ், விவேக்கிற்கு கண்டனம் போன்றவை. எனவே, இதுமாதிரி தகவல்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல், தெளிவான தகவல்களோடு நாம் மறுப்பையும், கண்டனத்தையும் வெளியிடவேண்டும் என்பதுதான் எனது விருப்பம், வேண்டுகோள்.