சி.க,
உங்களுடைய இன்றைய எல்லா பதிவுகளுக்கும் என் முதுகு சொறிவு. முதுகை காட்டுங்க.
Printable View
சி.க,
உங்களுடைய இன்றைய எல்லா பதிவுகளுக்கும் என் முதுகு சொறிவு. முதுகை காட்டுங்க.
அதான் வந்துவிட்டீர்களே :) பெருமாளைப் பார்த்த மாதிரி இருக்கு..
*
ஜன்ம சாபல்ய்ம் அடைஞ்சுடும்
பெருமாளைப் பாத்தால் போதும்
என்று சொல்லிக் கொண்டிருப்பாள்
எதிர்வீட்டுப் பாட்டி..
அங்கிங்கே வேலை பார்த்து
சிறுகச் சிறுகச்
சேர்த்தும் வைத்திருந்தாள்...
ஒரு தடவை
விட்டுச் சென்ற மக்ன்
எதற்கோ வர
முகமெல்லாம் மலர்ச்சி..
சற்று நேரத்தில்
அவன் சென்றுவிட
என் வீட்டுக்கு வ்ந்தாள்..
என்ன என அம்மா கேட்டதிற்கு
ஏதோ கஷ்டமாம் கொஞ்சம்
துட்டு கேட்டான் கொடுத்தேன்
அடிப்பாவி..
ஒனக்கோ கொஞ்சம் தானே வ்ருமானம்...
இருந்தாலென்ன
பெருமாளுக்கு வச்சுருந்தது
எடுத்துக் கொடுத்துட்டேன்..
எப்படியும்
அங்க என்னை சேர்க்கப் போறவன்
இவன் தானே...
சொன்ன பாட்டியின் முகத்தில்
புன்சிரிப்பாய்
வழிந்து கொண்டிருந்தார் பெருமாள்.
*
https://youtu.be/7RJ1o69C6-s
நான் மறத்தமிழன்.. புறம் காட்ட மாட்டேன் பகைவர்களுக்கு.. நண்பர்களுக்கு ஓகே..இந்தாங்க அண்ட் தாங்க்ஸ்.. :)
வீட்டுக்குப் போய் இன்னும் இருக்கு.. ரைட் அப் எழுதத்தான் நேரம் இல்லை..பட் ஐ வில் ட்ரை..
கவனிப்பு நல்லது தான்
அதற்காக இப்படியா
இளவயது பாவாடை தாவணி மங்கை
பந்தியில்
அமர்ந்திருந்த வாலிபனுக்கு
சரமாரியாகக்
கண்களாலும் கைகளாலும்
பரிமாறிக் கொண்டிருக்க..
அந்தப்பக்கம் அமர்ந்தபடி பார்த்த நான்
பொறுக்கமுடியாமல் கேட்டேன்..
அந்தப் பொண்ணு அந்த ஆளோட காதலியா..
அருகிலிருந்தவ்ர் முறைத்தார்..
வாய் கூசாம இப்படிக் கேக்கறீங்களே..
அந்தப் பொண்
அவரோட மச்சினி...!
**
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்கோ மச்சினி யாருமில்லை..
*
மச்சினின்னு பாட்டே இல்லையே :)
*
https://youtu.be/dQZGgVJXXHg
I object your honour. There is a song from the popular Vijay film "Poove Unakkaaga"
https://www.youtube.com/watch?v=pwX56KXBxsU
Coming back soon.
Thank you. Come back soon..:)
வாழும் பல்லிங்க..ஒண்ணும் செய்யாது...
வீட்டுக்காரர் சொன்னாலும்
புதுக்குடித்தனம் மனைவியுடன்
சென்றபோது கொஞ்சம்
பயம்மாகத் தான் இருந்தது..
அதுவும்
அது
படுக்கையறை,
குளியலறை,
சமையலறை
என
நாராயணக் கடவுள் போல
காட்சி தரும்..
பார்த்தால்
பதிலுக்கு வெறித்த பார்வை பார்த்து
ச்ச்ச் சொல்லும்..
மனைவி கிண்டல் செய்வாள்
என்ன இது பல்லிக்கெல்லாம் பயந்து..
ஒரு ஞாயிறுப் பொழுதில்
காலையில்
ச்ச் சத்தத்தில்
சட்டென விழிப்பு வந்ததில்
கொஞ்சம் பயந்து கத்த...
அவள் குங்குமமாய்ச் சிவந்து
வாயைப் பொத்தினாள்..
கத்தாதீங்க.. அது பல்லியில்லை
நான் தான்..!
*
https://youtu.be/Fk8WwgEX75g
நல்லபடி யாய்க்கவிதை நெய்ய வேண்டும்
..நாவினிலே கலைமகளும் சொல்ல வேண்டும்
கல்லென்றே இருந்தமனம் கனிந்து இங்கே
..கனிவான சிற்பமென மாற வேண்டும்
வில்லினிலே சீறிவரும் அம்பைப் போல
…வெற்றிதரும் கற்பனைகள் மிளிர வேண்டும்
சொல்லரசி நாமகள்நீ என்னை வாழ்த்தி
..சோர்விலாமல் நற்கவிதை அருள வேண்டும்
https://youtu.be/uaZqO6KC8VA
அன்பு சுந்தர பாண்டியன் சார்,
http://dkpattammal.org/ImagesDB/Gall...ni-Jayaram.jpg
தங்களுடைய பிறந்த நாளுக்கு என் மனம் மகிழ்ந்த இதயபூர்வமான வாழ்த்துகள்.
என்ன ஆச்சர்யம்! இன்று மதியம்தான் தாங்கள் எனக்குப் பரிசாக அனுப்பிய பாலா பாடல்கள் டிவிடியை எடுத்து என்னென்ன பாடல்கள் இருக்கிறது என்று ஆராய்ந்தேன். டிவிடியின் மேல் தாங்கள் அன்புப் பரிசு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நான் தங்களை நினைத்துக் கொண்டே பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஈவ்னிங் பார்த்தால் ராகவேந்திரன் சார் தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.
மீண்டும் என் இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் SSS சார்.
அன்பான சுந்தர பாண்டியன்அவர்களுக்கு
என் இதய பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் பாடல்.
//மச்சினின்னு பாட்டே இல்லையே//
http://gonizamabad.com/wp-content/up...Video-Song.jpg
சி.க,
உங்களுக்காக ரொம்ப ஸ்பெஷலாக இதுவரை யாருக்கும் தராத ஒரு பாடலைத் தர போறேன். நான் மட்டுமே பல வருடங்களாக பார்த்து ரசித்து வந்த பாடல். இப்போது உங்களுக்காக ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாடல். நான் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.
தெலுங்கில் வெங்கடேஷ், ஸ்ரீதேவி (நம்ம ஊர் மயிலேதான்) நடித்த ஒரு படம் ('Kshana Kshanam') தமிழில் டப் ஆகி வந்தது. தயாரிப்பு ஏ .எம்.ரத்னம். தமிழில் 'என்னமோ நடக்குது'. (புதுசில்லை) நம்ம ராம் கோபால் வர்மா இயக்கிய படம். படம் செம ஜாலி. ஒவ்வொரு பாட்டும் செம அமர்க்களம்.
மரகதமணி மியூசிக். பின்னி எடுத்துடுவார் மனுஷன்.
இந்தப் பாடல் காட்சிக்கு வருகிறேன். எதிரிகளிடமிருந்து தப்பி ஒரு காட்டுக்குள் ஒளிந்திருக்கிறார்கள் நாயகன், நாயகி இருவரும். காடு முழுவதும் ஓடி, ஓடி கால்கள் தேய்ந்து ஒரு சமயம் உட்கார்ந்து இருக்கும் போது கதாநாயகன் போராக பீல் பண்ணுகிறான். ஒரு ஆட்டம் பாட்டம் இல்லையே என்று சோம்பல் முறிக்கிறான். அப்படியே காட்டுவாசிகள் கூட்டம் கூடுகிறது.
'ஜும்பாயே....ஆகும்பையே.....ஆகும்பையே ..ஜும்பாரே,,,ஆகும்பையே'
என்று காட்டுவாசிகள் கத்திக் கொண்டே ஆட,
துவங்குகிறது ஆர்ப்பாட்டமான டான்ஸ்.
சும்மா ஸ்ரீதேவி ஆட்டத்தில் கவர்ச்சியாக பட்டை உரிக்க, கூட வசந்தமாளிகை எடுத்தவரின் வாரிசு உடன் சேர்ந்து ஆட பாலா, சித்ராவின் வளமான குரலுடன் கோஷ்டியினரின் கோரஸும் ஒலிக்க, காட்டுவாசிகளின் பின்னணியில் என்றும் திகட்டாத பாடல்.
ஆனால் யாரும் கேட்டிருக்க மாட்டீர்கள். இப்போது கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
சரி! திடீரென்று ஏன் இந்தப் பாட்டு உமக்கு?
காரணம் இருக்கிறது. 'மச்சினி' என்று பாட்டே இல்லை என்று எழுதினீரா? அதெப்படி இல்லை என்று கூற முடியும்?:) அதனால்தான் உமக்கு இந்தப் பாட்டு. (மாட்டினீரா):)
"மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
ஜும்பாயே...ஆகும்பையே
அட மாமனுக்குத் தெரியுமா என் மனசு கெட்டாச்சு
ஜும்பாயே....ஆகும்பையே...
அடி மோகினியே ராகினியே இப்படி வாடி
உன் முன்னழகும் பின்னழகும் எத்தனை கோடி
அது என்ன விலை நான் என்ன விலை
நான் மோகினி இரவினில் முக்கனி கனி"
சி.க,
பாட்டை கவனமாக முழுசா கேட்டு என்ஜாய் பண்ணுங்க. டப்பிங் பாட்டு போலவே இருக்காது. சூப்பரோ சூப்பர். முக்கியமா டவுன்லோட் பண்ணி வச்சி டெய்லி கேளுங்க. அப்படியே அடிமை ஆயிடுவீங்க. அப்புறம் பதிவு போடக் கூட வராம இந்தப் பாட்டையே கேட்டுகிட்டு இருப்பீங்க.
http://i2.ytimg.com/vi/6SePc9hkyI0/mqdefault.jpg
மஞ்சள் உடை அணிந்து, பச்சை உடை அணிந்து, தலையில் காட்டுப்பூக்கள் வைத்து நம்ம ஸ்ரீதேவி அமர்க்களம். என்ன சொல்லுங்க...எத்தனை பேர் வந்தாலும் மயிலுக்கு ஈடு இணை இல்லை.
சி.க ஒரு வேலை உங்களுக்கு தரேன்.
இந்த பாடலின் முழு வரிகளையும் கேட்டு நீங்கள் இங்கே லிரிக்ஸ் பதிய வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்.
வீடியோவில் சரியாக 4.45க்கு தொடங்கும் பாடல். ஆமாம் பிறந்த நாள் சுந்தர பாண்டியன் சாருக்கா? இல்லை உமக்கா?
அடிச்சீரய்யா லக்கி பிரைஸ் பாடலை.:)
இதோ பாடல்.
"மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு"
https://youtu.be/gxIcbN8ojDg?list=PL...Y3HEQa53asQbju
அப்படியே தெலுங்கிலேயும் பார்த்துடுங்க. தெலுங்கிலும் அருமை.
'Chali Champutunna Chamakkulo' (மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு)
https://youtu.be/iVxfklLI-rY
உமக்காக மெனக்கெட்டு இம்மாம் பெரிய பதிவு போட்டிருக்கேன். ஒழுங்கா ராட்சஸி பாட்டை போடும்.:)
சி.க. சார், வாசு சார்
மண் வாசனை.. இதனுடைய மணமே தனி. மழை பொழிந்து சில நேரம் கழித்து அடிக்கும் போது நாசியெங்கும் இதமான மணம் பரவும்.. OF COURSE, it should be an undiluted village..
ஆனால் இங்கே பாருங்கள்.. மழை வந்தால் மண் மணக்காதாம்.. மச்சினச்சி வந்தால் தான் மணக்குமாம்..
[ஹய்யா... சி.க. கேட்ட மச்சினச்சி பாட் வந்துடுச்சே...]
https://www.youtube.com/watch?v=pwX56KXBxsU
வாசு சார்
அரிதான பாடல்களைத் தேடிப்பிடித்து அளிப்பதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது..
தூள் கிளப்புங்கள்..
vanakkam ji
vanakkam ellorukkum
எல்லோருக்கும் வணக்கம் - அருமையான பதிவுகளாக தொடரும் இந்த திரியில் சற்றே அன்னையின் புகழாஞ்சலியும் தொடருட்டுமே . யாருக்கும் மறுப்பு இருக்காது என்று நினைக்கிறேன் ......
கரு தொடர்கின்றது ---------
http://i818.photobucket.com/albums/z...ps1mmd8dav.jpg
கருவின் கரு - பதிவு 28
தாயின் மடியில் தலை வைத்து சற்றே உறங்க நினைக்கிறேன் - அவள் நினைவுகள் தான் படுக்கையாக வருகிறது - உலர்ந்த என் உதடுகள் சொல்ல சொல்ல , என் , வற்றிய கண்கள் இந்த கவிதையைப்படிக்கின்றது :
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீ உண்டதென்று சாம்பலும் எங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமல் நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமல் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப்போல் ஒரு மாமருந்தில்லை
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதிகொண்ட மானுடர் மயங்குவதென்ன
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்.
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .
அம்மாவின் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
போனவள் புண்ணியம் எம்முடன் சேர்க
https://youtu.be/zoolSQXL8ks
கருவின் கரு - பதிவு 29
எல்லாம் எனக்குள் இருந்தாலும் , என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம் ----
( thanks to சித்தூர் வாசு - இந்த பாடலை அலசும் முன் உங்கள் பதிவு வந்து விட்டது ) - இந்த பாடல் ஏற்படுத்தும் positive vibes யை சொல்ல வார்த்தைகளே இல்லை - தன்னம்பிக்கை , எல்லாமே தான் அனுபவிக்கத்தான் இறைவன் படைத்திருக்கான் என்ற ஆழ்ந்த கருத்துக்கள் - முடிவில் இதற்க்கெல்லாம் காரணம் ஒரு அன்னை என்று அழகாக முடிவடையும் வார்த்தைகள் ---
https://youtu.be/pLXWZDSy7FY
vanakkam Rajeshji!
ராகவேந்திரன் சார்! அருமை!
முதுகு காடுங்க.:) (புறமுதுகு இல்ல).:)
ஹப் நிர்வாகம் முதுகு சொறியற மாதிரி இன்னுன் ஏன் smiley போடல?:)
ரவி,
வாங்க. குறுகிய நோக்கத்துக்குப் பின் (ஸாரி மீள முடியலப்பா) குறுகிய இடைவெளிக்குப் பின் 'துறுதுறு'ன்னு சுறுசுறுப்போட வந்திருக்கீங்க. 'அம்மா' அமர்க்களம் மீண்டும் ஆரம்பம். ஹய்! ரெட்டை அர்த்தம் வருதே. நான் உங்க பதிவுகளை சொன்னேன் சார். தாய்ப் பாடல்கள் பாடகர் திலகத்தின் குரல்களில் அமுதம்.
தங்கள் கைபேசி அழைப்புக்கு மிக்க சந்தோஷம். கலை போல நீங்களும் என் உயிருக்கு உயிரான நண்பர்.:) (அடுத்த சதித் திட்டத்திற்கு உங்க எல்லோரோட உதவியும் தேவை):)
நானும் 'கலை' 'கலை'ன்னு பினாத்த ஆரம்பிச்சுட்டேன்.:) கடவுளே! இது எங்க போய் முடிய போவுதோ!:)
கருவின் கரு - பதிவு 30:-D:smile2:
ஒரு தாயின் தியாகத்தையும் அன்பையும் 5 பருவங்களாக விவரிக்கலாம் - தத்ரீ (Dhatree) - அதாவது குழந்தையை சுமப்பவள் - இந்த நிலையில் அவள் செய்யும் தியாகங்களுக்கு அளவே இல்லை - ஒரு பெண் தாய்மை என்ற நிலையை அடையும் போதுதான் அவளின் உள்ளே ஒளிந்திருக்கும் கருணை ஒரு கருவாக உருவாகிறது .
இரண்டாவது இடம் ஜனணி (Janani) - குழந்தையை ஈன்றுபவள் - இங்குதான் அவளின் சுயநலம் , தனக்கு என்று வாழ்தல் என்னும் குணங்கள் கொல்லப்படுக்கின்றன - தாய்மை கருவாக வெளி வருகிறது ( A child gives birth to a mother )
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் .
அடுத்தது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end ) - பல வருடங்கள் தன் குழந்தையை சுமக்குகின்றாள் - இளமை உதிர்ந்த இலைகளாக கீழே விழ , முதுமையின் கொடுமையிலும் அவனுக்காகவே வாழ்கிறாள் - அவள் தவம் செய்யும் இடத்திற்கு , யாரோ " முதியோர் இல்லம் " என்ற தவறான பெயரை கொடுத்துள்ளனர் - மேற்கொண்ட வரிசையில் சில பாடல்களை ரசிப்போமா ?
பருவம் 1- தத்ரீ
https://youtu.be/3LwFGJSX1h8
https://youtu.be/gCx-8SwvAe8
https://youtu.be/YS14kSchpog
ஆஹா.. மாஞ்சு மாஞ்சு கண்ணா செலக்ட் பண்ணின அவனோட கவிதைகள்ளயும் (?!) பாட்டுல்லயும் மச்சினி தான் பிடிச்சதாங்க்காட்டியும்..
நான் கொஞ்சம் சின்ஸியர் சிகாமணியாக்கும்.. ஹோம் ஒர்க்னு வந்துட்டா ஆரம்பத்துலருந்து தான் செய்வேன்.. ராஜேஷோட ரேர் சாங்க்ஸ் கேக்கணும்.. நான் போட்ட சாங்க்ஸையே கேக்கணும்! பட் மச்சினி கூப்பிடறாளே..!
//I object your honour. There is a song from the popular Vijay film "Poove Unakkaaga"//
//மண் வாசனை.. இதனுடைய மணமே தனி. மழை பொழிந்து சில நேரம் கழித்து அடிக்கும் போது நாசியெங்கும் இதமான மணம் பரவும்.. OF COURSE, it should be an undiluted village..
ஆனால் இங்கே பாருங்கள்.. மழை வந்தால் மண் மணக்காதாம்.. மச்சினச்சி வந்தால் தான் மணக்குமாம்.. //
கல் நாயக், ராகவேந்திரா சார்.. நன்ற்ற்றி..மொதல்ல இதைத் தான் கேட்டேன்.. பாட்டு நல்லா இருந்தது..முரளி விஜி.. மேலேயும் இதை ஆடிக்கிட்டிருப்பாங்களோ.. நாகேஷ் டான்ஸ் அஸ்யூஸ்வல்.. நம்பியாருக்குத்தான் டான்ஸ் வராது ( இதுக்கு யாராவது பாட் போட மாட்டாங்களா என்ன)
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ணக்கிளி பறக்குது
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒண்ணு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசலெங்கும் கோலம் போட
நல்ல பாடல். கொடுத்தமைக்கு நன்றி.. :)
*
ஆஹா வாசு சார்.. நீரல்லவோ கலா ரசிகர் .. இப்படி அனுபவிச்சு எழுதப்பட்ட வரிகளை
அனுபவிச்சு எழுத உங்களால மட்டுமே முடியும். :)
(இன்னும் பாட்டு கேக்க ஆரம்பிக்கலை)(ஆரம்ப வரிகளைச் சொன்னேன்..
மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
ஜும்பாயே...ஆகும்பையே
அட மாமனுக்குத் தெரியுமா என் மனசு கெட்டாச்சு
ஜும்பாயே....ஆகும்பையே...
அடி மோகினியே ராகினியே இப்படி வாடி
உன் முன்னழகும் பின்னழகும் எத்தனை கோடி
அது என்ன விலை நான் என்ன விலை
நான் மோகினி இரவினில் முக்கனி கனி"
ஐ திங்க் இந்தப் பாட்டை இரண்டு கவிஞர்கள் எழுதியிருப்பாங்கன்ணு நினைக்கறேன்.. இந்த ஜூம்பாயே ஆகும்பையே மட்டும் ஒரு கவிஞர் எழுதியிருப்பார்!
*
அல்லிப் பூவின் அழகே அழகு தனி அழகு
அள்ளிக் கொண்டு மதனா பழகு நீ பழகு
அம்மான் கைகள் தொடவும் பூ மலர மலர
பெண்மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற (சே ரவியும் கல் நாயக்கும் மிஸ் பண்ணிட்டாங்களே!) :)
படபடவென இவள்மனம் துடிக்குது அட இளமைக்கு பிடிக்கலையா/இழுக்கில்லையா/விருந்தில்லையா
இரு கனிகளும் கிளையின்றித் துடிக்குது
இந்த அணிலுக்கு மனமில்லையா
இரு இதழுக்கும் இதயத்துக்கும் அறிந்தவன் இவனில்லையா
இடை அழைக்குது இடைவெளி தடுக்குது
அடி மன்மதன் அம்புக்கு மனிதரில் இடமில்லையா..
நீ பகலவன்/பகலுக்கு பத்தினியா…
காட்டுக்குள்ளே பாடும் என் பாடல் புதுசு
காதல் முத்தம் போடு அது தானே பரிசு ( நல்லாக் கேக்கறான்யா):)
இன்பம் தேடித் தானே உருகாதோ மனசு
என் பெண்மை கொண்ட ஆசை என்னாளும் இளசு
இருவிழிகளும் ஒருமுறை துடிக்கையில் பல கனவுகள் மலர்கிறதே
புது விடை சொலும் இள மன சிலம்புகள் தினம் புலம்பிட மழை வருதோ
இவன் தொடுகையில் உயிர்வரை சிலிர்க்குது அட இது ஒரு புதுசுகமோ
தினமொருமுறை உறவுக்கு இவள்மனம்
தவிக்குது கொதிக்குது துடிக்குது
துணை வருமோஓ ஓ சுகமென்று சொல்லியதோஒஒ
(ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு)
சலி சம்புடுன்னா சமக்குல்லோ செல்லி செண்டகொச்சிண்டி
செலி செண்டகொச்சே டடுக்குல்லோ கில்லி கிண்டா கிச்சிண்டி..
இடி சக்கனி சிக்கனி செக்கிலி கில்லி…
( நா இந்த ஆட்டைக்கே வரலை!) :)
*
இரண்டுபாடல்களுக்கும் (தமிழ், தெலுங்கு) மனமார வயிறு குலுங்க சிரிக்க வைத்ததற்கும்.,
வெங்கடேஷ்,ஸ்ரீதேவிக்கு மறுபடி ஆக்ஷன் கட் கொடுத்து ஒவ்வொரு வரியாய்
என்னை நகலெடுக்க வைத்ததற்கும் (அது என்னாங்க கிடுகிடுன்னு ஓடறாங்க பாடறச்சே),
அப்புறம் மஞ்சள் பச்சை டிரஸ்ஸை அடிக்கடி பார்க்க வைத்து
ஸ்ரீதேவி ரைட் ஆங்கிள்ட் ட்ரையாங்கிளாட்டம் கை உயர்த்தி அப்பப்ப பாடுவதை
மறுபடிமறுப்டி பார்க்க வைத்து ( இது தான் ஓய் நிஜம்ம்மான சதி..பரவால்லை ஹி ஹி) :)
இப்போது வீக் எண்ட் வரும்போது இந்தப் படத்தையும் பார்க்கவைப்பதற்கும் மிக்க்க நன்றி வாசுசார்..
*
மனைவியின் தங்கை வந்தாள்
…மாசிலா நிலவாய் என்முன்
சுனையென இளமை பொங்க
..சுகந்தநீ ராடல் செய்தே
இணைந்தநல் லிதழ்பி ரித்தே
…இனிமையாய்க் கண்ணைக் கொட்டி
கணையினை விட்ட அம்பாய்
..கனித்தமிழ் பேச லுற்றாள்..
*
அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்! :)
*
அப்புறம் வாரேன்..
//பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்.
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .//
ரவி சூப்பர்.. நெகிழ வைக்கும் கவிதை..ச்சும்மா பூந்து விளையாடறீங்க..
*
என்னமோ போங்க 16
**
ஓரவிழிப் பார்வையிலே உள்ளமெலாம் தந்தவளை
…ஊடிநின்று கேள்வியினைக் கேட்கின்றான் வாலிபனும்
பாரமென இளமனதை வாட்டுகின்ற வேட்கையிலே
..பாவையவள் நூலிடையை பற்றித்தான் கேட்கின்றான்
ஆரமென நாணத்தில் அன்னமது நடைமறந்து
..ஆணழகன் கேள்விக்குப் பதில்சொல்லும் நாடகந்தான்
வாரம்போய் வருஷம்போய்ப் பலவிதமாய் ஆனாலும்
..வரமெனவே தொடர்ந்துவிடும் காதல்தான் தெரியாதா..
தெரியலையா..என்னமோ போங்க..
*
பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனா..
https://youtu.be/vTEwKW26kI0
டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி..என்னவாக்கும் படம்..
*
என்னமோ போங்க - 17
*
முன்பு எழுதியது நினைவில் ( போன போஸ்ட் கவிதை புச்சு)
இயல்புதனை மறந்த காலத்தை விட
இருந்த காலம் எப்பொழுது...
ரகசியமாய்ப்
பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
மயிலிறகை
புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
கண்ணை இறுக்க மூடி
தூக்கம் வரும் வரை
இரவெல்லாம் சாமியை வணங்கி
காலையில் பார்த்தால்
வளராமல் போக
கண்ணீல் குளம் கட்டி அழுத போது..
ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
ஏன் போட்ட
எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
ஏண்டி நா போடவேஇல்லையே
எனப் பதறித்
தண்ணீர் தந்த அம்மாவிடம்
கண் சிமிட்டிச் சிரித்த போது...
பருவ நிலைக்கேற்ப
மாறுதலடைந்ததால்
கண்களில் கொஞ்சம் கனவு,
கொஞ்சம் பூரிப்பு
கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
ஏற்பட்ட பெருமிதம்...
கண்ணாடி காட்டும் முக அழகில்
ஏற்படும் மெலிதான கர்வம்...
எதற்கும் குறைவில்லை..
இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
ரொம்ப பயம்மா இருக்கு
அம்மா சொல்ல
அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
வேலை கிடைத்தாலும் சரிதான்..
இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
வயதை மறந்து ஓடிச் சென்று
அப்பாவை கட்டிக் கொண்டு
தாங்க்ஸ்பா சொன்ன போது...
இயல்பாகத் தானிருந்தேன்...
கல்லூரியிலும் பின் வேலையிலும்
எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..
பின்..எப்படி..
கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..
பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
இந்தா பையன் ஃபோட்டோ..
பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..
அப்பா காட்டிய புகைப்படத்தில்
உன்னைப்பார்த்ததில்...
கொஞ்சம் முகம் மலர ...
நாணமும் உடன் வர
உள்ளே ஓடி
வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
இன்னொன்றும் புரிந்த்து..
அது நிரந்தரம் என.......
***..
கரெக்ட் தானே பொண்ணுங்கள்ளாம் ஸ்விட்ச் போட்டா மாதிரி எப்படி மாறறாங்க.. என்னமோ போங்க
ம்ம் இங்க இந்தப் பொண்ணு என்னவாக்கும் பாடுது
*
உயிர் நீ உனக்கொரு உடல் நான்.
உடல் தொட்டால் இன்பக் கடல் நான்
வளைந்தால் கொடி போல் வளைவேன் நான் (கொஞ்சம் கஷ்டம் தான்)
விழுந்தால் மடிமேல் விழுவேன் நான்..
பிறந்தது பிறந்தாள் உனக்கெனப் பிறந்தாள்
வளர்ந்தாள் காதல் அமுதம்
கனவிலும் தொடர்ந்தே நிழலென நடந்தே
வருவாள் வாழ்வு முழுதும்..
*
https://youtu.be/_M-oUzzMORs
என்னமோ போங்க - 18
*
கல்யாணம்னாலே எல்லாருக்கும் ஒருவித மயக்கம் நடுக்கம் - ஆணாகட்டும் பெண்ணாகட்டும் உள்ளூர இருக்கத் தான் செய்யும்..
ஆனா குஷியா வெளிக்காட்டிக்கறதுங்கறது கொஞ்ச பேர் தான்.. அதில் ஆண்களோட பெர்சண்டேஜ் ஜாஸ்தி தான்..
பெண்கள் ரேர் தான்..
இங்கபாருங்க இந்தப் பொண்ணு..படத்தோட டைட்டில் மலை நாட்டு மங்கையாம்.. ஆனா படிச்ச பொண்ணாட்டமா கல்யாணத்தைப் பத்தி எப்படிக் கனவு
காணுது பாருங்க..தப்பில்லைங்கறீங்களா.. நானும் என்ன தப்புன்னா சொன்னேன்.. என்னமோ போங்க
*
https://youtu.be/qhLwwr_ldBQ
கருவின் கரு - பதிவு 30// ஒம்ம கிட்ட இருந்து நான் கற்றுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கே.. நீரும் என் குருக்களில் ஒருவராகி விட்டீர்கள் ரவி.. நன்றி..(கடைசிப்பருவத்திற்கு எப்படி முதியோர் இல்லம் வரும்..ஸ்லோகத்தில..அந்தக்காலத்திலயும் அப்படி இருக்கா என்ன)
அபூர்வ கானங்கள்
https://www.youtube.com/watch?v=RW6BUF7kOPA
Piano ... என்னென்ன மாயமெல்லாம் செய்கிறார் மன்னர். அதுவும் துவண்டு கிடக்கும் மனதைத் தேறுதல் செய்து தைரியம் தரும் பாடலுக்கு பியானோ என்னவாய் இவரிடம் ஏவல் செய்கிறது. மனிதன் என்பவன் பாடலுக்கு சற்றும் குறையாத சிறப்பு வாய்ந்த இப்பாடலைத் தரவேற்றிய நண்பருக்கு நன்றி. பால்குடம் படத்திலிருந்து துணிந்து நில் பாடல் பாடகர் திலகத்தின் குரலில்..
பியானோ மட்டுமா.. ட்ராம்போன், அக்கார்டின், விசில், புல்லாங்குழல், வயலின் எல்லாமே அமர்க்களமான இசை ராஜ்ஜியம்.. கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம்..
பாடல் வரிகள்.. தனியே ஒரு திரியே ஆரம்பிக்கலாம். அவ்வளவு உண்மையான வரிகள்..
அபூர்வ கானங்கள்
https://www.youtube.com/watch?v=X-DmutNZq7s
ஆர். பார்த்தசாரதி இசையில் பால் மனம் படத்திலிருந்து பாடகர் திலகம் குரலில் இனிமையான பாடல்
அபூர்வ கானங்கள்
நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி..
[அங்கே யாருப்பா நீலமேகம்ங்கிறது. போய் கொஞ்சம் கண்ணாடி கொண்டு வாப்பா]
https://www.youtube.com/watch?v=7EO_17Y3Dpc
அபூர்வ கானங்கள்
அபூர்வ கானங்கள் என்றாலே உண்மையிலேயே அபூர்வ கானங்கள்.. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இதைக் காணும் வாய்ப்பு...
துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு.. ரவியின் உற்சாகத் துள்ளல் பாடல்..
[யாரங்கே.. கொஞ்சம் முதுகைக் காட்டி நில்லப்பா.. சொறிவதற்கு ஒருவர் ஓடி வருகிறார்...]
https://www.youtube.com/watch?v=txxK71TQkH0
அவன் ஒரு பைத்தியக்காரன்.. பாட்டு வரிங்க...
https://www.youtube.com/watch?v=suu9LVvP6gQ
கருவின் கரு - பதிவு 31
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன --- தாயின் முகத்தை பாருங்கள் - அதில் தான் என்ன பெருமை !!- சுமையாக கருதப்படாத ஒரு கரு அவளை சுமையாக நினைப்பதேன் ? பாரமாக நினைக்காத ஒரு கருவூலம் , காற்றே வராத சிறையில் அடைபடுவதேன் ? - தியாகத்தின் உருவம் - தீயில் கருகுவதேன் ? - பொன்னில் பதிக்கப்படவேண்டிய வைரங்கள் , தரையில் சிதருவதேன் ? ஒரு தென்றலை சுனாமி ஏன் விழுங்க வேண்டும் ?????? கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் !!!!!
https://youtu.be/r8bMJxS07sY?list=PL...3LsJVzhSTBiyN1
https://youtu.be/qqKiKcMhyNQ?list=PL...3LsJVzhSTBiyN1
கருவின் கரு - பதிவு 32
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ---
https://youtu.be/tS00FrWVe1I?list=PL...3LsJVzhSTBiyN1
https://youtu.be/1E-jz0FlYeU?list=PL...3LsJVzhSTBiyN1
கருவின் கரு - பதிவு 33
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ---
https://youtu.be/K4IvX4d8F44?list=PL...3LsJVzhSTBiyN1
https://youtu.be/LQKSy1IjGqY?list=PL...3LsJVzhSTBiyN1
கருவின் கரு - பதிவு 34
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ---
https://youtu.be/ZH3WqUeW8xE?list=PL...3LsJVzhSTBiyN1
https://youtu.be/WQiG5qhia90?list=PL...3LsJVzhSTBiyN1
கருவின் கரு - பதிவு 35
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ---
https://youtu.be/sKbXOvYiwl8?list=PL..._LMkqsGbkDlZUf
https://youtu.be/jxFwHhOK2aA
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
இன்னிக்கு நிறைய ஹோம் வொர்க் இருக்கும் போல இருக்கே :) ஈவ்னிங்க் தான் பாக்கணும் கேக்கணும் எழுதணும்..
ரவி..என்ன பாடல்கள் மட்டும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. எழுதுங்கள் ஐயா..