http://i67.tinypic.com/33ju7ix.jpg
Printable View
Congratulations loganathan sir
superb 17000 postings at mayyam .
Hats off your non-stop efforts towards makkal thilagam mgr postings and update events.
மக்கள் குரல் -21/9/17
http://i68.tinypic.com/29lnski.jpg
https://s26.postimg.org/7k8p7cjyx/IMG_5754.jpg
இன்று முதல்
கோவை சண்முகாவில்
நான் ஆணையிட்டால்
17 ஆயரம் பதிவு போட்டிருக்கும் நண்பர் லோகநாதான் அவர்களுக்கு வாழ்த்துக்களை் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த பலனும் எதிர்பார்க்காமல் யாரை பற்றியும் கவலப்படாமல் புரட்ச்சித் தலைவருக்கு புகழ் பரப்பி வருவதே லட்சியமாக கொண்டு உள்ள உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
http://i63.tinypic.com/2uxz5p5.jpg
எதிரிங்களும் கண் கொட்டாமல் பார்க்கத் தூண்டும் ஒரே முகம்... ஆசை முகம்
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் சலிப்பே வராது .
பொன்மனச்செம்மலை பூவிழிக் கண்ணனை நிருத்திய நாயகர் அமரர் எம்ஜிஆர் தன்னை.ஏற்கனவே பலதடவைகள் அவரைப்பற்றி எழுதியிருந்தாலும் அவரின் பெருமைகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபி போன்றது அள்ளி அள்ளி அவரின் புகழை பருகி மயங்குவது எம் ஜி ஆர் இரசிகர்களுக்கு என்றும் திகட்டாத தேன் போன்றதே, அவரின் உள்ளத்து இனிமை நற்செயல்களே மக்களை அவர்பால் மயங்க வைத்தது. அதன் பிறகே அழகு ஆட்டம் பாட்டு எல்லாம் ,
அவரைப்போலவே அவர் காலத்தில் அழகிய நாயகர்கள் இருந்தார்கள் ஆடினார்கள் பாடினார்கள் யாராலும் அமரர் எம் ஜி ஆர் போல் ஆக முடியவில்லை அது தர்மத்தின் தீர்ப்பு காரணம் இயல்பாகவே உள்ளத்தில் நல்ல உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டதே.
வீராதி வீரர்களை கலை விற்பன்னர்களை அறிவுச்சுடர்களை ஆற்றல் மிகு மறவர்களை தமிழுலகம் சந்தித்திருக்கின்றது. வாடிய பயிர்களைக்கண்டு வாடினேன் என்ற வள்ளலாரின் மனிதாபிமானத்தை ஒத்து தனது உழைப்பில் ஈட்டிய செல்வங்கள் அத்தனையையும் வாடியவர்களுக்கு வழங்கி வள்ளல் என்று மக்களால் போற்றப்பட்டவர், மனிதாபிமானத்துக்கு மகத்தானவர் என்று எம்ஜிஆர் மூலமே
தமிழுலகம் கண்டு கொண்டது என்றால் மறுப்பவர்களுண்டோ மேதினியில்.
இலங்கையில் 1983 ம் ஆண்டு தமிழர்கள் அரசியல் இன்னல்களை சந்தித்து உயிர்களை உடமைகளை இழந்து வாடி வருந்தியபோது பெருந் தொகைப்பணத்தை ஈழத்தமிழர் துயர் துடைக்க வழங்கிய வள்ளல் மேலும் பல சந்தர்ப்பங்களில் தனது பாரிய பொருளாதார உதவிகளை மக்களுக்காக பாதுகாப்புக்காக நல்கினார்.
அந்த நல்ல உள்ளம் கொண்ட செம்மல் நம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றது தமிழர்களின் பெருவாழ்வுக்கு வந்து விழுந்த தடைக்கல்லே . வெறுமனே திரையில் பணத்துக்காக ஒரு கொள்கையின்றி நெறி முறையின்றி நடித்து விட்டு வண்டி நகர்த்தியவரல்ல அமரர் எம் ஜி ஆர்,
ஆடும் கூத்தும் பாடும் பாட்டும் நாட்டு மக்களுக்கு நல்ல படிப்பினையை தரவேண்டும் என்று அதற்காகவே வல்லுனர்களை வைத்து வாழ்க்கையின் நெறிமுறைகளை பண்பாடுகளை கலாச்சார பழக்க வழக்கங்களை மக்கள் இறுகப்பற்றும்படியாக தனது படங்களில் அதிகமாக இருக்கச்செய்தார் மட்டுமின்றி தானும் நீதி நேர்மை தவறாமல் இரக்கம் அன்பு பாசம் கொண்ட உத்தமத் தலைவனாய் வாழ்ந்து காட்டினார்.
எம் ஜிஆரை அவர் வாழுங்காலத்தில் அவமரியாதையாக பேசியவர்களே இன்று அவரை போற்றி மகிழ்கின்றார்கள் என்பதிலிருந்தே அந்த மாமனிதரின் தரம் நிரந்தரமான உயர்ந்த இரகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
காட்சிகளில் விறுவிறுப்பு ,சவால்களை எதிர்கொண்டு வெல்லும் பாங்கு, சூழ்ச்சி
களை முறியடிக்கும் புத்திசாலித்தனம் , கருத்தாழம் கொண்ட நல்லியல்பை வளர்க்கும் பாடல்கள் , ஆபத்துக்களில் பிறரை காக்கும் வண்ணம் வீரமாய் போராடுங்குணம் போன்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் எம் ஜி ஆர் படத்தை கலாரசிகர்கள் பார்க்காமல் இருப்பார்களா. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அவரின் புகழ் குன்றாத ஒளிவிளக்காய் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் வாழ்க அவர் புகழ்.
http://i67.tinypic.com/2uhs380.jpg
நன்றி கருணாகரன் விக்கினேஸ்வரன் முகநூல்
தின செய்தி -23/9/17
http://i66.tinypic.com/2lmsc3q.jpg
மக்கள் குரல் -22/9/17
http://i65.tinypic.com/a07zpv.jpg
தமிழ் இந்து -22/9/17
http://i68.tinypic.com/2nth0dj.jpg
மக்கள் குரல் -23/9/17
http://i63.tinypic.com/ojp16f.jpg
தின செய்தி -23/9/17
http://i63.tinypic.com/353cmrn.jpg
சென்னை பாலாஜியில் 22/9/17 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"காவல்காரன் " தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது
http://i66.tinypic.com/dnokf7.jpg
சென்னை ஸ்ரீநிவாஸாவில் 22/9/17 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"பணக்கார குடும்பம் " தினசரி பகல் காட்சி நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/1sim4p.jpg
கோவை சண்முகாவில் 22/9/17 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நான் ஆணையிட்டால் "தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/2qi0nrl.jpg
புகைப்படங்கள் உதவி : கோவை நண்பர் திரு.வி.கே.எம்.