-
பொதுவாக புரட்சித்தலைவர் நடித்த எந்தப் படமும் தோல்வி அடைந்தது கிடையாது ... தன்னை நம்பியவர்களை புரட்சித்தலைவர் ஒருபோதும் கைவிட்டது கிடையாது புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் திடீரென்று வித்யா கர்வம் தலைக்கேறி நான் பாடுவதால் தான் எம்ஜிஆர் படமே ஓடுகிறது என்றெல்லாம் பொதுமேடைகளில் கூறியிருந்தார் அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் பறிபோனது பிற்பாடு தன் தவறை உணர்ந்து புரட்சித் தலைவருடன் சமாதானம் ஆனார் புரட்சித் தலைவரும் பெருந்தன்மையுடன் மன்னித்து அவருக்கு மீண்டும் தன் படத்தில் பாடுவதற்கு வாய்ப்புகள் கொடுத்தருளினார் பொதுவாக எம்ஜிஆர் அவர்கள் மக்கள் திலகம் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் அவரை நம்பி படம் எடுத்த யாரும் வீன் போனது கிடையாது அவரை நன்றாக புரிந்து கொண்டு படம் எடுக்கும் பொழுது காட்சிகளின் பின்னணி மற்றும் டைரக்ஷனில் அவர் கொஞ்சம் குறுக்கீடு செய்வார் டைரக்டர் சொல்வதை கூட மீறி இந்த காட்சியை இவ்வாறு நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார் அவர் கூறியது நூற்றுக்கு நூறு சரியாக பலிக்கும் அவர் சொன்ன மாதிரி காட்சியை மாற்றி அமைத்தால் அந்த படம் நூறு நாட்கள் கண்டிப்பாக ஓடியே தீரும் புரட்சித்தலைவர் சாதாரண நடிகர் மட்டுமல்ல மிகச் சிறந்த கலைஞானி மிகச் சிறந்த சினிமா டைரக்டர் ஆவார் தலைவரை நன்றாக புரிந்து கொண்டவர் சினிமா டைரக்டர் பா நீலகண்டன் ஆவார் டைரக்ஷன் பண்ணும்போதே எம்ஜிஆரிடம் கருத்து கேட்பார் பெரும்பாலும் புரட்சித் தலைவரின் ஆலோசனைகளின் படியே டைரக்ட் பண்ணுவார்.........
-
கலை எம்ஜிஆரின் பிறப்போடும் வறுமையை விரட்டவும் தேவை ஆனது
ஆனால்
நாட்டு பற்று எம்ஜிஆரின் மனதின் அடிதட்டானது சினிமா வாய்ப்பு கிடைப்பது சிரமம் ஆனபோது இந்திய ராணுவத்தில் சேர துணிந்தார் எம்ஜிஆர் வேறு ஏதாவது தொழில் செய்ய விரும்பவில்ல எம்ஜிஆர்
சினிமாவில் பிரபலமானபோதும் நடிப்பதே தன் உண்மை வாழ்வாக்கினார்
திரையில் தீயோரை அடக்கினார் எம்ஜிஆர்
நிஜத்திலும் தீயோரை அடக்கினார்
திரையில் வள்ளலாக நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் வள்ளலாக வாழ்ந்தார் எம்ஜிஆர்
திரையில் எதிலும் வெற்றி காணும் நாயகனாக நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் எங்கும் எதிலும் வெற்றி தலைவர் ஆனார் எம்ஜிஆர்
திரையில் எம்ஜிஆர் படம் காண கூட்டமோ கூட்டம்
நிஜத்தில் எம்ஜிஆரை காண நாள் கணக்காக தவம் கிடந்தது மக்கள் கூட்டம்
திரையில தொழில்் அனைத்தையும் தொழிலாழர்களுக்கே கொடுப்பதாக இதயக்கனி படத்தில் நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் தன் சொந்த சத்தியா ஸ்டுடியோவை தொழிலாளர்களே முதல்லாளி ஆக்கினார் எம்ஜிஆர்
திரையில் கடைசியில் அனைத்தையும் நல்லதாக முடித்து எல்லோரையும் வாழவைப்பார் எம்ஜிஆர்
நிஜத்தில் தன் உடைமைகளை அனைத்தையும் நாட்டுக்கே எழுதிவைத்து கடவுள் ஆனார் தமிழர்களுக்கு
சினிமா எம்ஜிஆர்
நிஜ எம்ஜிஆர் இரணடையும் ஒன்றாக கொண்டு அன்பு வீரம் கொடை திறமை மனிதநேயத்தோடு வாழ்ந்ததாலே மக்கள் எம்ஜிஆரை மட்டும் இதயக்கனி தலைவராக கொணடனர்
ஒரு சூரியன்
ஒரு சந்திரன்
ஒரு எம்ஜிஆர்
வளர்க...வாழ்க ...எம்.ஜி.ஆர் .,புகழ்.........
-
#மக்கள் திலகத்தின் அர்ப்ப*ணிப்பு..
மக்கள் திலகம் முத*ல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.
படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்
‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’
பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்
‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’
பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும். ஹிந்தி ப*ட*த்தில் த*ர்மேந்திரா குடிப்ப*வ*ராக*வே இருந்த*தால் இந்த* அறிவுரை பாட*ல்காட்சி இல்லை.. மேலும் புதுசா க*ட்டிக்கிட்ட*..பாட*லும் அவை தொட*ர்பான
காட்சிக*ளும் இல்லை..எம்.ஜி.ஆரின் ஆலோச*னைப்ப*டி இவை சேர்க்க*ப்ப*ட்ட*து..
இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.
பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.
பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’
பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர்...........
-
*காண கிடைக்காதவை:*
*01 / 11 / 1988* ஆம் ஆண்டு வெளிவந்த *சினிமா எக்ஸ்பிரஸ்* இதழில்....
*ஆர். எம். வீரப்பன்* அவர்களை நடிகர் *விஜயகாந்த்* சந்தித்து கேட்ட கேள்விகளின் தொகுப்புகள் மட்டும் :
1 - எம்ஜிஆர் நாடக மன்றம் தோன்றியது எப்போது ?
2 - முதன் முதலில் *திரு. எம்ஜிஆர்* அவர்களை எப்போது சந்தித்தீர்கள் ?
3 - *திரு. எம்ஜிஆர்* அவர்களை நீங்கள் சந்தித்த போது , *திரு. எம்ஜிஆர்* அவர்கள் *திருமதி. ஜானகி* அம்மையார் அவர்களை திருமணம் புரிந்திருந்தாரா ?
4 - பட உலகில் *திரு. எம்ஜிஆர்* அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன ?
5 - *சத்யா மூவிஸ்* நிறுவனத்திற்கும் , *திரு. எம்ஜிஆர்* அவர்களுக்கும் என்ன தொடர்பு ? , அந்த நிறுவனத்தில் அவரது பங்கு என்ன ?
6 - *சத்யா மூவிஸ்* வெள்ளிவிழா கண்ட நிறுவனம்... ஆனால் *திரு. எம்ஜிஆர்* அவர்கள் ,
*தெய்வத்தாய்*
*நான் ஆணையிட்டால்*
*காவல்காரன்*
*கண்ணன் என் காதலன்*
*ரிக்ஷாக்காரன்*
*இதயக்கனி*
என 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
நீங்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும்... ஏன் *சத்யா மூவிஸ்* தயாரிப்பில் *திரு. எம்ஜிஆர்* அவர்கள் அதிகமான படங்களில் நடிக்கவில்லை ?
7 - *திரு. எம்ஜிஆர்* அவர்கள் மிக நன்றாக நடிக்கக் கூடியவர் என்பதற்கு உதாரணமாக , *என் தங்கை* , *நாம்* , *நான் ஏன் பிறந்தேன்* போன்ற படங்களை கூறலாம்.
தொடர்ந்து அப்படிப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடிய பாத்திரங்களை ஏன் ஏற்று நடிக்கவில்லை ?
8 - *சத்யா மூவிஸ்* படங்களில்... *கண்ணன் என் காதலன்*, *நான் ஆணையிட்டால்* இரண்டு படங்களும் மற்ற படங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றி பெற வில்லை என்பது உண்மையா ?
9 - அண்ணே !
பொதுவாக *எம்ஜிஆர்* அவர்களது படங்களில் காதல் நெருக்க காட்சிகள் இராது ! , ஆனால் வீரப்பன் அவர்களின் படங்களில் மட்டும் அது இருக்கும் என்று கூறியிருந்தார் ! *சத்யா மூவிஸ்* படங்களில் காதல் நெருக்கக் காட்சிகள் அதிகமாக இடம்பெறக் காரணம் என்ன ?
10 - *திரு. எம்ஜிஆர்* அவர்களின் படங்கள் கொடுத்த பெரிய வெற்றிகளை போல் , *சத்யா மூவிஸ்* அன்மையில் தயாரித்த மற்ற படங்கள் அந்த அளவுக்கு அளிக்கவில்லை என்று நினைக்கிறேன் , அதற்கு காரணம் என்ன ?
11 - *புரட்சித்தலைவர் எம்ஜிஆர்* அவர்களை வைத்து படமெடுத்த நீங்கள் இதுவரை *சிவாஜி* அவர்களை வைத்து படம் எடுக்க வில்லை ! ஆனால் ? *திரு. எம்ஜிஆர்* அவர்கள் மறைந்த பிறகு *சத்யா மூவிஸ் தயாரிப்பில் புதிய வானம்* படத்தில் சிவாஜி நடிக்கிறார்... இதைப் பற்றி சிலர் , *ஆர். எம். வீ.* அவர்கள் சிவாஜியை வைத்து படம் எடுக்கலாமா ? என்று கேட்டால் தங்களது பதில் என்ன ?
*இவ்வாறாக பல கேள்விகளை திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களிடம் திரு. விஜயகாந்த் அவர்கள் கேட்டார்*
நன்றி :
அன்பன் ,
*எம்ஜிஆரின் காலடி நிழல்*
*உழைக்கும் குரல் தளம்*
Special thanks to ,
*Makkal Thilagam MGR*.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 01/08/20/அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனும் மாபெரும்* சரித்திரத்தில் பல்வேறு பக்கங்களை நாம் பார்த்து வருகிறோம்* அந்த பக்கங்களை புரட்ட புரட்ட அதிசயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது .* அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையில் கிடைக்கும் புதையல் போல, ஜீபூம்பா விளக்கை தேய்த்தால் நடக்கும் அதிசயங்கள் போல எம்.ஜி.ஆர். என்கிற ரகசிய* புதையல், அற்புத புதையல் மானுட உலகம் எப்படி வாழ வேண்டும் ,எப்படி வாழ்ந்தால் எப்படி ஜெயிக்கலாம் என்பதற்கு நன்னம்பிக்கை விதை எம்.ஜி.ஆர். அவர் அதிசயிக்கத்தக்க மந்திரங்களோ, மாயமோ செய்யவில்லை .* ஆனாலும் பல கோடி மக்களின் உள்ளங்களை வென்றார். அது எப்படி .அவர் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ,போட்டியில் வென்றார் .உலகிலேயே ஒரு நடிகர் கட்சியை தொடங்கினார்* என்ற சாதனையை படைத்தார் .குறுகிய காலத்தில் ஆட்சியை பிடித்தார் என்ற வரலாறு படைத்தார் . இப்படி பல்வேறு விஷயங்களில் அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் .அப்படிப்பட்ட சாதனை நாயகன், நம்மை போலவே ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து , தமிழகத்தில் பெரும்பான்மையான ஜாதி பலமோ, பண பலமோ, பெரிய படிப்பறிவோ ,அதிகார பலமோ இல்லாமல் கோடிக்கணக்கான இதயங்களை ஆட்கொண்டார் என்றால் எப்படி .அப்படியான செய்திகளைத்தான் நாம் பார்த்து வருகிறோம் .அப்படியான வகுப்பறைகளில் பாடங்கள் கற்பது போல அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு நாளும் பாடங்களை கண்டு வியக்கிறோம் .அந்த பாடங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாக அமைந்துள்ளது என்பதை சகாப்தம் நிகழ்ச்சியில் பார்க்கிறோம் .
*எம்.ஜி.ஆர். அவர்கள் நாராயணன் என்பவருடன் நட்பு வைத்திருந்தார் .* அவரை நட்புக்கு இலக்கணமாக அண்ணா பத்திரிகையில் பணிபுரிய வைத்தார் .அதில் தனக்கு தெரிந்த பத்திரிகையாளர்களை எல்லாம் அழைத்து வந்து வேலைக்கு*அமர்த்தினார் .* அவர்களில் சோலை, கார்த்தி ,அண்ணா நாராயணன் போன்றவர்கள் முக்கியமானவர்கள் .அண்ணா நாராயணன் அவர்கள் எம்.ஜி.ஆரிடம் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார் .* அதாவது அண்ணா பத்திரிகையில் சேருவதற்கு முன்பாக ஒருமுறை மாலைமுரசு பத்திரிகை அலுவலகத்தில் சினிமா தொடர்பாளராக இருந்த ஜெயபாண்டியன் என்பவருடன் ஊட்டியில் நடைபெறும் நல்ல நேரம் படப்பிடிப்புக்கு வருமாறு அழைத்தார் .அவர்கள் ரயில் மூலம் கோவைக்கு வந்து , அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலையில் ஊட்டி சென்று சேருகிறார்கள் . எம்.ஜி.ஆர். தேநீர் இடைவேளையில்*இவர்களை சந்தித்து ,பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு தெரியுமா பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் என்று செய்தி வந்துள்ளது உண்மையா என்று .இவர்கள் மாலை பத்திரிகையில் பணியாற்றுகிறவர்கள் .எம்.ஜி.ஆரை பார்க்க வந்த ஆசையில் மாலை செய்திகள் பற்றிக்கூட கேட்டு தெரிந்து கொள்ளாமல் உள்ளார்கள் .எம்.ஜி.ஆர்.கேட்ட இந்த கேள்வி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது . வியந்தும் போனார்கள் . எம்.ஜி.ஆர். தன் தொழில் மீது மிகுந்த அக்கறை கொண்டது போலவே ,உலக நடப்பு, நாட்டின் நடப்புகள் ஆகியவற்றை அன்றாடம் ,அவ்வப்போது அறிந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்* என்பதை அறிந்த அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள் .ஏனென்றால் அந்த காலத்தில் செல்போன் வசதிகள் இல்லாத நேரம் என்பதுதான் .
ஒருநாள் எம்.ஜி.ஆர். நாத்திகம் பத்திரிகையில் பணிபுரிந்த நாராயணனிடம்*இன்றைக்கு மெயில் பத்திரிகை பாத்தீர்களா என்று கேட்டார் .மெயில் பத்திரிகை மாலை தினசரியாக அண்ணா சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தது .மெயில் பத்திரிகை வாங்கி முதல் பக்கத்தில் 8 வது பத்தியில் பாருங்கள் . படித்துவிட்டு என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றார் . அப்போதுதான் தெரிகிறது .மேற்கு வங்காளத்தின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே ,ஊழல் அமைச்சர்களை தூக்கிலிட வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் .**அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் கணக்குகளை* ஊழல்களை தட்டி கேட்டு* போராட்டம் நடத்திக்**கொண்டிருந்த நேரம் .நாராயணனிடம் இந்த செய்தியை உங்கள் பத்திரிகையில் முதல் பக்கத்தில் போடுங்கள்* நான் ஒரு பேட்டி அளிக்கிறேன் ,அதை உள்பக்கத்தில் போடுங்கள் என்றார் .பத்திரிகைகளில் எது தலைப்பு செய்தியாக வர வேண்டும் . எப்படி வரவேண்டும் ,எந்த நேரத்தில், எந்த பக்கத்தில் வரவேண்டும் என்கிற நுட்பங்கள் அறிந்தவர் எம்.ஜி.ஆர்.*
பத்திரிகை துறையில் இப்போது போல அட்வான்ஸான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நேரம் ..அந்த நேரத்தில் பிரின்டிங் பிளாக்கை மாற்றி வைத்துவிட்டனர் .எம்.ஜி.ஆர்.வழக்கமாக* எப்போதும் வலதுகையில் கடிகாரம் கட்டுவார் . ஆனால் இதில் இடது கரத்தில் உள்ளது போலுள்ளது .அதை கண்டுபிடித்து பத்திரிகை ஆசியரை தொடர்பு கொண்டு இப்படியெல்லாம் பிரசுரம் செய்யக்கூடாது என்று*கேட்டுக் கொண்டாராம் . இப்படி எந்த விஷயத்திலும் நுட்பத்தை கடைபிடிப்பவராக இருந்துள்ளார் எம்.ஜி.ஆர்.*
ஆரம்ப காலத்தில் வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி,வெள்ளை பனியன் ஆகியவைதான் அணிந்து வந்தார் .இரண்டுசெட் வைத்திருந்தார் .அவற்றை தினசரி தானே இரவில் துவைத்து ,காயவைத்து* அதிகாலையில் எழுந்ததும்*இஸ்திரி போட்டு அணிவாராம் . குறைந்த அளவில் துணிகள் இருந்ததால் ஆரம்பத்தில் சற்று நீல நிறமாக இருந்தவை ,தொடர்ந்து துவைத்து அணிவதால் லேசான வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆகிவிட்டன .* அந்த காலத்தில் சில ரூட்டுகளில் , ரோடுகளில் டிராம் வண்டிகள் செல்லும் . அந்த டிராம் வண்டி புறப்பட்டதும் ,இந்த கால இளைஞர்களை போல அப்படியே தாவி குதித்து ஏறுவாராம் .* பார்ப்பதற்கு, தோற்றத்தில் பெரிய வசதியான, பணக்கார வீட்டு பிள்ளை போல இருப்பாராம் . தினசரி செலவிற்கு தன் தாயார் கொடுத்த இரண்டணாதான் வைத்திருப்பாராம் . அவருடைய தோற்றத்திற்கும், உடைகளுக்கும் சம்பந்தமே இருக்காதாம் .அப்படி ஒரு ஏழ்மையில் இருந்ததை*பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் .
ஒரு திருமணத்திற்கு அழைப்பு வருகிறது . எம்.ஜி.ஆர். செல்கிறார் . ஆயிரக்கணக்கில் கூட்டம் சேருகிறது .பட்டு வேட்டி, பட்டு ஜிப்பாவுடன் நடிகர் பி.யு.சின்னப்பா வருகிறார் .அவரை காணவும், அவரது பாடல்களை கேட்கவும் கூட்டம் சேருகிறது .* அவர் பாடல்களை பாடப்பாட கைதட்டி ரசிக்கிறார்கள் .எம்.ஜி.ஆரால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது .அப்போது யோசனை செய்கிறார் . நமக்கும் இதுபோல கூட்டம் சேருமா .நம்மை அங்கீகரிப்பார்களா*என்று . இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வரும் காலம் எப்போது என்று ஏங்கிய காலம் .* ஆக.ஒரே நாளில் எம்.ஜி.ஆர். சிகரத்தை அடைந்து கொடி கட்டி பற க்கவில்லை .கோட்டைக்கு வந்துவிடவில்லை. உயரமான இடத்திற்கு செல்லவில்லை . கிட்டத்தட்ட 14 படங்களில் சிறு வேடங்கள், துணை வேடங்கள்* சொன்னால்கூட தெரியாது. அந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்று*அவ்வளவு சிரமப்பட்ட* காலம் .அன்றைக்கு மிக பிரபலமாக இருந்த நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் சபாபதி படத்தில் கதாநாயகனாக நடித்தார் .* அவருக்காக தன் பெயரை எம்.ஜி.ராமச்சந்தர் என்று சுருக்கிக் கொண்டார்* பெயர் குழப்பம் வராமலிருக்க .* பிறகு சில நண்பர்களின் யோசனையின்படி அருமையான பெயரை ஏன் சுருக்கி கொண்டீர்கள் .உங்களுக்கு நல்ல எதிர்காலம்* இருக்கிறது*என்று சொன்னதன்* பிறகு எம்.ஜி..ராமச்சந்திரன் என்று பெயரை மாற்றிக்கொண்டார் . டி.ஆர். ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தபோது பெயர் குழப்பம் வந்துவிடுமோ என்று கவலைப்பட்ட எம்.ஜி.ஆர். சிகரத்தின் உச்சிக்கு சென்றபிறகு* எம்.ஜி.ஆருக்கு மாமனாராக, சரோஜாதேவியின் தந்தையாக குணச்சித்திர வேடத்தில் அதே டி.ஆர். ராமச்சந்திரன்* அன்பே வா படத்தில் நடித்தார் .** மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.புத்தம் புதிய புத்தகமே - அரச கட்டளை*
2.ஒன்று எங்கள் ஜாதியே ,ஒன்று எங்கள் நீதியே - பணக்கார குடும்பம்*
3.உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்*
4.எம்.ஜி.ஆர். - அசோகன் உரையாடல் - ரிக்ஷாக் காரன்*
5.எம்.ஜி.ஆர். - கெம்பைய்யா உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*
6.எம்.ஜி.ஆர்.-லதா - நாகேஷ் உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*
7.எம்.ஜி.ஆர். -தேங்காய் ஸ்ரீநிவாசன் - இன்றுபோல் என்றும் வாழ்க .
8.எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி உரையாடல் - அன்பே வா*
*
0
-
பிரான்சு எம் ஜி ஆர் விழாவுக்கு 2014 இல் பாரிஸ் வந்த அசோகன் மகனும் நடிகருமான வின்சென்ட் அசோகன் அருமையாக தலைவர் புகழ் போற்றி உரையாற்றினார் ! நேற்று இன்று நாளை படம் தங்கள் குடும்பத்துக்கு வெற்றி மட்டுமல்ல வருமானத்தையும் தந்தது என்றும் அசோகனுக்கும் தலைவருக்கு இருந்த நெருக்கமான நட்பையும் விளக்கி பேசினார் ! அந்த படம் எடுக்கும் போது தீயச் சக்திக்கும் - தலைவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படவே அந்த படத்தை முடிக்காமல் அப்படியே வாங்கி அழித்துவிடலாம் என்று அதிக தொகை பேசியுள்ளது கருணா ! ஆனாலும் அசோகன் மறுத்துவிட்டுள்ளார் ! பணப் பற்றாக்குறையில் நின்று இருந்த படத்தை தலைவர் பண உதவியால் முடித்து வெளியிட்டு வெற்றி பெற்ற மனிதராக அசோகன் நிமிர்ந்ததாக நன்றியுடன் வின்சென்ட் கூறினார் ! உண்மையிலேயே உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர்தான் நண்பர் வின்சென்ட் அசோகன் அவர்கள் ! இன்றும் நட்புடன் பேசுவார் ! நல்ல பதிவுக்கு வாழ்த்துகள் ! நன்றி ! .........
-
நெல்லை மாநகரில் முழுமையாக ஓடி வெள்ளி விழா கொண்டாடி 180 நாட்களை கடந்து மூன்று லட்சத்து 75 ஆயிரத்து வசூலாக கொடுத்து லட்சுமி திரையரங்கில் வெற்றி வாகை சூடிய காவியம் "உரிமைக் குரல்" ஆகும்........
பட்டுக்கோட்டை நகரில் அதிக வசூலைக் கொடுத்த திரைக்காவியம் பல ஆனாலும் முதலிடம் பெற்றது உரிமைக்குரல் திரைக்காவியம் ஆகும்.
தஞ்சைத் தரணியில் மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் திரைக்காவியம் அதிக வசூலைப் பெற்று முதலிடம் பெற்று 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்க முடியாத வெற்றியாகும்.
கும்பகோணம் நகரில் அதிக வசூலை உருவாக்கி வெற்றி கண்ட திரைக்காவியம் உரிமைக்குரல் இக்காவியத்தின் வசூல் 1978 வரை பேசப்பட்டது-
வேலூர் மாநகரில் அதிக வசூலை உருவாக்கி 100 நாட்களைக் கடந்து ஓடி 1978 வரை முதன்மை பெற்ற காவியம் இதயக்கனி திரைப்படம் ஆகும் 4 லட்சத்தை வசூலாக கொடுத்தது.
புதுச்சேரி நகரில் அதிக வசூலைப் பெற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உலகம் சுற்றும் வாலிபன் காவியத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படத்தாலும் முறியடிக்க முடியவில்லை.
நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் குறைந்த நாளில்*
83 நாட்களில் உரிமைக்குரல் பெற்ற வசூல் 2 லட்சத்திற்கு மேல் ஆகும். இத்திரைப்படத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்கப்படவில்லை..........
-
மக்கள் திலகத்தின் சாதனைகள் பல...... "ஏ" சென்டர்களில் கிட்டத்தட்ட 40 சென்டர்களில் 38 ஏரியாக்களில் புரட்சித் தலைவர் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி, நேற்று இன்று நாளை, பல்லாண்டு வாழ்க, மீனவ நண்பன் திரைப்படங்கள் வரிசையாக சாதனையைப் படைத்துள்ளது. நான்காவது ஐந்தாவது இடத்தில் தான் மற்ற நடிகர்களின் படங்கள் ஆகும்.
கடைசியாக 1977 வரை தமிழகத்தில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்கள் வரிசையில் முதலிடம் காண்பது உலகம் சுற்றும் வாலிபன்.*
2 கோடிக்கு மேல் வசூல்*
அடுத்து உரிமைக்குரல் ஒரு கோடியே 70 லட்சம் வசூல். மூன்றாவது இதயக்கனி திரைப்படம் ஒரு கோடியே 50 லட்சத்தை வசூலாக கொடுத்தது. நான்காவது மீனவ நண்பன் திரைப்படம் ஒரு கோடியே 35 லட்சத்தை வசூலாக கொடுத்தது.*
எல்லா திரைப்படங்களும் ஆறுமாத காலத்திலேயே வசூலை படைத்து உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நடிகர் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் தங்கப்பதக்கம் மட்டும் சென்னை சாந்தி திரையரங்கிலும், திருச்சியில் பிரபாத் திரையரங்கிலும் அதிக வசூலைப் பெற்றது. வேறு எந்த ஊரிலும் கிடையாது.**
மற்றும் " பி .சி." செண்டர்களில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை நகரில் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியம் குறைந்த நாளில் மிகப்பெரிய வசூலை அதாவது 23 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை கொடுத்து. அதன் பின்பு இரண்டாம் வெளியீட்டில் 7 லட்ச ரூபாயை வசூல் ஆக கொடுத்து மொத்தம்
30 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலைக் கொடுத்து திரைப்பட உலகில் மிகப்பெரிய சாதனையை சென்னை நகரில் தக்கவைத்து இக்காவியத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்கப்படவில்லை........(1978, 1979... உட்பட்ட தொடர்ந்து பல வருடங்களுக்கு புரட்சி தலைவர் வகுத்து அளித்த தியேட்டர்கள் புதிய அனுகூலமான சட்டங்கள் கருணையோடு தான் வெளியான படங்கள் சகாயங்கள் பெற்றது அனைவரும் அறிந்ததே).........
-
1977ஆம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட உலகின் சக்கரவர்த்தியாக இருந்து* ..-அரசியல் வானில் சக்கரவர்த்தியாக முதல்வராக வீற்றிருந்த புரட்சித்தலைவர் அவர்கள்...--திரையுலகில் பதித்த முறியடிக்காத சாதனைகளின் வெற்றிகள்.... வரலாறுகள்.
தென்னிந்திய வரலாற்றில் தனி ஒரு அரங்கில் அதிக வசூலை உருவாக்கிக் கொடுத்த திரைக்காவியம்*
உலகம் சுற்றும் வாலிபன்*
திரையரங்கு*
சென்னை தேவி பாரடைஸ்
182 நாட்கள் ஓடி 13 லட்சத்தை வசூலாக கொடுத்தது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.
மதுரை மாநகரில் மிகப்பெரிய சரித்திரத்தை வசூலைப் பெற்று தந்த காவியம் உரிமைக்குரல் திரைப்படம் 200 நாட்களில் 7 லட்சத்தை கடந்து முறியடிக்க முடியாத சாதனையாகும்.
கோவை மாநகரில் உரிமைக்குரல் 150 நாட்களில் கீதாலயா அரங்கில் ஏற்படுத்திய சாதனையை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்க முடியவில்லை.
ஈரோடு மாநகர் சரித்திரத்தில் உரிமைக்குரல் திரைக்காவியம் ராயல் திரையரங்கில் 155 நாட்கள் ஓடி 4 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து முறியடிக்க முடியாத சாதனையில் முதலிடம்.
நெல்லை மாநகரில் முழுமையாக ஓடி வெள்ளி விழா கொண்டாடி 180 நாட்களை கடந்து மூன்று லட்சத்து 75 ஆயிரத்து வசூலாக கொடுத்த கொடுத்து..... லட்சுமி திரையரங்கில் வெற்றி வாகை சூடிய காவியம் உரிமைக்குரல்..........
-
1977 ஆம் ஆண்டு வெளியான பொன்மனச் செம்மலின் புரட்சி காவியங்கள் இரண்டு*
மீனவ நண்பன் திரைப்படம்*
முதல் வெளியீட்டில் 38 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சென்னை மதுரை சேலம் நகரங்களில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. முதல் வெளியீட்டில் ஒரு கோடியை கடந்து வெற்றி நடை போட்டது.
இரண்டாவது*
இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம்*
42 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 26 திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகொண்டு முதல் வெளியீட்டில் மட்டும் 85 லட்சத்தை வசூலாக கொடுத்தது. சென்னையிலும், மதுரையிலும்*
100 நாட்கள் கண்டது. சேலத்தில் இரண்டு திரையரங்குகளிலும் தொடர்ந்து திரையிடப்பட்டு 100 நாட்களை வெற்றி கொண்டது.
நவரத்தினம் திரைக்காவியம் சென்னையில் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்பது லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை கொடுத்தது*
8 வாரங்களில் இந்த வசூலைக் கொடுத்த வெற்றிக் காவியம் நவரத்தினம். அதேபோல தமிழகத்தில் 44 திரையரங்குகளில் வெளிவந்து முதல் வெளியீட்டில்*
70 லட்சத்தை வசூலாக கொடுத்த காவியம் நவரத்தினம்.*
மதுரை திருச்சி சேலம் கோவை நகரங்களில் அதிகபட்ச வசூலை படைத்த திரை காவியம் ஆகும்-
நம்முடைய தலைவரின் திரை உலக சாதனைகள் இப்படி இருக்க........ அதே ஆண்டில் வெளியான இன்னொரு நடிகரின் திரைப்படங்கள் பல வெளிவந்தது. ஆனாலும் அத்திரைப்படங்கள் சில இடங்களில் மட்டும் நின்றது. சில ஊரில் 100 நாள் ஓட்டப்பட்டது.*
இந் நடிகரின் 5 படங்கள்*
தீபம், அவன் ஒரு சரித்திரம், இளைய தலைமுறை,*
நாம் பிறந்த மண்,*
அண்ணன் ஒரு கோயில்*
5 திரைப்படங்கள் வெளி வந்தது.*.........
-
இன்று "நாடோடி மன்னனி"ன் பிறந்த நாள். படம் வெளியான நாள் 1958 ஆக 22 . இன்றுடன் 62 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அதன்பிறகு இன்று வரை அதற்கு இணையான தரத்தில் படங்கள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். "நாடோடி மன்னன்" எம்ஜிஆர் பிக்சர்ஸாரின் சொந்த படம். ஆங்கில படத்துக்கு நிகராக எடுக்கப்பட்ட தமிழ் படம். க்ளைமாக்ஸ் காட்சியில் போடப்பட்ட செட் தமிழ்பட உலகுக்கு புதிதானது. எம்ஜிஆரை ஒரு மிகச்சிறந்த இயக்குநராக தமிழ் பட உலகுக்கு அறிமுக படுத்திய ஒப்பற்ற திரைக்காவியம்.
திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலம்தான். "மதுரை வீரனு"க்கு பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட வெற்றியை எம்ஜிஆருக்கு கொடுத்த படம். "முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு உதாரணமாக விளங்கிய படம். நாடோடி மன்னன் வெற்றி விழாவை நம்மில் பலர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறோம்.
1957 சட்டமன்ற தேர்தல் தான் திமுகவின் முதல் தேர்தல். அதற்கும் எம்ஜிஆரின் "தாய்க்குப்பின்தாரம்" படத்தின் காளை சண்டையை பிரதானப்படுத்தி கட்சியை பிரபலப்படுத்தினார்கள். அதன் பின்பு 1958 ல் வெளியான "நாடோடி மன்னன்" மூலமாக கட்சியை வேகமாக வளர்த்தார்கள். "மனேகரா","கட்டபொம்மன்", "பராசக்தி" போன்ற நாடக சினிமாக்கள் வெளிவந்த நேரத்தில் ஆங்கில படங்களுக்கு இணையான ஒரு தமிழ் சினிமாவை கண்டு உள்ளம் மகழ்ந்தார்கள்.
"நாடோடி மன்னன்" வெற்றி விழாவை ஊர்ஊருக்கு பிரமாண்ட விழாவாக்கி திமுக வை வளர்த்தார்கள். 10 திமுக மகாநாடு நடத்தி கட்சியை வளர்ப்பதை காட்டிலும் ஒரு "நாடோடி மன்னன்" வெற்றி விழா கட்சிக்கு பேரும் புகழும் தேடித்தந்தது. தமிழ் நாடெங்கும் "நாடோடி மன்னன்" விழாவை பற்றிதான் பேச்சு. வெகு எளிதில் திமுக வளர்வதற்கு "நாடோடி மன்னனி"ன் வெற்றி கை கொடுத்தது.
பத்திரிக்கைகளிலும் "நாடோடி மன்னன்" விழாவை முன்னிலை படுத்தினார்கள். அப்படி விழா கொண்டாடிய ஊர்களில் கோவை பிரதானமானது. தியேட்டரை அலங்கரித்து மிகப்பெரிய அளவில் விழாவை நடத்தி பரிசு வழங்கும் காட்சியை பார்க்க முடியாதவர்கள் இப்போது காணுங்கள் இந்த அரிய படத் தொகுப்பை.
மேலும் "நாடோடி மன்னன்" படத்தின் வெற்றி விழா படக்காட்சிகள் இரண்டாம் தொகுப்பு உங்கள் பார்வைக்கு..........
-
புரட்சித்தலைவரின் மாபெரும் சாதனை படங்களில் "நாடோடி மன்னன் "ஒன்றாகும்... அந்தப் படம் மிகப் பிரமாண்டமான அளவில் புரட்சித் தலைவர் தனது தகுதிக்கு மீறி படம் எடுத்தார் இடையிடையே நொந்து கண்ணீர் விட்டார் இந்தப்படம் எவ்வாறு வெளியிட போகிறேனோ தெரியவில்லை இது வெற்றி பெற்றாள் நான் மன்னன் இது தோல்வி அடைந்தால் நான் நாடோடி என்று அவர் கூறினார் கடவுளாகிய பரம்பொருளாகிய இறைவன் அவரை கைவிடவில்லை அவரை படைத்ததே தமிழக மக்களின் இதயத்தை ஆட்சி செய்வதற்காக தானே எப்படி இறைவன் கைவிடுவார் படம் வெளியாகி சக்கைபோடு போட்டது பிரம்மாண்டமான காட்சிகள் கொண்ட கொண்ட அந்தப்படம் ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளில் கட்டை வண்டி என்று கூறுவார்கள் மரத்தால் செய்யப்பட்ட சக்கரங்களைக் கொண்ட அந்த மாட்டு வண்டிகளில் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக திருவிழாவிற்கு செல்வதுபோல சென்று அந்த படத்தை பார்த்து மகிழ்ந்தார்கள் கிராமங்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் இதே பேச்சு அந்த படத்தின் காட்சிகள் மிக மிகப் பிரமாண்டமானவை நான் என் இளவயதில் அந்த படத்தை பல முறை பார்த்திருக்கிறேன் டிக்கெட் எடுப்பதற்காக நடந்த போட்டியில் என் சட்டை எல்லாம் கிழிந்து போனது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது வாழ்க புரட்சித் தலைவர் புரட்சித்தலைவர் உயிரற்ற உடலாக மண்ணுக்குள் மறையவில்லை மக்களின் மனதில் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார் அவருடைய நினைவுகள் பசுமையானவை.........
-
"இதயக்கனி" ஆமாம், நம் "இதயக்கனி" நடித்த "இதயக்கனி"க்கு இன்று 45 வது பிறந்த நாள். 1975 ஆக 22 ம் தேதி வெளிவந்து வியத்தகு சாதனைகள் செய்த புரட்சித் தலைவரின் மாபெரும் வெற்றிப் படம். அந்த ஆண்டு வெளியான படங்களில் 10 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம்.
100 நாட்கள் வசூலில் "உலகம் சுற்றும் வாலிபனை" தாண்டிய படம். ஆண்டுக்கு ஆண்டு அவர் சாதனைகளை அவரே தாண்டி உச்சபட்ச சாதனையை உருவாக்கிய படம். இதன்பிறகு வந்த படங்களை காட்டிலும் அதிக வசூலை பெற்று
இதுதான் இமாலய வெற்றி என்று உலகுக்கு பறை சாற்றிய
செம்மலின் இதயக்கனி பிறந்த நாளை வரவேற்போம். மேலும் வசூல் விபரங்களை மற்றொரு பதிவில் பார்ப்போம்..........
-
வாகை சூடு!!
------------------
எம்.ஜி.ஆரை விட பாராட்டத் தக்கவர் யாரெனில்-
எம்.ஜி.ஆர் ரசிகன்!
நீ போதித்தக் கொள்கைகளையும் குணாதிசயங்களையும் உனக்கேக் கற்றுத் தரும் அளவுக்குக் கொண்டுள்ளேன் என்று உலகில் ஒரு ரசிகன் முழங்குவார் ஆயின்-
அவர் எம்.ஜி.ஆர் ரசிகனாக மட்டும் தான் இருக்க முடியும்!
எம்.ஜி.ஆர் ரசிகருக்கென்று தனிப்பட்ட பழக்கம் ஒன்று உண்டு
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு மட்டுமே தாம் எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்க நேர்வதில் ஒரு கர்வமே உண்டு!
ஒருவருக்கு ரசிகராக இருக்க தகுதி ஏதும் தேவையில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருக்கக் கண்டிப்பாக சில தகுதிகள் தேவை என்று புதிய இலக்கணம் வகுத்து,,அதில் பொருதியும் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமே!!
அந்த வகையில்-- அந்த விதத்தில்-
எம்.ஜி.ஆர் ரசிகர்களின் திலகமாக மிளிர்பவர் எனக்குத் தெரிந்து ஹயாத் பாஷா என்னும் ஹயாத்!
இவரது எம்.ஜி.ஆர் பக்திக்கான அங்கீகாரம் இவரைத் தேடி வந்திருக்கிறது என்பதே இன்றையப் பதிவின் சாரம்!
சிரஞ்சீவி அனீஸ்!
எம்.ஜி.ஆரை இதயத்தில் வைத்துள்ள இளவல்களில் ஒருவர். பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்!
முக நூலில் எம்.ஜி.ஆர் புகழ் பாடுபவர்!
இவர் எம்.ஜி.ஆருக்கு என்று தமிழ் மலர் என்னும், யூ டியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்!
இரவு பகல் எப்பொழுதும்
எம்.ஜி.ஆர் அஞ்சல் சேர்ந்திடும்!!
அந்த வகையில் 24 மணி நேர எம்.ஜி.ஆர் சேனலே சிரஞ்சீவி அனீஸின் தமிழ் மலர் சேனல்!
எம்.ஜி.ஆரின் சிறப்புக்களைப் பகிர்ந்தால் மட்டும் போதுமா?? சிறப்பாகப் பகிர வேண்டாமா என்ற சித்தாந்தம் கொண்ட ஹயாத்தின் எம்.ஜி.ஆர்ப் பற்றிய பதிவுகள் தமிழ் மலர் யூ டியூப்பில் இடம் பெறத் துவங்கியுள்ளன!
ஹயாத் என்னும் விளக்கின், திறமை என்னும் திரியை ,,இழுத்துவிட்டு -அவரது எம்.ஜி.ஆர்ப் பதிவு -என்னும் வெளிச்சத்தைத் தம் சேனலில் எரியச் செய்திருக்கிறது சிரஞ்சீவி அனீஸின் ஊக்கம் என்னும் கரம்!
இயல்பிலேயே கவிஞரான ஹயாத்தின் பதிவு நேர்த்தி நம்மைப் பிரமிப்படையச் செய்யும் ஒன்றாக இருந்தாலும்-
உலகிலேயே சிறந்த நடிகர் எம்.ஜி.ஆர் என்னும் இவரது வர்ணனைப் பதிவு நம்மை வாய் பிளக்க வைக்கிறது!
சிரித்து வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் திரைப்படத்தைக் குறித்தும்,,அந்தக் காலக் கட்டத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பின் பின்னணியில் இருந்த சூழல்கள் குறித்தும் இவர் விளக்கியிருப்பதை ஒவ்வொரு எம்.ஜி.ஆர் ரசிகரும் உள் வாங்க வேண்டிய உளவியல் நூலாகவே நமக்குப் படுகிறது!
வான் மழை போல் பிரச்சனைகள்--
ராணுவத்தையே சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்ட கருணா நிதியின் களங்கமுள்ள தாக்குதல்கள்--
உயிரைக் குறி பார்த்து கருணா ஏவி விட்டக் கொலை முயற்சிகள்--
புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தல்--இப்படி அன்று எம்.ஜி.ஆர் சந்தித்தப் பிரச்சனைகள் ஒன்றா இரண்டா?? இவை எல்லாவற்றையும் அடவி அவர் ஒருமுகமாக நடித்தப் பாங்கை இதில் சகோதரர் ஹயாத் மிக நுணுக்கமாகவும்,,மிக எளிமை எனும் அணுக்கமாகவும் ஆராதித்திருக்கிறார்!
சிரஞ்சீவி அனீஸின் இந்தப் பணி மிகவும் போற்றத் தகுந்தது!
தமிழ் மலர் யூ டியூப் சேனலுக்கு நாம் தராத ஊக்கத்தை வேறு எவரால் தர இயலும் என்ற வகையில் நம் ஒத்துழைப்பை நல்க வேண்டியக் கடமையை உணர்த்தும் அதே நேரத்தில்--
ஹயாத் என்னும்--
நம்மில் ஒருவருக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்புக்காக அவருக்கு வாழ்த்து மழைப் பெய்வோமே!
ஹயாத்--
வா! கைக் கொடு!
வாகை சூடு!!!.........
-
#கேள்வி : ஊழலற்ற அரசாங்கத்தை எப்படி நீங்கள் நிறுவ முடியும் ? உங்கள் திட்டம் என்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : எந்தப் பதவிக்கு யாரை நியமிக்கும் முன்னும் அவர்களது விவகாரங்களை ஆராய ஒரு பாரபட்சமற்ற கமிஷனை நிறுவுவோம். அது ஒரு நீதிபதியின் தலைமையில் இயங்கும். அவர்கள் மீது எந்த குற்றங்களும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின் அவர்கள் பதவியல் நியமிக்கப்படுவார்கள். குற்றவாளி என சந்தேகம் இருக்குமானால் வழக்கு நீதிமன்றம் செல்லும். குறிப்பிட்ட மனிதர் குற்றவாளியானால் பதவியேற்புக்கு பதில் , சிறை செல்ல நேரும். அதேபோல் அமைச்சரோ, மற்ற தேர்ந்தெடுத்த உறுப்பினர்களோ தங்கள் வேலையை சரியாக செய்யாதபோது மக்களுக்கு அவர்களை நீக்கும் உரிமை இருக்க வேண்டும் என திட்டம் வகுத்திருக்கிறோம். மக்கள் வரிப்பணத்தை பொதுப் பணத்தை சூறையாடும் கொடுமை இனியும் நடக்க அனுமதிக்க முடியாது. இது நிறுத்தப்பட வேண்டும் உடனடியாக நாட்டில் நல்ல அரசு உருவாக வேண்டும்.
- அண்ணா நாளிதழ் 5 - 12 - 1976
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க .........
-
புர*ட்சித்த*லைவ*ரைப்ப*ற்றி அவ*ர் வாழ்ந்த* கால*த்திலும் அத*ற்குப்பின்னும் அவ*ரைப்ப*ற்றி ஆயிர*க்க*ண*க்கான
புத்த*க*ங்க*ள் வெளிவ*ந்துள்ளன. இன்ன*மும் வ*ந்துகொண்டிருக்கின்ற*ன*..அவ*ற்றின் ஒரு சிறு தொகுப்பே இது..விடுப*ட்ட* அல்ல*து இதில் குறிப்பிட*ப்ப*டாத* நூல்க*ளை க*மெண்ட்டுக*ளில் தெரிவியுங்க*ள்.. இது ஒரு ப*கிர*ப்ப*ட்ட ப*திவு..
புர*ட்சித்த*லைவ*ர் பார*த*ர*த்னா டாக்ட*ர் எம்.ஜி.ஆர் அவ*ர்க*ள் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கு அவரைப் பற்றி வெளியான அரிய நூல்களின் ப*ட்டிய*ல்க*ளில் சில் இதோ..
எம்.ஜி. ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன,
முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))
அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))
சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))
சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))
எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016
எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007
நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009
எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987
எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011
விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009
காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004
எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 -
செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985
8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 -
எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010
எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 -
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011
மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –
எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013
எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016
எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008
எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015
பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்
நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 -
வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011 - No preview -
எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000
வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009
எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, Es Rajat - 2007 –
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்
ஆங்கில நூல்கள் (English Books)
Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))
On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.
Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.
Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.
முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்
வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))
தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))
ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))
தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)
எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
இதயதெய்வம் எம்.ஜி.ஆர் in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
சி.எம். Speech's
தொகுப்பு - மல்லிகா பிரபாகரன்.........
-
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்காகப் பாடி வெளிவந்த பாடல் ஆயிரம் நிலவே வா என தொடங்கும் பாடல். பதிவு அன்று spb அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக ஒலிப்பதிவு ரத்தாகிவிட்டது. வேறு யாரையாவது பாட வைக்கலாம் என்று சொன்னபோது mgr மறுத்துவிட்டாராம்.
"புதுப் பையன் mgr படத்தில் பாடப் போகிறேன் என்று எல்லோரிடமும் பெருமையாக சொல்லி இருப்பார். இப்போது பாட முடியாமல் போய்விட்டால் மிகுந்த ஏமாற்றம் ஆகிவிடும். பிறகு ராசி இல்லாதவன் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அவர் குணமாகி வந்து பாடட்டும்." என்று கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.
பின்னர் உடல்நிலை சரியான பின் பாடினார் எஸ்.பி.பி.
அடுத்தவரின் வாழ்க்கை வரலாற்றிலும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பதுதான் எம்.ஜி.ஆரின் பெருமை....
🌟🌟🌟🌟🌟🌟.........
-
டி.எஸ்.பாலையா....
தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.
இவர் இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங்களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.
இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி மறைந்தார்....
ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த 'மோகினி' படத்தில் எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாவும் இரண்டு நாயகர்களாக இணைந்து நடித்தார்கள். இதில்முதல் நாயகன் அதாவது படத்தின் கதாநாயகன் யார்? என்ற பிரச்சனை வந்தபோது டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். கதாநாயகனாக இருக்கட்டும் நான்துணை நாயகனாக இருக்கிறேன் என்று விட்டுக் கொடுத்தார்.
அந்த நன்றிக்காக எம்.ஜி.ஆர். ஒரு படத்தையே விட்டுக் கொடுத்தார். 'கற்பகம்' படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எம்ஜிஆரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர், கதையில் வரும் மாமனார் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடிப்பதாயிருந்தால் நான் நடித்து தருகிறேன் என்றார். ஆனால் கதைக்கு எஸ்.வி.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்றார் டைரக்டர். கே.எஸ்.ஜி. அப்படியானால் வேறு யாரையாவது நடிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் ஜெமினி நடித்தார்.
எம்.ஜி.ஆர்.நடித்த 'ராஜகுமாரி', 'மதுரைவீரன்', 'அந்தமான் கைதி', 'தாய்க்குப்பின் தாரம்', 'புதுமைப்பித்தன்', 'பாக்தாத் திருடன்', 'ராஜா தேசிங்கு', 'பணம் படைத்தவன்', 'பெற்றால்தான் பிள்ளையா' போனற் படங்களில் சிறப்பாக நடித்தார் பாலையா..........
-
1958 ஆம் ஆண்டு வெளியான புரட்சி நடிகர் எம். ஜி. ஆர்., அவர்களின் தயாரிப்பில் இயக்கத்தில் இரு வேட பவனியில் உருவாகி தென்னக மெங்கும் மட்டுமல்லாது.... உலகமெங்கும் திரையிடப்பட்ட முதல் வெற்றி காவியமாக திகழ்ந்தது...*
"நாடோடி மன்னன்" திரை(பட)க்காவியம்.
22 .08 .1958 ல் இத்திரைக்காவியம் வெளியாகி இன்றுடன் 62 ஆண்டுகள் (22.08.2020) நிறைவு பெறுகிறது, வெற்றிகரமாக 63 ம் வருடம் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 62 ஆண்டு காலத்தில் ஒரு திரைப்படம் இன்றும் ஒரு மகத்தான வசூலை படைத்துக் கொண்டிருக்கிறது வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்றால்.....
பெரும் சாதனையாகும்.
*
1931 ஆம் ஆண்டில் இருந்து இன்று (2020 ஆம் ஆண்டு) மார்ச் வரை வெளியான திரைப்படங்களிலேயே அதிகப்படியான வெளியீடுகளில் அதிகப்படியான நாட்கள் வாரங்களைக் கடந்து பல கோடிக்கணக்கான வசூலை பெற்றுத் தந்த காவியம்*
நாடோடி மன்னன் மட்டுமே.
நாடோடி மன்னன் திரைக்காவியத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் 2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது. கிட்டத்தட்ட அதிகப்படியான நட்சத்திரங்கள் கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
16 .08 .2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை ஹாலில் அனைத்து புரட்சித்தலைவரின் அமைப்புகள் எல்லாம் ஒன்று கூடி மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பான முறையில் நடைபெற்ற நாடோடி மன்னன் திரைப்படத்தில் 50 வது பொன்விழா ஆண்டு மட்டுமல்லாது..... அதே சமயம் 1947 ஆம் ஆண்டு முதல1960* ஆண்டு வெளியான திரைப்படங்கள் அனைத்திற்கும் பொன்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.*
சிறப்பு திரைப்பட கண்காட்சி நடைபெற்றது. காலையில் கிட்டத்தட்ட ஒரு 300 எம்ஜிஆர் பக்தர்கள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது..........
-
புரட்சித்தலைவரின் 50 ஆண்டுகால திரைப்படங்களை போற்றும் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது.
விழாவில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமை தாங்க*
நாகை தருமன் அய்யா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவ்விழாவில் கலந்து கொண்ட திரைப்பட கலைஞர்கள்**
பி.எஸ். சரோஜா அவர்கள், ராஜசுலோச்சனா அவர்கள், வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள், ராஜஸ்ரீ அவர்கள்,
சச்சு அவர்கள, கவிஞர்கள் முத்துலிங்கம் அவர்கள்,.பூவை செங்குட்டுவன் அவர்கள், மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கவிஞர் பிறைசூடன் அவர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் இயக்குனர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அருமையான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.*
இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் தலைநகர் சென்னையில் நடத்திய பெருமை நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழை சாரும்.
இதற்கு நாடோடி மன்னன் திரைக்காவியம் 2006ம் ஆண்டு சென்னையில் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பாரத் திரையரங்கில் ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு லட்சத்து 85 ஆயிரத்தை வசூலாக கொடுத்து.... தொடர்ந்து சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் மூன்று வாரங்கள் ஓடி அங்கும் நாடோடி மன்னன் திரைப்படத்தி 48வது ஆண்டு விழா அரங்கேறியது.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நாடோடி மன்னன் திரைக்காவியத்தின் அறுபதாவது ஆண்டு வைர விழா சீரும் சிறப்புமாக ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கலைஞர்கள் பங்கு கொண்ட இந்நிகழ்ச்சி ஒரு வெற்றித் திருவிழாவாக திகழ்ந்தது.
அதே 2018 ஆம் ஆண்டு சென்னை ஆல்பட் திரையரங்கில் 35 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் படைத்தது நாடோடி மன்னன் திரைக்காவியம். அத்திரைப்படத்தின் 25-வது நாள் விழா பல அமைப்புகள் சார்பில்* நடந்தது..........
-
புரட்சித்தலைவரின் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நாடோடி மன்னன் திரைக்காவியம் ஒவ்வொரு வெளியீடுகள் எண்ணிலடங்காதது. ஒவ்வொரு வெளியீட்டிலும் பல வாரங்கள் பல நாட்கள் ஓடிய ஒரே காவியம்
நாடோடி மன்னன் மட்டுமே என்பது இன்றுவரை சாதனையாகும்.*
கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் நாடோடி மன்னன் ஓடியது போல் எந்த திரைப்படமும் இதுவரை ஓடி சரித்திரம் படைத்தது கிடையாது. நாடோடி மன்னன் காவியத்தின் 62 வது ஆண்டு ஆண்டை நிறைவு செய்து 63 வது ஆண்டை நோக்கி நிரந்தர வெற்றியுடன் 2021 ம்ஆண்டிலும் சாதனை படைக்கட்டும்.
தொடரும் பதிவுகள்.............
-
மக்கள் திலகத்தின் மகத்தான வெளியீடு ! 1975 ஆம் ஆண்டு வெளியான "இதயக்கனி" திரைக்காவியம் "ரிக்க்ஷாக்காரன்" மாபெரும் வெற்றிக்குப் பின் வெளிவந்த சத்யா மூவிஸின் 2 வது வண்ணக்காவியம்.*
இதயக்கனி காவியம் வெளிவந்து 45 வருடங்கள் நிறைவு பெறுகிறது. வெற்றிகரமாக 46 ம் ஆண்டு துவங்குகிறது...
இதயக்கனி திரைக் காவியத்தின் சில சிறப்புக்கள் இங்கே குறிப்பிடப்படுகிறது.*
மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 காட்சிகள் அரங்கு நிறைந்து*
5 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலைக் கொடுத்து. தொடர்ந்து மற்ற திரையரங்கில் வெளியிடப்பட்டு 213 நாட்கள் ஓடிய வெற்றிக் காவியம் இதயக்கனி ஆகும்.
மதுரை மாநகரில் சாதனை என்று தம்பட்டம் அடித்த அனைத்து படங்களையும் குறுகிய நாட்களில் முறியடித்த காவியம் இதயக்கனி திரைப்படம். நடிகர் கணேசனின் பட்டிக்காடா பட்டணமா அதிக வசூல் படமாகத் திகழ்ந்தது அத்திரைப்படத்தின் வசூலை தொடர் ஒட்டத்தில் முறியடித்து வெற்றி கண்டது.*
இதயக்கனி திரைக்காவியம் நகரில் தொடர்ந்து ஓடி 7 லட்சத்தை வசூல் பெற்ற மூன்றாவது காவியம். இதயக்கனி ,உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் இதயக்கனி மூன்று திரைப்படங்களும் தொடர் வெளியீட்டில் மகத்தான சாதனை..........
-
வேலூர்* கிருஷ்ணா அரங்கில் 100 நாட்கள் கடந்து.... நகரில் அதிக வசூல் பெற்ற திரைக்காவியம் ஆக இதயக்கனி திரைக்காவியம் 1978 ஆம் ஆண்டு வரை திகழ்ந்தது.
நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் மகத்தான சாதனை புரிந்த வெற்றித் திரைப்படமாக நூறு நாட்களை கடந்து ஓடிய மூன்றாவது திரைப்படமாக இதயக்கனி திகழ்ந்தது.*
அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி...... சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் திலகத்தின் சாதனையாகும்.
அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த இதயக்கனி திரைப்படத்தின் வரலாறு சென்னையிலும் மகத்தான வெற்றி படைத்தது.*
நான்கு திரையரங்குகளில் வெளிவந்து கிட்டத்தட்ட*
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்கு* அடுத்தாற்போல் 20 லட்சத்தை வசூல் நெருங்கியது.
முதல் வெளியீட்டில்**
44 திரையரங்குகளில் வெளிவந்து 38 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து மற்றும் பெங்களூர் மைசூர் சித்தூர் இலங்கை மாநகரிலும் ஒடியது. அதிகமான திரையரங்குகளில்*
50 நாட்களை கடந்து வீர சாதனைகள்* புரிந்தது இதயக்கனி திரைக்காவியம்..........( இயக்குனர்/ தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசன் மிகவும் ஆச்சரியமாக, அபூர்வமாக இப்படத்தின் அப்படியொரு வெற்றியை நிறைவாக சிலாகித்து புகழ்ந்து இப்பட வெற்றி விழாவில் பேசியது அனைவரையும் கவனிக்க வைத்தது...குறிப்பிடத்தக்கது அல்லவா...)
-
இதயக்கனி திரைக்காவியம் நடிகர்* கணேசனின் 13 படங்களை முறியடித்தது.முடித்து ஒரு கோடியே 30* லட்சத்தை ஆறு மாத காலத்தில் தந்தது. ஆனால் அந்நடிகரின் 13 படங்கள் தோல்வி அடைந்தது.
தலைநகர் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் அதிகமான திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய திரைக்காவியம் ஆக*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைகுரல், இதயக்கனி*
திகழ்ந்தது.
இதற்குப் பிறகு எந்தப் படமும்*
1978 ஆம் ஆண்டு வரை 10 திரையரங்குகளில் 100 நாட்கள் நெருங்கவில்லை.... முடியவில்லை.
இதயக்கனி பல வெளியீடுகளில் சாதனை படைத்து இருந்தாலும் சென்னையில் 1988 ஆம் ஆண்டு இக்காவியம் ஈகா திரையரங்கில்*
14 நாட்கள் ஓடி 16 ஹவுஸ்புல் காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு லட்சத்து 46 ஆயிரத்து வசூலைக் கொடுத்தது.
அதேபோல் சென்னை சித்ரா திரையரங்கில் அகன்ற திரையில் முதன்முதலாக வெளியிடப்பட்டு*
4 காட்சிகள் திரையிடப்பட்டு இதயக்கனி திரைக்காவியம்*
ஒரே வாரத்தில் 28 காட்சிகளில்*
82 ஆயிரம்* ரூபாயை வசூலாக கொடுத்து 12 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
7 மாத இடைவெளியில் மீண்டும் பிளாசா திரையரங்கில் இதயக்கனி திரையிடப்பட்டு அங்கு 56 ஆயிரத்தை வசூலாக கொடுத்து 7 காட்சிகள் அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது..........
-
1991 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாஸ்கோப்பில் சென்னை நகரில் திரையிடப்பட்ட காவியம் இதயக்கனி ஆகும். அலங்கார் திரையரங்கில் ஒரு வாரம் இருபத்தொரு காட்சிகளில் 8 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வசூலாக கொடுத்தது. அதுமட்டுமல்லாது அதே வாரத்தில் சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நேற்று இன்று நாளை திரைக்காவியம்*
ஏழு நாட்கள் ஓடி 73 ஆயிரத்தை வசூலாக கொடுத்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை இதயக்கணி திரைக்காவியம் செய்துள்ளது.*
பல வரலாறுகள் உள்ளது. இக்காவியம் நேற்றுடன் 45 ஆண்டுகள் நிறைவு பெற்று 46 வது ஆண்டில் அதாவது 2021 ஆம் ஆண்டில் மீண்டும் வெள்ளித்திரையில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பது திண்ணமாகும்.
தொடரும் பதிவுகள்.............
-
#கேள்வி : அரசியல்வாதிகள் திருந்த ஒரு வழி சொல்லுங்கள் ?
#புரட்சித்தலைவரின் #பதில் : பிறரைத் திருத்துவதற்கு தான் அரசியல்வாதிகள். ஆனால், ஒரு சிலர் திருத்தப்பட வேண்டியவர்களாக தான் இருக்கிறார்கள் , அதனால் தான் நாட்டில் இத்தனை குழப்பங்களும் ! என்ன செய்ய ?
#கேள்வி : உங்களிடம் உள்ள நல்ல குணம் என்ன ? கெட்ட குணம் என்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : தெரியாது
#கேள்வி : தங்களைப் பற்றி இதுவரை திட்டி பேசாத ஒருவர் திட்டி பேசிவிட்டால் அவரைப் பற்றி தாங்கள் என்ன நினைப்பீர்கள் ?
#புரட்சித்தலைவரின் #பதில் : முதலில் என்னிடம் என்ன குறை புதிதாக உண்டாயிற்று என்று பார்ப்பேன். பிறகுதான் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று பார்ப்பேன். பிறகுதான் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று சிந்திப்பேன்.
#கேள்வி : ஜப்பானில் உள்ள ரசிகர்கள் நம்மை போல நேரத்தை வீணாக்குவது இல்லையே. அதுபோல தாங்களும் தங்கள் ரசிகர்களை கேட்டுக் கொள்வீர்களா ?
#புரட்சித்தலைவரின் #பதில் : உங்களுடைய அறியாமைக்கு அனுதாபப் படுகிறேன். அங்குள்ள பல ரசிகர்கள், நாம் ( தமிழர்கள் ) பார்க்கவே விரும்பாத , விரசமான படங்களையெல்லாம் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
#கேள்வி : வாழ்க்கையில் ஆரம்ப நிலையில் இருந்து துன்பப்பட்டு வரும் ஒருவர் மேலும் பல துன்பங்களை சமாளித்து வருகின்றார். இன்பம் என்பதன் தன்மையைப் பற்றி அறியாத அந்த மனிதரைப் பற்றி தங்கள் கருத்தென்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டும் தளராது தன் வழியில் முன்னேறிச் செல்ல முயலும் துணிவுமிக்க ஒரு நல்ல குடிமகன்.
#கேள்வி : ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதை காப்பி அடித்து நடித்து நம் நாட்டில் நடிப்பில் திலகம் என்று மக்களை நம்பும்படி செய்து வாழ்வது பொருந்துமா ? இயற்கையாக ஏன் பேசி நடித்து பெயர் வாங்க கூடாது ? இதற்கு தங்கள் விளக்கம் என்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : ஒவ்வொரு நடிகரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எந்த பாணியையும் கையாளலாம். ஆனால் முக அமைப்பு , குரல், உருவம் இவைகளுக்கு ஏற்ப நடித்தால்தான் அந்த நடிப்பு சோபிக்கும். யாருடைய நடிப்பாவது அப்படி சோபிக்கிறது என்றால் , இவை அத்தனையும் பொருந்தி இருக்கின்றன என்று பொருள். ஆகவே ஆங்கில பாணியா , சொந்த பாணியா என்ற பிரச்சினைக்கு அப்போது இடம் இல்லை என்றாகி விடுகிறது. மேலும் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப, பிறர் மனதில் பதியும் படியாக நடித்து விட்டால் அந்தப் பாத்திரத்தின் முழுமை உருவாக்கப்பட்டு விட்டது என்றே கொள்ள வேண்டும். அப்படியானால் அது எந்த பாணியானால் என்ன ?
#கேள்வி : உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன் உங்களுடைய சம்மதம் தேவை ?
#புரட்சித்தலைவரின் #பதில் : எனக்கு வாரிசாக வர விரும்புகிறவர்கள் என் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. என் லட்சியத்தை பின்பற்றுகிற அனைவருமே என் வாரிசுகள்தான்.
#கேள்வி : கலை உலகில் நீங்கள் யாரை பின்பற்றி நடக்கிறீர்கள் ?
#புரட்சித்தலைவரின் #பதில் : சில வழிகளில் கலைவாணரை.
#கேள்வி : கூட்டுறவு முறையில் படம் தயாரிப்பது சாத்தியமாகாது என சிலர் கருதுகிறார்கள். தாங்கள் அவர்களுக்கு கூறும் பதில் என்ன ?
#புரட்சித்தலைவரின் #பதில் : ஏழையாகப் பிறந்து ஒருவர் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்று சொல்லி, ஏழையாகவே இருக்க செய்தது இந்த நாட்டில்தான். ஏழையை கவனிக்கவில்லை என்றால் நாட்டில் புரட்சி செய்து நிலைமையை சீர்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுவதும் இந்த நாட்டில்தான்.
நடக்காதது எதுவும் இல்லை. நடத்துவதில் ஒழுங்குமுறை வேண்டும். சந்தேகத்தை நீக்கிவிட்டு தெளிவுடன் செயல்படும் மனப்பான்மை வேண்டும்
- நாடோடி மன்னன் ஜனவரி 1976
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
#பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் #Dr_எம்ஜிஆர் ப*க்த*ர்க*ளின் அன்பு வேண்டுகோள்...
#கோடிக்க*ணக்கில் சொத்துக்க*ள் வைத்துள்ள அண்ணா திமுக*வோ அல்ல*து அமைச்ச*ர்க*ளோ அல்ல*து எம்ஜிஆரின் கோடீஸ்வ*ர* விசுவாசிக*ளோ மனம் வைத்தால் அவ*ர*து ப*ல ப*ழைய க*ருப்பு வெள்ளைப் ப*ட*ங்க*ளை முறைப்ப*டி உரிமை பெற்று க*லரில் வெளியிட* முடியும். அல்லது வினியோக*ஸ்த*ர்க*ளுக்கு நிதியுத*வி செய்து ப*ங்குதார*ர்க*ளாக ஆக*லாம். #மன*து_வைப்பார்க*ளா?...
#ஒன்றுக்கு நூறு மட*ங்கு ப*லன் அளிப்ப*வை Dr.எம்ஜிஆரின் பொக்கிஷ*க் காவிய*ங்க*ள்...
01. நாடோடி மன்ன*ன் (முழுவ*தும் க*ல*ரில்)
02.நாடோடி
03.காவ*ல்கார*ன்
04.க*லங்க*ரை விளக்கம்
05.குலேப*காவ*லி
06.மதுரை வீர*ன் ஆகிய ப*ட*ங்க*ளை முத*ல் முய*ற்சியாக செய்ய*லாம்...
#நாகேஸ்வ*ர*ராவ், என்.டி.ஆர் சாவித்திரி ந*டித்த மாயாப*ஜார் தெலுங்கு, த*மிழ் ட*ப்பிங்கில் அழ*கு வ*ண்ண*த்தில் வ*ந்தே விட்ட*து...
#ஹிந்தியிலும் சில ப*ட*ங்க*ள் க*ல*ராக்கி வெளியிட்டுள்ளன*ர். த*மிழில் இதுவ*ரையில்லை. த*லைவ*ரின் ப*ட*மே துவ*க்க*மாக இருக்கட்டும்!!............
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*(02/08/20 ) அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாமரர்களின் ,படிக்காதவர்களின் தலைவர் என்று பேசப்படுகிறது . எம்.ஜி.ஆர். என்பவருக்கு தெரிந்த*தத்துவம் என்பது*மிகப்பெரிய அரிய பொக்கிஷம்* அது மனிதகுலத்திற்கு மட்டுமே*புரிய க்கூடிய ஒரு பாஷை*ஏனென்றால், மனிதர்கள் வாழும்*இந்த உலகத்தில் தாங்க முடியாத*கொடுமை*என்னவென்றால் பசிக்கொடுமைதான் .அதை எம்.ஜி.ஆர். புரிந்திருந்தார் . வாழ்க்கையில் அறிந்திருந்தார் . அதனால்தான்* பலதரப்பட்ட**மனிதர்களோடு சுலபமாக* அவர் தொடர்பு கொண்டிருந்தார் . அவர்களுடைய மனங்களை*வெற்றிகொள்ள முடிந்தது.* உண்மை என்னவென்றால்* .அந்த மாபெரும்*கலைஞன் மனிதாபிமானி என்கிற வழங்கப்படாத பட்டத்தைபெற்ற மாபெரும்* தலைவர் .அவருக்கு என்னவெல்லாம் தெரியும்*என்றால் தொல்காப்பியம் தெரியும்*, நடன சாஸ்திரம் தெரியும்*.பல்வேறு விஷயங்கள் தெரியும்*.
ஒருமுறை பரதநாட்டியம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியபின் பேசும்போது*எனக்கு*இந்த நாட்டியம் பற்றி அவ்வளவாக தெரியாது*.ஆனால் ஒரு பெண் நாட்டியத்தின்போது குதிக்கிறாள் .அவள் குதிக்கும்போது ஐயோ*குதிக்கிறாளே என்று*** பாவம் பார்க்க கூடாது .அவள் நாட்டியம் ஆடும்போது*கையில்*ஒரு பூப்பந்து தரப்பட்டிருக்கும் . நடனம் முடியும் வரை கையில் உள்ள பூப்பந்தில் உள்ள பூவும்*கசங்க கூடாது, கையும்*நோகக்கூடாது, முகத்தில்*புன்னகை காட்டி, அந்த நடனத்தை பார்ப்பவர்களுக்கு* ஆடும்போது அவள் சிரமப்படுவதாக*முகத்திலோ, உணர்ச்சியிலோ, பாவனையிலோ,நடன அசைவுகளிலோ தெரியும்படி இருக்க கூடாது .அப்படிப்பட்ட ஒரு கலை*ஆர்வத்தோடு, தன்னை*பக்குவப்படுத்திக்கொண்டு* தன் திறமைகள் அனைத்தையும்*வெளிப்படுத்தும் வகையில்*நடனமாடி*பார்வையாளர்களை தன்வசப்படுத்த வேண்டும் .அப்படி நடனம் ஆடுபவர்கள் இந்த நாட்டில்*நிறைய பேர் தோன்ற வேண்டும் . நாட்டியக்கலைக்கு தங்களை*அர்பணித்துக்கொள்ள வேண்டும் .இன்று சிறப்பாக நடனமாடி*நாட்டியக்கலைக்கு பெருமை சேர்த்த*இந்த மாணவியை*நான் மனம் திறந்து பாராட்டுகிறேன் என்றார் .
அதே*போல மயில் பாவனை என்பார்கள்.* பொதுவாக ஒரு ஆணோ, பெண்ணோ, நடக்கும்போது கால்களை முன்னும்*பின்னுமாக வைப்பார்கள் . ஆனால் மயில் நடக்கும்போது ஒரு பக்கமாக*சாய்ந்து ,சாய்ந்து*நடக்கும் . அதனால்தான் ஒரு பெண் நடக்கும்போது மயில்போல*நடக்கிறாள் என்பார்கள் .மிக முக்கியமாக நாட்டிய சாஸ்திரத்தை*பற்றி சொல்கிறார் . அதாவது கண் பார்வை எங்கு இருக்கிறதோ அங்கு மனம் லயித்தால்தான் ,நாட்டியத்தில் ஜொலிக்க முடியும்*என்று ஒரு காட்சியை விவரிக்கிறார் .நாட்டியத்தில் வலது கண் எங்கே*உனது* வலது கையில்*எந்த இடத்தை*பார்க்கிறதோ* அதே நேரத்தில்**ஆடும்போது இடது கண் இடது கையை*பார்க்க வேண்டும். என்பது*சாத்தியமா*என்றால் பலபேருக்கு*சாத்தியம் இல்லை .ஆனால் தேர்ந்த நடனக்காரர்களுக்கு தன் வலது கண் பாவனையையும், இடது கண் பாவனையையும் ஒன்றாக பார்க்கும்அதை ஒன்றாக வெளிப்படுத்தும்**திறன் இருக்கும்*என்று எம்.ஜி.ஆர். மிக்*பெரிய*நுட்பத்தை*அந்த பாரத நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளது என்று குறிப்பிடுகிறார் .அதே*போல ஆடுகிறவர் , பாடல் பாடுகிறவர் யாருக்காக*ஆட*வேண்டும், யாருக்காக*பாட வேண்டும் என்பது* உலகிலே**காலம் காலமாய்*கேட்கப்படும் கேள்வி .என்றும் சொல்கிறார் .மேலும் பரத*நாட்டியம் ஆடும்போது இடுப்புக்கு கீழே*பலம் பொருந்திய உடற்கட்டு இருக்க வேண்டும் . இடுப்புக்கு மேலே உடலில் நடன அசைவுகள் நளினமாக தெரிந்தாக வேண்டும். உதாரணத்திற்கு* *பாம்பு ஆடும்போது எப்படி தன் உடலை*கீழே*கிடத்தி , மேலே தலையை*தூக்கி, படம் தெரிகின்றபோது படம் மட்டும் ஆடுவது*போல் காட்டுகிறது அல்லவா அதுபோல்*இருக்க வேண்டும் என்றும் பேசினார் .
முகலாய பேரரசர்*அக்பர்*சபையில்*பீர்பால்*இருந்தார் .அவருடைய இசையை அக்பர் பெரிதும் விரும்புவார் .பீர்பால் அக்பரிடம் சொன்னார் .ஒருநாள் என்னுடைய குருநாதர் தான்ஸேனை பார்க்க போகலாம் என்று .தான்ஸேன் வீணையை வாசித்தார் என்றால் எரியாத விளக்குகள் எல்லாம் எரியும். அப்படி ஒரு சக்திவாய்ந்த இசை கலைஞன் .தான்ஸேனை பார்த்துவிட்டு வந்த பிறகு*அக்பர் பீர்பாலிடம் ,இதுவரை உன்னைத்தான் மிக பெரிய இசை கலைஞன் என்று நினைத்திருந்தேன் . ஆனால் உன் குருநாதர் உன்னை மிஞ்சிவிட்டாரே எப்படி என கேட்க, பீர்பால் அக்பரிடம் ,அரசே,நான் வாசிப்பது உங்களுக்காக ,ஆனால் என் குரு கடவுளுக்காக வாசிக்கிறார் .ஆகவே நீங்கள் யாருக்காக வாசிக்கிறீர்கள், யாருக்காக ஆடுகிறீர்கள்,பாடுகிறீர்கள் என்பது முக்கியம் என்கிற அதே கருத்தை எம்.ஜி.ஆர். சுருக்கமாக சொல்கிறார் . அதாவது ஒரு பாடல் பாடுகிறவர் ,ஆடுகிறவர் முதலில் தன்னை திருப்தி படுத்திக்கொள்ள வேண்டும், தான் ரசிக்க வேண்டும் தனக்கு திருப்தியானதையே மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்*மிக பெரிய தத்துவமாக கலை கலைக்காகவா, மக்களுக்காகவா என்கிற வாதம் காலம் காலமாய் நடந்து வருகிறதே அதை கலைக்குரிய அம்சமாக எம்.ஜி.ஆர். எடுத்துரைக்கிறார் .இப்படி, நாட்டிய சாஸ்திரம், தொல்காப்பியம் ஆகியவற்றை பற்றி தன் கருத்துக்களை வெளியிட்டுளளார் .* தமிழிலே எட்டு ரசம்,பாகம் என்று சொல்லுவார்கள்,,அதிலே மோன* நிலை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் உண்டு .அந்த மோன நிலை ,நாட்டியக்கலையிலும் உண்டு . ஒரு மாபெரும் கலைஞன் என்கிற வகையில் தனது நுட்பமாக கவனிப்பை , தனக்கு தெரிந்ததை, அறிந்ததை கற்ற உண்மைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறையோடு இருந்துள்ளார் .என்பதை அவர் பரதநாட்டியக்கலை பற்றி பேசும்போது நாம் அறிந்து கொள்ளலாம் தொல்காப்பியத்தை பற்றிய அவரது கருத்துக்கள் அவரின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது .*.இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை,கவனம் ,இதுதான் வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் அந்த அக்கறை பிற மனிதனின் மீது இருக்கும்போது ,உங்களை அந்த பிற மனிதர்கள்மீது ஒருவராக, இருவராக,நூறாக, ஆயிரமாக, லட்சமாக ,கோடியாக ஆகும்போது நீங்கள் தலைவராகலாம் என்ற தத்துவத்தை உருவாக்கியவர்தான் அந்த மாமனிதர் எம்.ஜி.ஆர்.
நடிகர் ராஜேஷ் தனக்கு தெரிந்த செய்தியை பகிர்ந்து கொள்கிறார் . நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்த காலத்தில் ஒரு தயாரிப்பாளருக்கு தெரிந்த சோதிடர் எம்.ஜி.ஆரை சந்தித்து ,நீங்கள் வரும் காலத்தில் இந்த நாட்டை ஆளுகிற சக்தியாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று சொல்லும்போது , உங்களுக்கு பணம் வேண்டுமானால் சொல்லுங்கள் தருகிறேன் . அதற்காக இப்படியெல்லாம் சொல்லி என்னை திருப்திப்படுத்த வேண்டாம் .என்று அந்த காலத்தில் ரூ.500/- கொடுத்தாராம் . ஆனால் அந்த ஜோதிடர்* என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது நான் பணம் வாங்க தயாரில்லை என்று சொல்லிவிட்டு போனாராம் .இது நடந்து அடுத்த 20 ஆண்டுகளில் உண்மையிலேயே எம்.ஜி.ஆர். முதல்வராகிவிட்டார் . ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர்.தான் வசூல் சக்கரவர்த்தி, முடிசூடா மன்னன் , அவரது சில படங்கள் வெற்றியடையாவிட்டாலும் குறைந்த பட்ச வசூலை உறுதியாக வசூலித்துவிடும் ,தயாரிப்பாளருக்கு எந்தவகையிலும் நஷ்டம் ஏற்படாது என்கிற நிலை இருந்தது .அந்த காலத்தில் சிவாஜி கணேசன் நடித்த உத்தம புத்திரன் 100 வது நாள் விழாவிற்கு அவரை யானைமீது அமர்த்தி ,ஊர்வலமாக அழைத்து வந்தனர் .அதுபோல நாடோடி மன்னன் படத்தின் வெற்றிவிழாவிற்கு யானைமீது அல்லாமல்ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ,சற்று வித்தியாசமாக* தேரில் அமர்த்தி ,ஊர்வலமாக அழைத்து வரலாம் என்று யோசனை சொன்னார்கள் . ஆனால் தெய்வங்களை அலங்கரித்து அழைத்துவரப்படும் தேரில் தான் அமர தயாரில்லை என்று மறுத்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.என்றும் பதினாறு - கன்னித்தாய்*
2.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
3.ஆடல் காணீரோ ,விளையாடல் காணீரோ -மதுரை வீரன்*
4.அழகிய தமிழ் மகள் இவள் -ரிக்ஷாக்காரன்*
5.கடவுள் இருக்கின்றான் - ஆனந்த ஜோதி*
-
தனியார் டிவிக்களில் நிருத்ய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்களின்*பட்டியல் (17/8/20 முதல் 23/8/20 வரை )
----------------------------------------------------------------------------------------------------------------------------
17/08/20 - வேந்தர் டிவி -காலை 10.30 மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * *பாலிமர் டிவி -பிற்பகல் 2 மணி -* நல்ல நேரம்*
18/08/20-சன் லைஃப் - காலை 11 மணி* - காவல்காரன்*
* * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் -* இரவு 7 மணி -* அடிமைப்பெண்*
19/08/20- மெகா டிவி* - மதியம் 12 மணி -சக்கரவர்த்தி திருமகள்*
* * * * * * * சன் லைஃப் -மாலை 4 மணி - திருடாதே*
* * * * * * *ராஜ் டிஜிட்டல் -இரவு 7மணி - உலகம் சுற்றும் வாலிபன்*
20/08/20- சன் லைஃப் - காலை 11 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி /இரவு 7* மணி -நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * *புதுயுகம் - இரவு 7 மணி* *-* குடும்ப தலைவன்*
21/08/20 -* ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*
22/08/20 - சன் லைஃப் -காலை 11 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி -இரவு 7 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * ஜெயா டிவி* - இரவு 10 மணி -* ஆயிரத்தில் ஒருவன்*
23/08/20 - சன் லைஃப் - காலை 11 மணி - சந்திரோதயம்*
* * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - தேர்த்திருவிழா*
**
-
#பாசப்பிணைப்பு
ஆள்பவன் படையைத் தனக்கு அணையாக வைப்பவன் அல்ல...
தன் மக்களை தனக்குத் துணையாக வைப்பவன்...
#புரட்சித்தலைவரின் #வெற்றிக்குக் #காரணம்...
மக்கள் அவர் மீது கொண்ட நேர்மையான நம்பிக்கை ...
#எனது #மக்களின் #ஆசிகளே #என்னைத்தாங்கிவருகிறது என்பது பொன்மனச்செம்மலின் அசைக்க முடியாத நம்பிக்கை ...
தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் வீட்டிலிருந்து கோட்டைக்குச் செல்லும்போதெல்லாம் அவருடைய காருக்கு முன்னால் பைலட் காரெல்லாம் போகாது...இப்போது போல்...
காரில் உதவியாளர், முதல்வர் பிறகு டிரைவர் அவ்வளவு தான்...
ஒருமுறை தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் வீட்டிலிருந்து கிளம்பும் போது அப்போதைய போலீஸ் சூப்பரண்ட் திரு. சுப்பையா, முதல்வர் எம்ஜிஆரைப் பார்த்துக்கேட்டார்...
ஐயா, நான் வேண்டுமென்றால் உங்களுக்கு செக்யூரிட்டியாக வரவா? எனக் கேட்க, சிரித்துக்கொண்டே முதல்வர்,
"எனக்குப் பாதுகாப்பாக இந்தத் தமிழ்நாட்டு மக்களே இருக்கும்போது தனியாக நீங்கள் எதற்கு???" என்றார்...
பொன்மனச்செம்மல் ஆட்சியில் மக்கள் மீது முதல்வருக்கும், முதல்வர் மீது மக்களுக்கும் அவ்வளவு பாசப்பிணைப்பு இருந்தது............
-
நாடோடி மன்னன் வரலாறு திருச்சி சில....
11 வது வெளியீடு....
1971 திருச்சி பத்மாமணி 21 நாள்
1974 ஜூபிடர் 28 நாள் 1977 திருச்சி ராக்ஸி
28 நாள்...
1985 திருச்சி பேலஸ்
21 நாள்
1992 மாரிஸ்போர்ட்
14 நாள்
1996 முருகன் 14 நாள்.
தகவல் திருச்சி கல்லுகுழீ செல்வராஜ்.
நெல்லையில் நாடோடி மன்னன் வரலாறு....1975 சிவசக்தி 35 நாள்
1978 பாப்புலர் 15 நாள்
1986 சென்ட்ரல் 14 நாள்
2005 லட்சுமி 30 நாள்
2007 சென்ட்ரல் 15 நாள்
2011 பூர்ணகலா 8 நாள்
சென்னையில்...
4 அரங்கில் வெளியிடப் பட்டு 4 அரங்கிலும் 4 வாரங்கள் ஒடியது.
100 காட்சி அரங்கு நிறைந்தது.
கெயீட்டி
பாலாஜி
பாண்டியன்
ராம்
மொத்தம் 112 நாள்...
தொடர்ந்து பல அரங்கில் சாதனையாகும்.
1988 பாரகன் 14 நாள்
1988 நடராஜ் 14 நாள்
2006 ஆல்பட் 21 நாள்
2018 ஆல்பட் 35 நாள்.
கிடைத்த தகவல்....
தொடரும்.........
-
'' நினைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்
மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .
நாடோடி மன்னன் ;-1958
காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
.[ 1977 உண்மையானது]
எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........
1977 - பாடல் வரிகள் நிஜமானது .
தெய்வத்தாய் -1964
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......
பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்
அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .
பணக்கார குடும்பம் -1964.
பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
2020 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .
அடிமைப்பெண் -1969.
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....
நிதர்சனமான உண்மை .
உலகம் சுற்றும்வாலிபன் -1973
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .
மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல
மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்
ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .
இது ஒன்று போதுமே .-எம்
மன்னவனின் புகழ்
அகிலமெங்குமே
முரசு கொட்டுமே.........
-
"முகராசி" தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த 10 வது படம். இந்த படத்தில் எம்ஜிஆரோடு ஜெமினி கணேசன் இணைந்து நடித்தது கூடுதல் சிறப்பு. படம் மிக குறுகிய காலத்தில் அதாவது தயாரிப்பில் இருந்த காலம் 13 நாட்கள்தான். பேசும் படம் கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி்: முகராசி வெற்றி படமா?
அதற்கு ஆசிரியர் சொன்ன பதில்
முகராசி தயாரிப்பில் இருந்தது 13
நாட்கள், ஆனால் திரையின் இருந்ததோ 100 நாட்கள். நீங்களே முடிவு சொல்லுங்கள் வெற்றிப்படமா என்று.
இதே போல் சிவாஜியும் அமெரிக்க பயணத்திற்காக அவசர அவசரமாக 26 நாட்களில் ஒரு படத்தை முடித்துக் கொடுத்தார். அதுதான் 1962 ல் வெளியான "பலே பாண்டியா".
ஆனால் அது திரையில் இருந்த காலம் மிக சொற்ப நாட்களே. இந்த மாதிரி செலவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம் 100 நாட்கள் ஓடுகிறதென்றால் அதற்கு காரணம் நிச்சயம் முகராசிதான், ஆம் எம்ஜிஆரின் முகராசிதான். முகத்தை காட்டி காட்டி 100 நாள் ஓட வைத்தது நியாயமா? ஒரு சிவாஜி ரசிகரின் ஆதங்கம் இது. 1966 பிப் 18 ல் வெளியான படம்.
அந்த நேரத்தில் காஸினோவில் "அன்பே வா" மிட்லண்டில் "நான் ஆணையிட்டால்"
கெயிட்டியில் "முகராசி". என்ற மூன்று எம்ஜிஆர் படங்களும் மவுண்ட் ரோட்டில் அருகருகே உள்ள திரையரங்குகளில் வெளியானது..
சனி,ஞாயிறு நாட்களில் மவுண்ட் ரோடு ஸ்தம்பித்து போய் டிராபிக் ஜாம் உண்டாகி விடும். தலைவரோட ஒரு படம் வந்தாலே தாங்காது, அதிலும் 3 படங்கள் என்றால் அதை பார்ப்பதே கண்கொள்ளா காட்சியாக
இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அந்த சமயத்தில் போட்டோகிராபர் கிளுக்கிய காட்சியைதான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். முகராசி கட்-அவுட்டுக்கு பின்னால் உயரத்தில் காஸினோவின் முகப்பு தெரிவதை பார்க்கலாம். அதுவும் "அன்பே வா"
வுக்கு காஸினோவில் குதிரை போலீஸ் வைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
"முகராசி" படத்துக்கு 5வது வார காலத்தில் தியேட்டர் போட்டு வந்த விளம்பரத்தை பார்த்தால் படம் நிறைய ஊர்களில் 50 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். அந்த விளம்பரத்தில் மதுரை, திருச்சி, மற்றும் nsc ஏரியா தியேட் டர்கள் சேர்க்கப்படவில்லை. அவைகளையும் சேர்த்தால் இன்னும் அதிகமான தியேட்டர்களில் ஓடியிருக்க வேண்டும். தெரிந்தவர்கள் பதிவிடலாம்.
திருநெல்வேலி பார்வதியில் 50 நாட்களை தாண்டி ஓடியது. தூத்துக்குடி சார்லஸில் 6 வாரம் ஓடியது. சென்னை கெயிட்டியில் 100
நாட்களும்,பிரபாத்தில் 70 நாட்களும் சரஸ்வதியில் 56 நாட்களும் ஓடியது. மேலும் கணிசமான ஊர்களில் 50 நாட்களை தாண்டி ஓடியது. "முகராசி"
தேவர் பிலிம்ஸிக்கு கடைசியாக 100
நாட்கள் ஓடிய கருப்பு வெள்ளை படம்
என்பது கூடுதல் தகவல்..........
-
நினைத்ததை முடித்தவன் எம்ஜிஆர் .
ஆச்சரியமாக உள்ளது இல்லயா ?
************************************************** **********
எம்ஜிஆர் தன்னுடைய இளம் வயதில் ஆங்கில திரைப்படங்களை பார்த்ததின் விளைவுதான்
நாடோடி மன்னன் படம் எடுக்க தூண்டியது . ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு
1958ல் திரைக்கு வந்து நாடு முழுவதும் ரசிகர்களால் மக்களால் ஏராளமான பாராட்டுக்களை பெற்று
சரித்திர சாதனை புரிந்தது .
எம்ஜிஆர் வெற்றி பெற்று நினைத்ததை முடித்தார் .
1967 தேர்தலில் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமயில் திமுக ஆட்சி அமைந்திட நினைத்தார் . அதற்க்காக உயிர் தியாகம் வரை சென்று உழைத்து தானும் வெற்றி பெற்று தன்னுடைய இயக்கத்தையும் வெற்றி பெற செய்து தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி அமரவைத்த எம்ஜிஆர் நினைத்ததை முடித்தார் .
1972ல் எம்ஜிஆரையே அழிக்க நினைத்த திமுகவின் கனவை 1973 திண்டுக்கல்தேர்தல் துவங்கி 1987 வரை அரசியல் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து வெற்றி மேல் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்தார்
.
சினிமாவில் எம்ஜிஆரின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று 1959, 1967, 1972 கால கட்டங்களில் நடந்த சோதனைகளை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் உருவாக்கிய திரை உலக சாதனைகள் வெற்றிகள் குவித்ததின் மூலம் தான் நினைத்ததை முடித்தார் .
1977 வரை எம்ஜிஆர் திரை உலகை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து திரை உலக வசூல் சக்ரவர்த்தி யாக திகழ்ந்தார் என்று திமுக தலைவர் திரு கருணாநிதி 1987 எம்ஜிஆர் மறைவு தினத்தன்று கூறியது நினைவிற்கு வருகிறது .
நினைத்ததை முடிப்பவன் - 1975ல் வெளியானது , தலைப்பிற்கு ஏற்ப எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்திலும் நினைத்ததை முடிப்பவன்
என்று சாதித்து காட்டினார்.
மறைந்த பின்னரும் 32ஆண்டுகளாக அரசியலிலும் சினிமா மறு வெளியீடுகளில் , புது தொழில் நுட்ப
மறு வெளியீடுகளிலும் எம்ஜிஆர் என்ற தனி
மனிதரின் வெற்றிகள் சரித்திர சாதனையை நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் எப்பொழுதும் பெருமை கொள்கிறோம் ..........
-
1964 இல் நம் இதயதெய்வம் நடித்த படகோட்டி இறுதி கட்ட காட்சிகள் கேரளாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்.
13 நாட்கள் மொத்தம்.
10 வது நாள் காலை நல்ல வெளிச்சத்தில் பட பிடிப்பு நடந்து கொண்டு இருந்து இடைவேளை நேரம்.
தலைவருடன் இருந்த ஐயா கே.பி.ஆர். அவர்கள் தோளை தட்டி ஒருவர் அங்கே பாருங்கள் என்று சொல்ல....அங்கே ஒரு முதியவர் ஏதோ சைகை செய்ய அவர் அருகில் செல்கிறார் அவர்...
அப்போது அந்த முதியவர் ஐயா நான் எம்ஜிஆர் அவர்களை சந்திக்க வேண்டும்.....
நான் அவரின் தந்தை உடன் பணி புரிந்தவன்.
பாலக்காடு என் சொந்த ஊர்....என்று தொடர நான் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த தொகை என் மகள் திருமணம் வேண்டி....அவளின் திருமணம் முடிவாகி அடுத்த கட்டம் நோக்கி நான் நகர...
நெடுங்காடு வங்கியில் இருந்து நான் சேமித்த வைத்து இருந்த பணம் ரூபாய் 20000 அதை எடுத்து கொண்டு வரும் வழியில் தலை சுற்றி நான் மயக்கம் அடைந்து சாலை ஓரம் வீழ்ந்து விட்டேன்....
மயக்கம் தெளிந்து அடுத்தவர் உதவியில் நான் கண் திறக்கும் போது....பேரிடி எனக்கு என் பண பையை காணவில்லை...இடிந்து போய் என் வீடு போய் சேர்ந்தேன்...
மொத்த குடும்பமும் செயல் இழந்து போக என் மகள் சொன்னாள்.
அப்பா நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் உடன் பணி புரிந்தவர் தானே...அவர் கூட நீங்கள் இருந்த நினைவுகள் சொல்லி அவர் பெற்ற மகன் இப்போது நம் ஊருக்கு பக்கத்தில் வந்து இருக்கிறார்...
நீங்கள் போய் நடந்ததை சொல்லி அவரிடம் உதவி கேளுங்கள்...அவரை பற்றி நான் நிறைய படித்து உள்ளேன் என்று மகள் விருப்பம் சொல்லி வந்த விவரம் சொல்ல...
கே.பி.ஆர்...கண்களில் கண்ணீர் முட்ட ஐயா பொறுங்கள் என்று சொல்லி சற்று நேரத்தில் தலைவர் இடம் விவரங்கள் சொல்ல...துடித்து போன தலைவர் அவரை வர வைத்து...
ஐயா உங்கள் விவரங்களை இவரிடம் சொல்லுங்க....ஒரு வாரம் கழித்து சென்னைக்கு வாருங்கள் என்று சொல்ல அதன் படி பெரியவர்...
சென்னை வந்து இறங்கி ஐயா கே.பி.ஆர். அவர்களை அந்த பெரியவர் சந்திக்க...அவர் தலைவர் இல்லம் அந்த பெரியவரை அழைத்து போக....
பெரியவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து அவரை சிறப்பிக்க நல்ல உணவு கொடுத்து வரவேற்று.
ஒரு சிறப்பு உடை பணம் வைக்க ஒரு ஜிப் வைத்து உடனே தயார் ஆகி அதற்கு மேல் ஒரு பெல்ட் வாங்கி கொடுத்து அதில் மொத்த பணம் 20000 ரூபாயை பத்திரம் ஆக வைத்து தைத்து.. மீண்டும் பணத்தை அவர் தவற விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில்...
கே.பி.ஆர்....அவர்களை சென்னை ரயில் நிலையம் வரை அந்த பெரியவருக்கு துணை ஆக அனுப்பி பாலக்காடு ரயிலில் அவரை பத்திரம் ஆக ஏற்றி விட்டு அவர் ஊர் சென்று பணத்துடன் பத்திரம் ஆக போய் சேர்ந்த விவரத்தை எனக்கு தெரிவியுங்கள் என்கிறார்..... கொடை வள்ளல் எம்ஜிஆர்..
பெற்ற தாய் தந்தைக்கே சோறு போடாத இந்த பொல்லாத உலகத்தில் தன் தந்தைக்கு தெரிந்தவர் என்றவுடன் அவர் சொன்னவை உண்மையா என்று கூட ஆராயாமல் அள்ளி கொடுக்கும் வள்ளல் இவர் போல யார் உண்டு..
பெரியவரை சுமந்து சென்ற அந்த விரைவு வண்டி பாலக்காடு போய் சேர்ந்து அவர் பணத்துடன் வீடு போய் நடந்தவை பற்றி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு பணத்தை இடுப்பில் இருந்து எடுத்து கொடுக்க..
அவர் மகள் அப்பாடா திருமணம் இருக்கட்டும் நான் எம்ஜிஆர் மீது வைத்து இருந்த என் நம்பிக்கை வீண் போக வில்லை என்று மனதுக்குள் மகிழ.
அவர்தான் தலைவர்.
அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்.
அன்று 20000 என்பது இன்றைய பணமதிப்பில் 20 லட்சம் பெறுமா. தாண்டுமா...இறைவா நன்றி.. நன்றி..
தொடரும்...நன்றி...
உங்களில் ஒருவன் ............
-
#மக்களை_பிளவுபடுத்தும் #மதவாதிகளை_அனுமதிக்க_மாட்டேன்
- தமிழக சட்டப்பேரவையில் எச்சரித்த முதல்வர் #எம்ஜிஆர்*
*"மதவாதிகள்-அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.*
*மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை- இந்த அரசு அனுமதிக்காது என்பதை தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.*
*இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்.*
*இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்*.... *"இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது"*
*குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகளும் நடந்து கொள்ள வேண்டுமே தவிர மற்ற வழிமுறைகளில் இறங்கக்கூடாது.*
*நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.*
*"அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே, அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது."*
*குறிப்பாகச் சொல்கிறேன்;*
*ஆர்.எஸ்.எஸ் தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும் *
*ஏற்கனவே என்.சி.சி, சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்."*
*ஆர் எஸ்.எஸ். சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை."* .
*மக்கள் நலனை காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன*
*மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள்*
*எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள்*
.
*எனவே, மதவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.*
*அரசு விதித்துள்ள*
*144 தடையை மீறுவோம்* *என்கிறார்கள்*
*தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால் , அரசு அதைச்
சமாளிக்கும்*
*அரசு அதற்குத் தயாராக இருக்கிறது."*
----------------
*29_03_1982 அன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியத்தின் மீதான* *விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து*
(திருத்தப்பட்ட பதிவு)
Ithayakkani S Vijayan.........
-
1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் செங்கல்பட்டு (தற்போதைய திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்க|ளை உள்ளடக்கியது) மாவட்டத்தில் உள்ள 17 தொகுதிகளில் நமது தலைவர் உருவாக்கிய கழகம் மொத்தம் 12 தொகுதிகளில் வென்றது; அவைகள் விவரம் வருமாறு :
கும்மிடிபூண்டி,
பொன்னேரி
திருவொற்றியூர்
ஆலந்தூர்
தாம்பரம்
செங்கல்பட்டு
அச்சரப்பாக்கம்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்
திருவள்ளூர்
திருத்தணி
sitting தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த திருவொற்றியூர் தொகுதி மா.வெ. நாராயணசாமியும், உத்திரமேரூர் தொகுதி கே.எம். ராசகோபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர். தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஒரே sitting தி.மு.க. எம்.எல்.ஏ. மதுராந்தகம் ஆறுமுகம். மற்ற தொகுதிகளில் தி.மு.க. தொகுதியில் பிரபலமான வெற்றி பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியது. அப்படியும் மண்ணைக் கவ்வியது.
இந்த மாவட்டத்தில், நான் சார்ந்திருந்த திருவொற்றியூர் தொகுதியில் நமது தலைவர் பெற்ற வெற்றி, மூன்று வகையில் குறிப்பிடத்தக்கது.
1. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த மா.வெ. நாராயணசாமி தோற்கடிக்கப்பட்டார். அவர் மாநில தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளராக விளங்கி வந்தார்.
இந்த திருவொற்றியூர் தொகுதியில்தான், பிரபலமான எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலேன்ட், என்பீல்ட் இந்தியா லிமிடெட், எண்ணூர் பவுண்டரிஸ், கே.சி.பி. நிறுவனம், எவரெடி நிறுவனம், கார்போரண்டம் யூனி வர்சல்ஸ், ஹாக்ப்ரிட்ஜ் ஹெவிட்டிக் ஈசன் குழுமம் மற்றும் எஸ்.வி.எஸ். ஆயில் நிறுவனம் போன்ற பிரபல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. .
மறைந்த மதிப்புக்குரிய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யுடன் கூட்டணி வைத்து, தொழிற்சங்க தலைவர் உழைக்கும் மக்கள் மாமான்ற தலைவர் சி.கே.மாதவன் அவர்களை வேட்பாளராக நிறுத்தியது.
2. திருவொற்றியூர் தொகுதியில் பெரும்பாலோர் என் போன்ற தெலுங்கு பேசும் இனத்தவர்கள் தான் வசிக்கிறார்கள். மற்ற மூன்று கட்சிகளும் (தி.மு.க., ஜனதா, மற்றும் காங்கிரஸ் கூட்டணி) தெலுங்கு இனத்தவரை, தங்கள் வேட்பாளராக நிறுத்திய போதிலும், நமது புரட்சித் தலைவர் அவர்கள் தெலுங்கு இனமல்லாத நாயக்கர் இனத்தை சார்ந்த மறைந்த சிகாமணி (இவர் இன்னிசை கச்சேரி நடத்தி வரும் திரு. லஷ்மண் சுருதி அவர்களின் மாமா) அவர்களை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.
3. மேலும், மறைந்த சிகாமணி அவர்கள் திருவொற்றியூர் தொகுதிக்கு முற்றிலும் புதியவர்.
இந்த தகவல்கள் மூலம் அறியப்படும் நீதி :
ஜாதி, மத இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்பட்ட ஒரே தலைவன் பொற்கால ஆட்சி வழங்கிய பொன்மனச் செம்மல் மட்டுமே.
பின்குறிப்பு : ஒவ்வொரு மாவட்டந்தோறும் இது போன்ற செய்திகள் அடங்கிய பதிவுகள் தொடரும்.
நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .........
-
மதுரை மாநகருக்கு அடுத்தபடியாக மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் சாதனை படைத்த இடங்கள் ஊர்கள் பல இருக்கின்றன..... அவைகளில் மக்கள் திலகம் படைத்த திரைப்படங்களின் வெற்றிகளை திண்டுக்கல், விருதுநகர், பழனி, காரைக்குடி, ராமநாதபுரம், தேனீ ஆகிய ஊர்களிலிருந்து இப்பொழுது பார்ப்போம்....
முதலில் திண்டுக்கல் நகரில் மக்கள் திலகத்தின் 6 திரைப் படங்கள் நூறு நாட்கள் ஓடி மகத்தான வெற்றியை படைத்துள்ளது.*
மக்கள் திலகம் கதாநாயகனாக வலம் வந்த. 115 திரைக்காவியங்களில் 65 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து நகரில் தலைவரே இன்று வரை சாதனை ஆவார்.இதில்**
20 திரைப்படங்கள் 70 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.**
நகரில் 100 நாட்களை கடந்த முதல் காவியம் மதுரைவீரன்*
அதன்பின்பு நாடோடி மன்னன் எங்க வீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோயில், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து வெற்றி பெற்றது.*
அதன் பின்பு 12 வாரங்கள்*
ஓடிய திரைப்படங்கள்....*
மலைக்கள்ளன்*
அலிபாபாவும் 40 திருடர்களும் சக்கரவர்த்தி திருமகள் குலேபகாவலி*
மக்கள் திலகத்திற்கு மட்டுமே உகந்த சாதனையாகும்.
திண்டுக்கல் நகரில் நடிகர் வி.சி கணேசனின் 100 நாள் ஓடிய திரைப்படம் பாகப்பிரிவினை மட்டுமே வேறு எந்த படமும் கிடையாது. அதே போல் 1965 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகளில் சிவாஜி கணேசனின் 7 படங்கள் மட்டுமே*
50 நாட்களை கடந்து உள்ளது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள்
சவாலே சமாளி சிவந்தமண்,*
வசந்த மாளிகை, தங்கப்பதக்கம் ஆகிய படங்கள் மட்டுமே....
தொடரும்.............
-
திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக மகத்தான சாதனைகளை படைத்த நகர் விருதுநகர்....ஆகும்.
புரட்சித்தலைவரின்*
பொன் போன்ற வெற்றிகளை.....*
1947ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை பற்பல சாதனைகளை படைத்துள்ளது.*
நகரில் மக்கள் திலகத்தின் காவியங்களே அதிக அளவில்*
50 நாட்களும், 75* நாட்களையும்* கடந்து சாதனையை பெற்றுள்ளது.
நகரில் முதன் முறையாக 100 நாட்களை கடந்து 114 நாட்கள்*
ஓடிய திரைக்காவியம்.*
புரட்சி நடிகரின் மதுரைவீரன் ஆகும்.*
அதன் பின்பு*
சக்கரவர்த்தி திருமகள் 99 நாட்கள் ஓடி வெற்றி நடை போட்டது.*
1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் 100 நாட்களை கடந்து வெற்றி கொண்டது.
மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், குலேபகாவலி, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை எழுபத்தைந்து நாட்களை கடந்து நகரில் வெற்றிநடை போட்டது.*
50 நாட்களை கடந்த மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்*
47 ஆகும். நகரில் இன்று வரை பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் ஒருவரே வசூல் சக்கர
வர்த்தியாக திகழ்கிறார்..........
-
அப்பாடா! ஆகஸ்ட் 22 தலைவரின் "நாடோடி மன்னன்", மற்றும் "இதயக்கனி" பிறந்த நாள் கொண்டாடி முடித்தவுடன் அடுத்து எதைப்பற்றி எழுதுவது என நான் சிந்திக்கையில் என் கண்ணில் பட்டது நெல்லையில் ஒரு திரைப்படத்தின் 100 நாட்கள் வசூல் என்னை திகைக்க வைத்தது.
என் வாழ்நாளில் அதுவும் .a சென்ட்டரில் இப்படிப்பட்ட ஒரு வசூலை நான் பார்த்ததே இல்லை.
அப்படியென்னப்பா! அந்த படத்தின் வசூல் சிறப்பு! என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நம்ம சன் டிவியில் தொண்டை கிழிய கத்துவார்களே அதை போல் கத்த வேண்டும் போல இருக்கிறது.
உலக திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படம் இவ்வளவு குறைந்த வசூலுடன் 100 நாட்கள் ஓட்டப்பட்டது இதுவே முதல் முறை. இ்ந்த பெருமையை பெற்று முதல் பரிசை
வென்ற "சொர்க்கம்" படத்தின் 100 நாட்கள் வசூல்தான் இது..
நெல்லை பாப்புலரில் 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 85,495.45 தான்.
-----------------------------'-------------------------------
நெல்லையில் தலைவர் படத்தின் வசூல் விபரம்
-------------------------------------------------------------
இப்படி ஒரு வசூலுக்கு 100 நாட்கள் ஓட்டப்பட்டால் எம்ஜிஆரின் அத்தனை படங்களுமே 100 நாட்கள் படம்தான்.
ர.போ.115 நாட்கள்54 ரூ 89132.16
கு.கோயில். 65. 97,929.75
ஒளி விளக்கு. 59. 1,01,686.54
காவல்காரன். 55. 84,855.52
நம்நாடு. 76. 1,35,631.01
என் அண்ணன். 71. 1,13,135.63
எங்கள் தங்கம். 66. 1,01,802.77
ப.பொன்னையா. 62. 1,02,000.00
இதயவீணை. 63. 1,02,078.25
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
தூத்துக்குடியில் கூட சிவந்த மண்ணை 100 நாட்கள் ஓட்டி சுமார் ரூ 1,06,200. வசூல் காண்பித்தார்கள். மதுரை தங்கத்தில் ஒரு "கர்ணன்" என்றால் நெல்லையில் ஒரு "சொர்க்கம்". இன்னும் பல ஊர்களில் இது மாதிரி சாதனை வைத்திருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. தேடிப் பார்த்து கின்னஸுக்கு அனுப்ப வேண்டியதுதான் பாக்கி.
இதைப்பார்க்கும் போது சிவாஜி ரசிகர்களின் ஆற்றலை நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு படத்தில் செந்திலிடம் கவுண்டமணி கேட்பாரே கப்பலில் என்ன வேலை? என்று.
உடனே செந்தில் கடலில் கப்பல் நின்று விட்டால் நடுக்கடலில் இறங்கி கப்பலை தள்ளவேண்டும் என்பாரே.
அதை நல்ல ஜோக்காகவே நினைத்திருந்த எனக்கு சிவாஜி ரசிகர்கள் அந்த கப்பலை தள்ளி கரை சேர்த்ததை பார்த்ததும். உண்மையிலேயே நான் திகைத்து விட்டேன்.
சிவாஜி ரசிகர்கள் அவருக்கு செய்த இந்த அரும்பணியை கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமை. இதை கின்னஸில் பதிவு செய்ய மறந்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். இந்த அரும் பணிக்கு பதில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்திருந்தாலாவது போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைத்திருக்கும். என்ன புரிந்திருக்குமே! போலி சிவனடியார்களுக்கு.
மீண்டும் அடுத்த பதிவில் மற்றொரு சாதனையை பார்ப்போம்.