இருக்கும் இல்லத்தில் இன்பமும் ஒளியும்
பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நாளும்
புதிய வாய்ப்புகளின் அரிய பெட்டகம்
என்றெண்ணும் பக்குவம் கனிந்தபின்னே
Printable View
இருக்கும் இல்லத்தில் இன்பமும் ஒளியும்
பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நாளும்
புதிய வாய்ப்புகளின் அரிய பெட்டகம்
என்றெண்ணும் பக்குவம் கனிந்தபின்னே
கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ அறியாத பாவையா..
நாணமோ இன்னும் நாணமோ ஜாடை நாடகமென்ன
அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
க்ட்டிப்புடி கட்டிப் புடிடா
ஒய்திஸ் கொலவெறிடி
அன்று பெண்மைக்கு
நாசூக்காய் மரியாதை தந்த
தமிழ்த் திரைப்பாடல்கள்
இன்று மாறியது
சூழலா அல்லது
அப்படித்தான் இன்று இருக்கிறதா..
இருக்கிறதா இன்னும்
இடையினில் தேடல்
இடைஞ்சலாய் ஊடல்
இருவரின் விளையாடல்
இன்பம் திகட்டுவதில்லை
இயற்கை பின்னும் வலை
வலை மனதுக்குள் சொல்லிய வார்த்தைகள் கீழே:
‘படுபாவி வந்துட்டான்யா வந்துட்டான்,.
நேரங்கெட்ட நேரத்தில
படகுல எடுத்துண்டு போவான்...
கடல் காத்தே எனக்குக் குளிரும்..
இதுல தொப்னு ஜில் தண்ணில
போடுவான்...
ஆசையா என்கிட்ட வந்து
முத்தம் கொடுக்கற மீன்கள்
எவ்ளோ அழகா இருக்கு...
வராதீங்கன்னு சொல்லவும் முடியலை..
மின்மினி நெருப்புல விழற மாதிரி
என்கிட்ட மாட்டிக்குதுங்களே..
அச்சச்சோ...
இந்தப் பாவி இழுக்கறானே..
இதோ இழுத்துட்டான்..
மேலே வந்ததுக்கப்புறம்
ஒவ்வொண்ணும் என்ன்மாத் துள்ளுதுங்க
மூச்சுக்காக...
அடேய் ஒனக்கு இரக்கமே இல்லியா...
நிறையக் கிடச்சுடுத்தாம்
கரைக்கு வந்துட்டான்...
என்கிட்ட ஆசையாத் துள்ளினது
இப்போ அசையாமக்கெடக்குங்க..
எடுத்து வேற துணிமேல போட்டுட்டான்
என்னை மறுபடியும்
உபயோகப் படுத்தறதுக்காக
காயவும் போட்டுட்டான்....
ஹலோவ்வ்வ்வ்
லவ்வர்ஸ்
என்னை பாத்துக்கிட்டே
ஒங்க கண்ணோட பேசிக்கிட்டே
நடக்கறீங்களே
ஒங்களுக்குப் புரியலையா
கொலைகளுக்கு உடந்தையான
என்னோட சோகம்...
சோகம் அறியாவிடில் சுகம் இனிக்குமா
வெயில் இல்லாமல் நிழல்தான் குளிருமா
உப்பு உரைப்பில்லாமல் சமையல் ருசிக்குமா
இரவும் பகலும் வானத்தில் வருவதுண்டு
இடரும் இன்பமும் நாணயத்தின் இருபக்கமே
ஒன்றில்லாமல் ஒன்றுக்கு மதிப்பில்லையே
மதிப்பில்லையே அவ்வளவு...
எதிரில் இருந்த கல்
முக இறுக்கத்துடன் பேசியது...
என்ன இப்படிச் சொல்கிறீர்கள்..
நீங்கள் என் பாட்டனாரின் நண்பர்
உங்களுக்குத் தெரியாததல்ல்
அந்தக் காலத்தில்
அவர் வாங்கிய இந்த
வைர நெக்ல்ஸின் விலை
நீங்க்ள் சரி பாதி சொல்வது எப்படி.
விற்பவர் கேட்க கல் பேசியது
"இப்போ இவ்ளவு தான்...
நிறைய் உபயோகப்ப்டுத்தியதில்
சேதாரம், அழுக்கு
தவிர கல் பிரித்தால்
எப்ப்டி எனச் சொல்வது கஷ்டம்
எனில் இது தான் விலை
முடிவில்
அறுப்து ச்தவிகிதத்தில் பேரம் படிய
விற்றவர் சென்றதும்
கல்லின் பையன் கேட்டான்
”அபபா
உங்கள நண்பரின் பேரன் தானே
வந்தவர்..
இன்னும் கொடுத்திருக்கலாமோ..”
கல் சிரிக்காமல் சொன்னது
நட்பு வேறு
வியாபாரம் வேறு
வேறு பக்கம் பார்க்கிறாள்
விட்டேத்தியாய் பேசுகிறாள்
வெறுப்பேத்துகிறாள் வீம்பாய்
வினைகாரியின் விளையாட்டிது
விழி பிதுங்கும் விபரீத சதுரங்கம்
விளங்கவில்லை அடுத்த நகர்வு
விக்கித்து வேர்த்து நிற்கிறேன்
வஞ்சியின் வலைக்கு தப்புவதுண்டோ
விலாங்கும் வஞ்சிரமும் வாளையும்
வினயமில்லா சிறு மீன் நான் பாவம்
பாவம்.
அபூர்வமாகக்கிடைத்த
பழைய நாவல் புத்தகத்தைத்
தூசு தட்டியதில்
படக்கெனப் பறந்து
கீழேவிழுந்து அடங்கியது
அந்தப் பூச்சி...
நான் தட்டியதில்
அதன் உயிர் சென்றது பாவம்..
ஆனால்
இவ்வளவு நாள்
அந்தப் புத்தகத்தை
படித்திருக்கிறதே..
அது அதுசெய்த புண்ணியம்...
புண்ணியம்தன்னைத் தேடித் தேடி
கோவில் கோவிலாய் சென்று
குளங்களில் தவறாது புனித நீராடி
திருவோடுகளில் சில்லறை வீசி
உண்டியலில் காணிக்கை செலுத்தி
பக்திப்பழமாய் பரவச கோலம்
நெஞ்சில் ஈரம் இன்றி அதிகாரம்
பொருளுக்கும் புகழுக்கும் பேராசை
பெருக்கியது பணமா புண்ணியமா
காலமறிந்து செய்யும் உதவி
ஓசையின்றி வழங்கிய நிதி
கல்விக்கண் திறக்க விரும்பி
பச்சை வளம் பூமியில் காத்து
தீய சிந்தனை செயல் ஒழித்து
தேடிய புண்ணியம் திரவியம்
தலைமுறைகள் அதில் வாழும்
வாழும் பல்லிங்க..ஒண்ணும் செய்யாது...
வீட்டுக்காரர் சொன்னாலும்
புதுக்குடித்தனம் மனைவியுடன்
சென்றபோது கொஞ்சம்
பயம்மாகத் தான் இருந்தது..
அதுவும்
அது
படுக்கையறை,
குளியலறை,
சமையலறை
என
நாராயணக் கடவுள் போல
காட்சி தரும்..
பார்த்தால்
பதிலுக்கு வெறித்த பார்வை பார்த்து
ச்ச்ச் சொல்லும்..
மனைவி கிண்டல் செய்வாள்
என்ன இது பல்லிக்கெல்லாம் பயந்து..
ஒரு ஞாயிறுப் பொழுதில்
காலையில்
ச்ச் சத்தத்தில்
சட்டென விழிப்பு வந்ததில்
கொஞ்சம் பயந்து கத்த...
அவள் குங்குமமாய்ச் சிவந்து
வாயைப் பொத்தினாள்..
கத்தாதீங்க.. அது பல்லியில்லை
நான் தான்..!
நான் தான் முட்டாளோ
முதல் ஆளாய் வந்துவிட்டு
முழிக்கிறேன் நேரம் தவறாமை
மறந்த விழாக் கூட்டத்தினர் முன்
முதல் ஆளாய் கண்டிக்கிறேன்
கண் முன்னே அக்கிரமம் நடக்கையில்
மௌனமாய் மற்றவர் பார்க்கையில்
முதல் ஆளாய் கொதிக்கிறேன்
கலாசாரம் காற்றில் பறக்கையில்
கைதட்டி பிறர் அதை ரசிக்கையில்
கேவலமில்லை இந்த மௌடீகம்
நான் இருப்பேன் நானாகத்தான்
நானாகத் தானிருந்த கால மெப்போ
...நலமாகத் தானிருந்த பொழுது மெப்போ.
தானாடி என்னுடனே ஓடி யாடி
..தயங்காமல் என்மழலைப் பேச்சி லாடி
ஆணாக எனைவளர்த்த அன்னை கூட
..அழ்காக இருந்திருந்த நாட்க்ள் தானா..
தேனாகப் பலவாறாய்ப் பேசி வானில்
..திசைக்கெல்லாம் பறந்திருந்த இளமைப் போதா
ஊனாசை உயிராசை எல்லாம் கொண்டே
..உறங்காமல் ப்லவாறாய்ச் செல்வம் சேர்த்து
காணாமல் போய்விட்ட வெள்ளை உள்ளம்
..கண்களிலே மறுபடியும் தெரியுங் காலம்
வீணாசை என்றேதான் அறிந்த போதும்
...வேடிக்கை தனைக்கூட்டும் விந்தை நெஞ்சால்
தானாகத் தோன்றிடுமோ என்றே உள்ளே.
..தவித்தபடி கேட்கின்றேன் விடைதான் எங்கே...
எங்கே உளது உணவென்று
உயிரினங்கள் முகர்ந்துவிடும்
வண்டறியும் தேன் இருக்கும்
மலர்களின் இருப்பிடம்
வீசும் நறுமணத்திலே
இரவு மலர்களின் வெண்மை
எளிதாய் கண்டுபிடிக்கவே
தேனை கொடுப்பதின் விளைவு
மகரந்த சேர்க்கையல்லவோ
தானும் பிழைத்துப் பெருகி
தன் சங்கிலி கண்ணிகளும்
வலுவாய் நலமாய் தொடர
அமைந்த அழகிய ஒழுங்கை
குலைக்கிறான் பாவி மனிதன்
மனிதனைக் கட்டுப்படுத்த வேண்டும்..
என்ற தலைப்பில் பேச வந்தன மிருகங்கள்..
மனிதன் மிக மோசம்
என்றது ஆடு
என்றது மாடு
என்றது கோழி..
கடைசியாய் வந்த நாய்
மனிதன் மிக நல்லவன் எனச் சொல்லி
வள் எனக் குலைத்துப் பாய
கலைந்தன கூட்டம்
கூட்டம் வேண்டுமா கொண்டாடிக் களிக்க
அணிகலன் அலங்காரமுடன் அளவளாவ
அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்திருக்க
மனம் லேசாகி கவலைகள் மறந்துவிட
தன்னம்பிக்கையும் தெம்பும் ஊற்றெடுக்க
போதுமே அழ ஆதரவாய் ஒரு தோள்
தோள்
இல்லை தோள்கள்
கொஞ்சம் தேன் கொஞ்சம் வெண்ணெய்
இரண்டும் அள்வாய்க் க்ல்ந்த நிறம்...
நிறைய அழகாயிருந்ததாலோ என்னவோ
அழகிய திருஷ்டியாய்
இரண்டு அம்மைத் தழும்புகள்..
அதுவும் அழகாய்த்
தெரியும் வ்ண்ணம்
கையில்லாமல் ரவிக்கோ என்ன பெயரோ
அதில் வருவாள்
அக்காவின் நண்பி
கம்லா நாக்ராஜ்ராவ்...
வேலை சேர்ந்த புதிது
அன்னிய தேசம்
அக்காவின் வீட்டில் ஜாகை..
பெண்களைப் பார்க்காத கண்கள்...
இருந்தும்
வீட்டுக்கு வரும் அவர் மேல்
சின்னதாய் ஈரவிழிப் பார்வைகள்
படியும்...
நல்ல பிள்ளை எனக்
காட்ட
ஏன்க்கா ஏன் இது இப்படி வருது
எனக் கேட்பேன் மதுரை பாஷையில்..
ஒன்ன யாரு பாக்கச் சொன்னா
அவ்ளுக்கு ரெண்டு குழந்தை
இருக்காக்கும்
படவா ஒழுங்கா இரு
திட்டிய ப்டியே செல்வாள் அக்கா...
இருந்தாலும் கைகள்..
கொழுக் மொழுக்கென
வ்ரம்பு மீறாமல்
பார்ப்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான்..
பழைய உவமையான
வாழ்க்கைச் சக்கரம் சுழன்று
எனக்கானவள் வந்த போது
அவ்ளிடமும் சொல்லிவிட்டேன்...
எனில்
நான்
ப்ளாஸ்டிக் ஃபோல்டர் போல
தூய்மையானவன் எனத் தெரிவதற்காக..
(ஏய்..கள்ளா..)
மறுபடியும் காலம் கடமையைச் செய்ய
இருபதாவது திருமண ஆண்டு இப்போது...
முந்தா நாள் வந்தாள் ஒரு பெண்..
சின்னவள்..முகம் கறுத்திருந்தாலும்
சிவ்ந்தவள்...
என் மனைவியின் மாணவி...
அதே
கைகளை மறைப்பதை
மறுதலித்த உடை...
ஜாடையாய் நோக்குகையில்
கொஞ்ச்ம்
தேக்கு மரம் நினைவில் வந்தாலும்...
அதுவும் அழகு தான்...
வழக்கம் போல்
மனைவியிடம்
பாவ மன்னிப்பா..கண்காட்சிக்கு நன்றி நவிலலா
எனத்தெரியாமல்
கொஞ்சம் கடுகு மிளகு உளுத்தம் பருப்பு சேர்த்து
அப்பாவியாய்
ஏன் இது இப்படி டிரஸ் பண்ணிக்குது
எனச் சொன்ன போது
என்னவள் ஒரே ஒரு பார்வை...
பின் சொன்னாள்...
எந்த வயதானாலும்
ஆண்க்ள் ஆண்க்ள்தான்..
ஆண்கள்தான் இங்கு ஆழ் உறக்கத்தில்
சுற்றும் பூமியில் எத்தனை சுழற்சிகள்
ஆயின் இவரோ கிணற்றுத்தவளைகள்
காண்பது மிடுக்கான மிராசுக் கனவுகள்
வீசுவது அதே ஆபாச வசவு வார்த்தைகள்
அரதப்பழசான அந்த ஆணாதிக்க ஆயுதங்கள்
அவையோ இன்று வெறும் அட்டைக்கத்திகள்
எப்பவோ தொலைந்தன தொழுவத்து மாடுகள்
மாடுகள் தான்
எனக்குப் புகழைத் தந்தன..
பேச்சி பேச்சி எனப் பாடியே
மாடுகளையும்
மனிதர்களையும்
மயக்கியது ஒரு காலம்...
மக்கள்
என் பாட்டை ரசித்து
உயரத்தில் வைத்தார்கள்..
வண்ணமயமான அந்தக் காலத்தில்
கண்ணைப் பறிக்கும் வண்ணச் சட்டைகள்
அணிந்து பயமுறுத்தி விட்டேன் போலும்..
படக்கென
இறக்கியும் விட்டார்கள்..
காரணத்தைத் தேடியதில்
வயது கூடியது தான் மிச்சம்..
அரசியலில் சேர்ந்தால்
பிழைக்கலாம் என
சேர்ந்தேன்..
பின் தான் புரிந்தது
கைக்குழந்தையான நான்
பெரிதெற்கெல்லாம்
ஆசைப்படக் கூடாதென..
இப்போது யோசித்தால்
மெலிதாகத் தெரிகிறது.
எனக்கு
திரைப்படத்திலும்
வாழ்விலும்
வ்ராது நடிப்பு
நடிப்பு அத்தனையும் நடிப்பு
மகனிடம் பசப்புறா மாமியா
மண்டூகமாய் நம்பும் மனுஷன்
மாட்டிக்கிட்டு முழிக்கிறா பாவி
முக்காக் கிழவிக்கு யோகமில்ல
முடிஞ்சிக்க முடியல முந்தானியில
முந்தானியை
ஒருகை இறுக்கிப் பிடித்திருக்க
ஒருகை என்னவளைச்
சுற்றிப்போட்டிருக்க
ஒரு கால் மட்டும் போட்டு
கண்ணை இறுக்கி மூடித்
தூங்கும் மகளைப்பார்த்து
என்னவளை எழுப்பமுடியாது என்ற
இயலாமையால் சற்றே கோபம் வந்தாலும்
மகளின் தலையை வ்ருடி
அந்தப் பக்கம் படுத்தால்
பச்ச்சென்று கன்னத்தில் முத்தம்
குட் நைட் டாடி
திரும்பிப் பார்த்தால் ஆழ்ந்த உறக்கம்..
புன்முறுவலுடன் என் குட்டியைப்
பார்த்தபடியே இருந்ததில்
போன இடம் தெரியவில்லை என் நித்திரை...
நித்திரை வருவதில்லை
குத்துப்பட்டவனுக்கும்
குறை வயிற்றுக்காரனுக்கும்
குற்றம் புரிந்தவனுக்கும்
பிறழாத நெறி கொண்டவன்
படுத்தவுடன் உறங்குவான்
உறங்குவான் அல்லது
உறங்குவாள் நின்ற படி...
கண்கள் திறந்த படி
சுற்றி ஒரு ஆள் இருந்தாலும்
பலர் இருந்தாலும்
கவலை இல்லாமல்
ஏதும் பேசாமல்
கொஞ்சம் தயக்கத்துடனும்
இறுக்க முகத்துடனும்
சுவாசம் கொஞ்சம் கனமாய் வர
மேலே அல்லது கீழே
பார்வை பார்த்தபடி..
சில நிமிடங்களைக்
கஷ்டமாய்க் கழித்தே...
பின்
நின்ற பின்
டபக்கென வெளிவந்து
படக்கென விரைவர்..
வேறெதில்...
லிஃப்டில் தான்
லிஃட் கேட்ட விரல் வெண்டைபிஞ்சென்றால்
மவனே உஷாரு நேரமோ நட்ட நடு நிசி பாரு
ஐவேயில அழகான மோகினி பிசாசுகளும்
சிங்காரிச்ச ரத்தகாட்டேரிகளும் நிக்குதாம்
நிக்குதாம்..
அப்பச்சி சொல்லிச்சு..
என்னவாக்கும் விசேஷம்...
செளக்கியமா கீதா வூட்டுல...
வட்டார வழக்கில்
கேட்கையில் தனி சுகம் தான்..
இலக்கணமெல்லாம் பார்க்க வேண்டாம்..
அதுவும் என்மகள்..
அப்பா
நீனே இதச் செஞ்சு கொடு
எனக் கேட்டதில்
உண்டோ இலக்கணப் பிழை..
பிழை இருந்தது மன்னன் தீர்ப்பில்
விலை தந்தது மதுரை மாநகரம்
நிழலை போல் தொடருமே எந்நாளும்
தவறின் பின்னே தவறாத தண்டனை
தண்டனை தான்...
இல்லையா பின்னே
அலுவ்ல்க்த்தில் சின்ன விருந்து..
சாதாரணம் தான்..
உற்சாக பானமெல்லாம் இல்லை..
நல்ல உணவு...
ஒரு மாறுதலுக்காக ரத்னா கஃபே
வெங்காய வ்டையும்
பொங்கல் கொத்சுவும்
காய்கறி ப்ரியாணியும்
க்லகலப்பாய் ரைத்தாவும்...
தொப்..என தொப்பைக்குள்
தள்ளிவிட்டு
வீட்டுக்கு வந்த பின் தான் நினைவு...
அவள்
செய்வதாகச் சொன்ன
சேவை, மோர்க்குழம்பு..
சற்றே பொய்சொல்லி
கொஞ்சமாகக் கொறித்திருக்கலாம்..
ஓட்டை வாய்..
சொல்லிவிட்டேன்..
அப்படியா அதனாலென்ன..
என்றவள்
நிறுத்தி நிதானமாய் அமர்ந்து
சப்புக்கொட்டி சாப்பிட்டு விட்டு
தொலைக்காட்சி பார்த்திருந்த என்னிடம்
ரொம்ப நேரம் முழிக்காதீஙக்..
காலாகாலத்தில தூங்குங்க - சொல்லி
ப்டுக்கையறைக்குப்
போயே போய் விட்டாள்..
இதற்கு அவள்
திட்டியிருக்கலாம்
அழுதிருக்கலாம்
முகம் தூக்கி வைத்திருக்கலாம்...
அடித்தும் கூட இருக்கலாம்...!
ரொம்ப உறுத்துகிறது...
உறுத்துகிறது சிறு தூசு கண்ணுக்குள்
உண்ட ஒரு துணுக்கு பல்லிடுக்கில்
உதித்த ஒரு சந்தேகம் மனதில்
உள்ளிருந்து உயிர் வதைக்கும்
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதய்ம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
உரைப்பாள் பல கதைகள்
கரைப்பாள் பாவி மனதை
மாமி நாத்தியுடன் மனைவி
பிணக்கின்றி வாழ முடியாதா
இல்லறவியல் அறியா பாமரன்
பல கலை கற்றும் கல்லாதவன்
கல்லாதவன் என
பக்கத்து வீட்டுப் பரமசிவத்தை
அவன் அப்பா திட்டுவார்..
தண்டச்சோறு
உருப்படாவெட்டி
இன்னும் ப்ல அடைமொழிகள்..
காலப்போக்கில்
ஏதோ வேலையில் சேர்ந்து
அதை விட்டு
கொஞ்ச்ம வியாபாரம் பண்ணி
வாழ்ந்து காட்டியதும்
அவருக்குப்பெருமை..
படிக்காட்டி என்ன
ஜெயிச்சுட்டான்ல...
கல்லாதவர்கள்
கற்கவில்லை அல்லது
கற்க மறுத்திருந்தாலும்
கற்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
வாழ்க்கைப் பாடம்..
பாடம் படிக்கும் மாணவியாய்
பாச மகள் பகிர்ந்து கொண்டாள்
பரவசமான முதல் பனி மழையை
பூப் போல் கையில் விழும் வடிவம்
பொலிவாய் செதுக்கிய நட்சத்திரம்
பொசுக்கென கரைந்துவிடும் மாயம்
பொம்மை மனிதன் செய்யும் கூட்டம்
பாகுபாடின்றி பெரியவரும் சிறாரும்
பளிங்கு போல் எங்கும் ஒரு நிர்மலம்
பரிசுத்தமான நிகழ்வதுவோர் அதிசயம்
பன்முக இயற்கையின் தூய தரிசனம்
பரவிக்கிடந்தது அங்கே ஒரு பயபக்தி
பயபக்தியுடன் தான்
கண்களிலே கற்பூரம் ஒற்றி
துளி துளிர்த்திருந்த நெற்றியில்
குங்குமம் இட்டுக் கொண்டு
பின் பார்க்க நானும் இட்டுக்கொள்ள,
திரும்பி சுற்ற ஆரம்பிக்க
பின்தொடர்ந்தால்
மெளனமாய் இரு சுற்ற்ல்..
பின் தூணுக்கருகில் அமர
நானும....
கோயில் என்ப்தால் திட்டாமல் இருக்கிறேன்..
ஏன் தாமதம் என பார்வையில் கேட்க
சைகையில்
ஏகப்பட்ட வாகனங்க்ளுக்கிடையில்
சிக்கிக் கொண்டதைச் சொல்ல
அதுவ்ரை எங்களைப் பார்த்திருந்த சிறுவ்ன்
என்னங்க்ணா ரெண்டுபேரும் ஊமைங்களா
எனக் கேட்க
பட்டென வெடித்த சிரிப்பில்
கரைந்தது கோபமும் நாடகமும்..
நாடகமும் முடிந்தது
திரையும் விழுந்தது
கூட்டம் கலைந்தது
அடுத்த வேலை என்ன
அடுப்பில் உலையை வை
இருப்பவர் வயிறை கவனி
கவனிப்பு நல்லது தான்
அதற்காக இப்படியா
இளவயது பாவாடை தாவணி மங்கை
பந்தியில்
அமர்ந்திருந்த வாலிபனுக்கு
சரமாரியாகக்
கண்களாலும் கைகளாலும்
பரிமாறிக் கொண்டிருக்க..
அந்தப்பக்கம் அமர்ந்தபடி பார்த்த நான்
பொறுக்கமுடியாமல் கேட்டேன்..
அந்தப் பொண்ணு அந்த ஆளோட காதலியா..
அருகிலிருந்தவ்ர் முறைத்தார்..
வாய் கூசாம இப்படிக் கேக்கறீங்களே..
அந்தப் பொண்
அவரோட மச்சினி...!
மச்சினி பாவம் கத்தி அழுவுறா
கண்ணீரை அருவியா கொட்டுறா
கையைக் காலை உதைக்கிறா
குஞ்சுப் பாப்பா கன்னத்தை
கொஞ்சிய மச்சானின் மீசை
குத்துனதுதான் குத்தமா போச்சு
போச்சு போச்சுவென்றே பொங்குவதும் போதாமல்
...பேச்சில் நல்வார்த்தை சிறிதேனும் சொல்லாம்ல்
வீச்சு வீச்சென்றே விள்ங்காமல் கத்துவதும்
...வில்லி நாயகனின் நாயகியை வீழ்த்திடவே
பூச்சி பிடிக்கின்ற பல்லியைப்போல் காய்நகர்த்தி
... பொன்னும் மணிநகையும் புடவையும் தானுடுத்தி
சூழ்ச்சி செய்வதையும் விடாமலே பார்த்திடுவார்
...சோம்பல் மாந்தரவ்ர் தொலைக்காட்சித் தொடரினிலே..
தொடரினிலே எண்ணற்ற கண்ணிகள்
பொருளுள்ள ஆதாரமான காரணிகள்
ஓரிழையில் கோர்த்த உயிரினங்கள்
அழிக்கக் கிளம்பிய நாம் அறிவிலிகள்
அறிவிலிகள்..
கடைசிப் பெஞ்ச் மாணவர்களைப்
பார்க்கும் போதெல்லாம்
தமிழையா சொல்வார்..
கொஞ்சமாவது படிக்கிறார்களா..
நீங்கள் அவர்களைப் பார்க்காதீர்கள்
படித்து முன்னேறுங்கள்...
ஒரு நாள்
அவர்களில் ஒருவன்
அறிவிலிக்குப் பொருள் கேட்டு
அறிந்த பின்
ஐயா மறுபடி விளித்த போது
சொன்னான்..
“ஐயா நாங்கள் அவ்விதமில்லை..
மனிதனாகப் பிறப்பதே அரிது
என்று தானே நீர் சொன்னீர்..
நாங்களும் மனிதர் தாமே’
ஐயா பதிலேதும் சொல்லவில்லை..
ஏனெனில்
அவன் புரிந்து சொல்கிறானா
புரியாமலா எனத்
தெரியவில்லை அவருக்கு...
அவருக்கு கொத்தமல்லி துவையல் பிடிக்கும்
தலை நிறைய மல்லிகைப்பூவை சூட்டி
தழையத் தழைய பட்டுடுத்தினால் பிடிக்கும்
காப்பியில் சீனி தூக்கலாய் இருக்க வேண்டும்
கலைந்து கொண்டிருக்கும் அந்த நாள் சித்திரம்
காணாமல் போய்க்கொண்டிருக்கும் பழைய பத்தினிகள்
அவளுக்கு காப்பி மிதமான சூட்டில் இருக்க வேண்டும்
உடுப்பை சுருக்கமின்றி தேய்த்து வைக்க வேண்டும்
அவள் பேசும் போது குறுக்கிடக்கூடாது சொன்னதை
சிரமேற்கொண்டு கச்சிதமாய் முடித்திட வேண்டும்
கூடச் சென்று வாங்கியதை சுமந்து வரவேண்டும்
கொடுத்துவைத்தவர்கள் பூரிப்பில் இன்று பதிகள்
பதிகள்
அவ்வண்ணம் மாறிய பிறகு
தொலைத்தவை ஏராளம்..
சுதந்திரம்,
பேச்சு,
இன்ன பிற..
இருப்பினும்
அவ்வப்போது
சதிகளை வழி நடத்துபவர்களும்
அவர்கள் தான்
சில சமயங்களில்...!