I saw todays episode of Kolangal... What has happend to Chandra and her baby? She was married to Thiruvenkadams son...
Printable View
I saw todays episode of Kolangal... What has happend to Chandra and her baby? She was married to Thiruvenkadams son...
Pooja (JN#1,S-1 winner) acted in that roll chandra. now she got married and said good bye to serials (for time being...? :lol: :lol: ). So chandra's roll may not come further. If so, may be some other girl will act (with title 'ini chandravaaga ivar' :shock: :evil: :oops: )Quote:
Originally Posted by MEDIA ASIA
I have been watching Kolangal regulsrly, but few months i hav stopped watching it since it was really boring......but after reading ur postings i think it has turned to his original.
i think i should watch regularly...
'கோலங்களி'ல் சில திருப்பங்கள்...
அபி பார்த்து குடிவைத்த வீட்டிலிருந்து (ரவுடிகள் தொல்லையால்) வெளியேறி, இப்போது மனோ, அனு, குழந்தை மூவரும் ராஜேஷ் - ஆர்த்தி வீட்டில் குடியேறி விட்டனர்.
திருவேங்கடமும் அவரது மகனும் சேர்ந்து அர்ஜுனுக்கு மூளை சலவை செய்து, ஆதிக்கு எதிராக திருப்பி விட்டனர். போதாக்குறைக்கு தன் மனைவி ரேகாவும் ஆதியும் பழகும் விதமும் அர்ஜுனுக்கு உறுத்த, அது பற்றி ரேகாவிடம் கேட்க, தன் கனவனிடம் சொல்லக்கூடாத வார்த்தையை அவள் சொல்லுகிறாள். (உன் அண்ணன் ஆதிக்காகத்தான் உன்னையே திருமனம் செய்துகொண்டேன். என் மனதில் நீ இல்லவே இல்லை). ஆனால் அவளது இந்த எண்ணம் ஆதிக்கு தெரியாது.
அதிர்ச்சியடைந்த அர்ஜுன், உதவிக்கு அண்ணி உஷாவையும் அவலது பெற்றோரையும் சந்திக்கிறான். முதலில் வீட்டுக்குதிரும்ப மறுத்த உஷா, அர்ஜுனும் அவளது பெற்றோரும் வற்புறுத்த, திரும்ப வீட்டுக்கு வர சம்மதிக்கிறாள்.
மற்றவர்களிடம் தான் எழுதியதை பிரசுரிக்க உதவி கேட்டு கேட்டு தோல்வியடைந்த ஆனந்திக்கு சொந்தமாகவே ஒரு பத்திரிகை அமைத்து தர அபி ஏற்பாடு செய்து, அதை ஆனந்தியிடம் தெரிவிக்க, ஆனந்திக்கோ ரொம்ப மகிழ்ச்சி.
தான் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரரும், அவரது மகளும் எந்த நோக்கத்துடன் தன்னை அணுகுகிறார்கள் என்று தெரிந்தும், தொல்ஸ் சும்மாயிருப்பது சரியில்லை. அவர்கள் மனதில் ஆசையை வளர்த்து ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள், தொல்ஸ் அந்த வீட்டைக் காலி செய்வது நல்லது.
hi guys. i used to be a big fan of this serial, but i missed a lot after i went to uni. can someone update to me what happened to the robotic bad police guy.. im a big fan of him and tozhar..
thanks.
Hi Arvind :)
Robotic bad police is no more, he was killed my shanti's husband
Thanks Arthi..
:( i'm sad, he was the main reason, which got me hooked to the show.. well
Don't worry Arvind, enjoy with ThiruvEnkadam's performance :lol:
im not watching the show nowadays, but will check out on my break..
the whole tozhar-police segment in ooty was so great..
yes, thozhar's characterization is superb
I agree with you. Thiruvenkadam always bring laughter to the table . :lol:Quote:
Originally Posted by Arthi
ஆனந்திக்கு வாக்களித்தபடி, அபி அவருக்கு தனியாக ஒரு பத்திரிகை துவங்கி கொடுத்துவிட்டார். ஆரம்ப விழாவில் தோழர் வழக்கம்போல செந்தமிழில் அமர்க்களம் செய்தார். அபியின் அம்மா ஒரு குழப்பவாதி, தொட்டதெற்கெல்லாம் பிரச்சினை. 'முதலில் யார் குத்துவிளக்கேற்றி துவங்குவது என்பதில் ஆரம்பித்து, ஆதியைப்பற்றி ஆனந்தி தன் பத்திரிகையில் செய்தி போடக்கூடாது' என்பது வரை அந்த அம்மா எதற்கெடுத்தாலும் பிரச்சினை.
அர்ஜுனுக்கு சேர வேண்டிய பாதிசொத்து விஷயமாக ஆதியிடம் நியாயம் கேட்கப்போன இடத்தில் ஆதி, தன் அடியாளான தேவராஜ பாண்டியனையும் அவனுடைய ஆட்களையும் வைத்து, தன் சித்தப்பா திருவேங்கடத்தையும், அவரது மகனையும், தன் தம்பி அர்ஜுனையும் அடித்து விரட்டியதுடன், திருவேங்கடம் முன்பு தன்னிடம் மிரட்டி வாங்கிய காரையும் தன் வசப்படுத்தி விட்டான்.
ஆதி இவ்வளவு ஆணித்தரமாக பேசுவது, திருவேங்கடத்துக்கு (ஆதி முழு சொத்தையும் தன் அண்ணனை ஏமாற்றி எழுதி வாங்கி விட்டானோ என்று) சந்தேகத்தை ஏற்படுத்த, அது பற்றி தெரிந்துகொள்ள, உஷா வீட்டில் தங்கியிருக்கும் தன் அண்ணன் ஈஸ்வரனை (தன் மகன் மற்றும் அண்ணன் மகன் அர்ஜுன் ஆகியோருடன்) சந்திக்கிறார். ஆதிக்கு தான் எந்த சொத்தையும் எழுதிக்கொடுக்கவில்லை என்று ஈஸ்வரன் மறுக்கிறார். (எந்த இடத்துக்கு போனாலும் 'திருவேங்கடம் சித்தப்பா' தன் அரசியல் சரவெடிப்பேச்சை அவிழ்த்து விடுவது நல்ல தமாஷ்).
ஈஸ்வரன் எழுதிக்கொடுக்கவில்லையென்றால் ஆதி எப்படி இவ்வளவு துணிச்சலாக பேசுகிறான் என்பதை அறிய, ஆதியின் கைத்தடி கிரியை மடக்கி விஷயத்தை வாங்கலாம் என்று அர்ஜுன் சொல்ல, அதற்காக புறப்படுகிறார்கள்.
தன்னிடம் பெரிய காண்ட்ராக்ட்டை ஒப்படைக்க விரும்பும் புதிய கம்பெனியினர், அது பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ள வருமாறு அபியை அமெரிக்காவுக்கு அழைக்க, முதலில் தயங்கிய அபி, பின்னர் தொல்ஸ், விஸ்வநாதன் ஆகியோரின் வற்புறுத்தலுக்குப்பின், அமெரிக்கா போக சம்மதிக்கிறாள். (சும்மா இரண்டு மாதங்களுக்குத்தான்). அதுவரை அலுவலக பொறுப்பை கவனித்துக்கொள்ளும்படி தொல்ஸைக்கேட்க, தொல்ஸ் மறுத்து, அபியின் குடும்பத்தில் யாராவது அந்த இடத்தில் இருக்க வேண்டுமென்றும், தான் உடனிருந்து முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறி அந்த போஸ்ட்டுக்கு ஆர்த்தியை சிபாரிசு செய்கிறார். அப்போது ஆர்த்தியைப்பற்றி தொல்ஸ் பேசுவதை தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் இடையில் மட்டும் கேட்கும் கிருஷ்ணன், அபி இடத்துக்கு ஆர்த்தி வருவதை தொல்ஸ் விரும்பவில்லை என்று முடிவுக்க வருகிறார்.
அக்காவைக் காண ஆஃபீஸுக்கு வரும் ஆர்த்தியிடமும் இதை ரகசியமாக சொல்லி விடுகிறார். (இந்த கிழவனுக்கு ஏன் இந்த வேலை?). இதைக்கேட்டதும் வீட்டில் சூரப்புலி மனோ கொதிக்கிறான். தொல்ஸைக் கேட்கப்போவதாக சீறும் மனோவின் கோபத்தை, மனைவி அனு, அபியின் பக்கம் திருப்பி விடுகிறாள். மனோவை தன் இடத்தில் வைத்து விட்டுப்போக மனமில்லாமல், ஆர்த்தியை அபி நியமித்ததாக தூபம் போட, மனோவின் மனம் மாறுகிறது.
பெண்கள் மற்றும் மதுவின் மீது 'கிரி'க்கு இருக்கும் வீக்னஸைப்பயன்படுத்தி, ஒரு லாட்ஜ் அறைக்கு அழைத்துப்போய் 'ஆதி எல்லா சொத்துக்களையும் எப்படி அடைந்தான் என்பதையும், அதற்கு எப்படி ஒருத்தன் ஈஸ்வரனைப்போலவே பொய்க்கையெழுத்துப்போட்டான் என்பதையும், அதற்கு சங்கரபாண்டியன் உடைந்தையாக இருந்தார் என்பதையும் தெரிந்துகொண்டு விட்டனர் அர்ஜுனும் அவன் சித்தப்பா மகனும். போதையில் அனைத்தையும் உளறி விட்டதை தெரிந்துகொண்ட கிரி, இதை ஆதியிடம் சொல்ல வேண்டாமென்றும், சொன்னால் அவன் தன்னை பிணமாக்கி விடுவான் என்றும் கெஞ்ச, அவனை அனுப்பி விடுகின்றனர். பொய்க்கையெழுத்துப் போட்டவனின் அட்ரஸ், போன் நம்பர் ஆகியவையும் கிரியிடமிருந்து இவர்ககளுக்கு கிடைத்து விடுகிறது.(இதைச்சொல்லி பயமுறுத்தியே, பின்னர் கிரியிடம் இன்னும் நிறைய விஷயங்களைப்பெற வாய்ப்புள்ளது).
அபி அமெரிக்கா புறப்பட, அவருக்கு வேண்டியவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு வருகின்றனர். (எந்த ஊர் விமான நிலையம் அது? ரயில்வே ஸ்டேஷனை விட மோசமாக இருக்கிறது. ஒருவேளை ஏதாவது ஓட்டலின் ரிசப்ஷன் கவுண்ட்டரை விமான நிலையம் போல காட்டினார்களோ). அனுவைத்தவிர அத்தனை பேரும் ஆஜர். இரண்டுமாதம் போய் வருவதற்குள், அபி ரொம்பவே ஃபீல் பண்ணுகிறாள். அவங்க அம்மா சத்யப்ரியா அதைவிட. தன் மகள் ஏதோ சந்திரமண்டல பயணம் போவது போல ஓவராக அலட்டலும் அழுகையும்.... :cry2: :cry2: :cry2:
ஒருவழியாக அபி புறப்பட்டாள்.
ராஜேஷ் - மனோ இணைந்து துவங்கும் 'ஆர்த்தி ட்ராவல்ஸ்' துவக்க விழா.
திருவேங்கடம் சித்தப்பா ஒரே அலம்பல். காரில் வந்து இறங்கும் தன்னைக்கண்டதும், தொண்டர்கள் கோஷம் போடுவதும், அவர்கள் மத்தியில் ட்ராவல்ஸ் பற்றி தன்னுடைய வழக்கமான அரசியல் பேச்சை எடுத்து விட்டு உரையாற்றுவதும் சூப்பர்.
துவக்க விழா நடக்கும்போது, அமெரிக்காவிலிருந்து போனில் வாழ்த்துச்சொல்லும் அபியிடம் பேச மனோ மறுத்து விட, அதைத்தொடர்ந்து ஆனந்திக்கும் மனோ, அனு இவர்களுக்கிடையே நடக்கும் வாக்குவாதத்தில் ஆனந்தி வெளிநடப்பு.
அல்டாப்பு மேனகா, தன் உதவியாளரான ஜாஸ்மினிடம் ஏதோ ரெட்டி என்பவனைப்பற்றிய விவரங்களைக்கேட்டுக்கொள்கிறாள். இடையே, தன்னிடம் பணியாற்றும் ரவிக்கு டோஸ் வேறு. (பொழுதன்னைக்கும் 'லேப்டாப்'பை மடியில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தால் அவர் பெரிய தொழிலதிபரா?? :lol: )
தேவராஜ பாண்டியனைக்காணவரும் ஆதி, அங்கு பாஸ்கர் இருப்பதைப்பார்க்கிறான். தேவராஜனின் தூண்டுதல் பேரில் இருவரும் சேர்ந்து பிஸினெஸ் செய்ய முடிவெடுக்கின்றனர். (அதென்ன பெரிய பெரிய புள்ளிகள் சந்திக்கும் இடம் ஏதாவது கட்டிடத்தின் மொட்டைமாடியாகவே இருக்கிறது? :D )
சரி அடுத்த வாரம் பார்ப்போம்.... :wave:
Abi will be away fro two months, so they might bring Ganga back. After all Ganga was introduced to extend the story while Devvayani was on maternal leave.
:shock: drama star panruppa avanga marriage koda pannula-nu nenakuren.. now 2nd child, :lol:Quote:
Originally Posted by gta129
so Abi won't return back ??Quote:
Originally Posted by saradhaa_sn
:lol: :lol:
expecting .. :roll:Quote:
Originally Posted by saradhaa_sn
She got married a while ago. Way before the serial began.Quote:
Originally Posted by HBK
Saradhaa madam, thanks for ur updates, keep posting :D
enekkum abi character pidikathu...
Quote:
Originally Posted by Braandan
Mathan
ANY IMPROVEMENT IN KOLANGAL? :roll:
அபியும் தொல்ஸும் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்ட கிருஷணன், அபியின் இடத்தில் ஆர்த்தி தற்காலிகப் பொறுப்பேற்பது தொல்ஸுக்கு பிடிக்கவில்லையென்று தவறுதலாக ஆர்த்தியிடம் சொல்லி வைக்க. ஆர்த்திக்கு தொல்ஸ் மேல் உள்ளுக்குள் கோபம் வருகிறது. அதை வெளிக்காட்டாமல் தன் நடவடிக்கைகளில் காட்டுகிறாள். தனக்கு கிருஷ்ணன உள்பட அனைவரும் 'மேடம்' என்ற அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடுகிறாள். தொல்ஸை இன்ஸல்ட் பண்ணும் முகமாக, கிருஷ்ணனுக்கு சம்பளம் உயர்த்தி, அவருக்கு தொல்ஸ் கேபினிலேயே டேபிள், சேர் போடுகிறாள்.
இந்நிலையில், ஆதி எப்படி தந்தையின் சொத்துக்கள் முழுவதையும் தன் பெயருக்கு மாற்றினான் என்பதை கிரியின் மூல்மாக தெரிந்துகொண்ட திருவேங்கடம், சதீஷ், அர்ஜுன் மூவரும் பொய்க்கையெழுத்துப்போட்ட குலோத்துங்கன் என்பவனைப்பிடித்து தங்கள் கஸ்டடியில் வைத்து அவனிடமிருந்து உண்மையை வரவழைத்து அதை மொபைல் போனில் பதிவு செய்கின்றனர். ஆக்ரோஷத்துடன் ஆதியைச் சந்தித்த அர்ஜுன், ஆதி செய்த சதிவேலைகள் தங்களுக்கு தெரிந்து விட்டது என்று உண்மையைப் போட்டு உடைக்கின்றான். (இது எதுக்கு தேவையில்லாமல் ஆதியை உஷார் படுத்தும் வேலை?). ஆதி உஷாராகி அர்ஜுனை மடக்க வழியை யோசிக்கிறான்.
தந்திரத்தில் குள்ள நரியான ஆதி, தம்பி அர்ஜுனின் மனைவி ரேகாவை விட்டு அர்ஜுன் மேல் வரதட்சணை கொடுமை கேஸ் பதிவு செய்ய வைக்கிறான். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் உஷாவின் வீட்டுக்கு வந்து தேடி விட்டு ஈஸ்வரனையும், உஷாவையும் மிரட்டி விட்டுப்போகின்றனர். அவர்கள் போனதும் உஷா அர்ஜுனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி அவனை போலீஸ் கண்ணில் மாட்டாமல் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கிறாள்.
(இந்த இடத்தில் நமக்குத் தோன்றுவது, ரேகாவைக்கொண்டு அர்ஜுன் மேல் வரதட்சனை கொடுமை கேஸை ஆதி பதிவு செய்திருக்கும்போது, அவனை மடக்க உஷாவைக்கொண்டு ஆதியின் மேல் அதே கேஸை பதிவு செய்தால் என்ன?. அர்ஜுன் கைதானால் ஆதியும் கைதாவான் அல்லவா?. அதற்கு பயந்து ரேகாவின் கேஸை வாபஸ் வாங்குவான் அல்லவா?).
சரி, தொல்ஸ் வேறு ஏதாவது ஐடியா வைத்திருப்பார்....
வேனில் போகும்போது தன் அண்ணனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆவதைப்பார்க்கும் ராஜேஷ், அண்ணனுக்கு ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவனையும் அவன் குடும்பத்தையும் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். அங்கு தன் மாமியாரும், ராஜேஷும், ஆர்த்தியும் தங்கள் மேல் பாசம் காட்டுவதை உணர்ந்த கலா அதில் நெகிழ்ந்துபோய் அவர்களோடு தங்கிவிட சம்மதிக்கிறாள். மனோ, அவன் மனைவி அனு ஆகியோரும் அந்த வீட்டில்தான் தங்கியிருக்கின்றனர். எப்போ என்ன பூகம்பம் வெடிக்கும் என்பது தெரியவில்லை.
ஐந்துநட்சத்திர ஓட்டல் கட்டுவதற்கு இடம் வாங்க தம்பி ரெட்டியிடம் சென்று அவமானப்பட்டு வந்த மேனகா, இப்போது அண்னன் ரெட்டியை அணுக, விஷயம் தெரிந்த பெரிய ரெட்டி தம்பியை விட காட்டமாக அவளைத்திட்டி அணுப்பிவிடுகிறான். இதனிடையில் பெரிய ரெட்டியின் மகளுடைய காதலனைத் தெரிந்துகொண்ட மேனகா, அவர்களை வைத்து ரெட்டியை மடக்க, அவனுக்கு தன் கம்பெனியில் பெரிய உத்யோகம் தருகிறாள். (கொக்கு தலையில் வெண்ணை வைத்துப்பிடிப்பது என்பது இதுதானோ..!)
("எதிர் கேள்வி கேட்காதே, நான் சொன்னதை செய்" என்ற ஆணவம் கலந்த வசனம் இரண்டு சீரியல்களிலும் மாறி மாறி கேட்கும். ஆம், "அங்கே" அரசி, "இங்கே" மேனகா).
அர்ஜுன் தன்னை எதிர்ப்பதற்கு பக்கபலமாக இருப்பது தன் சித்தப்பா திருவேங்கடம்தான் என்பதையறிந்த ஆதி, அவரை அடித்து நொறுக்க தேவராஜ் பாண்டியன் தலைமையில் அடியாட்களை அனுப்ப, அங்கே திருவேங்கடம் இல்லாததால், போன் பண்ணி கூப்பிடும்படி சாரதாவிடம் மிரட்ட, உடனே சாரதா புத்திசாலித்தனமாக கணவருக்கு போன் செய்வது போல் பேசிக்கொண்டே ஆனந்தியை போனில் அழைத்து விஷயத்தைச்சொல்கிறாள் (சாரதா என்றால் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் :lol: ). உடனே ஆனந்தி மற்றும் தோழர் பாலகிருஷ்ணன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் வந்து அங்கு நடப்பதை படம் பிடிப்பதுடன், ஆனந்தியும் தோழரும் அவர்களை மிரட்டி அனூப்பிவிடுகின்றனர்.
தோழரின் இடத்தில் ஆலோசனை செய்யும் ஆனந்தி, சித்தப்பாவையும், எவிடன்ஸான குலோத்துங்கனையும் தோழர் பாதுகாப்பில் விட்டு விட்டு, அர்ஜுனையும் சதீஷையும் அழைத்துக்கொண்டு அபியின் வழக்கறிஞரைப்பார்க்க செல்கிறாள்.
பாஸ்கரின் கல்குவாரியின் பழைய மேனேஜர், தன் முதலாளியைக்கொன்றது பாஸ்கர்தான் என்று முதலாளியின் மகள் (பாஸ்கரின் மனைவி) சங்கீதாவிடம் சொல்லப்போக, அதைப்பற்றி பேச்செடுக்கும் சங்கீதா பாஸ்கருக்கு சந்தேகம் வருவதுபோல பேசப்போக, அதுமட்டுமல்லாமல் தங்கள் ஆடிட்டரிடம் தன் பேரிலுள்ள சொத்து விவரங்களை தெரிந்துகொண்டு திரும்பும்போது, பாஸ்கர் அவளைப்பார்த்து விடுகிறான். (அவன் பார்த்தது சங்கீதாவுக்கு தெரியாது). உடனே ஆடிட்டரிடம் சென்று விவரத்தை அறியும் பாஸ்கர், இதற்கெல்லாம் பழைய மேனேஜர்தான் காரணமாக இருக்குமோ என்று சந்தேகித்து, தேவராஜ் பாண்டியனைக்கொண்டு மேனேஜரைத் தூக்கிவந்து செம்மையாக அடித்து, மிரட்டி அனுப்புகிறான். (பாவம் அந்த மேனேஜர். உண்மையைச்சொன்னதற்கு சங்கீதா வாங்கிக்கொடுத்த பரிசு :evil: ).
அடுத்த வாரம் பார்ப்போம்.......
Thank you Saradhaa fpr the whole updates
I thought Krishnan is innocent and good man but ...Quote:
Originally Posted by saradhaa_sn
purikiRathu..... :DQuote:
Originally Posted by saradhaa_sn
why so doubt?
Krishnan always starts these problems is office. He did it before too. I just can't remember the exact situation.
The episodes are going very interesting. I like watching Kolangal and they are doing it better than before. Interesting stories, and I'm looking forward to see how it will end :)
You can watch every new episodes of Kolangal recorded on w w w. london tamilvideo . com
தன்மகன் என்ன செய்தாலும் சரியென்று காஞ்சனா சப்போர்ட் செய்வது ஏனென்று தெரியவில்லை. அத்தனை பேர்ம் எதிர்த்து நிற்கும்போது, அவன் செய்வது அநியாயமாக இருக்குமோ என்ற எண்ணம் ஏன் துளி கூட வரவில்லை?.
அபியின் வீட்டுக்குப்போய் அனைவரிடமும் சண்டைபோடும் காஞ்சனாவிடம், அர்ஜுனை ஏமாற்றி அத்தனை சொத்துக்களையும் ஆதி அபகரித்துக்கொண்டான் என்ற விவரத்தை காஞ்சனாவிடம் ஏன் யாரும் சொல்லவில்லை?. அவள் என்னவோ தன் மகன் உத்தமன் என்று வாதாடும்போது, சரியான பதிலடி கொடுக்காதது ஏன்?. இத்தனைக்கும் அந்த இடத்தில் கற்பகம், ஈஸ்வரன், திருவேங்கடம், ஆனந்தி, சாரதா, அர்ஜுன், சதீஷ் என்று எல்லோரும் இருக்கிறார்கள். அவளுடைய கத்தலுக்கு பயந்து, 'எங்களுக்கு உங்க சொத்துக்களே வேண்டாம்' என்று சரண்டர் ஆகிறார்கள். எல்லோரையும் பணிய வைக்கும் ஆனந்தியால் கூட காஞ்சனாவை அடக்க முடியவில்லை.
வீட்டுக்குப்போனபின்னும் காஞ்சனா ஆதிக்கு தூபம் போடுகிறாள். அதைக்கேட்டு ரேகாவுக்கு சந்தோஷம். அவளைப்பொறுத்தவரை கட்டிய கணவன் (அர்ஜுன்) தன்னைவிட்டுப்போய் விட்டான் என்ற கவலையோ, பெற்ற அப்பன் (சங்கரபாண்டியன்) தலைமறைவாக திரிகிறான் என்ற வருத்தமோ இல்லை. பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சி மட்டுமே மேலோங்கி இருக்கிறது. (உருப்படும்). சரி... பழிவாங்கி விட்டு மொட்டை மரமாக நின்று என்னத்தை சாதிக்கப்போகிறாள்..?.
தனக்கு உதவிய கல்குவாரி முன்னாள் மேனேஜரை தன் கணவன் பாஸ்கர் அடியாட்களை வைத்து அடித்து துவைத்த பின்னும் (பாஸ்கருக்கு அந்த சந்தேகம் வரக்காரணமே தான்தான் என்று தெரிந்தும் கூட) தனக்கு மேலும் உதவ மறுக்கும் மேனேஜர் மேல் கோபமாக வெளியேறுகிறாள் சங்கீதா. (நல்லவேலை செய்தான் அந்த மேனேஜர். இந்த மாதிரி பைத்தியக்காரிகளை நம்பி உதவி செய்தால் தான் சாவது நிச்சயம் என்று தெரிந்துகொண்டு விட்டான்).
ரெட்டியின் மகளுக்கு மறுநாள் நிச்சயதார்த்தம். ஆனால் முதல்நாளே அவளைக்காணவில்லை. யாரோ போன் செய்து ரெட்டிக்கு தகவல் சொல்லி மிரள வைக்கிறான். அது மேனகாவின் வேலைதான் என்று தெரிகிறது.
கலா தன் பழைய வேலையைத் துவங்கி விட்டாள். அனுவுக்கும் ஆர்த்திக்கும் ஆகவில்லை என்று தெரிந்துகொண்டு, அனுவுக்கு சப்போர்ட் செய்வதுபோல பேசுகிறாள். தான் கொடுத்த வேலைகளை சரியாக செய்யவில்லையென்று ராஜேஷ் மனோவை கோபிக்கிறான். தன்னை யாரும் ஒரு பார்ட்னராக மதிக்கவில்லை என்பதில் மனோவை விட அனுவுக்கு ரொம்ப மனக்குறையாக இருக்கிறது. ஆக அந்த வீட்டில் ஒரு பூகம்பம் நிச்சயம்.
கொஞ்ச நாளைக்கு முன்னர், துப்பாக்கியும் கையுமாக மேனகாவின் வீட்டு வாசலிலேயே சுற்றிக்கொண்டிருந்த அந்த கிழவன் என்ன ஆனான் என்பது தொல்ஸுக்கே வெளிச்சம். (இன்னும் குறிபார்த்துக் கொண்டேயிருக்கிறானா? :lol: ).
பார்ப்போம்..... :wave:
Thanks Saradhaa for the weekly updates.
I agree with you that why Kanchana is so adamant.
" நாய் வாலை நிமித்த முடியாது" mathiri - like kala.
Baskar still get away with that murder. hmmmmm.
keep up your weekly updates.
once again thank you
கடந்த மூன்று எபிஸோட்களாக, மெயின் ட்ராக்கை விட்டு, ரெட்டி மகள் காதல் விவகாரத்திலேயே ஓடுகிறது. தன் மகளை நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் காணவில்லையென்றதும், பெரிய ரெட்டி குடும்பம் கவலையிலும் அதிர்ச்சியிலும் மூழ்குகிறது. இதனிடையே வீட்டு வேலைக்காரி மூலமாக மகளின் காதல் விவகாரம் தெரிய வர, ஆபத்துக்கு பாவமில்லையென மனைவியின் சொல்கேட்டு உதவிக்கு தம்பி ரெட்டியை நாடுகிறார். தான் உயிரை வைத்திருந்த அண்ணன் மகளுக்கு ஆபத்து என்று தெரிந்ததும், தம்பியும் பகையை மறந்து உதவ முனையும் நேரம், மர்ம போன்கால் வருகிறது. அவர்கள் மகளையும் அவளது காதலனையும் காண வேண்டுமென்றால் எண்ணூரில் இருக்கும் பாழடைந்த பங்களாவுக்கு வரச்சொல்கின்றனர்.
(வழக்கமாக பல்லாவரம் மலையடிவாரத்திலிருக்கும் பாழடைந்த பங்களாவுக்குத்தானே வரச்சொல்வார்கள்..?. அப்படீன்னா அந்த வசனத்தை திரைப்படங்களுக்கே விட்டு விட்டனரா..? ஓகே).
அங்கே இவர்கள் போய் நிற்கும்போது, மூன்று வயதுக்குழந்தைக்கு கூட தெரியும், யார் வரப்போகிறார்கள் என்று. ஆம், மேனகா வருகிறாள் தன் பாஷா படையுடன். காதலர்களுக்கு அவள்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், வெளியில் விட்டால் அவர்களுக்கு ஆபத்து என்றும் சொல்கிறாள். அவளால் நியமிக்கப்பட்ட அடியாட்கள் திடீரென வந்து, அந்தப்பையனுக்கு சாதகமாக வாதாடி கல்யாணம் செய்து வைக்க முயல்வதுபோலவும், மேனகா அவர்களைத் தடுப்பது போலவும் (ரெட்டிகளை ஏமாற்ற) ஒரு நாடகம் நடக்கிறது. ரெட்டிகளை தனியே அழைத்துப்பேசும் மேனகா, சீரியல் பார்க்கும் எல்லோரும் எதிர்பார்த்தபடி, மவுண்ட்ரோடு ப்ளாட்டை தனக்கு தந்தால் அவர்கள் மகளை அந்த ரவுடிக்கும்பலிடம் இருந்து மீட்டு தருவதாக சொல்கிறாள். அவர்களும் சம்மதிக்கவே, 'சரி நீங்க வீட்டுக்கு போங்க. உங்க மகள் வருவாள்' என்று சொல்லியனுப்பி விடுகிறாள்.
இப்போது காதலர்களை பிரிக்க வேண்டுமே..!. அவள் காதலில் உறுதியாக இருப்பதை அறிந்து அவனை தனியே அழைத்து பேரம் பேசுகிறாள். 'அவளைக் கல்யாணம் செய்துகொண்டால் ரெட்டிகள் அவனைக்கொன்று விடுவர். அவளை விட்டு விலகிப்போனால் உயிரும் தப்பிக்கலாம். கோடி ரூபாய் பணமும் கிடைக்கும்' என்று ஆசை காட்டுகிறாள். காதலுக்காக உயிரை விடுவதைவிட, உயிரும் பிழைத்து கோடிக்கணக்கில் பணத்தையும் பெற்று அனுபவிப்பதே தேவலை என்று ""புத்திசாலித்தனமாக"" முடிவெடுக்கிறான்.
பின் என்ன, காதலுக்காக உயிரைவிட்டால் கல்வெட்டிலா வரப்போகிறது?. அப்படி வந்தாலும் அந்தக் கல்வெட்டைத்தான் அவனால் பார்க்கமுடியுமா?. ரேகாவுடன் கைகோர்த்து அருவியில் குதித்த கமல் மட்டும் என்ன பண்ணினார்?. அடடா, சட்டை மரக்கிளையில் மாட்டிக்கொண்டதே, சரி திரும்பவும் அருவியில் இருந்து மறுபடியும் குதிப்போம் என்று போனாரா?. இல்லையே... ரேகாவை மறந்துவிட்டு ரேவதியுடன் டூயட் பாடவில்லையா?. விடுங்க, காதலாவது கத்தரிக்காயாவது. 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடல் முடிந்ததும், ஆவேசமாக கொட்டும் அருவியை அச்சத்துடன் விழித்துப்பார்க்கும் அப்பாவிப்பெண் ரேகா இன்னும் கண்ணில் நிற்கிறார். பாவம், தன்மீது உயிரையே வைத்திருப்பதாக தான் நினைத்த காதலன், தன்னை மட்டும் அனுப்பிவிட்டு இன்னொரு பெண்ணுடன் 'காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' பாடிக்கொண்டிருப்பான் என்று நினைத்திருப்பாரா?. (ஐயய்யோ.. இது என்ன கோலங்களுக்கும் புன்னகை மன்னனுக்கும் முடிச்சு என்று கேட்காதீர்கள். காதல் என்பது வெறும் புடலங்காய் என்பதற்காக சொல்ல வந்தேன்).
அந்த புத்திசாலிப்பையன், ஒருகோடி ரூபாய் போதாது, இன்னும் இருபத்தைந்து லட்சம் சேர்த்து வாங்கிக்கொடுங்கள் என்று கேட்டு, அதையும் மேனகா சம்மதித்தபின் போகிறான். இனி அவனுக்கு தன் கம்பெனியில் வேலையில்லை என்று சொல்லி விரட்டி விடுகிறாள். காதலன் பேசிய அனைத்து பேரமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, அந்த அப்பாவிப்பெண்ணுக்கு போட்டுக்காட்டப்படுகிறது. காதலனின் சாயமும், காதலின் சாயமும் வெளுக்கிறது. தன்னைக் காப்பாற்ற வந்த தேவதை என்று 'நரியை' அணைத்துக் கொள்கிறாள். ஆக கொக்கு தலையில் வெண்ணையை வைத்து ப்ளாட் வாங்க ஏற்பாடு செய்தாயிற்று. (இப்போது அந்த இரண்டு ரெட்டிகளும் சேர்ந்து ப்ளாட்டை தரமாட்டேன் என்றால் நரி என்ன பண்ணும்?. ரெட்டி மகளுடைய இன்னொரு காதலனைத்தேடுமா?. அதுசரி, திருச்செல்வத்துக்கு தெரியாதா, அதிலிருந்து இன்னொரு கிளைக்கதையை எப்படி ஆரம்பிப்பது என்று).
Thank you
pl keep on update
Oh yaQuote:
Originally Posted by saradhaa_sn
thanks for bringing again.Quote:
Originally Posted by saradhaa_sn
:D
J/K....Intha serial innum odikittu irukka?Naan 10th padikkarache aarambichanga-nu nenaikaren :lol: .....I did watch the first episode.It was my last.ANYWAYS GOOD LUCK THIRUSELVAM!Ivar Hindi Ekta serial range-la part two three ellam edukka maatar-nu nenaikaren....! :rotfl:
பிரபல எழுத்தாளர் கோவி.மணிசேகரன் கோலங்கள் என்ற தொடரில் நடிக்கிறார். தொடரில் இடம்பெறும் `பிளாஷ்பேக்' காட்சியில் தாசய்யா என்ற கேரக்டரில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
:rotfl: :rotfl: :rotfl:Quote:
Originally Posted by VENKIRAJA
So true. Its been going for a long, long time.
மேனகாவைக்கொல்ல வந்த அந்தோனியின் ஃப்ளாஷ்பேக் துவங்கியதும், எங்கே ரொம்ப நாளைக்கு இழுத்துக்கொண்டு போகுமோ என்று நினைத்தோம் (அதாவது பயந்தோம்). நல்ல வேளை நான்கே எபிஸோடில் முடித்துவிட்டனர். இப்போது மீண்டும் கேமரா தொல்ஸ் முகத்துக்கு வந்துவிட்டது. அதுசரி, ஊரில் அடாவடித்தனம் பண்ணிக்கொண்டு இருந்தவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்த செல்லம்மாவை விட்டு விட்டு, அவளது வாரிசு மேனகாவை கொல்வேன் என்று அந்தோனி கொதிப்பது என்ன நியாயம்?. அந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்பித்துதான் அவள் வந்தாளே தவிர, அவனது குடும்பம் முழுமையும் தற்கொலை செய்துகொண்டதற்கு அவளா காரணம்?. (உண்மையில் ஒன்று மட்டும்தான் தற்கொலை, மற்ற நான்கும் கிழவன் தாசய்யாவால் செய்யப்பட்ட கொலை. அதிலும் அந்த ஜோசப்பைத் தவிர, அவன் மனைவி, அவன் அம்மா (அந்தோனியின் மனைவி), அவன் தம்பி சார்லஸ் ஆகியோரைக்கொன்றது அநியாயத்திலும் அநியாயம்).
'கல்யாணத்துக்கு சம்மதமா?' என்று கேட்கும் அந்த வேட்டை நாய்களின் மத்தியில் 'சம்மதம்' என்று சொல்லி செல்லம்மா அப்போதைக்கு தப்பிப்பது நல்ல புத்திசாலித்தனம். பின்னர் தப்பிக்க எவ்வளவோ வழிகள் கிடைக்கலாம். அந்த சமயத்தில் 'முடியாது' என்று சொல்லி அவர்களிடம் சிக்கி நாசமாவது நிச்சயம் என்பது அவளுக்கு தெரிந்திருக்கிறது (பலே திருச்செல்வம்)
இதை எதுக்காக சொல்கிறேன் என்றால், வில்லனாலும் அவன் ஆட்களாலும் அடிவாங்கி ரத்தம் சொட்ட, கை கால்கள் கட்டப்பட்டு அசையக்கூட முடியாத கதாநாயகன், வில்லன் எதையாவது செய்யச்சொல்லும்போது, சம்மதிப்பது போல் ஏமாற்றி தப்பிக்கலாம் என்று எண்ணாமல், வில்லன் முகத்தில் காறித்துப்பி விட்டு மேலும் அடிவாங்கி சாகும் 'புத்திசாலித்தனமான' (?!?!?!?!?!?!?!) கதாநாயக நாயகியரை திரைகளில் பார்த்து மனம் புழுங்கிப்போன நமக்கு....... (1950-லிருந்து இதைத் தாண்டி சிந்திக்க மறுக்கிறார்கள் நம் கதாசிரியர்கள்).
ஃப்ளாஷ்பேக் கதையைப் பார்க்கும் சாக்கில் நமக்கு காணக்கிடைத்தது, அருமையான தென் தமிழ்நாட்டின் கடலோரக்காட்சிகள். அற்புதமான கடற்கரைப்பகுதிகளும், அதையொட்டியிருக்கும் சிதிலமடைந்த பழங்காலக் கட்டிடங்களும், சுற்றியுள்ள சோலைப்பகுதிகளும் இதுவரை எந்த திரைப்ப்படத்திலும் நாம் காணாதவை. (வெளிப்புறப் படப்பிடிப்பு என்றதுமே கேமராவை தோளில் தூக்கிக்கொண்டு, தயாரிப்பாளர் செலவில் ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து என்று போகும் இயக்குனர்களுக்கு, தமிழ்நாட்டிலும் அதைவிட அற்புதமான இடங்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?). நன்றி தொல்ஸ். (அடுத்து இவருடைய ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அதில் ராமேஸ்வரத்தின் அழகு இடங்கள் நம் கண்ணுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்)
iam back again after a very long time...
i hvn't watched kolangal for more than 7 months..
so help me with the flwng info.. pls :D
Menaka - actress name?
and i watched some river-escape scene 2 days bfore.. some love story.. who r they.. :?: :?: :?
hope not asking too much . :roll:
:D :swinghead: