Par magale par - Story - part 1
பார் மகளே பார் -கதை பகுதி - 1
http://i949.photobucket.com/albums/a...ofImage027.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image028.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image029.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image030.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image032.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image033.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage036.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage037.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage034.jpg
மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் நடிகர் திலகக்தின் மனைவி சவ்கார் ஜானகி ப்ரசவ வலி எடுத்து ஒரு மருத்துவமனையில் அவரின் பால்ய நண்பரும் தொழிலதிபருமான வி.கே.ஆர்.ரின் உதவியால் சேர்க்கப்படுகிறார். அச்சமயம் தொழில் காரணமாக சிவாஜி சென்னையில் முகாமிட்டிருக்க அவருக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உடனே விரைகிறார் மதுரைக்கு.
ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் ஜானகி. அடுத்த அறையில் சுலோசனா என பெயருடன் ஒரு நடனமாடும் பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க, பணிப்பெண்கள் இரு குழந்தைகளையும் நீராட்டுவதற்காக இன்னொரு அறைக்குச்செல்ல , அங்கு துரதிர்ஷடவசமாக மின்சாரம் தாக்கி இருவரும் இறக்க, ஒன்றோடு ஒன்றாக இரு குழந்தைகளும் இருக்க தலைமை மருத்துவரும் வேறு வழி தெரியாமல் ( சுலோசனா , திடீரென்று காணாமல் போக குழப்பம் மிகுதியாகிறது ) ஜானகியை வேண்ட அவரும் வழி தெரியாமல் தவிக்க, மருத்தவரின் யோசனைப்படி இருவரும் ஜானகிக்கே பிறந்தவை என ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். வி.கே.ஆர்.ரும் இதை ஆமோதித்து இந்த உண்மையை எந்த காலத்திலும், எந்த சந்தர்பத்திலும் யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க, அப்போது அதற்கு ஜானகி பதில் சொல்லும்முன், சிவாஜி அமர்களமாக வந்து தன் அன்பு மனைவியை முதலில் விசாரித்து விட்டு, அருகில் இருக்கும் குழந்தைகளை கண்டு...ஓ ....இரட்டை குழந்தைகளா !!! என்று வியந்து மிகவும் உற்சாகத்தில் மிதக்க அத்தருணத்தில் ஒன்றும் பேச இயலாமல் ஜானகியும் அதை ஏற்றுக்கொள்ள, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா இனிதே நடைபெற்று முறையே சந்த்ரா ( விஜயகுமாரி ) காந்தா ( புஷபலதா ) என பெயர்பெறுகின்றனர். சில நாட்களூக்குப்பின் சுலொசனாவின் சகோதரரான எம்.ஆர்.ராதா , மருதுவமனைமூலம் உண்மை தெரிந்து சிவாஜியின் விட்டிற்கு வர அப்போது ஜானகி மட்டும் தனியாக இருக்க , தன் சகோதரியின் குழந்தையை கேட்க, ஜானகி இரு குழந்தைகளையும் தன் உயிராக கருதுவதால் தானே வளர்ப்பேன் என மன்றாட இளகிய மனம் கொண்ட ராதாவும் அதற்கு சம்மதிக்க, அவருக்கு அவ்வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும் நல்ல பண்புடனும் தாய் தந்தையின் அரவணைப்புடன் வளர்கின்றன.
கதை பகுதி - 2 விரைவில்
Par magale par - the story - part 2
பார் மகளே பார் - கதை பகுதி - 2
நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன் முடிவுகளை எடுப்பார். ஆனால் வி.கே.ஆர்.ரோ அதிரடி முடிவுகளை எடுப்பவர். இந்த போக்கை சிவாஜி பலமுறை கண்டித்தாலும் அதற்கு வி.கே.ஆர். தன்னுடைய விளக்கங்களை கொடுப்பார்.
ஒரு நாள், வி.கே.ஆர். தன்னுடைய தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. தான் வேரொரு ஊருக்கு சென்று அங்கு புதிய தொழில் செய்யப்போவதாக சொல்வார். சிவாஜிக்கு அது பிடிக்காது. வாதம் செய்வார். முடிவில், " என்னால் முடிந்த்தை ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு நீ பின்னர் வருந்துவாய் என்று விடை பெறுவார்.வி.கே.ஆர். கேட்கும் உத்திரவாத தாளினையும் கொடுக்க மறுத்துவிடுவார். " உனக்கு பண உதவி வேண்டுமா ? நான் செய்வேன். மற்றபடி காரன்டி பத்திரம் எல்லாம் தர இயலாது என்று கண்டிப்பாகவும் சொல்வார். ஆப்த நண்பர்கள் ஒருவித வருத்ததுடன் விடை பெறுவர்.
வி.கே.ஆர்.ரின் மனைவிக்கும் ஜானகிக்கும் நெருங்கிய நட்பு பல வருடங்களாக. அவர் விடை பெறுவதை பார்த்து ஜானகி கண்ணீர் சிந்த அவரும் " என்றைக்கானாலும், எந்த சூழ்நிலையிலும் உன் பெண் தான் என்னுடைய மருமகள். இந்த வாக்குறுதியினை என்றும் மறக்காதே என்பார். ஜானகியும் பதிலுக்கு, " இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு. அன்பினால் ஏற்ப்பட்டது நம் நட்பு. எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுகொடுக்க மாட்டேன் " என்று பிரியாவிடை பெறுவர் இருவரும்.
தொடரும்.
Par magale par - Story - Part 3
பார் மகளே பார் - கதை பகுதி - 3
HTML Code:
[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage046.jpg[/img]
HTML Code:
[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage047.jpg[/img]
HTML Code:
[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage048.jpg[/img]
HTML Code:
[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage049.jpg[/img]
HTML Code:
[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage050.jpg[/img]
HTML Code:
[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage053.jpg[/img]
HTML Code:
[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage054.jpg[/img]
ஜமீந்தார் சிவலிங்கம் ( சிவாஜி ) ஒரு கறார் மனிதர் > தொழிலை பொறுத்தவரை... ஆனால் வீட்டிலோ 2 குழந்தைகளுக்கு உயிரான தகப்பன். மழலையிலிருந்தே அவர்களின் மீது ஒரு பாசம்.கண்ணும் கருத்துமாக வளர்ப்பார். சந்திரா மென்மையான குணமும் , காந்தா சற்று தைரியமான குணமும் கொண்டவர்கள். இதையும் சிவாஜி ரசிப்பார். " பாரேன். சந்திரா உன்னைபோன்றவள்... காந்த்தா என்னை போன்ற சுபாவம் கொண்டவள் " என்று ஜானகியிடம் சொல்லி மகிழ்வார் ! குழந்தைகளும் பெற்றோரிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவராகின்றனர்.
விஜயகுமாரியும் முத்துராமனும் காதலர்கள். ஓரு நாள் முத்துவை தந்தையிடம் அறிமுகம் செய்ய முத்துராமனின் மறைந்த தந்தை தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும் நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் உணர்கிறார். உடனே அவரை பிடித்து போகிறது. சிறிது நாட்களுக்குப்பின் ஏ.வி.எம்.ராஜன் ( வி.கே.ஆர்.ரின் பிள்ளை ) , சிவாஜியை சந்தித்து தன் தந்தை இப்பொழுது செல்வம் அனைத்தையும் இழந்து ( தவறான வழிகளினால் ) இன்சால்வன்ஸி கொடுக்கும் நிலையில் இருப்பதாக சொல்ல சிவாஜி வருத்தப்படுகிறார். " உங்கள் நிருவனத்தில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள் " என் ராஜன் வேண்ட அதற்கு சம்மதிக்கும் சிவாஜி, எக்காரணஙகளுக்கும் தன்னுடைய நண்பனின் பிள்ளை என்று யாரிடமும் சொல்லவோ, அல்லது அதிகாரமோ செய்யக்கூடாது என்று கடுமையாகச்சொல்லி அவருக்கு ஒரு வேலையும் கொடுக்கிறார்.
சிவாஜி ஜானகியிடம் விஜயகுமாரியை முத்துராமனுக்கு மணம் முடிக்கும் ஒரு ஆசையை வெளியிட , அதற்கு ஜானகி சிறு வயதில் வி.கே.ஆர்.ருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த அதற்கு சம்மதிக்காத சிவாஜி, தன் நண்பன் இப்பொழ்து செல்வம் அனைத்தையும் இழந்ததை சொல்லி, தன்னுடைய மறுப்பை வெளியிடுகிறார். ஜானகி , இரு பெண்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்று கோரிக்க அதற்கும் சிவாஜி மறுக்கிறார். ஜானகி வி.கே.ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு மிகவும் வருந்துகிறார் செய்வதறியாமல்.
சிவாஜி முத்துராமனின் தாயை சந்தித்து அவரின் ஒப்புதலும் பெற்று நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிக்க, ஜானகியோ " நீங்கள் உங்கள் நண்பருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும்" என்று சொல்ல , அதற்கும் மறுத்த சிவாஜி, " அவன் இன்று மிகவும் நொடிந்த நிலையில் இருக்கிறான். இதை சொன்னால் அவன் இந்த நல்ல செய்திக்காக நிறைய செலவு செய்யத்துடிப்பான். பொருளாதாரரீதியாக அவனை நாம் எந்த விதத்திலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்ககூடாது.
நாம் எனவே சொல்லக்கூடாது " என்று கண்டிப்பாக சொல்ல , ஜானகிக்கு ஒரே தவிப்பு.சிவாஜி, தன் பணியாளின் மூலம் உதவி பணம் கொடுத்தனுப்ப அந்த மனிதர் மூலம் வி.கே.ஆர்.ருக்கு நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்த செய்தி தெரியவருகிறது.
தொடரும்.
Par magale par - Story - part 4
பார் மகளே பார் - கதை பகுதி - 4
http://i949.photobucket.com/albums/a...s/Image008.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image009.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image014.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image016.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage057.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage058.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage059.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage060.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage061.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage063.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage064.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image010.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image021.jpg
நிச்சயதார்தம் தடபுடலாக ஆரம்பிக்க ஊர் பெரிய மனிதர்களின் இடையே ஜமீந்தார் சிவலிங்கம் மிக உற்சாகமாக. அப்பொழுது வி.கே.ஆர். தன் மனைவியோடு வர சிவாஜிக்கு அதிர்ச்சி. முகம் கொடுத்துகூட பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு மற்ற விருந்தினர்களை சிவாஜி இன்முகத்துடன் உபசரிக்க, வி.கே.ஆர்.ருக்கு அவமான உணர்ச்சி ஏற்பட, அவர் சிவாஜியை தனியாக அழைத்து, " சிவா, உனக்கு பிடிக்காவிட்டால் நான் சென்றுவிடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு சிவாஜி " ஏண்டா, இப்படி எல்லாம் பேசுகிறாய் "
வி.கே.ஆர் >> நான் இங்கு இருப்பது உன் கவுரவத்திற்க்கு குறைவாக இருந்தால், நாங்கள் உடனே போய் விடுகிறோம்.
சிவாஜ் : ஏன்டா இப்படி எல்லாம் உளருகிறாய் ?
வி : ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏரும். வண்டீயும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
சி : தயவு செய்து என் மானத்தை வாங்காதே
இப்படியாக இருவருக்கும் வாக்கு முற்ற , வி.கே.ஆர். கோபத்தின் உச்சியில் சந்திரகாந்தாவின் பிறப்பின் ரகசியத்தை எல்லார் முன்னிலையிலும் உடைக்க, அங்கு ரணகளமாகிறது. வி.கே.ஆர். சிவாஜியை ஒரு நன்றி கெட்டவன் என்று பழித்து.. " உன் குடும்பத்தின் மேன்மைகாக நான் எக்தனையோ உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நீயோ, ஒரு நன்றி கெட்டவன்.. உன் குழந்தைகளின் பிறப்பு சார்ந்த ரகசியத்தினை என் மனைவிக்குகூட இன்றுவரை நான் சொல்லவில்லை. அது உன் குல கவுரவதிர்காக. ஆனால் , நீயோ, என்னை மதிக்கவில்லை. உன் பணக்கார திமிர் , ஆணவத்தினால் நம் பழைய ச்னேகிதத்தை மறந்துவிட்டாய்.
வி.கே.ஆர். ஜானகியிடம் மன்னிப்பு கேட்கும் தருவாயில் " நான் இந்த உண்மையை ஏன் சொன்னேன் ? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக அல்ல. உன் கணவனை பிடித்து ஆட்டுகிறதே அந்த அந்தஸ்து எஙிற பேய் , அது ஒழிய வேன்டும். அதற்காக தான் " என்று சொல்லி அஙிருந்து சென்றுவிடுகிறார். நிச்சயதார்ததிற்காக வந்த அனைவரும் கலைந்து செல்ல, அதிற்ச்சி / கோபத்தின் உச்சியில் சிவாஜி.
தொடரும்..
Par magale par - Story - part 5
பார் மகளே பார் - கதை பகுதி - 5
http://i949.photobucket.com/albums/a...s/Image022.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image025.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image024.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage068.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage070.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image023.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
நிச்சயதார்தம் நடைபெறாமல் போக அவமானம். 18 வருடமாக தன் அருமை மனைவி ஒரு மாபெரும் ரகசியத்தை மறைத்துவிட்டாளே . இத்தனை காலமும் தன் மாளிகையில் இருந்து குழந்தைகளுக்கு பணி புரிந்த எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணின் மாமா. தன் பால்ய நண்பன் அனைவரின் முன்னிலையிலும் தன்னை கேவலப்படுத்திவிட்டான். சமூகத்தில் தனக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. தன் பெண்களில் ஒருத்தி தன்னுடையவள் இல்லை. சக தொழிலபதிகர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவமான உண்ர்ச்சி >>> இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜமீந்தார் சிவலிங்கம் வீட்டில் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்.
ஜானகி எவ்வளவோ மன்றாடியும் சிவாஜியின் கோபம் முற்றிலுமாக அவர் பக்கம் சாய்கிறது.. " என் நண்பனுக்கு தெரிந்த ஒரு பெரிய ரகசியம் ஏன் எனக்கு தெரிவிக்கப்படவில்லை ? இனி நீ எனக்கு மனைவியில்லை. பெயரளவிற்கு தான் நம் உறவு "இரண்டு பெண்களும் மன்றாடியும் சிவாஜிக்கு கோபம், குழப்பம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் அவர் எம்.ஆர்.ராதா.வை வீட்டை விட்டு விரட்ட, ராதா நடுதெருவில்.வீடே களையிழந்து கிடக்க, அருமை சகோதரிகள் இருவரும் தாம் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவரி விட்டுக்கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கின்றனர்.
தன்னுடைய உண்மையான குழந்தை யார் என்று தெரியும்வரை சிவாஜி ஓயமாட்டார். இந்த ப்ரச்னை தீரும்வரை வீட்டில் பழைய பொலிவும், உற்சாகமும் வராது என்று விஜயகுமாரி எண்ணி, தானே வீட்டை விட்டு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார்.
சில நாட்களுக்குப்பின் ஒரு வயதான பெண்மணி, சிவாஜியின் முன் வந்து " நான் தான் அந்த சுலோசனா. என் பெண் இங்கு தான் வளர்வதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து அவளை எனக்கே கொடுத்துவிடுங்கள். அவளுக்கு கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும். இது தான் அவளின் அடையாளம் " என்று சொல்ல சிவாஜி துள்ளிக்குதித்து , " அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் எங்களிடம் சொல்லாமலே. இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது " என்று ஆத்திரமாக சொல்லி அந்த வயதான பெண்ணை அனுப்பிவிடுகிறார். இது தான் உண்மை என்று நம்பி, சிவாஜியோ மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார். " குணாதியசங்களை கொண்டே சொல்லிவிடலாம். என்னுடைய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டவள் காந்தா. அவள் தான் என்னுடைய மகள்." என்று நிம்மதியடைய ஜானகியோ கண்ணீருடன். தன் சகோதரி எங்கே போனாள் என்று காந்தாவுக்கு கவலை.
சில நாட்களுக்குப்பின், போலிஸ் சிவாஜியை கண்டு ஒரு பெண்ணின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அனைத்து உடைகள், அடையாளங்கள் சந்திராவை ஒத்தவை என்று ஒரு குண்டை தூக்கிபோட , சிவாஜி இந்த அனைத்து ப்ரச்சனை ஒரு முடிவிற்கு வந்ததுபோல உணர்கிறார். வீடோ துக்கம் அனுஷ்டிக்கிறது. மீளாத துயரத்தில் ஜானகியும், புஷ்பலதாவும். " நாம் வளர்த்த பாசத்திற்காக சந்திராவுக்கு எல்லா காரியங்களும் செய்யவேண்டும் " என்று ஜானகி கெஞ்ஜ , சிவாஜி அனுமதி அளிக்கிறார். எல்லா அனுஷ்டானங்களும் முடிந்தபின், சிவாஜி, புஷ்பலதா / ஜானகியிடம் , " இனிமேல் இவ்வீட்டில் சந்திராவை பற்றி யாரும் பேசக்கூடாது . அவள் கொண்ட எல்லா தொடர்பும் முடிந்தது " என்று கடுமையாக சொல்லி வீட்டில் உள்ள சந்திராவின் படத்தையும் எறியச்சொல்கிறார். மீளாத துக்கத்தில் ஜானகி படுத்த படுக்கையாகிறார்.
தொடரும்..
Par magale par - Story - Part - 6
பார் மகளே பார் - கதை பகுதி - 6
http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image072-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg
உண்மையில் சந்திரா இறக்கவில்லை. அவர் ஒரு தொண்டு நிருவனத்தில் அடைக்கலம் புகுந்து அமைதி தேடுகிறார். அதை நடத்தும் மாதுவிடம் தன்னைப்பற்றி சொல்லி யாரிடமும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேண்ட, அம்மாதுவும் மனமிரங்கி அவருக்கு ஒரு ஆசிரியர் வேலை கொடுக்குறார்.
முத்துராமனுக்கு, தன் நிச்சயதார்த்தம் நின்று போனதில் வருத்தம் . ஆனால் அவர் சந்திராவை விரும்பியது அவர் ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. நல்ல குணங்களும் பண்பும் அவரை கவர்ந்த காரணத்தாலே அவரை மணக்க விரும்பினார். இதை தன் தாயிடமும் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையே காந்தாவிற்கு தன் தந்தையின் போக்கு பிடிக்காமல் அவர் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, அவர் ஒரு தீர்கமான முடிவுக்கு வருகிறார். அதாவது , எந்த உயிர் நண்பரான வி.கே.ஆர்.ரை அவர் ஏழையாகிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்தஸ்து, கவுரவம் பார்க்கும் தன் தந்தையை பழி வாங்குவதற்காக , அவர், வி.கெ.ஆர்.ரின் மகனான ஏ.வி.எம்.ராஜனை மணக்கப்போகிறேன் என்று அவரையும் அழைத்து வந்து சபதமிடுகிறார். இந்த போக்கு ஜானகிக்கு துளி கூட பிடிக்கவில்லை. தந்தையின் மனம் நோகும்படி எதையும் செய்யாதே என்று அடிக்கிறார்.
ஒரு நாள், எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் , அந்த போலி சுலோசனாவை இழுத்து வந்து சிவாஜியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லவைக்கிறார். அதாவது, தன்னுடைய அங்க அடையாளங்களை ஒரு சாட்சியாக வைத்து, தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தினையும், கவுரவத்தை நிலைநாட்டவும் காரணமாக்கொண்டு விஜயகுமாரியே ஒரு பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தியதால் தான் , குடும்ப நன்மைக்காக இதை செய்யச்சொன்னார் என்று அந்த போலி சுலொசனா அனைதையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.
இதை கேட்டவுடன் சிவலிஙகத்திற்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன் குடும்ப கவுரவத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றுவதற்காக அந்த அபலை பெண் செய்த மாபெரும் தியாகத்தினை எண்ணி மனம் நெகிழந்து துடிக்கிறார். முத்துராமனுக்கு தன் காதலி இறந்த செய்தி கிடைக்க அவரும் கதறுகிறார். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.
ஜானகியின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.
கதை பகுதி அடுத்த பதிவில் முடியும்..