Reviews about ANNAN ORU KOVIL are Very good. Thanks Ms.Saradha & Mr.Murali. Thanks Mr.Ragavendran for the Film Stills & Trichy Video Clippings link.
Once again thanks for all.
Printable View
Reviews about ANNAN ORU KOVIL are Very good. Thanks Ms.Saradha & Mr.Murali. Thanks Mr.Ragavendran for the Film Stills & Trichy Video Clippings link.
Once again thanks for all.
திருச்சி மாவட்ட அன்பர்கள் தொகுத்துள்ள இந்த ஒளிச்சித்திரம் அருமையிலும் அருமை ..பகிர்வுக்கு நன்றி ராகவேந்திரா சார்!
நன்றி சாரதா.
ராகவேந்தர் சார்,
அண்ணன் ஒரு கோயில் ஸ்டில்கள் அருமை என்றால் நமது திருச்சி பிள்ளைகள் தொகுத்துள்ள ஒளிப்பேழை அருமையிலும் அருமை. நடிகர் திலகத்தின் வித விதமான ஸ்டைல் நடைகள் மட்டும் போதும். நடிகர் திலகத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு அவரை ஒரு சின்ன அளவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் இதை அவர்களுக்கு திரையிட்டால் போதும்.
அன்புடன்
ஒளிப்படக் காட்சிக்கும் நிழற்படங்களுக்கும் பாராட்டுக் கூறிய சந்திரசேகர், ஜோ, முரளி, மற்றும் கார்த்திக் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்தப் பாராட்டுக்குரியவர்கள், திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தினரேயாவர். இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் அவர்களுக்கே சேரும்.
புதிய வானம் திரைப்படம் ராஜ் வீடியோ விஷன் நிறுவனத்தால் நெடுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது. அதனுடைய நிழற்படத்தை இங்கே காணலாம்.
http://i872.photobucket.com/albums/a...anamcovers.jpg
அன்புடன்
ராகவேந்திரன்
Part of the text that appears in an article in the Indian Express online edition dt.13.03.2011
Read the article hereQuote:
The message that Tamil Nadu sent out on that 1984 evening — that Sivaji Ganesan was an idol much greater than anyone in the Nehru clan; that cinema is a centrifugal part of Tamil Nadu’s mythology and iconography; that the Dravidian proudly refutes all things Northern and Sanskritised (except of course, salwar kameezes these days) — was lost to the powers in Delhi. And have stayed lost.
Raghavendran
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் உயர்வான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
சென்னை சாந்தி திரையரங்கில் எனது எட்டாவது வயதில் பிப்ரவரி 1980ல் முதன்முதலாக "ரிஷிமூலம்" பார்த்தது நினைவில் நிழலாடுகிறது. எனது தாயார், தாய்மாமன், சிற்றன்னை ஆகியோருடன் அடியேன் ஒரு மாலைக்காட்சியில் நடிப்பின் சிகரத்தை சிகர அரங்கில் தரிசித்தது கண்கொள்ளாக் காட்சி. அதற்குப்பின்னர் சாந்தியில் வீட்டோடு வந்து பல நடிகர் திலகத்தின் திரைப்படங்களை கண்டு களித்திருக்கிறேன். எனது தாயார், தாயாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே நடிகர் திலகத்தின் ரசிகர்கள். வெள்ளித்திரையில் சிவாஜி படங்களை மட்டுமே கண்டு களிப்பார்கள். எனது தாய்மாமன் வெறித்தனமான ரசிகர். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, பாசமலர், பாரத விலாஸ், திரிசூலம், மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆகிய படங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறார் என்று அவருக்கே தெரியாது. என்னை பல்வேறு சிவாஜி படங்களுக்கு அழைத்துச் சென்று சிவாஜி ரசிகனாக்கியது அவர் தான். அவருக்கு இதற்காகவே நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 1980களில் எங்களது குடும்பமும் அவர்களது குடும்பமும் திருமயிலையில் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த போது, 'கபாலி'யிலும், 'காமதேனு'விலும் கலைக்குரிசிலின் காவியங்கள் வரும்போதெல்லாம் என்னை அழைத்துக் கொண்டு போய் காண்பிப்பார். பல ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அரங்குகளில் மேட்னி பார்த்துவிட்டு, நாங்களிருவரும் அவசர அவசரமாக நடந்தும், ஓடியும், சைக்கிள் ரிக்ஷாவிலும், ஆட்டோ பிடித்தும் எங்கள் வீட்டுக்கு வருவோம். அப்படி நாங்கள் வருவதற்கு ஒரே காரணம் அன்று மாலை சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் நடிகர் திலகத்தின் திரைக்காவியத்தை காண்பதற்காகத்தான். 1980களிலிருந்தே நான் பார்க்கும் நாளிதழ்கள், பத்திரிகைகளில் நடிகர் திலகத்தின் புகைப்படங்கள், தகவல்கள், பட விளம்பரங்கள் வந்தால் அவற்றை கத்தரித்து சேகரித்து வைத்துக் கொள்வேன். பின்னர் அதை ஆல்பங்களாக்குவேன். டீவியில் ஞாயிறு மாலை நடிகர் திலகத்தின் படம் பார்க்கும் போது அந்தப் படத்தினுடைய புகைப்படம் எனது ஆல்பத்தில் இருந்தால் அந்தப் புகைப்படம் சம்பந்தப்பட்ட காட்சி படத்தில் எப்போது வரும் என்று காத்திருப்பேன். அந்தக்காட்சி வரும்போது கையிலிருக்கும் புகைப்படத்துடன் அக்காட்சியை ஒப்பிட்டுப் பார்த்து பரவசப்படுவேன். என் மாமாவும் மருமான் கண்டுபிடித்து விட்டான் என்று சந்தோஷப்படுவார். ஞாயிறு மாலை படத்திற்கு மட்டும் எங்கள் வீட்டு ஹாலில் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 15 பேராவது படம் பார்ப்போம். எங்கள் குடும்பம், எங்கள் மாமாவின் குடும்பம், அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் என எங்கள் வீட்டு ஹால் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். கார்த்திக் குறிப்பிட்டது போல் காலசக்கரம் பின்னோக்கி நகராதா என்ற ஏக்கமே மேலிடுகிறது.
மேலும், எனது தந்தையார் மற்றும் தந்தையாரது குடும்பத்தினருள் பெரும்பாலானோர் மக்கள் திலகத்தின் ரசிகர்கள். எனினும், நான் எனது தாயார் மற்றும் தாயார் குடும்பத்தினரின் வழியில் நடிகர் திலகத்தின் ரசிகனானதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது. எனது தாயார் குடும்பத்திற்கும், தந்தையார் குடும்பத்திற்கும் இடையே சிவாஜி படங்கள்-எம்.ஜி.ஆர் படங்கள் குறித்த சாதாரண விவாதங்களும் சில சமயங்களில் காரசாரமான வாக்குவாதங்களும் நடைபெறுவதுண்டு. இதில் அச்சிறுவயதிலேயே நானும் கலந்து கொண்டு சிவாஜி ஸைடிற்காக (எனது தாயார் அணிக்காக) வாதிட்டிருக்கிறேன். எனது தந்தையார் குடும்பத்தில், எனது தந்தையின் இரண்டாவது அக்காள் மகன் மட்டும் தீவிர சிவாஜி ரசிகர். "ஆண்டவன் கட்டளை" திரைக்காவியத்தை 1964-ல் முதல் வெளியீட்டில் சென்னை 'சயானி'யில் அது ஓடிய 50 நாட்களிலும் மாலைக்காட்சியில் கண்டு களித்த மகா வெறியர். அவருடன் இதே காவியத்தை 1998-ல் சென்னை 'மேகலா'வில் மேட்னி காட்சி பார்த்ததை மறக்கவே முடியாது. 'கலைத்துறையில் சிவாஜியை மிஞ்ச ஆளே கிடையாது' என எல்லோரிடமும் அடித்து-இடித்துக் கூறுவார். அவரும் நானும் சந்திக்கும் போதெல்லாம் நடிகர் திலகம் குறித்துத்தான் அதிகம் பேசுவோம்.
சென்னை சாந்தியில் "சிம்ம சொப்பனம்" பார்ப்பதற்காக அந்த இளம் வயதில் நான் பிடித்த அடம், பிடிவாதம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. "சிம்ம சொப்பனம்" [30.6.1984] வெளியான மறுவாரம் வெள்ளியன்று இரவு [6.7.1984] சென்னை தொலைக்காட்சியின் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் முதல் பாடலாக நடிகர் திலகம்-சரிதா பாடும் [பாட்டுக்குரல்கள் : டி.எம்.எஸ்-வாணி ஜெயராம்] டூயட்டான 'புடவை கட்டிக் கொண்டு பூ ஒன்று ஆடுது' பாடல் ஒளிபரப்பானது. அந்தப்பாடல் என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது. அந்தப்பாடலைப் பார்த்து முடித்தவுடனேயே படத்தை உடனடியாக பார்த்தாக வேண்டும் என்று மிகுந்த பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டேன். எனது உணர்வுகளை எனது பெற்றோரும், எனது மாமாவும் புரிந்து கொண்டு மறுவாரமே என்னை 'சாந்தி'யில் நடைபெறும் அக்காவியத்தின் மாலைக்காட்சிக்கு அழைத்துச் சென்றார்கள். எனது மாமாதான் மருமானுக்காக படாதபாடுபட்டு டிக்கெட்டுகளை வாங்கி வந்தார். அந்தச் சிறுவயதில் வீட்டில் அவர்களே அழைத்துப் போகும் சிவாஜியின் பழைய-புதிய படங்களை பார்த்ததோடு மட்டுமல்லாமல், இப்படி பிடிவாதம் பிடித்தும் பல கலைக்குரிசிலின் புதிய படங்களைக் கண்டு களித்திருக்கிறேன்.
பின்னாளில், 'சாந்தி' திரையரங்கிற்கு வருகை புரியும் அனைத்து பழைய ரசிகர்களுடனும் அடியேனுக்கு நட்பு ஏற்பட்டதும் அந்த நல்லுறவு இன்று வரை நல்ல முறையில் தொடர்வதும் பெருமைக்குரிய விஷயம். இதற்கெல்லாம் இதயதெய்வத்தின் ஆசிகளும், இறைவனின் அருளுமே மூலகாரணங்கள்.
பசுமை நிறைந்த நினைவுகள் எழுத எழுத வற்றாத ஜீவநதி போல வந்து கொண்டே இருக்கின்றன.
மேலும் ஃப்ளாஷ்பேக் வேறொரு நாளில் வேறொரு பதிவில்...
மகிழ்ச்சியுடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியத்தினுடைய விளம்பர சுவரொட்டிகள் பிரமிக்க வைக்கின்றன. அப்பர் முதற்கொண்ட அனைவரையும் தரிசிக்க இப்பொழுதே ஆவல் மேலிடுகிறது. போஸ்டர்களை போஸ்ட் செய்தமைக்கு பேஷான நன்றிகள்!
இன்றைய நவீன 'சாந்தி சினிமாஸ்' ஆல்பம் பிரமாதம் என்றால் அன்றைய "அண்ணன் ஒரு கோயில்" ஆல்பம் அட்டகாசம்!
திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தினர் என்ன அகத்தியரின் வழித்தோன்றல்களோ?! காவிரியைத் தன் கமண்டலத்தில் கொண்டு வந்த மாமுனி போல், கலைக்கடலை ஒரு குறுந்தகட்டில் கொண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்களே, பாராட்டுக்கள்! மலைக்கோட்டையினர் வடிவமைத்ததை மாநிலத்தினர் பார்த்து பரவசமுற அதனை இணையத்தில் ஏற்றிய தங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்!
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா,
"அண்ணன் ஒரு கோயில்" குறித்த திறனாய்வுப் பதிவுகள் அனைத்துமே அருமை. அருமை 'அண்ண'னை சிலாகித்து அன்புச்சகோதரி எழுதுவது தானே சாலப்பொருத்தம். நடிகர் திலகம் பாடும் ஸோலோ பாடல்களில் 'மல்லிகை முல்லை' அடியேனுக்கு all-time favourite.
ஜெய்கணேஷும், பிரேம் ஆனந்தும் சிவாஜியின் பிரசார பீரங்கிகளாகத் திகழ்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சிவாஜியின் போர்வாள் சசிகுமாரின் மறைவுக்குப்பின் நம்மவரின் புகழ்பரப்ப வீறுகொண்டு வந்த கலைவீரர்கள் இவர்கள் என்றால் அது மிகையன்று. சிவாஜியின் இன்னொரு போர்வாளாகத் திகழ்ந்தவர் ஸ்ரீகாந்த். 1976-ல் இந்தப் போர்வாள் ஒரு போலிவாள்(அட்டைக்கத்தி) என்ற உண்மை விளங்கியது. நடிகர் திலகத்தை தாக்கிப் பேசியது போல் வேறு எந்த நடிகரையாவது ஸ்ரீகாந்த் தாக்கிப் பேசியிருந்தால் அவரது கதி அதோகதியாகியிருக்கும்.
"வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா
போன ஜென்மப் பாவமடி அம்மாளு"
என அவர் பாடியது போல் எதையும் பொருட்படுத்தாமலும், பழி வாங்கும் குணம் துளியும் இல்லாதவராகவும் திகழ்ந்தார் கலைக்குரிசில் என்பதனை நாடறியும். எல்லாக் கடல்களிலும் சுனாமி என்கிற பழியுணர்ச்சி கோரத்தாண்டவமாடும். உலகில் சுனாமி(பழியுணர்ச்சி) வராத ஒரே ஒரு கடல் உண்டென்றால் அது நமது நடிப்புக்கடலில் மட்டும்தான்!
சசிகுமாரைப் போல் நடிகர் திலகத்தை சரியாகப் புரிந்து கொண்டிருந்த ஜெய்கணேஷும், பிரேம் ஆனந்தும் தாங்கள் கூறியது போல் நமது நன்றிக்குரியவர்களே!
அப்பேர்ப்பட்ட அவர்கள் இருவரில் ஒருவரான ஜெய்கணேஷ் "அண்ணன் ஒரு கோயில்" அனுபவங்களைப் பற்றி கூறியவற்றை இங்கே பதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். ['பேசும் படம்' அக்டோபர் 1977 இதழில், 'ஒரு கோயில் உருவாகிறது' என்கின்ற தலைப்பில் வெளியான "அண்ணன் ஒரு கோயில்" படக்கட்டுரையிலிருந்து]
"சிவாஜி சாரும் நானும் டாக்டர்களாக நடிக்கிறோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்கு போய்விடும் சிவாஜி அவர்களின் தங்கையை நான் காப்பாற்றுகிறேன். அதன் பிறகு அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதும், வாழ்வு தருவதும் பிரதான அம்சங்கள். நடிகர் திலகம் நடிப்பதைப் பார்க்கும் பொழுதே நாமும் நன்றாக நடிக்க வேண்டுமென்ற ஆசை எழுகிறது. எல்லோரும் நன்றாக நடிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். என் மீது அவர் வைத்திருக்கும் அன்பை நான் என்றும் மறவேன். அவருடன் நடிக்கும் போது நடுக்கம் ஏற்படத்தான் செய்கிறது. என்றாலும் சிவாஜி அவர்களுடன் நடிப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்."
2009-ல் ஜெயா டீவியில் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் சுமித்ரா கூறியவை உணர்வுபூர்வமானது.
"நான் நடித்த திரைப்படங்களில் "அண்ணன் ஒரு கோயில்" என்னுடைய திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மல்லிகை முல்லை' பாடலில் நான் ஆண்டாள், மீனாக்ஷி, சீதை ஆகிய தெய்வீக கதாபாத்திரங்களில் அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப விதவிதமான நகைகளையும், ஆடைகளையும் அணிந்து நடித்ததை என்னால் மறக்க முடியாது. இந்தப்படத்தில் நான் அணிந்த Rich Costumes போல வேறு எந்தப்படத்திலும் அணிந்ததில்லை.
'மல்லிகை முல்லை' பாடலின் வீடியோ:
http://www.dailymotion.com/video/xf7...-killai_school
நான் நடித்த படங்களுள் "அண்ணன் ஒரு கோயில்" மாபெரும் வெற்றி அடைந்த படமாகும். "பாசமலர்" திரைப்படத்திற்குப் பிறகு அண்ணன்-தங்கை பாசத்தை மிக வலுவாக வலியுறுத்திய படம் என அண்ணனின் ரசிகர்களும், பொதுமக்களும் இப்படத்தை ஏகமனதுடன் பாராட்டிய பொழுது என் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது. இப்படத்தில் என் நடிப்பு பாராட்டப்பட்டதென்றால் அதற்கு நடிகர் திலகம் தந்த ஒத்துழைப்பும், ஊக்கமுமே காரணம். புதுமுக நடிகை என்று அலட்சியப்படுத்தாமல் எனக்கு வசனமும், நடிப்பும் கற்றுக் கொடுத்த சிவாஜி 'அண்ணன் ஒரு கோயில்'."
அந்த சுமித்ராவுக்கு மட்டுமா, இந்த சாரதாவுக்கும் சிவாஜி 'அண்ணன் ஒரு கோயில்' தானே!
[நம் எல்லோருக்குமே நமது 'அண்ணன் ஒரு கோயில்' தான்!]
அன்புடன்,
பம்மலார்.
நாஞ்சில் நகரின் 'பயோனீர்முத்து' திரையரங்கில், கடந்த 7.3.2011 திங்கள் முதல் 10.3.2011 வியாழன் வரை - நான்கு நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக - புரட்சித்திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது.
நமது மாடரேட்டர் திரு.நௌ அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூரில் "பராசக்தி" ஓடுவதை பார்த்து வியந்து அத்தகவலை 'பராசக்தி போஸ்டர்' புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். [பதிவிட்ட தேதி : 10.11.2010]. அந்த சுவரொட்டியில் 'எழுத்தின் சூப்பர் ஸ்டாரும் நடிப்பின் சூப்பர் ஸ்டாரும் இணைந்து படைத்த' போன்ற அருமையான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்களைக் கொண்ட அதே டிசைன் போஸ்டர்கள் தற்பொழுது நாகர்கோவிலின் பிரதான இடங்கள் எங்கும் காணப்படுகிறது.
இனிக்கும் இத்தகைய மிட்டாய் தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ் !
அன்புடன்,
பம்மலார்.