Definition for SIVAJI -
S-Sincere
I-In
V-Versatile
A-Acting
J-Jewellery
I-Idol
Printable View
Definition for SIVAJI -
S-Sincere
I-In
V-Versatile
A-Acting
J-Jewellery
I-Idol
முன்னர் இடம் பெற்ற சில நிழற்படங்கள் மீண்டும் நம் பார்வைக்கு
http://i1146.photobucket.com/albums/...psf96d10b7.jpg
http://i1146.photobucket.com/albums/...ps665e5ebd.jpg
http://i1146.photobucket.com/albums/...ps603bb292.jpg
http://i1146.photobucket.com/albums/...psff815f00.jpg
GOOD DEFINITION FOR SIVAJI. SHUNMUGA SIR.
This week's latest cover for NT.COM SUPERB AND FANTASTIC. 1962 NT' VISIT TO U.S. MEMORIES. raghavendran pl incorpate the still in our mayyam.
நாளை முதல் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் நடிகர் திலகத்தின் நீதி தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது. எனது நினைவுக்கு எட்டிய வரை நடிகர் திலகம் பாலாஜி கூட்டணியில் உருவான திரைப்படங்களில் சென்னை மாநகரில் சென்ற 10 வருடங்களில் திரையிடப்படும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
நீதி என்றவுடன் invariably நம் நினைவுக்கு வருவது 1972-ம் வருடம். அதன் ஆரம்பமும் பாலாஜி.முடிவும் பாலாஜி. நினைவுகள் பின்னோக்கி சிறகடிக்கின்றன. 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ராஜா வெளியாகி அந்த வருடத்தின் Box Office ராஜா நடிகர் திலகம் எனபதற்கு கட்டியம் கூறியது.
ராஜா வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதே பாலாஜியின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய யூகங்களும், சர்ச்சைகளும் ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் சித்ராலயா வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாலாஜி தான் இந்திபடங்களை அல்லது பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வது பற்றி விமர்சித்த பலரும் இப்போது தன் படங்கள் அடையும் வெற்றியை பார்த்து மலைத்து போய் இருப்பதாக குறிப்பிட்டார். அடுத்தப் படமும் இந்தி படத்தின் தழுவலாகதான் இருக்கும் என்றும் அதில் மேலும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் என்ன படம் என்று தெரியாமலே இருந்தது.
1972-ம் ஆண்டு மே 4-ந் தேதி அன்று ராஜா திரைபடத்தின் 100 வது நாள். அன்றைய தினம் வெளியான தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் கீழே இடது கை ஓரத்தில் ராஜா 100-வது நாள் விளம்பரம். வலது கை ஓரத்தில் நீதி விளம்பரம். ராஜாவின் அதே யூனிட் என்பது விளம்பரத்தை பார்த்தாலே தெரிந்தது. மறுபடியும் எந்த இந்திப்படத்தின் தமிழாக்கம் என்று அந்நேரம் தெரியவில்லை.
விளம்பரம் வந்த மறுநாள் தந்தி வெள்ளிகிழமை சினிமா செய்திகளில் பாலாஜி நீதி என்ற படத்தை தயாரிக்கிறார். சிவாஜி ஜெயலலிதா ஆகியோர் நடிக்கிறார்கள். சி.வி.ஆர்.இயக்குகிறார் என்று வந்திருந்தது. மறுநாள் மே 6-ந் தேதி சனிகிழமை பட்டிக்காடா பட்டணமா சென்ட்ரலில் ரிலீஸ். ஓபனிங் ஷோ ஆரம்பிப்பதற்கு முன்னர் நீதி பற்றிய பேச்சுதான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தர்மம் எங்கே பற்றியும் சர்ச்சைகள். [பாயிண்ட் என்னவென்றால் அன்றைய தினத்தின் நாயகன் மூக்கையா சேர்வை பற்றி பேச்சு குறைவாகவே இருந்தது. ஆனால் இடைவேளைக்கு பிறகு மூக்கையா சேர்வை அனைத்தையும் மறக்க வைத்து விட்டார் எனபது வேறு விஷயம்].
நாட்கள் செல்ல செல்ல துஷ்மன் என்ற இந்திப்படத்தின் ரீமேக் தான் நீதி எனபதும் ஒரிஜினலில் ராஜேஷ் கன்னாவும் மும்தாஜும் ஜோடி எனபதும் தெரிய வந்தது. படம் சென்னையில் ரிலீஸ் ஆகி விட்டது என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் படம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பற்றிய ஐடியா இல்லாமலே இருந்தது. ராஜா போன்ற மாடர்ன் ட்ரண்டுக்கு ஏற்றவாறு இருக்குமா இல்லை வேறு மாதிரியா என்பது பற்றி யோசனை. இதனிடையே அன்றைய நாட்களில் படப்பிடிப்பு நடைபெறும் படங்களைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் தொடர்ந்து வரும். அது போன்ற ஒரு செய்தியாக மாப்பிளையை பாத்துகடி மைனா குட்டி பாடலும் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடலும் இசையமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.
நடிகர் திலகம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் அவ்வளவு பிஸியாக இருந்த காலம். படங்களின் தொடர் வெற்றியில் ஏற்கனவே உயரத்தில் இருக்கும் அவரின் மார்கெட் உச்சாணி கொம்பில் ஏறி விட்டது. அன்றைய நாளில் அவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் தர்மம் எங்கே, தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பாரத விலாஸ், ராஜ ராஜ சோழன், பொன்னுஞ்சல், எங்கள் தங்க ராஜா,கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, தாய், என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, ஹீரோ-72 என்று கணக்கிலடங்கா படங்கள். அது மட்டுமா, பெருந்தலைவரின் உண்மை தொண்டனாக காங்கிரஸ் பேரியக்கத்தின் போர் வாளாக சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் உரையாற்றிக் கொண்டிருந்த நேரம். மதுரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கும் சரி, அவரே நேரிடையாக சென்று கலந்துக் கொண்டிருந்தார்.
இதுவும் தவிர, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவியில் வேறு இருந்தார். அந்த சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட தளராத முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த நேரம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அந்நேரத்தில்தான் [ஆகஸ்ட்மாதம்] அவர் தான் தெய்வமென மதித்து வந்த தாயாரின் உடல்நலகுறைவும் தொடர்ந்து அவரின் மறைவும் நேர்ந்தன.
இந்த சோதனைகளையெல்லாம் தாண்டி அவர் 22 மணி நேரம் மூன்று ஷிப்ட்களில் நடித்துக் கொண்டிருந்தார். அக்டோபர் 1 அவரின் பிறந்த நாள் அன்று மைசூர் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் அவர் நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார். அங்கேயே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நாள் மூன்றாவது ஷிப்ட் முடிந்து மறுநாள் அதிகாலை நீதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்.அந்நேரம் ரத்த வாந்தி எடுத்தார். இதை பார்த்து பயந்து போன கமலா அம்மா டாக்டரை வரவழைக்க அவர் வந்து பார்த்து விட்டு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதுதான் அவர் அகராதியிலே கிடையாதே, இல்லை நான் போய் தீர வேண்டும் என்று கிளம்பி சென்று விட்டார்.
அன்றைய தினம்தான் எங்களது பூமி பாடல்காட்சி ஷூட்டிங். அந்தப் பாடலில் மட்டுமே அவருக்கு costume change. தோளில் ஒரு சிவப்பு நிற சால்வை அணிந்திருப்பார்.சில பல ஷாட்களில் அந்த சால்வையை சுருட்டி வாயருகே வைத்திருப்பார். மீண்டும் ரத்த வாந்தி வந்தாலும் சிவப்பு கலர் துண்டு என்பதால் யாராலும் சட்டென்று கண்டு பிடிக்க முடியாது என்பதாலும் அந்த கலர்.
இந்த நேரத்தில் தீபாவளி வருகிறது.அந்த வருடம் நவம்பர் 4 சனிக்கிழமை அன்று தீபாவளி. சில பல வருடங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தின் படம் வெளியாகாத தீபாவளி அது. கருப்பு வெள்ளை படங்களில் புதிய சரித்தர சாதனை படைத்த பட்டிக்காடா பட்டணமா சென்ட்ரலில் 182 நாட்களை நிறைவு செய்து மாற்றப்பட்டது. சென்ட்ரலில் ராமண்ணாவின் சக்தி லீலை தீபாவளி அன்று வெளியாகுவதாக இருந்தது. ஆனால் படம் அன்று வெளிவராது என்று தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னர் செய்தி வந்தது. படத்தின் வேலைகள் முடியவில்லை என்பதால் வரவில்லை என்று ஒரு செய்தியும் அன்றைய தீபாவளி தினமே மற்றொரு பக்தி படமான தெய்வம் வெளியானதால் போட்டி வேண்டாம் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வந்தது. இந்த முடிவிற்கு பின்னால் அன்றைய நாட்களில் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருந்த மூவி மேக்கர்ஸ் கவுன்சில் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது. சக்தி லீலை நவம்பர் 10-ந் தேதி வெளி வரும் என்பதால் 6 நாட்களுக்கு துஷ்மன் படம் சென்ட்ரலில் வெளியிடப்பட்டது.
நடிகர் திலகம் படம் தீபாவளிக்கு வரவில்லை என்பதால் மாலைக் காட்சி துஷ்மன் படம் காண சென்றோம். படம் பார்ப்பதற்கு முன்பே படத்தின் கதையம்சதைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது. படம் பார்த்த போது முழு கதையும் புரிந்தது. ஆனால் ஒரு ஏமாற்றம். ராஜா போன்ற ஸ்டைலிஷ் படமாக இது வராது என்பது தெரிந்தது. ரசிகர்களும் பொது மக்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய ஒரு நெருடல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்னுடன் வந்திருந்த என்னுடைய கஸின் வேறொரு விஷயத்தை குறிப்பிட்டான்."உனக்கு நினைவு இருக்கிறதா? சென்ற தீபாவளி [1971 தீபாவளி] அன்றுதான் ராஜாவின் ஒரிஜினலான ஜானி மேரா நாம் பார்த்தோம். ராஜா சூப்பர் ஹிட். அது போல் இந்த தீபாவளி துஷ்மன் பார்க்கிறோம். நிச்சயம் நீதி சூப்பர் ஹிட்" என்றான்.
எனக்கு 1971 தீபாவளி நினைவுக்கு வந்தது. பாபு ஸ்ரீதேவியில் ரிலீஸ். அன்று 5 காட்சிகள்.காலை 9 மணி ஓபனிங் ஷோவிற்கு போய் எத்தனை முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. மதியம் 3 மணிக் காட்சிக்கு டிக்கெட்டை வாங்கி கொண்டு நேரே காலை 10.30 மணிக் காட்சி ஜானி மேரா நாம் பார்க்க மீனாட்சி தியேட்டர் வந்து டிக்கெட் வாங்கி கொண்டு போய் படம் பார்த்தோம்.
[திரையரங்கத்தில் உள்ளே நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் அப்படியே நினைவில் நிற்கிறது. டிக்கெட்டை கிழித்து அரங்கினுள் செல்லும் போது என் கசினின் நண்பர் ஒருவர் அவரும் எங்களுடன் வந்தார். அவர் எம்.ஜி.ஆர். ரசிகர். "என்னங்க உங்க படத்திற்கு போகவில்லையா" என்று என் கசினிடம் அவர் கேட்க அதற்கு அவன், "நாங்கள் ரசிகர்கள்தான். வெறியர்கள் இல்லை" என்று பதில் சொன்னான். சொல்லி விட்டு "என்னை கேட்கறீங்களே நீங்க உங்க படத்திற்கு போகவில்லையா" என்று நண்பரிடம் என் கஸின் கேட்க அவர் அதற்கு நீங்கள் சொன்ன அதே பதிலைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன்" என்றார். ஆம் அன்றைய தினம் நீரும் நெருப்பும் திரையிடப்பட்டிருந்தது.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாவின் 82 வருட சரித்திரத்தில் மிகப் பெரிய போட்டியாளர்கள் இரண்டு பேரும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவது அதுதான் கடைசி முறை எனபது அப்போது எங்களுக்கு தெரியாது, ஏன் யாருக்குமே தெரியாது. அந்த வகையில் அந்த 1971 அக்டோபர் 18 திங்கள்கிழமை வந்த தீபாவளி தனி சிறப்பு வாய்ந்தது]
மீண்டும் நீதிக்கு வருவோம். அதன் பிறகு ஒரே மாதத்தில் படப்பிடிப்பு மற்றும் அனைத்து வேலைகளும் முடிந்து டிசம்பர் 7-ந் தேதி வியாழன் அன்று நீதி ரிலீஸ் ஆனது. மதுரையை பொறுத்தவரை மெயின் தியேட்டர்கள் அனைத்திலும் படங்கள் ஓடிக் கொண்டிருந்ததால் ஆசியாவின் மிகப் பெரிய தங்கம் திரையரங்கில் வெளியானது. எனக்கு ஸ்கூல் இருந்ததால் ஓபனிங் ஷோ போக முடியவில்லை.கல்லூரி மாணவனான என் கஸின் ஓபனிங் ஷோ போய் விட்டு வந்து படம் ஹிட் என்றும் நிச்சயம் ஓடும் என்று சொன்ன பிறகுதான் relief கிடைத்தது போல் இருந்தது. அதே போல் படம் வெற்றி முரசு கொட்டி ஓடியதை சரித்திரம் தன் தாள்களில் பதிவு செய்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
படத்தை பற்றிய பல விஷயங்களைப் பற்றி சாரதா முன்னரே அருமையாக எழுதியிருக்கிறார். ஆகவே நான் அதற்குள் போகவில்லை.
இப்போது எழுதியிருப்பதும் ஒரு சில முறை எழுதியவைதான் என்றாலும் மீண்டும் சுவையான அந்த நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த இப்போது படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் மற்றும் அரங்க உரிமையாளருக்கும் நன்றிகள்! வாழ்த்துகள்!
அன்புடன்
Thank you Sir for the compliments. Credit should go to Vasudevan Sir, who had already posted that image here in our mayyam, which went unnoticed as usual. Vasudevan and Pammalar had shared many nostalgic and very very rare images here but unfortunately our friends here, except a few, do not have the generosity to appreciate this, while they don't leave the least chance to appreciate selective writings here.
ராகவேந்திரா சார்,
தங்கள் Website புது பொலிவுடன் உள்ளது.தங்கள் அபூர்வ படங்களுக்கு நன்றி.
முரளி-
நான் ஒரு நீதி சொல்கிறேன். முரளி லாண்டரி கணக்கு எழுதினாலும் கண்ணை மூடி படியுங்கள். சுவாரஸ்யம் guaranteed . நீதி பற்றிய write up படு interesting .
நமது கோவை நண்பர் ISO Nagaraj அவர்கள் அனுப்பியுள்ள நிழற்படம்.
http://i1146.photobucket.com/albums/...psfce1bbb4.jpg
நன்றி நாகராஜ் அவர்களே
பி.கு. - இந்த நிழற்படம் PDF ஆவணத்திலிருந்து உருவாக்கப் பட்டது. இது படிக்கக் கடினமாக இருக்கலாம். எனவே இதனுடைய ஆவணத்தின் இணைப்பு கீழே தரப் படுகிறது. பதிவிறக்கிக் கொள்ளவும்.
http://www.mediafire.com/?99cth8e61b469d6
டியர் கோபால்,
மிக்க நன்றி. அபூர்வ படத்திற்கு பெருமையும் நன்றியும் வாசு சாருக்குத் தான். இங்கு முன்னர் நம் மய்யத்தில் இத்திரியில் அவர் பகிர்ந்து கொண்ட படமே அது.
Congrats and appreciation for the rare photos uploaded especially for En Desam En Makkal , I have heard only the movie's name & not seen even a still
Thanks a ton FB friend Senthil Sir,Ragavenderan sir & Vasu Sir
Dear Ragavenderan Sir,
Website photo is totally unseen picture could you pl elaborate where was it taken
Murali Sir,
Your writing has a magic of natural flow and takes us to that era
ராகுல் ராம்,
தங்களுடைய பாராட்டிற்கு நன்றி. அந்த நிழற்படம், 1962ல் நடிகர் திலகம் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அரசின் விருந்தினராக சென்ற போது அங்கே எடுத்த நிழற்படம். செவ்விந்திய கலாச்சார பிரதிபலிப்பாக நிறுவப் பட்ட சிலையுடன் தோற்றமளிக்கிறார் நடிகர் திலகம்.
இதனை சில நாட்களுக்கு முன் வாசு சார் நம்முடைய நடிகர் திலகம் திரியில் பகிர்ந்து கொண்டது தான்.