-
தமிழ் பட உலகின் சிகரங்கள் எம்.ஜி.ஆர். , சிவாஜி ஆகியோர் நடிகர் வி.கே ராமசாமியை வி.கே. ஆர். அண்ணன் என்றுதான் அழைத்தார்கள்.
தத்துவ பாடல் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களான நாடோடி மன்னன், அரசிளங்குமரி, திருடாதே போன்ற படங்களுக்கு பாடல்கள்
எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழுக்கு அணி சேர்த்து
பிரபல பாடல் ஆசிரியர் ஆனார்.
தமிழ் பட உலகில் 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி ஆரம்ப காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு தன் கைவண்ணத்தில் எழுதி
எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்த்தார். நல்லவன் வாழ்வான், தெய்வத்தாய், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா நான் ஆணையிட்டால்,அடிமைப்பெண் ,பணம் படைத்தவன், குடியிருந்த கோயில் , ஒளிவிளக்கு , மாட்டுக்கார வேலன், எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன் , நீரும் நெருப்பும், ஆயிரத்தில் ஒருவன், நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன் , உலகம் சுற்றும் வாலிபன் , உரிமைக்குரல், நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் , நாளை நமதே, இதயக்கனி ,
பல்லாண்டு வாழ்க , நீதிக்கு தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன் ,
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியன குறிப்பிடத்தக்கவை.
நன்றி : செய்திகள் - மாலை மலர் - தீபாவளி மலர் 2014
-
வரும் தீபாவளி அன்று sunlife தொலைகாட்சியில் நமது தெய்வத்தின் மன்னாதி மன்னன் காவியம் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்ப படுகிறது .
-
http://i61.tinypic.com/2yyqzip.jpg
தமிழ் திரை உலகின் இரட்டை கோபுரங்கள்
-------------------------------------------------------------------
தமிழ் திரை உலகிற்கு நீண்ட ஒரு பாரம்பரியம் உண்டு.
நாடக உலகம் திரை உலகை நோக்கி திரும்பிய போது பாடலுக்கே முன்னுரிமை. பாடதெரிந்தவர்கள் மட்டுமே
திரையுலகில் காலுன்ற முடியும் . அந்த காலத்தில் முடிசூடா மன்னர்களாக வலம் வந்தவர்கள் தியாகராஜ பாகவதர் , பி.உ.சின்னப்பா .
தமிழ் பட உலகில் வசனம் முக்கியத்துவம் பெற்ற 1954ம் ஆண்டுக்கு பின் எம்.ஜி.ஆர். , சிவாஜி களம் இறங்கினர்.
அதன் பிறகே தமிழ் பட உலகம் "களை "கட்ட தொடங்கியது .
பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, திரைப்பட துறையில், திரைப்படங்களில் கூட அனைவருக்கும் உதவும் கதை அமைப்பு ,மின்னல் வேகத்தில் எதிரிகளை பந்தாடி மடக்கும்
விறுவிறுப்பான சண்டை காட்சிகள், கதாநாயகியரே கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் அழகிய தோற்றம், மிடுக்கான உடலமைப்பு , சமுதாயத்திற்கு உதவக்கூடிய வகையில் கருத்தான பஞ்ச் வசனங்கள், கருத்துக்கள், ரம்மியமான காதல் பாடல்கள், வீரமான கொள்கை பாடல்கள் ,என்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே "விசில் " அடித்து ரசிக்க வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பல படங்களில் தனக்கே உரிய ஸ்டைல் , எழிலான தோற்றம், வசீகரம் போன்றவற்றால், ரசிகர்களை தன் இருக்கைகளில் இருந்து துள்ளி குதிக்க செய்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். , சிவாஜி , இந்த இரு பிரம்மாண்ட நாயகர்களும் இரட்டை குதிரைகளாக தமிழ் சினிமாவை இழுத்து செல்ல தொடங்கிய பிறகுதான் , தமிழ் சினிமா என்கிற அழகிய ரதம் வேகம் எடுத்தது . அதன் அழகும் , திறமையும் அனைவருக்கும் தெரிய தொடங்கியது. தமிழ் பட உலகம் பிரம்மாண்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்தது .
தமிழ் திரைப்பட துறையில் பல அரிய சாதனைகள் புரிந்த
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , தமிழக அரசியலில் , காலத்தின்
கட்டாயத்தினால் ஈடுபடுத்தப்பட்டு ,மக்கள் நேசித்த மாபெரும் தலைவராகி ,வெற்றி பெற்று ,முதல்வராய் 10 ஆண்டுகள் சிறப்புற ஆட்சி செய்து மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்து , மறைந்தும் மறையாமல் வாழ்ந்து வருகிறார்.
நன்றி : செய்திகள் - மாலை மலர் - தீபாவளி மலர் 2014
-
-
-
ithaya veenai
http://i59.tinypic.com/105t7nq.jpg
இதய வீணை -பட விமர்சனம் -அருமை. அத்துடன் தாங்கள்
தொகுத்து பதிவிடும் நிகழ்ச்சிகள் /செய்திகள் புதுமை.அறிந்து கொள்ள வேண்டியவை. நன்றி.
குறுகிய நாட்களில் 100 பதிவுகள் முடித்து , நமது திரி நண்பர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட கள்வர் (மன்னிக்கவும் ) திரு. கலைவேந்தன் அவர்களின் நேர்த்தியான விமர்சனங்களுடன் கூடிய பதிவுகள் அனைவரின் நெஞ்சங்களில் நிழலாடுகின்றன.
அசத்துங்கள் நண்பரே. வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்
என் சார்பிலும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
சார்பிலும் .
ஆர். லோகநாதன்.
-
-
-
-